.

Sunday, June 5, 2011

பிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..

நண்பர்களுக்கு வணக்கம்..

பிளாக் பெர்ரி போன்களுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கும் என்ன வித்தியாசம்னும் நன்மை தீமைகள் என்னன்னு எனக்குத் தெரிஞ்ச விசயங்களை இங்கே சொல்லலாம்னு நினைக்கிறேன்..

இந்த ரெண்டு வகையான மொபைல்களுக்கும் வித்தியாசம் என்னன்னா.. பிளாக் பெர்ரி போன்கள் யூ.கேயில் இருந்து ஒரு கம்பெனி மூலமாகத் தயாரிக்கப்பட்டு விக்கப்படுது.. ஸ்மார்ட் போன்கள் ஏதாவது ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்யுது.. அந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை யூஸ் பண்ணி பல நிறுவனங்கள் அவங்கவங்க டிசைன்ல மொபைல்களை வெளியிடறாங்க..

பிளாக் பெர்ரி போன்கள் பிசினெஸ் பீப்பிள்ஸுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கு.. காரணம் இந்த வகையான போன்கள்ல நாம வேலை பாக்கற கம்பெனி மெயில்களை பார்க்க ஏதுவாக கான்பிகரேசன்ஸ் பண்ணிக்க முடியும்.. ரொம்ப சுலபமாக ஈமெயில் பரிமாற்றங்களை செய்துக்க முடியும்.. ஆனால் மெயில்களை ஒரு லிமிட் வரைதான் ஸ்டோர் பண்ண முடியுது.. நம்முடைய தரவுகள் அனைத்தும் யூ.கேல இருக்கற சர்வர்லதான் ஸ்டோர் ஆகறது காரணமாக இருக்கலாம்.. சோ அங்கே சர்வர்ல ஏதாவது பிராபளம்னா.. இந்த காஸ்ட்லியான மொபைல்களை சும்மாதான் வைச்சிருக்க வேண்டியிருக்கும்..

பிளாக் பெர்ரி போன்கள் 30,000ரூபாய், 40,000ரூபாய்ன்னு விலை கொடுத்து வாங்க இது ஒன்னுதான் காரணாமான்னு நாம யோசிக்கறோம் இல்லையா.. இந்த போன்களுக்கு இன்னொரு சூப்பர் ஸ்பெசாலிட்டி இருக்கு.. அது என்னன்னா.. நார்மலாக தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு ஒருத்தரையொருத்தர் தொடர்பு கொள்ளும்போது.. அதை தொழிற்நுட்ப வசதிகளை வைச்சு.. இடைமறிச்சு அவங்க செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.. ஆனால் பிளாக் பெர்ரியில் இருந்து அனுப்பப்படும் தரவுகளையோ பேச்சுகளையோ.. எந்த வகையான தொழிற்நுட்பத்தைக் கொண்டும் இடைமறிச்சு கண்காணிக்க முடியாது.. இது பிசினஸ் பீப்பிள்ஸுக்கு ரொம்ப வசதியாக இருக்கு..

இப்படி ஒரு வசதி இருக்கும் போது.. அதை நல்லதுக்கு பயன்படுத்த முடியும், கெட்டதுக்கும் பயன்படுத்த முடியும் இல்லையா.. அதனால.. தீவிரவாதிகளும் கண்டிப்பாகப் பயன்படுத்த வாய்பிருக்கறதால ஆரேபிய நாடுகள் உட்பட பல நாடுகள் பிளாக் பெர்ரியைத் தடை செய்திருக்காங்க.. அப்போ ஏன் இந்தியாவுல மட்டும் தடை செய்யலைன்னு நமக்கு கேள்வி வரும்.. இந்தியா அரசாங்கமும் பிளாக் பெர்ரி நிறுவனத்துக்கு ஒரு கோரிக்கையை வைச்சிருக்கு.. தேவைப்படும் போது பிளாக் பெர்ரி சர்வரை ட்ராக் பண்ற வசதிதான் அது.. ஆனால் அந்த நிறுவனத்துக்காரங்க ஒரு லிமிட் வரைக்கும்தான் தகவல் பரிமாற்றங்களைத் தரமுடியும்னும்.. அவங்க சர்வரை யார் ட்ராக் பண்ணவும் அனுமதிக்க முடியாதுன்னும் சொல்லிட்டாங்க.. அதனால இந்தியா அவங்களுக்கு அதிர்ச்சி தர்ற வகையாக ஒரு காலக்கெடுவை விதிச்சிருக்காங்க.. அதுப்படி இந்திய அரசாங்கத்தோட வேண்டுகோளுக்கு அடிபணியாத பட்சத்தில்.. இங்கேயும் பிளாக் பெர்ரியோட விற்பனைகள் நிறுத்தப்படலாம்..

உலக சந்தையில் இந்தியாவில்தான் பெரும்பாலான போன்கள் விற்கப்படறதால.. இந்த போன்கள் நிறுத்தப்பட்டா.. கண்டிப்பா அந்த நிறுவனத்துக்கு பெரிய லாஸ்தான்.. சோ என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.. :-)

ஸ்மார்ட் போன்கள் முன்பு சொன்னது போல "ஆண்ட்ராய்டு", "சிம்பியன்", "விண்டோஸ்" மாதிரியான ஆபரேட்டிங் சிஸ்டங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குது.. மொபைல் நிறுவனங்கள் இந்த OSகளை அவங்க தயாரிக்கற மொபைல்கள்ல நிறுவி வெளியிடறாங்க.. இந்த மொபைல்கள்ல எல்லாத்துலயுமே டச் ஸ்கிரின் ஸ்பெசாலிட்டி இருக்கும்..

இது என்ன பெரிய அதிசியம்.. போன வருசம் வரைக்கும் பாப்புலராக இருந்த சீனா மொபைல்கள்ல கூடத்தான் இந்த வசதி இருந்ததுன்னு நீங்க நினைக்கலாம்.. இந்த வகையான போன்கள் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு வசதிகள் கிடைக்கவே தயாரிக்கப்பட்டிருக்கு..

உதாரணத்துக்கு எந்த நேரமும் ட்விட்டர், பேஸ்புக், ஜீசாட் மாதிரி எல்லா பொழுதுபோக்கு சேவைத் தளங்கள்லயும் ஆன்லைன்லயே இருக்க முடியுது.. இந்த மொபைல்கள்ல எல்லாத்திலும் பெரிய திரை இருக்கறதால வீடியோ, போட்டோஸ் எல்லாம் பார்க்க அருமையாக இருக்குது.. மற்றபடி 3G, வைஃபைன்னு இப்போ இருக்கற எல்லா புது டெக்னாலஜிகளுமே இந்த மொபைல்களுக்குள்ள அடங்கிடும்..

ஸ்மார்ட் போன்களைப் பொருத்த வரைக்கும் மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்கள்ல இயங்கற மொபைல்களை விடவும்.. "ஆண்ட்ராய்ட்" மொபைல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு.. காரணம் ஆண்ட்ராய்ட் OS.. லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துல இருந்து டெவலப் பண்ணப்பட்டிருக்கு.. அதனால இந்த மொபைல்களுக்குத் தேவையான அப்ளிகேசன்ஸ் எல்லாமும் இலவசமாகவே கிடைக்குது.. அதனால் இப்போ இந்த வகை மொபைல்கள் ஆப்பிலோட ஐஃபோனோடவே போட்டி போட்டுட்டு இருக்கு..

ஸ்மார்ட் போன்லயும் என்னோட ஆபிஸ் மெயில் ஐட்டங்களை என்னால காண்பிகர் பண்ணிக்க முடியுது.. இந்த வகையான மொபைல்களை சாம்சங், எல்.ஜி, டெல் மாதிரியான பெரிய நிறுவனங்கள் தயாரிச்சு வெளியிடறாங்க.. விலையும் ஓகேயாத்தான் இருக்கு..

இதுல எந்த எந்த மொபைல்கள் நல்லா இருக்குன்னு இன்னொரு சந்தர்ப்பத்தில சொல்றேன்.. :-)

Monday, April 18, 2011

பெர்முடா முக்கோணம் - "மர்மங்கள்"


அழகன்..
எங்க பிரண்ட்ஸ் குரூப்புல எல்லாரும் இவன அப்படித்தான் செல்லமாக் கூப்பிடுவோம்.. ரொம்ப நல்லவன்.. பிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் சரிசமமா Care எடுத்துக்கணும்னு நினைக்கிறவன்.. எங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல ரொம்ப சண்டை வரும்.. கைகலப்பு எல்லாம் ஆயிருக்கு.. ஆனா ரெண்டு பேரும் ரொம்ப குளோஸா இருப்போம்.. கோழி கிறுக்கன மாதிரியே இருக்குன்னு சொல்லுவாங்க இல்லையா!! அது இவனோட ஹேண்ட் ரைட்டிங்கப் பார்த்தா தெரிஞ்சுக்கலாம்.. ஸ்கூல்ல இதுக்காகவே ரொம்ப அடி வாங்குவான்.. மக்குப் பய!!!

விளையாட்டுல ரொம்ப ஸ்ப்ரிட்டா இருப்பான்.. அதுவும் கிரிக்கெட் ரொம்ப நல்லா விளையாடுவான்.. இவன் தான் எங்க டீம் கேப்டன்.. கிரவுண்டுல ரொம்பவும் நல்லாத்தான் பிளான் பண்ணுவான்.. ஆனா நாங்க யாருமே சரியா விளையாட மாட்டோம்.. மேக்ஸிமம் இவன் மட்டும் தான் ரன் அடிப்பான்.. வேற.. எங்க பிரண்ட்ஸ் குரூப்புக்கு ரொம்ப பொழுதுபோக்கா இருப்பான்.. எல்லாரும் இவன ஓட்டுவோம், ஆனாலும் சளைக்காம எல்லாத்தையும் சமாளிப்பான்..
இவனோட வாழ்க்கை இலட்சியமாவே ஒரு விசயம் இருந்தது.. அது என்னன்னு எங்க ஊருக்கே தெரிஞ்ச ரகசியம்.. ஆனால் இங்கே சொன்னா.. பெங்களூர் வந்து உதைப்பான்..

இப்போ மேட்டருக்கு வர்றேன்.. பெர்முடா முக்கோணம் பத்தி எழுதச் சொல்லி நேற்று மெயில் பண்ணியிருந்தான்.. சோ நண்பனுக்காக இந்தப் பதிவை டெடிக்கேட் பண்றேன்.. :-)


நிலவுல போய் பிளாட் வாங்கறேன்னு கிளம்பற அளவுக்கு இப்போ டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும்..சில விசயங்கள் இன்னும் புரியாத புதிராகவே இருக்கு.. அதுல பெர்முடா முக்கோணமும் ஒன்னு..

வட அட்லாண்டிக் கடலோட மேற்குப் பகுதியில் இருக்கற ஒரு குறிப்பிட்ட பரப்பை பெர்முடா முக்கோணம்னு சொல்றாங்க.. பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு மற்றும் கரீபியன் தீவுகள் முழுவதுமே இந்தப் பரப்புக்குள்ள அடங்குது.. அப்புறம் இன்னும் சில பகுதிகளும் இந்தப் முக்கோணத்துக்குள்ள வரும்னு சொல்றாங்க..

இந்தப் பகுதியில நிறைய கப்பல்களும் விமானங்களும் காணமப் போயிட்டதாக சொல்லப்படுது.. இந்த மர்மத்தை பற்றி முதன்முதலாக 1950 ஆண்டு ஒரு ஆர்டிகல் வெளியாகியிருக்கு.. அப்புறம் இரண்டு வருசம் கழிச்சு இந்த விசயம் பற்றி இரண்டாவது ஆர்டிகல் வெளியாச்சு.. பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்து.. அந்தப் பகுதியில பயிற்சி எடுத்துட்டு இருந்தப்போ காணாமப் போயிட்டதாகவும்.. அந்த விமானங்கள்ல இருந்த ஒரு கேப்டன்.. "நாங்க இப்போ வெள்ளைக் கலர்ல இருக்கற தண்ணிக்குள்ள போயிட்டிருக்கோம்.. இல்ல... இல்ல.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு.. அப்படின்னு சொன்னதா ரெக்கார்ட் ஆயிருக்குன்னு சொல்றாங்க.. அந்த விமானங்களோட திசைகாட்டியும் தாறுமாறா அப்போ வேலை செய்திருக்கு.. அவங்களைத் தேடிக்கிட்டு ஒரு குரூப் இன்னோரு விமானத்துல போக அந்த விமானத்தையும் காணோம்.. இந்த விசயத்தை விசாரணை பண்ணின அதிகாரிகள்.. விமானங்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு பறந்து போயிடுச்சு சொன்னதாகவும் கூறப்பட்டிருக்கு..

அப்புறமென்ன.. இந்த இடத்தைப் பற்றி ஆவி, புதம், பேய், ஏலியன்ஸ்ன்னு நிறையக் கட்டுக்கதைகள்.. (எனக்கே டைப் பண்ணப் பண்ண.. இன்னும் நாலு பிட்டு எக்ஸ்ட்ரா போடலாம்னுதான் இருக்கு.. :-).. )

உண்மையில.. கடல் பகுதியில ஏற்பட்ட பல விபத்துகள்.. பெர்முடா பகுதியில நடந்ததாக திரிச்சு சொல்லியிருக்காங்கன்னும் அதுக்கான நிறைய விளக்கங்களையும் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.. பல விசயங்கள் நடக்காமயே நடந்ததாகவும் கதை கட்டியிருக்காங்க.. உதாரணத்துக்கு.. 1937 ஆம் ஆண்டு புளோரிடா கடற்கரைப் பகுதியில் ஒரு பிளைட் விபத்துக்குள்ளானதை நிறையப் பேரு பார்த்ததாக சொல்லப்படுது.. ஆனால் லோக்கல் நியூஸ் பேப்பர்ல அந்த விபத்து பற்றின எந்த நியூஸுமே வெளியாகல..

இந்தப் பகுதிக்குள்ள நுழையற எந்த பொருளுமே காணமப்போகல.. அங்கேயே வேற வடிவத்துல இருக்குன்னும்.. எல்லாப் பொருட்களுமே ஒரு அணுவாக மாறி காற்றோட கலந்துடுதுன்னும் ஏகப்பட்ட கெஸ்ஸிங்..

விஞ்ஞான ரீதியாகவும் இந்த விசயத்துக்கு பல விளக்கங்களைக் கொடுத்திருக்காங்க..

மீத்தேன் ஹைட்ராய்டு அப்படிங்கற ஒரு இயற்கை எரிவாயு.. நீரோட அடர்த்தியைக் கம்மி பண்ணி.. கப்பல் தண்ணியில மிதக்க முடியாம மூழ்கடிக்கும்னு ஆஸ்திரேலியாவுல நடத்தப்பட்ட சோதனைகள்ல சொல்லியிருக்காங்க.. ஆனால் பெர்முடா பகுதியில மீத்தேன் ஹைட்ராய்டோட எந்த தாக்கமும் எப்போதும் இருந்திருக்கல..

கடல்ல உண்டாகற பயங்கர சூறாவளிகள் காரணமாக இருந்திருக்காலாம்னு சொல்லப்படுது..

சுனாமி அலைகள் மாதிரி இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடிச்சிருக்கலாம்னும் சொல்றாங்க..

பெர்முடாப் பகுதியோட ஏதாவது மையப்பகுதியில.. ஈர்ப்புவிசை ரொம்ப அதிகமாக இருந்து.. எல்லாப் பொருட்களையும் உள்ளே ஈர்த்துக்குன்னும் ஒரு கெஸ்ஸிங்..

கடற்கொள்ளையர்கள் மேலயும் டவுட்டு இருந்திருக்கு.. ஆனால் அவங்க எப்படி விமானத்தைக் கொள்ளையடிப்பாங்க.. (என்னோட டவுட்டு இது.. :-).. )

பெர்முடா முக்கோணத்தின் குறிப்பிடத்தக்க சம்பவங்கள்னு சொல்லனும்னா..

1. பிளைட் 19 காணாமப்போனதும்.. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் போன 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.. இந்த விசயத்துக்காக கொடுக்கப்பட்ட விளக்கங்கள் துல்லியமான உண்மைகளாகத் தெரியல..

2. மேரி செலஸ்டின்னு ஒரு கப்பல் 1872 ஆம் ஆண்டு மர்மமான முறையில் துலைஞ்சு போயிருக்கு.. பெர்முடா முக்கோணம்தான் இதுக்கு காரணம்னு சொல்லப்பட்டிருக்கு.. இதே பேர்ல இருந்த ஒரு கப்பல் 1860கள்ல மூழ்கிப் போனதை இந்தக் கப்பலோட இணைச்சு குழம்பியிருக்கலாம்னும் சொல்றாங்க..

3. 1881 ஆம் ஆண்டு எலன் ஆஸ்டின்னு ஒருத்தர்.. ஒரு கப்பல் கடல்ல அநாதையாக வர்றதைப் பார்த்திருக்கார்.. மீட்புப் பணியாட்களை அனுப்பி.. அந்தக் கப்பலையும் சேர்த்து நியூயார்க் ஓட்டிட்டு வந்துடலாம்னு அவர் எண்ணம்.. ஆனால்.. அந்தக் கப்பல் மீண்டும் பணியாட்களோட காணாமப் போனதாக சொல்லப்படுது..

இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.. இது போதும்.. :-)..

பெர்முடா முக்கோணம் பற்றின தேடுதல்ல.. இன்னொரு விசயமும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. ஜப்பான் பக்கத்துல ட்ராகன் ட்ரையாங்கில்னு இன்னொரு இடமும்.. சேம் பீஸ்தானாம்.. அந்தப் பகுதிகுள்ள நுழையற எந்த ஆப்ஜெக்டும் திரும்பறதில்லையாம்..

டிஸ்கி: பெர்முடா முக்கோணத்துல இப்போ எந்த விபத்துகளும் நடக்கறதில்லையாம்.. உண்மையில ஏதாவது நடந்துச்சா.. நடக்கலையா.. அடப் போங்கப்பா..

Wednesday, March 23, 2011

தனிமைச் சிறகுகள் - BPO அனுபவங்கள்

நண்பர்களுக்கு வணக்கம்..

தனிமைச் சிறகுகள் அப்படிங்கற தலைப்புல.. சென்னை மற்றும் பெங்களூர்ல புதுசா வேலை தேடி வந்தப்போ எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதியிருந்தேன்.. அந்தப் பதிவுகளைப் படிக்கனும்னா.. கீழே இருக்கற லிங்கை கிளிக் பண்ணிப் பாருங்க..

தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்

Friday, March 18, 2011

ஃபிளைட் பிளான் - திரை விமர்சனம்

எனக்குப் மிகவும் பிடிச்ச ஆங்கிலத் திரைப்படங்கள்ல வகைகள்ல.. விமானத்துல நடக்கற மாதிரியான திரைக்கதையுள்ள படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன்.. விமானத்துல நடக்கற கதைனாலே.. விமானத்தை ஹைஜாக் பண்றதும்.. அங்கே பேசஜ்சராக இருக்கற ஹீரோ எப்படி அந்த திட்டத்தை முறியடிக்கிறார் அப்படிங்கற மாதிரி திரில்லிங்கா கதை நகரும்..

இந்தப் பதிவுல நான் சொல்லப்போற படம் முழுவதும் விமானத்திலதான்.. ஆனால் ஹைஜாக் மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசம்..

ஃபிளைட் பிளான் - 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்..

கைல் பிராட் தன்னோட கணவரை இழந்த துக்கத்தில இரயில்வே ஸ்டேசன்ல உட்கார்ந்திருக்கார்.. கைல் தன்னோட கணவர் சடலத்தை ரிசீவ் பண்றதை.. ஸ்டேசன்ல உட்கார்ந்து நினைச்சுப் பார்த்துட்டு இருக்கும் போது.. திடீர்னு அவரோட இறந்த கணவர்,, அங்கே வந்து..வா வீட்டுக்குப் போலாம்னு அழைச்சிட்டுப் போறார்.. (ம்ம்.. ரைட்டு..)

சும்மா.. தன்னோட கணவர் வந்தமாதிரி நினைச்சுப் பார்த்திருக்கார் கைல்.. :-)..

கைல் பிராட்டுக்கு ஆறு வயசுல ஒரு மகள்..

இறந்த கணவரோட சடலத்தை தன்னோட ஊர்ல கொண்டு போய் அடக்கம் பண்ணலாம்னு.. தன்னோட மகளோட விமானத்துல கிளம்பறார் கைல்.. அந்த விமானத்தை வடிவமைச்ச இஞ்சினியர் கைல்தாங்கறது எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேசன்..

விமானம் கிளம்பினதும் அசந்து தூங்கிடறவர்.. கண் விழிக்கும் போது அவரோட மகளைக் காணோம்னு தேட ஆரம்பிக்கிறார்.. விமானத்துல இருக்கற யாருமே அவரோட மகளைப் பார்க்கலைன்னு சொல்றாங்க.. கைல் மகளைக் காணோம்னு விமானத்துக்குள்ள அனெளன்ஸ் பண்றாங்க.. அப்புறம் அவரோட தொல்லை பொறுக்காம.. கேப்டனோட பர்மிஷனோட.. ஃபிளைட் ஸ்டாஃப்ஸ் எல்லாருமே சேர்ந்து சின்னப் பொண்ணைத் தேட ஆரம்பிக்கிறாங்க.. ம்ஹும் எங்கேயும் கிடைக்கல..

கேப்டனுக்கு ஒரு நியூஸ் கிடைக்குது.. கைல் விமானத்துக்குள்ள ஏறும்போது அவர்கூட எந்த சின்னப் பொண்ணும் இல்லைங்கறதுதான் தகவல்.. அப்புறம் அதோட தொடர்ச்சியா இன்னொரு நியூஸ்.. கைலோட கணவர் இறக்கும்போதே.. அவரோட மகளும் இறந்திட்டார்ங்கறதுதான் அந்த நியூஸ்.. ரைட்டு அப்போ முதல் காட்சி மாதிரி கற்பனையாக நினைச்சுப் பார்த்திட்டு வந்திருக்கார்னு முடிவுக்கு வரமுடியுது நம்மால.. ஆனால் கைல்.. மகளோடதான் விமானத்துக்குள்ள வந்தேன்னு அடம் பிடிக்க.. கேப்டனுக்கு கோவம் வந்து அவரைக் கண்காணிக்கிற பொறுப்பை.. அந்த விமானத்துல இருக்கற கார்சன் அப்படிங்கற அதிகாரிகிட்ட ஒப்படைக்கிறார்.. கைல்லோட கணவர் இறந்ததால அவருக்கு மூளை பிசகிறுச்சுன்னு எல்லாரும் நினைக்க ஆரம்பிக்கிறாங்க..

விமானத்துல இருக்கற ஒரு டாக்டர்.. கைல்கிட்ட வந்து பேசறார்.. டாக்டர் பேசப்பேச.. தன்னோட மகள் செத்துதான் போச்சுன்னு கைல்லும் நம்ப ஆரம்பிக்கிறார்.. ஆனால் அந்த யோசனையை உடனே மாத்திக்கிற மாதிரி ஒரு காட்சி வருது..

கண்காணிப்புல இருக்கற கைல்.. அதிகாரி கார்சனை ஏமாற்றிட்டு.. பயணிகள் எல்லாரும் பயப்படற மாதிரி சில வேலைகள் செய்திட்டு.. அவரோட கணவரோட சவப்பெட்டி இருக்கற இடத்துக்குப் போய்.. பொண்ணைக் காணோம்னு அவரைப் பார்த்து அழுதுக்கிட்டிருக்கார்.. அவரை கைவிலங்கு போட்டு திரும்பவும் அவரோட சீட்ல கொண்டு போய் உட்கார வைச்சிடறாங்க..

கைலை இன்னொரு பணிப்பெண்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு அதிகாரி கார்சன்.. கைல்லோட கணவர் சவப்பெட்டி இருக்கற இடத்துக்குப் போய்.. சவப்பெட்டியை உடைச்சு.. அதுக்குள்ள இருந்து.. வெடிகுண்டுகளை வெளியே எடுக்கிறார்.. அந்த வெடிகுண்டுகளை ஒரு இடத்துல போய் பிக்ஸ் பண்றார்.. அங்கேதான்.. கைலோட பொண்ணும் மயக்கமாகிக் கிடக்கு.. இப்போ பொண்ணு காணாமப்போனது உண்மைதான்னு நமக்குத் தெரியவருது..

கார்சன் நேரா கேப்டன்கிட்ட போய்.. கைல் விமானத்தை ஹைஜாக் பண்ணிட்டதாகவும்.. குழந்தை காணாமப் போனதாக நாடகமாடி.. விமானத்துக்குள்ள வெடிகுண்டை செட் பண்ணிட்டான்னும்.. அவள் கேக்கற தொகையை அவ அக்கெளண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணீட்டா எல்லாரையும் விட்டிறதாக சொல்றான்னு சொல்ல.. கேப்டனும் அதை நம்பிடறார்..

பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணப்படுது.. விமானத்தை உண்மையாகக் கடத்தினது யாரு?.. கைல் தன்னோட மகளை எப்படி மீட்கிறார்னு மீதித் திரைக்கதையில ரொம்ப விறுவிறுப்பாக சொல்லியிருப்பாங்க..

உண்மையிலயே கைல்லோட மகள் தொலைஞ்சுதான் போச்சா.. இல்லையான்னு.. பாதிப்படம் நகர்ற வரைக்குமே நம்மால டிசைட் பண்ண முடியாது.. ஆனால் படம் தொடக்கத்துல இருந்து.. மகளைத் தேடறேன்னு அவர் செய்ற வேலைகள் எல்லாமே ரொம்ப பரபரப்பாக இருக்கும்..

கைலோட மகளைக் கடத்தி.. விமானத்தை கார்சன்தான் ஹைஜாக் பண்ணினார்னு நமக்குத் தெரிய வந்தாலும்.. கடைசி வரைக்குமே விறுவிறுப்பு குறையாம நகருது திரைக்கதை..

கைல்தான் விமானத்தைக் கடத்திட்டார்னு வெளியே எல்லாரும் நம்பிக்கிட்டிருக்க.. கார்சன்தான் கடத்தினதுன்னு கைல்லுக்கு மட்டுமே தெரிய.. தன் மகளையும் காப்பாற்றி.. தன்னை லூசுன்னு நினைச்சுட்டு இருக்கற மத்தவங்கிட்டயும்.. உண்மையைக் கடைசியில் விளங்க வைக்கிறார்..

தன் மகளைக் காப்பாற்றி.. விமானத்துக்கு வெளியே அவர் நடந்துவரும் போது.. எல்லாரும் கைல்லை ஆச்சரியமாகவும்.. ஒருவிதமான குற்ற உணர்ச்சியோடவும் பார்க்கற சீன் அற்புதம்..

ஒருத்தருமே தன்னை நம்பலைன்னாலும்.. இருக்கற குழந்தையை செத்ததாக சொல்லி.. அவரை நம்ப வைச்சதுக்கப்புறமும்.. விடாமப் போறாடி குழந்தையை மீட்கிறார் கைல்.. அற்புதம்.. அருமையான திரில்லர் மூவி..

Monday, March 14, 2011

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்

"தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்" அப்படிங்கற தலைப்பில.. என்னுடைய சென்னை அனுபவங்களைப் பற்றி சுருக்கமாக எழுதியிருந்தேன்..

என்னுடைய அண்ணனுக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சதால.. நானும் அவர்கூடவே வந்துட்டேன்.. அப்படிங்கறதோட அந்தப் பதிவை முடிச்சிருந்தேன்.. முதல் பாகத்தைப் படிக்காதவங்களும் இந்தப் பதிவைத் தொடரலாம்.. உங்களுக்கு புரிதல் சிரமமாக இருக்காதுன்னு நினைக்கிறேன்..

பெங்களூர் வரும்போது மனசு முழுக்க ஏதோ எதிர்பார்ப்பு.. டூர் போறமாதிரி ஞாபகத்துலயே வந்துட்டேன்..

அண்ணன்.. இங்கே எலக்ட்ரானிக் சிட்டிங்கற ஏரியால தங்கியிருந்தார்.. வந்து ஒரு 2 நாள்.. என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல.. சும்மா வீட்ல உட்கார்ந்து இருக்கறதுக்கு.. ஏதாவது பஸ்ல ஏறி.. எங்கேயாவது போயி சுத்திட்டு வாப்பான்னு சொன்னார் அண்ணன்.. இங்கே ஆட்டோ டிரைவர்ல இருந்து எல்லாரும் இங்கிலீஷ்தான் பேசுவாங்க.. அதனால யார்கிட்ட என்ன விசாரிச்சாலும் இங்கிலீஷ்லயே பேசு அப்படின்னார்.. பேசலாம்.. ஆனா எனக்கு இங்கிலீஷ் தெரியாதே.. :-)

"இந்த இடத்துக்கு எப்படிப் போறதுன்னு" இங்கிலீஷ்ல எப்படிக் கேக்கறதுன்னு மனப்பாடம் பண்ணிக்கிட்டேன்.. அன்னைக்கு முழுவதும் ஒரே ("இந்த இடத்துக்கு எப்படிப் போறது") இங்கிலீஷ்தான்.. :-)

நெக்ஸ்ட்.. வேலை தேடனும்ல.. சென்னையில் BPOல வேலை பார்த்ததால.. அதுல தேடலாம்னு முடிவு..

இங்கே இருக்கற கம்பெனிகளோட வெளித்தோற்றமே என்னை மிரட்டுச்சு.. உள்ளே இருக்கறவங்க கடிச்சு தின்னுடுவாங்களோன்னு பயம்.. எனக்குத் தெரிஞ்சு புதுசா வேலை தேடற பலருக்கு இந்த பயம் இருக்குன்னு நினைக்கிறேன்.. அதனால நியூஸ் பேப்பர்ல வர்ற பெரிய பெட்டி விளம்பரங்களை எல்லாம் பார்க்கவே மாட்டேன்.. சின்ன சின்னப் பெட்டிகள் எங்கேயிருக்குன்னு பார்த்து அங்கே போய் இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டே இருந்தேன்.. எங்கே போனாலும் சரி.. அண்ணன் சொல்லிக்கொடுத்து மக்கப் பண்ணின.. செல்ஃப் இன்ட்ரோடக்சன் மறந்து போய்.. பாதில பே பேன்னு பார்ப்பேன்..

பெங்களூர்ல எனக்குக் கிடைச்ச முதல் வேலைப் பற்றிக் கண்டிப்பா சொல்லியாகனும்.. :-)

ஒரு நாள் எப்பவும் போல ஒரு கம்பெனிக்கு இன்ட்டர்வியூ போனா.. நான் சென்னையில் பார்த்திட்டு இருந்த அதே வேலையைத்தான் டெஸ்டா வைச்சாங்க.. புதுக் கம்பெனி.. அப்போதான் ஆள் எடுத்துட்டு இருந்தாங்க..

ஒரு 2 கேள்வி குடுத்து 30 நிமிசம் டைம் கொடுத்தாங்க.. அந்த ரெண்டையும் செய்ய மொத்தமே 5 நிமிசம்தான் ஆகும்.. செய்து முடிச்சுட்டு காமிச்சா.. என்னை நம்பாம திரும்பவும் செய்துகாட்டுன்னு சொல்ல.. நானும் இன்னும் வேகவேகமா செய்து காட்டிட்டேன்.. அப்புறம் ஒரு நாலு பேர் ஒன்னாக்கூடி நின்னு பேசிட்டு.. என்னை ஒரு ரூமுக்கு அழைச்சிட்டுப் போயிட்டு.. எதுவுமே என்னைப் பற்றிக்கேக்காம.. நாங்க உன்னை செலக்ட் பண்ணிட்டோம்.. உனக்கு டீம்லீட் பொசிசன் தர்றோம்.. அப்படின்னுட்டாங்க.. எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு..

ரியலி.. நோ.. ஹவ்.. அப்படின்னேன்.. அதாவது.. எனக்கு இங்கிலீஷ் சரியா பேசவராதே.. நான் எப்படி டீமை மெயின்டெயின் பண்றதுன்னு கேக்க வந்தேன்.. :-).. அவங்களும்.. நான் என்ன கேக்க வந்தேன்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டாங்க.. அப்போ நான் கரெக்டாதான் பேசியிருக்கேன்.. :-).. கவலைப்படாதே.. உனக்கு நாங்க அசைன் பண்ற 8 பொண்ணுங்களுக்கும் தமிழ் தெரியும்.. நீ இப்போவே ஜாயின் பண்ணீடுன்னு சொல்லிட்டாங்க.. ரைட்டு.. அப்படியே.. ஒரு டீம் லீடரா புளோருக்குள்ள வந்தேன்.. :-)

எனக்கு தெரிஞ்ச விசயங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்து.. அந்தப் பொண்ணுங்க எல்லாம் நல்லாவே ஒர்க் பண்ணினாங்க.. ஆனால் அந்தக் கம்பெனியோட பியூச்சர் பத்தி எனக்கு கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுடுச்சு.. இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லனும்.. நான் சென்னையில் குவாலிட்டி கண்ட்ரோலராக ஒர்க் பண்ணிட்டிருந்த கம்பெனியில் என்னுடைய முக்கிய வேலை என்னன்னா.. எங்ககிட்ட இருந்து வேலை வாங்கிப் பண்ற கம்பெனிகள்.. அனுப்புற எல்லா பைல்லையும் 6 தப்பு கண்டுபிடிக்கனும்.. அப்படி கண்டுபிடிக்கற பைல்ஸ் எல்லாம் ரிஜெக்ட் ஆகி.. அந்தக் கம்பெனிகளுக்கு பணம் கிடைக்காது..

இங்கே பெங்களூர் கம்பெனியும் அங்கேதான் இந்த வேலையை வாங்கியிருக்கறது தெரிஞ்சதுமே.. அவங்ககிட்ட போய் எச்சரிச்சேன்.. என்னை அவங்க நம்பல.. ரைட்.. நான் சொன்ன மாதிரியே நடந்துச்சு.. என்னுடைய டீம் பொண்ணுங்க எல்லாம் ஒரு இடத்துல வேலை வாங்கிட்டோம் சார்.. நீங்களும் வந்து அட்டெண்ட் பண்ணுங்கன்னு போன் பண்ணுச்சுங்க.. என்னக் கொடுமை சார் இது.. அங்கே என்னை செலக்ட் பண்ணல.. :-)..

நெக்ஸ்ட் சில கம்பெனிகள்ல வேலை செய்ததுக்கு அப்புறம்.. "Indicomm Global Services" அப்படிங்கற கம்பெனியில் வேலை கிடைச்சது.. இந்தக் கம்பெனியோட பெருமை என்னன்னா.. தமிழ்நாட்டுல இருந்து புதுசா வர்றவங்க எல்லாரும் வேலை கொடுத்து.. வேலை பெண்டை நிமித்திடுவாங்க.. ஆனால் புதுசா வர்றவங்க.. தாராளமா இங்கே வரலாம்.. கண்டிப்பா வேலை உண்டு..

மீதிக்கதையை அடுத்த பாகத்தோட முடிச்சுக்கறேங்க.. வர்றேன்.. :-)

Friday, March 11, 2011

EXAM - திரில்லர் (உங்களுக்கு ஒரு சவால்)


பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்..

பதிவு எழுதி கிட்டத்தட்ட 2 மாசம் ஆகப்போகுதுன்னு நினைக்கறேன்.. சரி அப்போப்போ ஒரு அட்டென்னெஸாவது போட்டுடலாம்னுதான் நினைச்சேன்.. ஆனால் ஒர்க் லோட் ரொம்ப அதிகமாக இருந்ததாலவும்.. ஆபிஸ்ல பிளாக்கர் சைட்ஸை பிளாக் பண்ணிட்டதாலவும் எழுதவே முடியல.. :-)

சரி ரொம்ப நாள் கழிச்சு.. இப்போ ஏதாவது எழுதலாம்னு யோசிச்சா.. என்ன எழுதறதுன்னே புரியமாட்டேங்குது.. சரி முன்போலவே ஒரு ஆங்கிலப் பட விமர்சனம் எழுதிடலாம்னு நினைக்கிறேன்..

இந்தப் பதிவுல நான் எழுதப் போற படத்துக்குப் பேரு எக்ஸாம் (EXAM - 2005)..

உலகத்துல அதிகமான பேரும் புகழோடவும்.. ரொம்ப மதிப்போடவும் இருக்கற கம்பெனியில ஒரு பெரிய பதவிக்கு.. 8 பேர் பைனல் ரெளண்டுக்கு செலக்ட் ஆகி.. பைனல் ரெளண்ட் நடக்கற ஒரு ரூமுக்குள்ள வர்றாங்க.. அந்த ரூமுக்குள்ள அவங்களை கண்காணிக்கறதுக்கு கைத்துப்பாக்கியோட ஒரு செக்யூரிட்டி வேற..

80 நிமிஷம் நடக்கப்போற டெஸ்ட் இது.. இந்த டெஸ்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி.. அதோட 3 ரூல்ஸை சொல்ல ஆரம்பிக்கிறார்.. அந்த டெஸ்டை வைக்கிறவர்..

1. எக்ஸாம் ஆரம்பிச்ச பிறகு என்னையோ, செக்யூரிட்டியையோ கம்யூனிகேட் பண்ண ட்ரை பண்ணினாலோ
2. உங்க டெஸ்ட் பேப்பரை தவறுதலாகவோ, வேணும்னோ ஸ்பாயில் பண்ணினாலோ
3. ஏதாவது காரணங்களுக்காக இந்த ரூமை விட்டு வெளியே போக நினைச்சாலோ

நீங்க இந்த எக்ஸாம்ல தோல்வியடைஞ்சதாக அர்த்தம்.. அப்புறம் உங்களுக்கு முன்னே ஒரே ஒரு கேள்வி இருக்கும்.. அந்த கேள்விக்கு யார் கரெக்டா பதில் சொல்றாங்களோ அவங்களுக்கு வேலைன்னு சொல்லிட்டு.. ஏதாவது டவுட் இருக்கான்னு கேக்கறார்.. எல்லாரும் டெஸ்ட் எழுதத் தயாராகறாங்க.. டெஸ்ட் ஆரம்பிக்குது..

டெஸ்ட் பேப்பரை பார்க்கற எல்லாரும் பெரிய அதிர்ச்சி.. அது ஒரு பிளான்க் ஷீட்.. எதுவுமே அதுல எழுதப்படல.. என்னடா இதுன்னு எல்லாரும் மண்டையைப் பிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க.. ஒரு பொண்ணு மட்டும் எழுத ஆரம்பிக்குது.. அந்தப் பொண்ணு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்றார் செக்யூரிட்டி... சோ தவறான விடை எழுதினாலும் வெளியே தள்ளப்படறாங்க..

மீதம் இப்போ 7 பேர்.. யாரும் பேசக்கூடாதுன்னு ரூல்ஸ் இல்லையே.. அதனால 7 பேரும் பேசிக்க ஆரம்பிக்கறாங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிக்கிட்டு கொஸ்டின் என்னன்னு கண்டுபிடிக்கலாம்னு முடிவு எடுக்கப்படுது..

பேப்பர்ல கண்ணுக்குத் தெரியாத இங்க் யூஸ் பண்ணி ஏதாவது எழுதப்பட்டிருக்கலாம்னு.. கூர்ந்து பார்க்கறாங்க.. தண்ணீர் ஊத்திப் பார்க்கறாங்க.. ரூம்ல இருக்கற லைட்டை எல்லாம் உடைச்சிட்டு.. இருட்டுல ஏதாவது தெரியுதான்னு பார்க்கறாங்க.. எதுவும் வேலைக்கு ஆகல.. கொஸ்டின் என்னன்னு கண்டுபிடிக்க முடியல.. 80 நிமிசத்துல 30 நிமிசம் முடிஞ்சுடுது..

7 பேர்ல ஒருத்தன் ரொம்ப டாமினேட்டிங்கா எல்லாத்துக்கிட்டயும் நடந்துக்கிறான்.. சில சூழ்ச்சிகள் பண்ணி ரூம்ல.. அவங்களோட இருந்த 2 பேரை வெளியே போக வைச்சிடறான்.. மீதம் 5 பேர்.. இந்த நடவடிக்கையால கைகலப்பு ஏற்படுது.. இன்னொருத்தன் அங்கே இருக்கற ஒரு பொண்ணுக்கு கொஸ்டின் தெரிஞ்சிருக்கனும்னு நினைச்சு.. டார்ச்சர் பண்ண ஆரம்பிக்கிறான்.. எல்லாமே பெய்லியர்.. ஒரு மணி நேரம் முடிஞ்சுடுது.. மீதம் 20 நிமிசம்தான்..

அங்கே இருக்கற ஒவ்வொருத்தரையா வெளியே அனுப்பிட்டா.. கடைசியா இருக்கறவங்கதான் ஜெயிப்பாங்கன்னு நினைச்சுட்டு.. ஒருத்தன் செக்யூரிட்டியோட துப்பாக்கியைப் பிடுங்கி எல்லாரையும் வெளியே போக சொல்றான்.. இந்த கலேபரத்துல ஒருத்தனுக்கு குண்டடிபட்டு மயக்கமாகிடறான்.. இந்த எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சு.. அங்கே அவங்களுக்கு கேட்கப்பட்ட கொஸ்டின் என்னன்னு.. ஒரு பொண்ணு கண்டுபிடிக்குது.. ஸ்ஸ்ஸ்.. ப்ப்பாபான்னு ஆயிடுச்சு..

படம் ஓடின ஒன்னரை மணிநேரமும் ஒரே ரூமுக்குள்ள நடக்குது.. செக்யூரிட்டி, டெஸ்ட் நடத்தறவரை சேர்த்து பத்தே கேரக்டர்.. படம் தீயா ஓடுது.. படம் ஆரம்பிச்ச 10வது நிமிசத்துல இருந்து.. அங்கே 9வது ஆளா நாமலும் உட்கார்ந்துட்டு கொஸ்டின் யோசிச்சுட்டு இருக்கறமாதிரி ஃபீலிங்..

கேள்வியைக் கண்டுபிடிக்க அவங்க நடத்தற ஒவ்வொரு முயற்சிகளும் அற்புதமாக இருக்கும்.. அங்கே இருக்கற லைட்ஸை ஒடைச்சா.. அதுக்குள்ள இன்னொரு லைட் இருக்கு.. அதையும் உடைச்சிட்டா.. மறைச்சி வைக்கப்பட்டிருக்கற இன்னொரு லைட்ஸ் எரியும்.. இந்தமாதிரி அந்த ஒரு ரூமுக்குள்ள நிறைய விசயங்கள் மறைச்சி வைக்கப்பட்டிருக்கும்..

செக்யூரிட்டி வைச்சிருக்கற துப்பாக்கியை.. ஒரு கேரக்டர் எடுக்கற சீன் செம.. ஒவ்வொரு சீனும்.. நம்முடைய எதிர்பார்ப்பையும்.. பிரஷரையும் அதிகரிக்குது..

அப்பாடா.. ஒரு வழியா என்ன கொஸ்டின் கேட்டானுங்கன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு..

நீங்களும் கெஸ் பண்ணுங்களேன்.. அவங்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன? பின்னூட்டத்துல சொல்லுங்க.. :-)

டிஸ்கி: ஏற்கனவே படத்தைப் பார்த்தவங்க.. கொஸ்டினை லீக் பண்ணீடாதீங்க.. :-)

க்ளூ: கேள்வி இந்தப் பதிவிலேயே இருக்கு.. :-)

Sunday, January 16, 2011

தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்

இன்றைய உலகில் இளைஞர்களின் வாழ்க்கை என்பது நாடோடி பொழைப்பாதான் ஆயிடுச்சு.. தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டுட்டே இருக்கோம்.. :-(.. அப்படி வெளியிடங்கள்ல இருக்கற நமக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.. அந்த அனுபவங்கள் நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் இருக்கும்.. எனக்கும் அந்தமாதிரி அனுபவங்கள் இருக்குங்கறதால எனக்கு தெரிஞ்ச விசயங்களை உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன்..

காலேஜ் முடிக்கற வரைக்கும்.. வெளியூர் ட்ரிப் போன நாட்களைத் தவிர.. வீட்டை விட்டு பிரிஞ்சதே இல்லை.. காலேஜ் முடிக்கற வரைக்கும் ஒரே ஜாலிதான்.. எங்க பேமிலில மெம்பர்ஸ் ஜாஸ்திங்கறதால.. வீட்ல இருந்தால் போர் அடிக்கும்ங்கற நேரங்கள் எல்லாம் ரொம்பக் கம்மி.. ஏதாவது டைம் பாஸ் ஆயிட்டே இருக்கும்.. படிக்கற விசயங்களுக்குக்கூட வீட்ல என்னை எதுவும் கேக்க மாட்டாங்க.. "மகனே!! நாங்கள்லாம் படிக்கல.. உனக்கு எங்களை மாதிரி கஷ்ட ஜீவனம் கூடாது.. படிக்க வைக்கிறோம்.. அதுல இருக்கற கஷ்டங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியாது.. எப்படி முடியுதோ அப்படி செய்யின்னு சொல்லிடுவாங்க..".. படிச்சு முடிச்சுட்டு ஊர் சுத்திட்டு இருந்தேன்.. எங்கே வேலைக்குப் போறது.. என்ன பண்றதுன்னே தெரியல..

சென்னையின் என் அண்ணன் ஒருவர் வேலை பார்த்துட்டு இருந்ததால.. அங்கே என்னை அனுப்பி வைச்சாங்க.. நானும் வேலைக்குப் போறேன்.. நானும் வேலைக்குப் போறேன்னு ஊர் முழுக்க சொல்லிட்டு கிளம்பியாச்சு.. ஊர்ல இருந்து திண்டுக்கல்ல இரயில் ஏர்ற வரைக்கும் பசங்க வந்தானுங்க.. இரயில் கிளம்பி 5வது நிமிசத்தில் எனக்கு கிடைத்த முதல் அனுபவம் "தனிமை".. ம்ம்ம்ம்.. தனியாகக் காட்ல விடறதுன்னு சொலவடம் சொல்வாங்க இல்லையா.. அந்த ஃபீலிங் எப்படி இருக்கும்னு உணர்ந்தேன்.. பெற்றவர்களைத் தேடித் திருதிருன்னு ரோட்ல நின்னுட்டு இருக்கற குழந்தையின் உணர்ச்சி என்னவாக இருக்கும்னு புரிஞ்சது அப்போ.. ம்ம்ம்.. வீட்டுக்குப் போறேன்னு அழுகாத குறைதான்னு வைங்களேன்.. ஆனால் இனி திரும்பிப் போக முடியாது..

படத்துல வர்றமாதிரி சென்னையில இறங்கியவுடன் என் அண்ணா நின்னுட்டு இருப்பார்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனால் அவரைக் காணோம்.. :-(.. வீட்ல வேற நிறைய சூதானம் சொல்லி அனுப்பி விட்டாங்களா.. கொஞ்சம் (நிறைய..:-)..) பயமாக இருந்தது.. வேலை காரணமாக அவரால் என்னை ரிசீவ் பண்ண வரமுடியல.. அங்கேயிருந்து எப்படி அம்பத்தூர் போறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.. சென்னையில் கண்டக்டர் எந்திரிச்சு வராம டிக்கெட் குடுக்கறது புதுசா இருந்தது.. பயணிகள் டிக்கெட் காசைக் கொடுத்து ஒருதருக்கு ஒருத்தர் பாஸ் பண்ணி வாங்கிக்கறாங்க.. ஆஹா!! நம்ம ஊர்ல கிட்ட வந்து கேட்டாலே.. மூடு இருந்தாத்தான் டிக்கெட் எடுப்போம்.. இங்கே எதுக்கு வம்புன்னு நானும் அப்படியே வாங்கினேன்.. இடையில் யாராவது காசை அப்படியே எடுத்துட்டு ஓடிட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு கவலையாக இருந்தது.. :-)

அம்பத்தூர் வீட்ல என் அண்ணனை மீட் பண்ணிட்டேன்.. அவரோட மொபைலை என் கையில் கொடுத்து.. நான் நேற்றே வளசரவாக்கத்துக்கு மாறிட்டேன்.. எனக்கு இப்போ வேலை இருக்கு.. இந்த மொபைல்ல பாரு.. ஏரியா நேம் டிஸ்பிளே ஆகுது இல்லையா.. நான் சொல்ற பஸ் நம்பர்ல ஏறி.. மொபைலைப் பார்த்துட்டே இரு.. வளசரவாக்கம்னு வந்தவுடன் இறங்கிடுன்னு சொல்லி அனுப்பிட்டார்.. மொபைல்ல அதேமாதிரியே டிஸ்பிளே வந்தது.. கூட்டத்துல இறங்கறதுக்குள்ள அடுத்த ஸ்டாப்பே வந்துட்டுச்சு.. சோ.. சென்னையில் தள்ளுங்கன்னு சொல்லிட்டு இறங்கறது வேலைக்கு ஆகாது.. தள்ளிட்டு இறங்கறதுதான் ஆகும்னு புரிஞ்சது..

என்னுடைய முதல் இண்ட்ர்வியூ.. லிட்டில் மவுண்டன்னு (சின்ன மலை) ஒரு ஏரியால.. அங்கே போறதுக்கு பேப்பர்ல ஒரு பெரிய மேப்பே வரைஞ்சு கொடுத்தார்.. ஐந்து, ஆறு பஸ் மாறிப் போகனும்னு பஸ் நம்பர் எல்லாம் சொல்லிட்டார்.. மேலும் டவுட் இருந்தா.. போற இடங்கள்ல தைரியமாக விசாரின்னு சொல்லி அனுப்பினார்.. பஸ் ஸ்டாப்புல நல்ல கூட்டம்.. அங்கே ஒரு பொண்ணுகிட்ட போய் லிட்டில் மெளண்டன் எப்படிப் போகனும்னு கேட்டா.. என் மேப்ல இருந்த வழிக்கு அப்படியே ஆப்போசிட்ல வழி சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. என்னடா இது!! இந்த வழி ரொம்ப ஈசியாக இருக்கேன்னு அந்தப் பொண்ணு சொன்ன வழியிலயே போனேன்.. அந்த இடம் ஒரு 15 நிமிசத்துலயே வந்துடுச்சு.. எல்லாருக்கும் போல முதல் இண்டர்வியூ.. அந்த பில்டிங்குள்ள போகவே கால் கூசிச்சு.. மனசெல்லாம் படபடப்பு.. ரொம்ப தயக்கமாக இருந்தது.. செக்யூரிட்டிகிட்ட என் பேரை ஃபீட் பண்றவரைக்குமே.. எந்த நேரமும் திரும்பிடற மூடுலயே இருந்தேன்..

திரும்பி வந்து நடந்ததை எல்லாம் அண்ணன்கிட்ட சொன்னா.. அடப்பாவி!! உன்னை சுத்தவிட்டு.. ஊரைச்சுத்திக் காட்டிடலாம்னு நினைச்சா இப்படி எஸ்கேப் ஆயிட்டயேன்னு ஓட்டிட்டு இருந்தாங்க..

ஒருமாதத்தில.. தாஜ்கோரமண்டலுக்கு ஆப்போசிட்ல இருக்கற ஒரு BPO கம்பெனியில் வேலை வாங்கினேன்.. வேலை ரொம்ப ஈசியாக இருந்தது.. ஆனால் ரொட்டேசனல் ஷிஃப்ட்ல போட்டுக் கொன்னு எடுத்தாங்க.. நேர நேரத்துக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கிட்டு.. வீட்டுக்கு வாரத்துக்கு ரெண்டுமுறை மட்டும் போன் பேசிக்கிட்டு.. ரோபோ மாதிரி.. வேலை பார்க்கறது.. ரூமுக்கு வந்து தூங்கறதுன்னு இந்த லைஃப் ஸ்டைல் பிடிக்கவே இல்ல.. அப்புறம் ரெண்டு மூனு கம்பெனிகள் மாறினேன்.. நண்பர்கள் கிடைச்சாங்க.. வெளியே அவங்களோட சுத்த ஆரம்பிச்சேன்..

சென்னையில் 8 மாதங்கள் மட்டுமே இருந்ததால அனுபவங்கள் ரொம்பக் கம்மிதான்.. ஆக்சுவலா BPOவில் சேர்றவங்களுக்கு எல்லாம்.. வாழ்க்கையே தூங்கறதும் வேலை பார்க்கறதுமாகத்தான் இருக்கும்..

சென்னையில் பஸ்ல பிக்பாக்கெட் அடிக்கறதைப் பார்த்திருக்கேன்.. நான் பார்க்கறதையும் பார்த்துட்டேதான் அடிச்சானுங்க.. கொஞ்சம்கூட தயங்கல..

நிறைய ஆந்திரா ஸ்டைல் ஹோட்டல்ஸ் இருக்கு சென்னையில.. வாரவாரம் அங்கேதான் அன்லிமிட்டடு மீல்ஸ் கட்டுவோம்..

பஸ்ல ஒருமுறை தொங்கிட்டுப் போயிட்டு இருந்தப்போ.. சடன் பிரேக் போட்டதில என் கை ஸ்லிப்பாயிடுச்சு.. கடைசி சீட்ல உட்கார்ந்திருந்த ஒருவர்.. கப்புன்னு கரெக்டா என் கையைப் பிடிச்சிட்டார்.. ரொம்ப நேரம் உடம்பு நடுங்கிக்கிட்டே இருந்தது.. அதுல இருந்து.. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் உள்ளே போக முடிந்தால் மட்டுமே பஸ்ல ஏர்றது.. :-)

என்கூட வேலைப் பார்த்த ஒரு பையனும், பொண்ணும்.. ஒரே அபார்ட்மெண்டாம்.. லவ் பண்ணிட்டு இருந்ததுங்க.. அவங்க லவ் சக்சஸ் ஆகறதுக்கு நிறைய சிக்கல் இருந்தது.. இப்போ என்ன ஆனாங்கன்னு தெரியல.. :-)

ம்ம்ம்.. போதும் இனி உங்களுக்குப் போர் அடிக்கும்..

என் அண்ணனுக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சது.. எங்க வீட்ல என்னையும் அண்ணனோடவே போயிடுப்பான்னு சொன்னாங்க.. காலேஜ்ல ரெண்டு நாள் டூர் போயிட்டு வந்த இடத்துக்கு போய் இருக்கப் போறமேன்னு ரொம்ப எக்ஸைட்டிங்கா இருந்தது.. அடுத்து வரும் நாட்களைப் பற்றித் தெரியாததால பெங்களூர் பஸ்ல ஏறிட்டேன்..

(பயணம் தொடரும்)

பயணத்தின் தொடர்ச்சி:

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்

Tuesday, January 11, 2011

குழந்தைகள் ராஜ்ஜியம்

சின்ன வயசுல குழந்தைகள் வளர்க்கப்படற விதமே அவங்களோட கேரக்டரை டிசைட் பண்ணுது..

குழந்தைகளுக்கு பெரும்பாலும் இரண்டு விதமான அனுபவங்கள் கிடைக்குது.. ஒன்னு.. அதிகப்படியான கண்டிப்பு.. ரெண்டாவது அதிகப்படியான செல்லம்..

அதிகப்படியான கண்டிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள் வீட்ல ஒருமாதிரியும்.. வெளியில் ஒருமாதிரியும் நடந்துக்கிறாங்க.. அவர்கள் மேல் விதிக்கப்படும் அதிகப்படியான கண்டிப்பு.. வெளியில் அவர்களை தப்பு செய்யத் தூண்டுது.. வேனும்னே பெத்தவங்க சொல்றதுக்கு ஆப்போசிட்டாக வெளியில் நடக்க ஆரம்பிச்சடறாங்க.. அதுமட்டுமில்லாம.. பெத்தவங்க மேலயும் ஒருமாதிரியான வெறுப்பை வளர்த்துக்கறாங்க..

பெத்தவங்க தங்கள் வாழ்க்கையில் இருக்கற ஏதோ ஒரு வெறுப்பையோ.. அல்லது ஏதோ ஒரு அனுபவத்தையோ பிள்ளைகள் மேல் செயல்படுத்தறதுதான் இந்த அதிகப்படியான கண்டிப்புக்கு காரணமாக இருக்குதுன்னு நினைக்கிறேன்..

நான் சிறுவனாக இருந்தப்போ.. என் வயது ஒத்த நண்பன்.. அவன் வீட்ல எப்போ பார்த்தாலும் அடிவாங்கிட்டேதான் இருப்பான்.. எதுக்கு அடி வாங்கினேன்னு கேட்டால்.. அவனுக்கே ஒன்னும் புரியாது.. சும்மா சிறுவர்கள் சாதாரணமாக செய்யும் சேட்டைகளுக்கே அந்த மாதிரி பலியாக அடி வாங்கிட்டு வருவான்.. சில்லு மூக்கு உடையறது எல்லாம்.. அவனைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அப்பப்போ அவனுக்கு இரத்தம் வரும் மூக்குல.. இதனால சின்ன வயசுலயே.. அவங்க வீட்டு ஆளுங்க மேல பெரிய கோவமே இருந்தது அவன் மனசுல.. ரொம்ப நேரம் எங்க வீட்லயேதான் இருப்பான்.. ரஸ்னா வாங்கிட்டு வந்து எங்க வீட்ல மறைஞ்சு நின்னு வேகவேகமாக சாப்பிட்டு.. ஓடுவான்.. அப்ப எனக்கு ஒன்னுமே புரியலைன்னாலும் அவனைப் பார்த்தால் பாவமாக இருக்கும்..

கொஞ்சம் வளர்ந்தபிறகு வாங்கின அடியெல்லாம் மரத்துப் போக ஆரம்பிச்சிடுச்சு அவனுக்கு.. ஒழுங்காப் படிக்கல.. ஆரம்பத்துல பெத்தவங்களுக்குத் தெரியாம அவங்களைத் திட்டிட்டு இருந்தவன்.. அப்புறம் நேருக்கு நேராகவே திட்ட ஆரம்பிச்சான்.. நண்பர்கள்கிட்டயும் மூர்க்கமாக நடந்துக்க ஆரம்பிச்சான்.. அப்புறம் என்கூட எல்லாம் சேரல.. 8 ஆம் வகுப்போடவோ, 10 ஆம் வகுப்போடவோ ஸ்கூலுக்குப் போறதை நிப்பாட்டிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டான்.. இப்போ எங்க ஏரியாவுல அவனும் ஒரு ரெளடியாம்.. எப்பவாவது நான் எதிர்த்து வந்துட்டாக்கூட.. முகத்தைக்கூட பார்க்க மாட்டான்.. இப்படி அவன் மாற சிறுவயதில் வாங்கிய தேவையில்லாத அடியும்.. பாசமின்மையும்தானே காரணம்..

இந்த வகையில் வருகிற இன்னொரு கிளை வகைன்னு சொல்லலாம்.. என்னன்னா.. கூடபிறந்தவர்களை ஒப்பிட்டோ.. பக்கத்து வீட்டுப் பிள்ளைகளை ஒப்பிட்டோ திட்டறது.. பார் அவன் எவ்வளவு நல்லா படிக்கறான்.. எவ்வளவு ஆக்டிவா இருக்கான்.. அப்படி இப்படின்னு கம்பேர் பண்ணித் திட்டறது.. காம்பேரிசன்ல வர்ற தன்னோட சகோதரனோ அல்லது பக்கத்து வீட்டுப் பையனோ.. திட்டுவாங்கற பையனோட வெறுப்புக்கு ஆளாகறாங்க.. அவனுக்கு என்ன திறமை இருக்குன்னு பார்த்து அதை செய்ய மறுக்கறாங்க நிறையப் பேர்.. அவனுக்கு புரிஞ்சுக்கறதுல கஷ்டம் இருக்கலாம்.. வேற ஏதாவது மனசுல குறை இருக்கலாம்.. அதையெல்லாம் ஆராயறதில்ல.. அடிக்கறது.. சூடு வைக்கறதுன்னு பண்றதால அந்தக் குழந்தைகள்.. மேலும் மந்தமாகிடறாங்க..

நெக்ஸ்ட்.. அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள்..

ஒரே பிள்ளை.. ரொம்ப நாள் கழிச்சுப் பிறந்த குழந்தை.. அப்படி இப்படின்னு பல ரீசன்ஸ்னால குழந்தைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கப்படறாங்க.. செல்லம் குடுக்கறதுனா என்ன?.. குழந்தைகள் பண்ற தப்புகளை அந்த நேரங்கள்ல கண்டுக்காம விட்டுடறது.. தேவையில்லாத பொருட்களைக் கேக்கும்போதும் வாங்கி வாங்கிக் கொடுத்தடறது.. இந்த மாதிரி பல விசயங்கள் இருக்கு..

இப்போ இருக்கற குழந்தைகள் பெரும்பாலும் பெத்தவங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடறதைப் பார்க்க முடியுது (இதான் பேர்சொல்லும் பிள்ளையோ.. :-)).. பாசத்துல சும்மா விளையாட்டுக்கு கூப்பிடறது வேற.. ஆனால் பழக்கமாகவே இருக்கு.. மற்றவர்களை பட்டப்பெயர் சூட்டிக் கூப்பிட சொல்லிப் பெற்றவர்களே சொல்லிக் கொடுக்கறதையும் பார்க்க முடியுது.. விளையாட்டுக்கு செய்ற இந்தப் பழக்கம் எல்லாம் இடத்துலயும் தொடரும்னு மறந்துடறாங்க இவங்க..

என் சொந்தக்காரப் பையன் ஒருவன்.. பயங்கர செல்லம்.. கேட்டது உடனே வந்தே தீரனும்.. அம்மாவை பேர் சொல்லித்தான் கூப்பிடறான்.. சட் சட்டுன்னு அடிச்சிடறான்.. இதைவிட வெளியிடங்கள்ல அவன் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துட்டால்.. அவன் வைச்சிருக்கற பொருளைவிட பெட்டரா அது இருந்துட்டா நைசா உடைச்சிட்டு வந்திடறான்.. அவன் வந்தாலே எல்லாம் வீட்ல அலர்ட் ஆயிடுவோம்.. முதல்ல அவங்க வீட்ல சொல்லிப் பார்த்தோம்.. செல்லமாம்.. கண்டுக்கவே மாட்டேங்கறாங்க.. இதெல்லாம் சின்னத் தப்புகளாக இருந்தாலும்.. குழந்தையிலேயே கவனிக்கனும் இல்லையா..

நாம் குழந்தைகள் மேல அக்கறையையும்.. கண்டிப்பையும் சம அளவுல காமிச்சா நல்லதுன்னு நினைக்கிறேன்.. ஆனால் அடிச்சு வளர்க்கறது எப்பவுமே சரியில்ல.. பாசமா சொல்றதைத்தான் எல்லாக் குழந்தைகளும் உடனே கேக்கும்.. குழந்தைகளுக்கு பெத்தவங்களின் கஷ்டங்களையும் சிறிதளவு தெரிய வைக்கனும்..

எங்க வீடு சொல்லப்போனா.. ஒருமாதிரி கூட்டுக்குடும்பம் ஸ்டைல்தான்.. 3 மாமா, 2 சித்தி அப்படின்னு எல்லாருடைய குடும்பங்களும் ஒன்னாவே இருக்கோம்.. மேனேஜ்மெண்ட் மட்டும் தனித்தனி.. வீட்ல ஏஜ் வாரியாக நிறையக் குட்டீஸ்கள் இருக்குதுங்க.. எப்பவும் கயமுய.. கயமுயன்னு ஒரே அலப்பறையாகத்தான் இருக்கும்.. வீட்டுக்குப் போனா.. நேரம் போறதே தெரியாது.. :-)

ஒருமுறை என்னுடைய மாமாவோட மகனும்.. சித்தியோட மகனும் பேசிட்டு இருந்தானுங்க.. ரெண்டு பயலுகளும் 2வது படிக்கறானுங்க.. ஒருத்தன் டேய்.. இப்போ நாம படிக்கற ஸ்கூல் எனக்குப் பிடிக்கலைடா.. நாம பேசாம அக்ஷயா ஸ்கூல்ல சேர்ந்துக்கலாம் என்ன சொல்றன்னு கேக்கறான்.. இன்னொருத்தன்.. நானும் அதைத்தாண்டா யோசிச்சுட்டு இருக்கேன் அப்படின்னு டாக் போயிட்டு இருந்தது..

நான் இடையில போய் ஏங்கடா.. அந்த ஸ்கூல்ல படிக்க வைக்க காசு நிறைய வேனுமேடா.. உங்கப்பா எப்படிடா கட்டுவார்னு கேட்டா.. இல்லண்ணா.. அப்பா என்னை ரொம்பக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கறதாகச் சொன்னார்.. அதனால இந்த ஸ்கூலுக்கும் கஷ்டப்பட்டு பணம் கட்டி படிக்க வைச்சிடுவார் அப்படிங்கறான்.. எப்படிப் பாருங்க.. :-).. சரிதாண்டான்னு சிரிச்சுட்டே அவனுங்க பேச்சுகளை கவனிச்சுட்டு இருந்தேன்..

என்னோட ரெண்டாவது மாமாவுக்கு இரண்டு பசங்க.. ஒருத்தன் இப்போ 1வது படிக்கறான்.. இன்னொருத்தன் இப்போதான் எல்.கே.ஜி. படிக்கறான்.. சின்னவனுக்கு எப்பவும் எதுவுமே அவன் அண்ணனுக்கு கிடைக்கறதுக்கு முன்னாடியே கிடைக்கனும்.. ஒருமுறை பெரியவன்.. ஏம்மா எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னு கேக்கறான்.. ஏண்டா மகனே!! உடனே பண்ணிடலாம்ண்டான்னு சிரிச்சுட்டே சொன்னா.. உடனே எனக்குத்தான் முதல்ல கல்யாணம் பண்ணனும்னு சின்னவன் அழுக ஆரம்பிச்சிட்டான்.. அவனை அடக்கவே முடியல.. ஒரே சிரிப்பு..

இந்தமாதிரி பலவிசயங்கள்.. :-).. சொல்லிட்டே போகலாம்..


இந்த மாதிரி நிறைய அறிவாளித்தனமான பேச்சுகள் இப்பவே குழந்தைகள்கிட்ட.. டிவி சேனல்களைப் பார்த்து நிறைய தெரிஞ்சுக்கறாங்க.. இந்தமாதிரி எல்லாக் குட்டீஸ்களும் பண்ற சேட்டைகளைப் பார்த்துட்டே இருக்கலாம்..

குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-)

Thursday, January 6, 2011

பெண்ணுக்கு என்ன வேண்டும்?

பசங்க எல்லாம் ஏதாவது பொருள் வாங்கப் போறோம்னா.. ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டோம்.. ஆனால் பொண்ணுங்க அப்படிக் கிடையாது.. புடவைக் கடை, நகைக்கடையில் இருந்து சின்ன க்ளிப் வாங்கறதாக இருந்தால்கூட.. ரொம்ப நேரம் தேடிட்டே இருந்தால்தான் அவங்க மனசுக்குத் திருப்தியாக இருக்கும்.. வாங்க வேண்டிய பொருள் எடுத்தவுடனே சிறப்பாக அமைந்தாலும்.. கொஞ்ச நேரமாவுது வேற ஏதையாவது தேடிட்டு வாங்கினாத்தான் அவங்களுக்கு மனசு ஆறும்.. பெஸ்டாக இருக்கறதை விட்டுடக் கூடாதேங்கற மனநிலையும்.. திருப்தியின்மையும்தான் காரணம்..

பொண்ணுங்க மனசுல என்ன ஓடிட்டு இருக்கு.. அவங்க எதை விரும்பறாங்க அப்படிங்கறதை தெரிஞ்சிக்கிட்டால் எல்லாமே சுலபமாயிடும்.. கண்டிப்பாக பொண்ணுங்களுக்கு பொண்ணுங்க.. என்ன நினைக்கறாங்கன்னு சொல்ல மாட்டாங்க.. அப்படியிருக்க ஒரு ஆணால் அவங்க மனசைப் படிக்க முடிந்தால்.. பொண்ணுங்க மனசுக்குள்ள திங்க் பண்ற எல்லா விசயங்களையும் கேட்க முடிந்தால்.. எல்லா பிரச்சினைகளும் சால்வ்டு இல்லையா..

அப்படி ஒருத்தர்தான் நம்ம ஹீரோ.. சரி அவரைப் பற்றி ஒரு இன்ட்ரோடக்சன்..

நிக் மார்சல் (மெல் ஜிப்சன்).. ஒரு விளம்பரக் கம்பெனியில வேலை பார்க்கறவர்.. அவருக்கு கல்யாணமாகி டைவர்சும் ஆயிடுச்சு.. ரெண்டு பேருக்கும் 15 வயசுல ஒரு பொண்ணும் இருக்கு..

பொண்ணுங்களைக் கவுக்கறதுலயும்..  கம்பெனியில் ஆண்களுக்கான விளம்பரங்களை உருவாக்குவதிலும் வல்லவராக இருக்கார் நம்ம ஹீரோ.. நிறையப் பொண்ணுங்களுக்கு அவரைப் பிடிச்சிருந்தாலும்.. மனசுக்குள்ள நிறையப் பேர் அவரைத் திட்டிக்கிட்டும் இருக்காங்க..

கம்பெனிக்கு அடுத்த மேனேஜராகப் போறோம்னு நிக் மார்சல் நினைச்சுட்டு இருக்கப்போ.. அவரோட பாஸ்.. ஒரு பொண்ணை அவரோட டிவிசனுக்கு மேனேஜாராக நியமிக்கறார்.. அவங்க கம்பெனி அடுத்து தயாரிக்கப்போற அடுத்த பிராடெக்ட் பொண்ணுங்களுக்கானது.. அப்புறம் புதுசா வந்திருக்கற பொண்ணு ரொம்ப திறமைசாலி.. அதனாலதான் உனக்கு அவரை மேனேஜராக்கினேன்னு சொல்றார் அவரோட பாஸ்..

இந்த சமயத்துல ஹீரோவோட எக்ஸ்-ஒய்ஃப்க்கு மேரேஜாகுது.. அவங்க ஹனிமூன் போகனுங்கறதால.. நிக் மார்சல் அவரோட பொண்ணை கொஞ்ச நாள் பார்த்துக்க வேண்டியிருக்கு.. அந்தப் பொண்ணுக்கு அவரைக் கண்டாலே பிடிக்கல.. சின்ன வயசுலயே ஒரு பாய் பிரண்ட் வைச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கு.. அட்வைஸ் பண்ணப் போற நிக் மார்சலையும் நீ யார் என்னக் கேக்கறதுன்னு திட்டிடுடுது..

தனக்குப் பதிலாக ஒரு பொண்ணை மேனேஜராக நியமிச்சிட்டதாலவும்.. தன் பொண்ணு இன்சல்ட் பண்றதாலவும் கடுப்பா உட்காந்திருக்கார் நிக் மார்சல்.. அன்னைக்கு நைட் ஆக்சிடெண்டா எலக்ட்ரிக் ஷாக் அடிச்சி மயக்கமாகிடறார்..

அடுத்த நாள் ஆபிஸ் போறவருக்கு பெரிய அதிர்ச்சி.. அவரை சுற்றி இருக்கற பொண்ணுங்க எல்லாம் மனசுல என்ன நினைக்கறாங்கன்னு தெளிவாக அவருக்கு கேக்குது.. முதல்ல இந்த மாதிரி கேக்கறது அவருக்கு பெரிய தலைவலியாக இருந்தாலும்.. தனக்கு சாதகமாக இந்த பிரச்சினையைப் பயன்படுத்திக்கனும்னு முடிவெடுக்கறார்..

அப்ப இருந்து.. அவர் மேனேஜரோட தாட்ஸை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு.. அவரோட ஐடியாக்களைத் திருடி.. கம்பெனியில் நல்ல பெயர் வாங்கறார்.. கூட வேலை பார்க்கற பொண்ணுங்களோட எண்ணங்களைப் புரிஞ்சுக்கிட்டு எல்லாருக்கும் நல்ல பிள்ளையாயிடறார்.. தன்னோட பொண்ணுகூட ராசியாகிறார்.. மேனேஜராக வந்திருக்கற பொண்ணும் அவர் மேல இம்ப்ரஸ் ஆகி லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.. அவரோட முழு ஐடியாக்களையும் திருடி.. பொண்ணுங்களுக்கான ஒரு விளம்பரப் படத்தை சக்சஸ்புல்லாக எடுத்து.. அவரோட பாஸ்கிட்ட நல்ல பெயர் வாங்கறார் ஹீரோ..

தன்னோட மேனேஜரோட ஐடியாக்களைத் திருடினாலும்.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கறதால.. நிக் மார்சலோட கேரக்டரும் கொஞ்சம் கொஞ்சம் சேஞ்ச் ஆகி ரொம்ப நல்லவராயிடறார்.. முதல்ல இருந்தே.. இவர் செய்த தில்லு முல்லுகளால அந்த மேனேஜர் பொண்ணுக்கு வேலை போக.. அந்தப் பிரச்சினையையும்.. அவரைச் சுற்றியிருந்த வேறு சில பிரச்சினைகளையும் எப்படி சால்வ் பண்றார்னு ரொம்ப காமெடியாக சொல்லியிருப்பாங்க படத்துல..

முழுக்க முழுக்க காமெடியான படம்..

பிரேவ் ஹார்ட், தி பேசன் ஆஃப் தி கிரிஸ்ட், அபோகாலிப்டோ போன்ற செம ஹிட்டான சீரியசான படங்களை இயக்கியவர் மெல் ஜிப்சன்.. இந்தப் படத்துல காமெடியிலும் படம் முழுக்க கலக்கியிருக்கார்..

விவேக்கூட இந்தப் படத்தை வைச்சித்தான் ஒரு படத்துல காமெடி டிராக் அமைச்சிருந்தார்..

"எந்தக் காரணமும் இல்லைனாலும் பொண்ணுங்க எப்பவுமே கவலைப்பட்டுட்டே இருக்கீங்க" அப்படின்னு சொல்வார் ஹீரோ..

அவருடைய பொண்ணு.. மனசுல நினைக்கிற விசயங்களை கேக்க நேர்றப்போ அவரோட அவஸ்தை நமக்கு ரொம்பக் காமெடியாக இருக்கும்..

மேனேஜராக வர்ற பொண்ணு.. மெல் ஜிப்சன் மேல இம்ப்ரஸ் ஆகற சீனைப் பற்றியெல்லாம் நான் சொன்னா நல்லா இருக்காது.. பாருங்க.. ரொம்ப ரசித்துப் பார்க்க முடிந்தது..

இன்னும் நிறையக் காட்சிகளை சொல்ல முடியும்.. ஆனால் எல்லாம் அடல்ஸ் ஒன்லி ஜோக்ஸா (ஒன்லி ஜோக்ஸ் மட்டும்தான் :-)) இருக்கறதால நீங்களே பார்த்து எஞ்ஜாய் பண்ணுங்க..

Wednesday, January 5, 2011

பழனிக்கு வாங்க - நம்ம ஏரியா!

முன் குறிப்பு: தமிழ் மணம் விருதுகள் மூன்றாம் சுற்றுக்கு என்னுடைய Shutter Island - திரைவிமர்சனம் பதிவு தேர்வாயிருக்கு.. இந்தப் பதிவுக்கு வாக்களித்து என்னை மூன்றாவது சுற்றுக்கு நகர்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.....
பழனி ஒரு கோயில் நகரம்னு பலருக்கு முன்பே தெரிஞ்சிருக்கும்.. முருகன்.. சிவபெருமான்கிட்ட கோவிச்சுட்டு நம்ம ஊருக்கு வந்துதான் செட்டில் ஆயிட்டார்.. தென் இந்தியாவில் திருப்பதிக்கு அப்புறம்.. அதிகமான வசூலைப் பெருவதும் நம்ம பழனி மலை முருகன்தான்..

பழனி மலைக்கு வர்ற பக்தர்கள் பெரும்பாலானவங்க கேரள மக்கள்தான்.. அவங்களுக்கு என்னமோ முருகன் மேல அவ்வளவு கிரேஸ்.. என்னுடைய மலையாளி நண்பன் ஒருவன்கிட்ட இதைப்பற்றிக் கேட்டதுக்கு.. பழனி முருகரோட பார்வை கேரளாவைப் பார்த்த மாதிரி இருக்காம். அதனாலதான்.. கேரளா நல்லா செழிப்பாக இருக்குதாம்.. அதனாலதான் எங்க மக்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்னு பதில் சொன்னான்.. இதுதான் சரியான காரணமான்னு தெரியலை எனக்கு..

நான் படிச்ச காலேஜை பழனி மலை தேவஸ்தானம்தான் நடத்திட்டு வருது.. அதனால படிக்கறப்போ எங்களுடைய ஐ.டி. கார்டு முருகனைப் பார்க்கறதுக்கு ஒரு பாஸ் மாதிரி.. அதைக் காமிச்சுட்டு ஸ்பெசல் தரிசனம் வழியில நாங்க போக முடியும்.. (:-))..

சரி இப்ப முருகனை தரிசிக்கலாம் வாங்க..

பஸ் ஸ்டாண்டை விட்டு இறங்கினவுடனே.. மலைக்கு எந்த வழியில் போகணும்னு யாரையும் கேக்கவே தேவையில்லை.. மலை தெரியற பக்கம் இரண்டு பாதைகள் போகும்.. எந்த பாதையில போனீங்கன்னாலும் மலைக்குப் போயிடலாம்.. மலைக்குப் பக்கத்தில் சன்னிதி ரோட்டைப் பிடிக்கறப்போ.. அங்கே திருஆவினன்குடியில குழந்தை முருகனை ஒரு விசிட் அடிக்க வேண்டியிருக்கும் நீங்க.. கோயிலுக்கு வர்றவங்க எல்லாரும் இங்கே குழந்தை முருகனை கும்பிட்டுட்டுதான் மேல போறாங்க..

இந்தக் கோயில்ல தினமும் நைட் 8 மணிக்கு டான்னு பெல்லு அடிச்சவுடனே பொங்கல் தருவாங்க பாருங்க.. சான்ஸே இல்ல.. நெய்யொழுக அருமையான டேஸ்டுல இருக்கும்.. காலேஜ் படிக்கறப்போ.. நண்பர்கள் எல்லாரும் கோயிலுக்கு சாமி கும்பிடப் போறேன்னுட்டு போய் பொங்கல் வாங்கித் திம்போம்..

இந்தக் கோயில் மாடத்துல புலிபடம் வரைஞ்சிருப்பாங்க.. எந்த டைரக்சன்ல நின்னு மேல பார்த்தாலும் நம்மலைப் பார்க்கற மாதிரியே இருக்கும் ஓவியம்.. கலக்கியிருக்காங்க வரைஞ்சவங்க.. உள்ளே முருகனை சுற்றி நிறைய சாமி சிலைகள் இருக்கும்..

அப்புறம் முருகனோட திருவிளையாடல்களை ஓவியங்களாக வரைஞ்சி மேல மாட்டியிருப்பாங்க.. குழந்தை முருகனை வேண்டிக்கிட்டு வெளியே வந்தா சன்னதி ரோடு..

இப்போ மலைக்கு கீழே இருக்கற பாதவிநாயகருக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு மேலே ஏற ஆரம்பிச்சா.. நீங்க இரண்டு விதமான பாதைகளைப் பார்க்கலாம்.. வயசானவங்களும்.. குழந்தைகளுக்கும் வசதியாக மலை மேல போறதுக்கு வின்ச், ரோப் கார்லாம் கூட இருக்கு..

முருகனைப் பார்க்கறதுக்கு இங்க.. பொது தரிசனம்.. 10ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய்னு வழிகள் அமைச்சிருக்காங்க.. காசுக்கு தகுந்த மாதிரி.. நாம முருகனை மீட் பண்ண சுத்தற பாதைகள் கம்மியாகும்..
இங்கே இருக்கற முருகனோட சிலையை போகர்னு ஒரு சித்தர் நிறைய மூலிகைகளைக் கொண்டு செய்திருக்கிறாரு.. முருகனை வேண்டிக்கிட்டு தீர்த்தத்தைக் குடிக்கிற மக்களோட நோய்கள் எல்லாம் குணமாயிடறதால.. நிறைய மக்கள் வர ஆரம்பிக்க.. அந்தக் காலத்தில பழனி ஏரியால அரசாட்சி பண்ணிட்டு இருந்த சேரமான் அப்படிங்கற மன்னர் இந்தக் கோயிலை எடுத்துக் கட்டியிருக்கிறார்.. அப்புறம் நிறைய மன்னர்கள் கைக்குப் போய் நிறைய ஆல்ட்ரேசன் பண்ணி.. இப்போ நாம பாக்கற கோயில் வரைக்கும் நிறையா மாறுதல்கள் பண்ணியிருக்காங்க..

முருகனுக்கு ராஜ அலங்காரம், ஆண்டி அலங்காரம்னு நிறைய அலங்காரங்கள் இருக்கு.. மாற்றி மாற்றி பண்ணிட்டு இருப்பாங்க.. என்ன பேசிஸ்லன்னு எனக்குத் தெரியாது.. :-)

அப்புறம் பழனிக்கு வர்ற பக்தர்கள்கிட்ட நம்ம ஆளுங்க.. ஏமாற்றி மொட்டை அடிச்சு விட்டுடறாங்க அப்படிங்கறது பரவலாக இருக்கற ஒரு குற்றச்சாட்டு.. ஆனால் எல்லா சுற்றுலாத் தளங்கள்லயுமே நடக்கற விசயம்தானே இது.. அதனால நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்..

முருகனைப் பார்க்கற ஆவல்ல பழனியில எந்த மூலையில் வந்து இறங்கினாலும்.. மலையோட தோற்றத்தைப் பார்த்து பக்தர்கள் பிரமிச்சு நின்னுடறாங்க.. அவங்க ஆ!!ன்னு பார்த்துட்டு நிக்கறதைப் பார்த்துட்டு அவங்களை ஏமாற்றறதுக்கு நிறையப் பேரு பஸ் ஸ்டாண்டுலயே வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. எந்த பஸ் வந்து நின்னாலும் சரி.. மலைக்குப் போறவங்க எல்லாம் இந்தப் பக்கம் போங்கன்னு சொல்லிட்டு நாலுபேர் வந்து நின்னுடுவாங்க.. அவங்களைக் கண்டுக்காம போறவங்க தப்பிச்சாங்க.. அடடா! எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க.. இப்படி பஸ்ல இருந்து இறங்கினவுடனே.. வழி கேக்காமலே நமக்கு வழி சொல்றாங்களேன்னு நினைச்சுட்டு அவங்க பக்கம் ஒரு லுக் விட்டாலே போதும்.. ஊர் திரும்பறப்போ.. அவங்க மொட்டையே அடிக்கலைன்னாலும்.. அடிச்சு குளுகுளுன்னு சந்தனம் பூசி தாட்டி விட்டுடுவாங்க..

அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு.. மலையை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.. நிறைய பஞ்சாமிர்தக் கடைகளும்.. பூஜை சாமான்கள் விக்கற கடைகளும் வரும்.. வேடிக்கை பார்த்துட்டே போயிட்டு இருக்கற பகதர்கள்கிட்ட.. சன்னதி ரோட்லயே செருப்பு போட்டுட்டு நடக்கக்கூடாது.. இங்கேயே கழட்டிவிட்டுட்டு பூஜை சாமான்களை வாங்கிட்டு போங்கன்னு கையைப் பிடிச்சு இழுத்தே சொல்லுவாங்க.. இதை நம்பி நிறையப் பேர் அங்கேயே செருப்பை கழட்டி விட்டுட்டுப் போறதையும் பார்த்துருக்கேன்..

மலை மேல ஏற ஆரம்பிச்சவுடனே.. எவன் மூஞ்சியைப் பார்த்தா ரொம்ப ஏமாளியாத் தெரியுதுன்னு பார்த்து.. திடீர்னு வந்து.. உங்க நெத்தியில திருநீரைப் பூசிவிட்டு.. கையிலயும் சின்ன ஒரு வேலைக் கொடுத்துட்டு.. முருகனுக்கு நீங்க காணிக்கைப் போட்டாத்தான் இப்போ நகர முடியும்னு நின்னுக்குவாங்க.. இதெல்லாம் 5 செகண்டுக்குள்ள நடந்திடும்.. என்னடா நடந்ததுன்னே தெரியாம அவங்ககிட்ட 10,20ரூபாய் கொடுத்துட்டு மேல ஏறவேண்டியிருக்கும்.. சின்னப் பையனாக இருந்தப்போ எனக்கும் இப்படி நடந்திருக்கு.. அப்புறம் இதே ஊர்னு சொன்ன உடனே ரிலீஸ் பண்ணிட்டாங்க.. என்ன ஒரு தொழில் தர்மம் பாருங்க. கோவிலுக்கே போனாலும் நாமதான பாதுகாப்பா இருந்து ஏமாறாம தரிசனம் பண்ணிட்டு வரனும்.. அப்பதான் அதோட பலன் கிடைக்கும் இல்லீங்களா..

சரி இப்பவே பதிவு பெருசாயிட்டதால இத்தோட முடிச்சிக்கறேன்.. இனி நம்ம ஊரைப் பத்தியும் அடிக்கடி எழுதறேன்..