.

Tuesday, November 30, 2010

Valkyrie - ஹிட்லரைக் கொல்ல சதி

ஹிட்லரைப் பற்றியும்.. இரண்டாம் உலகப்போரின் போது அவர் செய்த போர்ப் படுகொலைகளைப் பற்றியும் நிறையப் படங்கள்ல பார்த்துட்டோம்..

ஹிட்லரை அவரோட எதிரி நாடுகளுக்கு மட்டுமில்லாமல்.. அவருடைய இராணுவப் படைகளின் முக்கியப் பதவிகளில் இருந்த நிறையப் பேருக்கும் பிடிக்காமல்தான் இருந்தது.. அவர் தானாகவே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக.. 15 முறை அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்ததா அதிகாரப்பூர்வமான கணக்கு இருக்கு.. 1944 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ஹிட்லரைக் கொல்ல கடைசியாக ஒரு முயற்சி நடந்தது.. Colonel Von Stauffenberg அப்படிங்கறவரும்.. அவரோட சேர்ந்த சில பெரிய அதிகாரிகளும் சேர்ந்து அந்த முயற்சியில ஈடுபட்டாங்க.. இதுதான் ஹிட்லரைக் கொலை செய்ய நடந்த கடைசி முயற்சியா ரெக்கார்டு ஆயிருக்கு..

டாம் குரூஸ் இந்தப் படத்தோட ஹீரோ.. உண்மையான Colonel Von Stauffenberg முகமும்.. டாம் குரூஸோட முகமும் ஒரே மாதிரியா இருந்ததால.. டாம் குரூஸ் அவரோட பாத்திரத்துல நடிச்சார்..

முதல் காட்சியில டாம் குரூஸ் ஆப்ரிக்காவுல ஒரு வார் பீல்டுல இருக்கார்.. திடீர்னு அங்கே நடந்த துப்பாக்கிச் சூடுல.. அவருக்கு ஒரு கையில இரண்டு விரல்களும்.. இன்னொரு கையில மணிக்கட்டுக்கு கீழேயும், ஒரு கண்ணும் அவுட்டாயிடுது.. அதே நேரம்.. ஹிட்லரைக் கொல்ல நடந்த ஒரு முயற்சி தோல்வியடையறதைக் காமிக்கறாங்க..


வார் ஃபீல்டுல அடிபட்ட டாம் குரூஸ் பெர்லினுக்குத் திரும்பறார்.. அங்கே ஹிட்லருக்கு எதிரா.. அவரைக் கொல்ல சதித்திட்டம் போட்டுட்டு இருக்கற அதிகாரிகளை சந்திக்கறார்.. அவங்களுக்கெல்லாம் ஹிட்லரைக் கொல்லனும்னு எண்ணம் இருந்ததே தவிர எப்படி செயல்படுத்தனும்னு தெரியல.. அவங்கோட சேர்ற டாம் குரூஸ் ஹிட்லரைக் கொல்ல ஒரு திட்டம் போடறார்..

நாட்டுல எமெர்ஜின்சி பிரியட் வந்தா யூஸ் பண்றதுக்காக.. ஆபரேசன் வல்கெய்ரி அப்படிங்கற ஒரு அதிரப்படையை ஹிட்லர் அமைச்சிருந்திருக்கார்.. ஹிட்லரைக் கொன்னுட்டு அந்தப் படையை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கறதுதான் திட்டம்.. அந்தப் படையோட தலைவர் ஜெனரல் ஃப்ரம்.. டாம் குரூஸுக்கு நேரடியாக உதவி செய்ய மறுத்திடறார்.. அந்தப் படைக்கு ஏதாவது ஆர்டர் கொடுக்கனும்னா.. அடுத்து ஹிட்லரோட கையெழுத்துதான் தேவை.. அந்தக் கையெழுத்தையும் ஹிட்லரை ஏமாத்தி வாங்கிடறாங்க..

போர் நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடக்குது.. அந்தக் கூட்டத்துல ஹிட்லரையும் ஹிம்லர் அப்படிங்கற படைத்தளபதி ஒருவரையும் போட்டுத்தள்றதுன்னு முடிவு பண்ணி அந்தக் கூட்டத்துல டாம் குரூஸ் கலந்துக்கறார்.. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ஹிம்லர் வராமல் போகவே அன்னைக்கு பிளான் பெய்லியர் ஆயிடுது..

அடுத்து நடந்த கூட்டத்துல அதே பிளானை வெற்றிகரமா முடிக்கறார் டாம் குரூஸ்.. ஹிட்லர் இருந்த ரூம்ல பாம் வைச்சுட்டு.. அதை வெடிக்கறதைக் கண்ணால பார்த்துட்டு அங்கேயிருந்து தப்பிக்கறார்.. அப்புறம் அவங்க பிளான்படி நடக்காம அவரோட அதிகாரிகள் சொதப்பறாங்க.. டாம் குரூஸ் போய் அவங்களுக்கு தலைமை தாங்கி அவங்களோட பிளானை செயல்படுத்த ஆரம்பிக்கறார்..

ஆபரேசன் வல்க்ரேயைப் பயன்படுத்தி ஒவ்வொரு டிஸ்ட்ரிக்கையும் பிடிக்க ஆரம்பிக்கறார்.. போர்க்குற்றம் செய்த தலைமை அதிகாரிகள் அனைவரையும் கைது செய்றார்.. இப்படி விசயங்கள் நல்லபடியா போயிட்டு இருக்க.. ஹிட்லர் சாகலைன்னு தெரிய வருது..

Colonel Von Stauffenberg (டாம் குரூஸ்) யூஸ் பண்ண நினைச்ச அதே ரிசர்வ் ஆர்மி.. டாம் குரூஸோட சேர்ந்து.. அவருக்கு உதவியா இருந்த எல்லாரையும் கைது செய்து கொன்னுடறாங்க..
ஹிட்லரைக் கொல்ல நடக்கற முயற்சிகள்ல அவங்களோட டென்சனை நமக்கும் கொண்டு வந்திருப்பாங்க.. அந்த முயற்சிகள்ல எல்லாம் ஹிட்லர் கொல்லப்படலன்னு நமக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும்.. ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமா இருந்தது கதைக்களம்..

ஹிட்லரைக் கொல்ல டைம்பாம் வைச்சுட்டு.. டாம் குரூஸ் செக் போஸ்ட் தாண்டற வரைக்கும்.. விறுவிறுப்புல நாம இமைக்க மறந்திடுவோம்..

படம் முழுக்க திட்டம் போடறதாகவே.. வர்றதால நிறையப் பேசிட்டே இருப்பாங்க.. அதனால சப்டைட்டிலோட பார்த்தா ரொம்ப நல்லாயிருக்கும்..

இரண்டாம் உலகப்போர் காலத்துல நடக்கற கதையா இருந்தாலும்.. ஸ்கெண்ட்லர் லிஸ்ட், பியானிஷ்ட் மாதிரியான படங்கள் மாதிரி.. ஹிட்லரோட படைகள்.. அப்பாவி மக்களைக் கொல்றமாதிரி காட்சிகளை எல்லாம் வைக்கல..

நல்ல ஹிஸ்டாரிக்கல் திரில்லர் மூவி இது..


Tuesday, November 23, 2010

Eternal Sunshine of the Spotless Mind - காதலனின் துடிப்பு..!

Eternal Sunshine of the Spotless Mind (2004)

மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற திரைப்படங்கள்ல நாம பார்த்த காதல்.. தியேட்டரை விட்டு வெளியே வந்ததுக்கு அப்புறமும் நம்ம மனசுல கொஞ்சம் நேரமாவது இருந்துட்டே இருந்தது இல்லையா.. அது போலதான் இந்தப் படமும்.. ஒரு அருமையான காதல் கதை.. பார்வையாளர்களுக்கு தவிப்பையும் தாக்கத்தையும் உண்டாக்கூடிய திரைப்படம்..

படத்தோட நாயகன் ஜிம் கேரி.. இதுக்கு முன்னாடி மாஸ்க்குன்னு ஒரு திரைப்படத்துல நடிச்சு நகைச்சுவையில பிச்சு உதறினார்.. சில வருடங்களுக்கு முன்பு அவரோட ட்ரூமென் ஷோன்னு ஒரு படம் பார்த்து.. ஜிம் கேரி இவ்வளவு திறமையான நடிகரான்னு அசந்துட்டேன்.. அவர் நடிச்சு நான் பார்த்த மூன்றாவது திரைப்படம் இது.. கண்டிப்பாக அவரோட சிறந்த படங்கள்ல இதுதான் முதல்ல இருக்கும்..

படத்தோட நாயகி கேட் வின்ஸ்லெட்.. டைட்டானிக் படத்துல இளைஞர்கள் மனசுல புகுந்து நைட் தூக்கத்தைக் கெடுத்தவங்க.. அவர் நடிச்ச நிறைய படங்களைப் பார்த்திருக்கேன்.. அவரோட படங்கள் அனைத்துலயும்.. டைட்டானிக் மாதிரியே நம்ம எதிர்பார்ப்பை மோசம் பண்ணாம சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பாங்க (நடிப்பைத்தாங்க சொல்றேன்.. நீங்க வேறமாதிரி நினைச்சுக்கிட்டா நான் பொறுப்பில்லங்க.. :-)).. இந்தப் படத்துல நாயகன், நாயகியை சுத்தியேதான் கதை நகருதுங்கறதால இவங்க பெட்டர் சாய்ஸ்தான்..

ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் காதலர்கள்.. ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் ரொம்ப லவ் பண்றாங்க.. நாளாக ஆக ரெண்டு பேருக்கும் பிடிக்காமப் போகுது.. ஒரு நாள் சண்டை ரொம்ப முத்தி ரெண்டு பேரும் பிரிஞ்சிடறாங்க..

ஒருவரோட நினைவுகள்ல இருந்து ஒரு குறிப்பிட்ட சம்பவங்களை மட்டும் அழிக்கறதுக்கு ஒரு கம்பெனி செயல்பட்டிட்டு இருக்கு.. விரக்தியில அங்கே போய் ஜிம் கேரியோட நினைவுகளை எல்லாம் அழிச்சிடறார் கேட் வின்ஸ்லெட்.. இனி அவருக்கு ஜிம் கேரி யாருன்னே தெரியாது.. அவரோட லைஃப்ல ரெண்டு பேரும் இருந்த ஞாபங்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருச்சு.. இந்த விசயத்தை தெரிஞ்சுக்கறார் ஜிம் கேரி..

இந்த விசயத்தை கேள்விப்பட்ட ஜிம் கேரிக்கு பயங்கரமான அதிர்ச்சியாயிடுது.. அவரும் தன்னோட காதலி மேல இருக்கற கடுப்புல அந்தக் கம்பெனியை நாடறார்.. அவங்களும் அவரோட நினைவுகளை அழிப்பதற்கு டைம் பிக்ஸ் பண்ணிடறாங்க.. ஒருவரோட நினைவுகளை அழிக்கறதுக்கு அவங்க தூங்கிட்டு இருக்கறப்போ அவங்களோட சப் கான்சியஸ் மைண்ட்ல இருந்து அழிப்பாங்க.. இதுதான் பிராசஸ்..

அப்படி அழிக்கறப்போ நிகழ்காலத்துல இருந்து ஆரம்பிச்சு.. அவங்களோட ஆரம்பகால நினைவுகள் வரை அழிப்பாங்க.. ஜிம் கேரி தூங்கற சமயத்துல அந்த கம்பெனியை சேர்ந்த டீம் ஆட்கள் வந்து அவரோட நினைவுகள்ல இருந்து கேட் வின்ஸ்லெட்டோட நினைவுகளை அழிக்க ஆரம்பிக்கறாங்க.. முதல்ல சொன்னமாதிரி ரீசண்டா இருக்கற நினைவுகளை எல்லாம் அழிச்சிடறாங்க..

இப்போ ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் சந்தோசமா இருந்த காலங்களை அழிக்க ஆரம்பிக்கறாங்க.. ஜிம் கேரி தூக்கத்துல இருந்தாலும் தன்னோட நினைவுகள் அழிக்கப்படறதை உணர ஆரம்பிக்கறார்.. இப்போ அவரோட நினைவுகள்ல இருக்கறது அவருக்கு பிடிச்சமான காதலியோட நினைவுகள்.. அதை அழிக்கவிடாம தடுத்திடனும்னு நினைக்கறார்.. ஆனால் அவர் தூக்கத்துல இருக்கறதாலவும்.. அந்த பிராசஸ் நடந்துக்கிட்டு இருக்கறதாலவும்.. அவரால எழுந்திருக்க முடியல..

படத்தோட பெரும்பகுதி அவங்க ரெண்டு பேரோட சந்தோசமான பகுதிகளை ஜிம்கேரியோட மனசுல இருந்து நாமலும் தெரிஞ்சுக்கிறோம்.. நாம பார்க்கப் பார்க்க அவரோட நினைவுகள் அழிக்கப்பட்டுட்டே வரும்..தன்னோட காதலியோட ஏதாவது ஒரு நினைவை பாதுகாத்து வைச்சுக்கனும்னு.. மூளையில ஏதாவது ஒரு இடத்துல நாயகியோட ஞாபகத்தை ஒழிச்சு வைச்சுக்கனும்னு ரொம்ப கஷ்டப்படுவார் ஜிம் கேரி.. அவரோட தவிப்பு.. பார்வையாளர்களுக்கும் தவிப்பை ஏற்படுத்திடும்.. கடைசியில அவர் தோத்துத்தான் போவார்.. அவரோட ஞாபகங்கள்ல இருந்து கேட் வின்ஸ்லெட்டோட ஞாபகங்களை எல்லாத்தையும் வெற்றிகரமா அழிச்சுடுவாங்க..

ரெண்டு பேரோட வாழ்க்கையையும் ரிவர்ஸ்ல பார்த்தமாதிரி இருக்கும் பார்வையாளர்களுக்கு.. கொஞ்சம் கவனிக்காம விட்டால்.. ஒன்னுமே புரியாது படம்..

முதல்காட்சிகள்ல ரெண்டு பேரும் ஏதேச்சையா சந்திச்சு.. ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் செய்துக்குவாங்க.. ரெண்டு பேரும் புதுசா சந்திச்சு லவ் பண்ணப் போறாங்களாக்கும்னு நினைச்சிட்டு இருப்போம்.. ஆனால் ஜிம்கேரி தன்னோட நினைவுகளை அழிக்கறதுக்கு முடிவு பண்ற இடத்துல இருந்து சீனை ஆரம்பிச்சு.. திரும்பவும் முதல் காட்சியில கொண்டு வந்து நிறுத்துவாங்க..

நமக்கு அன்பானவங்க மேல சூழ்நிலைகளால கோபமும் வெறுப்பும் ஏற்பட்டாலும்.. அவங்க மேல நமக்கு எந்தளவுக்கு பாசமும் இருக்குன்னு இந்தப் படம் சொல்லும்.. அந்தக் கருப்புப் பகுதிகளை நீக்கிட்டா வாழ்க்கை ரொம்ப நல்லாயிருக்கும்னு சொல்லுது கதை..

இருவரது ஞாபகங்களும் சுத்தமாக அழிக்கப்பட்ட இந்த நிலையில.. ஒருத்தரை ஒருத்தர் மீண்டும் சந்திச்சுக்கறாங்க.. திரும்பவும் ரெண்டு பேரும் ஒன்னு சேர்வாங்களான்னு திரைக்கதையில இருந்து நாம தெரிஞ்சுக்கலாம்.. :-)

மின்னலே படத்துல "வெண்மதி வெண்மதியே நில்லு" பாட்டுலயும், விண்ணைத் தாண்டி வருவாயால "மன்னிப்பாயா" பாட்டுலயும் நமக்கு ஒரு ஃபீல் வருமே.. அதே ஃபீலை இந்தப் படத்தோட ஒவ்வொரு காட்சிகள்லயும் உணரலாம்..

காதலோட அழகை.. அதை இழந்திடக்கூடாதுன்னு ஜிம் கேரியோட தவிப்பை அழகாகக் காட்டியிருக்காங்க..

கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.. இதோ திரும்பவும் அந்தப் படத்தை பார்க்கப் போறேன்.. :-)


Friday, November 19, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தொடர் பதிவு

இந்தத் தொடர்பதிவை எழுதுவதற்கு என்னை அழைத்த பிரியமுடன் ரமேஷுக்கு முதல்ல நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

இந்தப் பேரை உச்சரிக்கும் போதே மனசுக்குள்ள சொல்ல முடியாத சந்தோசம் வரும் நிறையப் பேருக்கு.. அந்த சந்தோசத்தை சின்ன வயசுல இருந்து நானும் உணர்ந்தவன்தான்..

பதிவுலகத்தில எல்லாரும் சூப்பர் ஸ்டாரோட படங்களைப் பற்றி எழுதியது எல்லாமே அருமையா இருந்தது..

சூப்பர் ஸ்டாரோட படங்களைப் பார்க்கறப்போ என் வீட்ல இருக்கறவங்க எல்லாரும் என் முகத்தைப் பார்த்து கிண்டல் பண்ணிட்டு இருப்பாங்க.. ஏன்னா படத்துல தலைவர் என்ன ஆக்சன் பண்றாரோ அதே ஆக்சனை நானும் செய்துட்டு இருப்பேன்.. அதெல்லாம் அவங்களுக்கு பார்க்க காமெடியா இருக்கும்.. நான் அதெல்லாம் கண்டுக்கறதில்ல.. ரொம்ப ரசிச்சுப் பார்ப்பேன்..

சின்னப் பையனா இருக்கப்போ தர்மத்தின் தலைவன் படம் ரிலீஸ் ஆயிருந்தது.. படத்துல கரெக்டா இடைவேளை விடறப்போ ரஜினியை நாசர் குத்திடுவார்.. அதுக்கப்புறம் படத்தைப் பார்க்க மாட்டேன் வீட்டுக்குப் போலாம்னு.. தியேட்டர்ல அடம் புடிச்சு தரையில உருண்டது இன்னும் ஞாபகம் இருக்கு.. :-)

தியேட்டர்ல மக்கள் எல்லாம் என்னைப் பார்த்து சிரிச்சுட்டு.. நிறையப் பேர் வந்து சமாதானப்படுத்தினாங்க.. அப்புறம் இடைவேளை முடிஞ்சவுடனே இன்னொரு ரஜினிகாந்த்.. மோட்டார் பைக்ல பறந்து வர்றதோட ஆரம்பிக்கும் படம்.. அப்போதான் அழுகையை நிறுத்திட்டு ஈஈன்னு சிரிச்சேன்.. இன்னும் வீட்ல சொல்லி சிரிப்பாங்க..

இதுவரைக்கும் தலைவரோட படத்துக்கு முதல் நாள் காட்சிக்கெல்லாம் போனதே இல்ல.. தளபதி ரிலீஸ் ஆன முதல் நாள்.. சும்மா ட்ரை பண்ணுவமேன்னு தியேட்டர் பக்கம் போயிருந்தேன்.. ரசிகர்கள் நெருக்கியடிச்சுக்கிட்டு நின்னுட்டு இருந்ததுல தியேட்டர் காம்பெளண்ட் சுவரே விழுந்துடுச்சு.. அவ்வளவு கூட்டம்.. அப்புறமென்ன போலீஸ்காரங்க எல்லாரையும் குச்சியைத் தூக்கிட்டு துரத்த எஸ்ஸாகி வீட்டுக்கு ஓடியாந்துட்டேன்..

இன்னும் எவ்வளவோ அழகான நினைவுகள்..

சூப்பர் ஸ்டாரோட படங்கள்ல பத்து படங்களை மட்டுமே செலக்ட் பண்ணனும்ங்கறது ரொம்ப கஷ்டமான விசயமா இருக்கு.. 100 படங்களை செலக்ட் பண்ணுன்னு சொன்னா இன்னும் ரொம்ப சந்தோசமா இருக்கும்.. இருந்தாலும் முயற்சி பண்றேன்..

நீங்க எல்லாருமே இந்தத் தொடர் பதிவுல சூப்பர் ஸ்டாரோட ஒவ்வொரு படங்களைப் பத்தியும் சூப்பரா எழுதிட்டீங்க.. அதனால படப் பெயரை மட்டும் குறிப்பிட்டுட்டேன்..

1. மனிதன்
2. தளபதி
3. பாட்ஷா
4. நல்லவனுக்கு நல்லவன்
5. தில்லு முல்லு
6. வேலைக்காரன்
7. தர்மத்தின் தலைவன்
8. தர்மதுரை
9. மிஸ்டர் பாரத்
10. பில்லா


அய்யய்யோ.. அதுக்குள்ள பத்து படங்கள் முடிஞ்சு போச்சே.. இந்தப் படங்கள்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச படங்கள்னு சொல்ல மனசு வரல..

ரஜினிகாந்தோட எல்லா படங்களுமே எனக்குப் பிடித்த படங்கள்தான்.. அவரது ஒவ்வொரு படத்தையும் மிகவும் ரசிக்கறேன்..

அடுத்த வருசம் பாட்ஷா இரண்டாம் பாகம் எடுக்கப்போறதாக நெட்ல படிச்சேன்.. கண்டிப்பா பட்டையக் கிளப்புவாரு ரஜினி..

இந்தப் பதிவைத் தொடர்வதற்கு நான் நானாக அன்பரசனை அன்புடன் அழைக்கிறேன்..

Wednesday, November 17, 2010

FIGHT CLUB - திரை விமர்சனம்

எட்வர்டு நார்டன் இந்தப் படத்தோட கதை சொல்லியா இருக்கார்.. தன்னோட வாழ்க்கையில நடக்கற சம்பவங்களை நமக்கு சொல்ற மாதிரி படம் நகருது..

முதல் காட்சி.. ஏதோ ஒரு கட்டிடத்தோட மேல் மாடில நார்டனைக் கட்டிப்போட்டு.. அவர் வாய்க்குள்ள துப்பாக்கியை விட்டு சுட்டுடுவேன்னு மிரட்டிட்டு இருக்கார் ஒருத்தர்.. அவருக்கு என்னாச்சு.. ஏன் அந்தாள் நார்டனை அடிச்சுக் கட்டிப்போட்டிருக்கார்??..

பிளாஷ்பேக்ல ஆறுமாசத்துக்கு முன்னாடிக் கொண்டு போறாங்க நிகழ்வுகளை..

நார்டனுக்கு அவர் செய்ற வேலையில திருப்தியே இல்ல.. வாழ்க்கையில இஷ்டமில்லை.. உறக்கமின்மை நோயால பாதிக்கப்பட்டிருக்கார்.. நைட் முழுவதும் கொட்டக்கொட்ட முழிச்சிட்டே உட்கார்ந்திருக்கார்.. டாக்டர்கள் அவரோட நோயைக் குணப்படுத்த முடியாதுன்னு கைவிரிச்சிடறாங்க.. தான் ரொம்பக் கஷ்டப்படறதா ரொம்ப எமோஷனலா பேசறார் நார்டன்.. "ஆதரவாளர்கள் அமைப்பு"க்குப் போய் பார்.. அங்கே இருக்கறவங்க எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு உனக்குப் புரியும்.. போய் ஒழுங்கா உடற்பயிற்சியெல்லாம் கடுமையா செய்து தூக்கம் வரவழைக்கற வழியப் பார்ன்னு டாக்டர் சொல்லிட்டுப் போயிடுவார்..

ஏதாவது பெரிய நோய்களால அவதிப்பட்டுட்டு இருக்கறவங்க.. சீக்கிரம் செத்துப் போகற நிலையில இருக்கவங்க எல்லாம் சேர்ந்து வாரத்துல ஏதாவது ஒரு இடத்துல ஒரு கூட்டம் போட்டு.. தங்களோட துக்கங்களைப் பகிர்ந்துக்கிட்டு வாய்விட்டு அழுவாங்க.. அதான் ஆதரவாளர்கள் அமைப்பு..

டாக்டர் சொன்னதுல இப்ரஸ் ஆன நார்டன் ஒரு ஆதரவாளர்கள் அமைப்புக்குப் போறார்.. அங்கே எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு அழறாங்க.. இவரும் "பாப்"னு ஒருத்தரைக் கட்டிப்பிடிச்சு அழறார்.. அன்னைக்கு நைட் குறட்டை விட்டுத் தூங்கறார்.. இந்தமாதிரிக் கூட்டங்கள்ல கலந்துக்கறதால தன்னோட மன அழுத்தங்கள் குறையுதுன்னு நினைக்க ஆரம்பிக்கறார் நார்டன்.. அதனால எங்கெங்க கூட்டங்கள் நடக்குதோ அங்கெல்லாம் போய்.. அழுது.. தன்னோட மன அழுத்தத்தைக் குறைச்சிக்கறார்..

மார்லான்னு ஒரு பொண்ணும் புதுசா கூட்டங்கள்ல கலந்துக்க ஆரம்பிக்கறாங்க.. அவங்களோட வருகை நார்டனை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. தன்னைப் போலவே அவங்களும் நோயிருக்கறதா பொய் சொல்லி கூட்டங்கள்ல கலந்துக்கறதா நினைக்கிறார்.. அவர்கிட்ட இருந்து விலகிப் போகனும்னு நினைக்கிறார்..

நார்டன் வியாபார விசயமா வெளியூர் போறப்போ விமானத்துல டைலர்ன்னு ஒருத்தரை சந்திக்கறார்.. அவர் சோப்பு விக்கற சேல்ஸ் மேன்.. ரெண்டு பேரும் விமானத்துல நல்லா பேசி அறிமுகமாயிக்கறாங்க..

வெளியூர் டிரிப் முடிஞ்சு வீட்டுக்குப் போற நார்டனுக்கு பெரிய அதிர்ச்சி.. அவரோட அபார்ட்மெண்ட் தீ பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கு.. அவருக்கு வேற எதுவும் போக்கிடம் இல்ல.. அவருக்கு அங்கே தெரிஞ்சது மார்லாவும் விமானத்துல அவர் சந்திச்ச டைலரும்தான்.. 


ரொம்ப யோசிச்சதுக்கு அப்புறம் டைலருக்குப் போன் பண்றார் நார்டன்.. ரெண்டு பேரும் ஒரு நைட் பார்ல சந்திச்சு தண்ணியடிக்கறாங்க.. டைலரோட தங்கறதுக்கு நார்டன் அனுமதி கேக்கறார்.. நீ எங்கூட வரனும்னா என் மூஞ்சியில குத்து அப்படின்னு சொல்றார் டைலர்.. நார்டனும் அதுபோலவே செய்ய.. டைலர் அவரைத் திரும்பக் குத்தறார்.. ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போட்டுக்கறாங்க.. ஆனால் அந்த சண்டை ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடிச்சிப் போயிடுது..

சண்டை போடறதால தன்னோட மன அழுத்தம் குறையறதை ஃபீல் பண்றார் நார்டன்.. டைலரும் நார்டனும் அடிக்கடி அந்த நைட் பார் முன்ன சண்டை போட்டுக்கறாங்க.. அவங்களோட சண்டை அங்கே வர்றவங்களுக்கு பிடிச்சுப் போகுது.. நானும் சண்டை போடறேன்னு ஒவ்வொருத்தரா அவங்களோட சண்டையில கலந்துக்கறாங்க..

கொஞ்ச நாள்ல அந்த நைட் பாரோட பேஸ்மெண்ட்லயே சண்டை போட ஆரம்பிக்கறாங்க.. டைலர் அந்த பேஸ்மெண்டுக்கு பைட் கிளப்புன்னு பேர் வைக்கறார்..

பைட் கிளப்புல கலந்துக்கிறதுக்கு சில விதிகளை விதிக்கறார் டைலர்..

விதி 1: ஃபைட் கிளப்புல இருக்கறவங்க ஒருத்தரை ஒருத்தர் எந்தக் கேள்வியும் கேக்கக்கூடாது..
விதி 2: ஃபைட் கிளப் பத்தி யார்கிட்டயும் பேசக்கூடாது

அங்கே சண்டை போடறவங்க.. ஜெயிக்கனும் தோக்கனும்னு எந்த நோக்கத்துக்காகவும் சண்டை போடறதில்லை.. பணம் கட்டி விளையாடறதில்லை.. சண்டை போடறதுல ஒரு திருப்தி கிடைக்குது அங்கே வர்றவங்களுக்கு.. இந்த சண்டைக்கு நிறையப் பேர் அடிக்ட் ஆகறாங்க.. டைலர் சொல்றதை எல்லாம் மெஸ்மெரிசம் செய்யப்பட்டவங்க போல கேக்க ஆரம்பிக்கறாங்க..

பைட் கிளப்புல சண்டை போடறது மட்டுமில்லாம உறுப்பினர்களுக்கு ஹோம் ஒர்க் கொடுக்க ஆரம்பிக்கறார் டைலர்.. ஒரு உதாரணம்.. தெருவுல போற யாரையாவது வம்பிழுத்து வழிய அடிவாங்கனும் இதுதான் ஹோம் ஒர்க்.. இது எப்படி இருக்கு.. அவர் என்ன சொன்னாலும் அப்படியே செய்ய ஆரம்பிக்கறாங்க எல்லாரும்.. இப்போ குறைஞ்சது ஒரு 200 பேர் சேர்ந்திடறாங்க அந்த கிளப்புல.. அந்தக் கிளப் உறுப்பினர்கள் எல்லாரையும் கொஞ்ச கொஞ்சமா சட்ட விரோத செயல்களை செய்யத் தூண்டறார் டைலர்..

பைட் கிளப்புக்கு கிடைக்கிற வரவேற்பைப் பார்த்து வேற வேற ஊர்களுக்கும் போய் அந்தக் கிளப்பை ஆரம்பிக்கறார் டைலர்.. கொஞ்சம் நாள்ல ஒரு சமூக விரோதிகள் அமைப்பு மாதிரி நிறையப் பேர் உருவாயிடறாங்க.. புதுசா பைட் கிளப்புக்கு பிராஜெக்ட் மேஹம்னு பேர் வைக்கறார்..

டைலர் சொன்ன ஒரு ஹோம் ஒர்க்கை பண்ற சமயத்துல நார்டனோட நண்பர் பாப் இறந்துடறார்.. நிலைமை ரொம்ப சிரீயஸா போறதைப் பார்த்த நார்டன் இந்த வேலைகளை நிறுத்த சொல்லி டைலர்கிட்ட சண்டை போடறார்.. டைலர் அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு அந்த இடத்தை விட்டுப் போயிடறார்.. ஆனாலும் நார்டன் அவரைக் கண்டுபிடிச்சு இந்த சட்ட விரோத செயல்களை தடுத்த நிறுத்த ஊர் ஊரா டைலரைத் தேடிப் போறார்.. அவர் போற இடங்கள்ல எல்லாம் எல்லாரும் சண்டை போட்டுட்டே இருக்காங்க.. நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு..

டைலரை எங்கே தேடியும் கிடைக்கல..

அந்தத் தேடுதல்ல நிறைய அதிர்ச்சியான விசயங்களைத் தெரிஞ்சுக்கறார் நார்டன்..

நார்டன் டைலரைத் தேடி அவரோட இந்த வேலைகளை நிறுத்தினாரா?.. டைலர் ஏன் இப்படி ஒரு சமூக விரோதிகள் அமைப்பை உருவாக்கினார்?.. உண்மையில டைலர் யார்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் திரைக்கதை சுவாரஷ்யமான பதில்களை சொல்லும்..

படத்தோட முதல் காட்சிதான் கடைசிக் காட்சியும் கூட..

நார்டன் படம் முழுக்க நமக்கு கதை சொல்லிக்கிட்டே இருப்பார்.. திரைக்கதை ஓட்டத்தை நல்லா கவனிச்சா.. நடக்கப்போற விசயங்களை யூகிச்சுட முடியும்னு நினைக்கிறேன்.. படம் பார்த்து முடிஞ்ச பிறகு காட்சிகளை யோசிச்சுப் பார்த்தப்போ.. அப்பவே கண்டுபிடிச்சிருக்கலாம்னு புரிஞ்சது..

ஆனால் விறுவிறுப்பான திரைக்கதை..

நார்டனும், பிராட் பிட்டும் நல்லா நடிச்சிருக்காங்க.. பிராட் பிட் ரொம்ப மேன்லியா இருப்பார்..

பிராட் பிட்.. நார்டனோட நண்பி மார்லாவைக் கரெக்ட் பண்ணிடுவார்.. அதுக்கப்புறம் வர்ற காட்சிகள் சின்னப் பசங்க பார்க்கறதுக்கு உகந்ததல்ல.. ஆனால் மார்லாவா நடிச்சிருக்கற பொண்ணுக்கு திரைக்கதையில பெரிய ஸ்கோப் ஏதும் இல்ல.. டைலர் அவரைக் கரெக்ட் பண்ற காட்சிகள் மாதிரி.. கதையோட்டத்துக்கு யூஸ் ஆகறாங்க அவ்லோதான்..

கதையோட்டத்துக்கு லாஜிக் இல்லாத விசயங்களும் சில இருந்தது..

இந்தப் படத்தை டைம் இருந்தா பார்க்கலாம்.. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது..

Monday, November 15, 2010

A BEAUTIFUL MIND - திரை விமர்சனம்

 John Forbes Nash, Jr., அப்படின்னு நோபல் பரிசு வாங்கனவரோட வாழ்க்கையை ஆதாரமா வைச்சி இந்தப் படத்தை எடுத்துருக்காங்க..

1947 ஆம் ஆண்டுல இருந்து படம் ஆரம்பிக்குது..

ஹீரோ ஜான் நாஷ்.. பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில வந்து மாணவரா சேர்றார்.. கணிதத்துல பெரிய சாதனைகளைப் பண்ணனும்ங்கறது அவரோட எண்ணம்.. காலேஜ் ஹாஸ்டல்ல தனக்கு தனியறையே போதும்னு சொன்னாலும்.. அவரோட அறைத்தோழனா வந்து சேர்றார் சார்லஸ்.. அவர் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட்..

கிளாஸ் அட்டெண் பண்றதுல எல்லாம் ஜானுக்கு நாட்டமேயில்ல.. தான் ஒரு பெரிய கணித மேதையாகறதுக்கு இந்த விசயங்கள் எல்லாம் தாமதமாக்குதுன்னு நினைக்கறார்.. அவரால யார்கூடவும் இயல்பா பழக முடியல.. தனிமைல ஏதாவது கணக்கு போட்டுட்டு இருக்கறதையே பெரிதும் விரும்பறார்.. அவரோட இந்த செய்கையைப் பார்த்து சகமாணவர்கள் அவரை ரொம்ப நக்கல் பண்றாங்க..

சார்லஸைத் தவிர யாரையுமே அங்கே அவருக்குப் பிடிக்கல..

ஜான் ரொம்ப காலமா கிளாஸ் எதுவுமே அட்டெண் பண்ணாததால.. ஜானோட துறைத்தலைவர் அவரைக் கூப்பிட்டு நீ உன்னோட பிராஜெக்டை சப்மிட் பண்ணாத்தான் அடுத்து வேலையை உன்னாலப் பார்க்க முடியும்னு ரொம்பக் கடுமையா சொல்லிடறார்.. ஜானும் இரவு பகலா உக்காந்து ஒரு பிராஜெக்டை வெற்றிகரமா முடிச்சிடறார்.. துறைத்தலைவரும் அவரோட பிராஜெக்டல ரொம்ப திருப்தியாகி MIT(Massachusetts Institute of Technology)-ல வேலை வாங்கித் தர்றார்..

ஜான் வேலை வாங்கிட்டாலும் அவருக்கு கிளாஸ் எடுக்கறதுல எல்லாம் இஷ்டமே இல்ல.. அது தன்னோட வேலை இல்ல.. தன்னோட இலட்சியத்தை இதன் மூலமா அடைய முடியாதுன்னு நினைக்கிறார்..

ஒருமுறை அரசாங்கத்துல இருந்து கூப்பிட்டு ஒரு சீக்ரெட் கோடை பிரேக் பண்ணித்தரச் சொல்றாங்க.. அவரும் அந்த வேலையை வெற்றிகரமா செய்துடறார்.. அப்புறம் காலேஜ்ல அவரோட ஸ்டூடண்ட் ஒரு பொண்ணை லவ் பண்ணிக் கல்யாணமும் பண்ணிக்கறார்..

ஜானும் அவரோட காலேஜ் ரூம்மேட் சார்லஸும் திரும்பவும் சந்திச்சுக்கறாங்க.. சார்லஸ்கூட அவரோட சொந்தக்காரப் பொண்ணு மெர்சியும் வந்திருக்கு.. அந்தப் பொண்ணையும் ஜானுக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுது..

ஒருநாள் ஜானை ஒரு இரகசிய ஏஜெண்ட் சந்திக்கறார்.. ரஷ்யப் பத்திரிக்கைகள்ல தீவிரவாதிகள் சங்கேதமுறையில பேசிக்கறதாகவும்.. அதனால இனி தினமும்.. ரஷ்ய பத்திரிக்கைகளைப் படிச்சு கோட் பிரேக் பண்ணித்தரணும்னு கேட்டுக்கறார்.. அதுல இருந்து ஜான் ஒரு இரகசிய உளவாளியா மாறி கோடு பிரேக் பண்ற வேலையை ஆரம்பிக்கறார்.. எப்பவுமே அவர் இந்த வேலைகள்லயே இருக்கறதால அவரோட மனைவி ரொம்ப இரிடேட் ஆயிடறாங்க..

படம் பார்க்கனும்னு நினைக்கறவங்க இந்த கோட்டுக்குள்ள இருக்கற பாகத்தைப் படிக்காதீங்க..
---------------------------------------------------------------------------------------------------------------
ஜான் ஒரு காலேஜ்ல கெஸ்ட் லெக்சர் எடுத்துட்டு இருக்கப்போ.. அவரை நாலைஞ்சு பேர் தூக்கிட்டுப் போயிடறாங்க.. ரஷ்ய உளவாளிகள்தான் தன்னை தூக்கிட்டு வந்துட்டதா நினைக்கறார் ஜான்.. ஆனால் அது ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்.. ஜானோட ஒய்ஃப்தான் அவரை அங்கே அட்மிட் பண்ணியிருக்கறது..

ஜானை ட்ரீட் பண்ற டாக்டர்.. அவரைப் பத்தின அதிர்ச்சியான சில உண்மைகளை சொல்றார்.. அதாவது ஜானோட பிரண்ட் சார்லஸ், மெர்சி, இரகசிய ஏஜெண்ட் எல்லாருமே ஜானோட கற்பனைகள்தான்.. அந்த உண்மையை ஜானுக்கு கஷ்டப்பட்டு புரிய வைக்கறாங்க..

ஜான் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வீட்டுக்குப் போனவுடனே அவரோட மெடிகேசனை ஃபாலோ பண்ணாம விட்டுடறார்.. அதனால அவரோட கற்பனை பாத்திரங்கள் எல்லாம் திரும்பவும் வந்திடுது.. ஒருமுறை ஜானோட சைகைகள் எல்லை மீறிடவே.. அவரோட ஒய்ஃப் அவரைக் கோவிச்சுக்கிட்டு கிளம்பிடறாங்க.. அப்போதான் ஜான் ஒரு விசயத்தை ரியலைஸ் பண்றார்.. தன்னோட பிரண்ட்ஸ் யாருக்குமே வயசே ஆகலையே.. சின்னப் பொண்ணு இவ்வளவு வருசங்கள் ஆகியும் சின்னப் பொண்ணாவே இருக்கு.. மத்தவங்களும் அப்படியே இருக்காங்களேன்னு ரியலைஸ் பண்றார்.. இந்த விசயத்தை தன் மனைவிகிட்ட சொல்லி இனி ஒழுக்கமா இருக்கேன்னு மன்னிப்பு கேக்கறார்..

ஜானுக்கு இப்போ ரொம்ப வயசாயிடுது.. காலேஜ்ல பொறுப்பா வேலை பார்த்திட்டு இருக்கார்.. அவரோட சேர்ந்து படிச்ச ஒருத்தர்தான் அந்த காலேஜ் ஹெட்டா இருக்கார்.. இப்பவும் அவங்க மூனு பேரும் ஜானுக்கு முன்ன வந்து தொல்லை பண்ணிட்டேதான் இருப்பாங்க.. ஆனாலும் அவரோட கற்பனைப் பாத்திரங்களோட பேசாம இருக்கப் பழகிட்டார்..

கடைசியில ஜானோட உழைப்பைப் பாராட்டி.. அவர் உருவாக்கின கேம் தியரிங்கற ஒரு கான்செப்ட்டுக்கு நோபல் பரிசு கொடுக்கறாங்க..
---------------------------------------------------------------------------------------------------------------  கிளாடியேட்டர் படத்துல வந்து அதிரடிக் காட்சிகள்ல பட்டையக் கிளம்பின Russell Croweதான் இந்தப் படத்தோட ஹீரோ.. இந்தப் படத்துல அவரோட பாந்தமான நடிப்பு அற்புதம்.. அவரோட மென்மையான கேரக்டர்ல அருமையா செட்டாயிருப்பார்..

ஒரு மனிதனால தன்னோட இலட்சியத்தை அடைய முடியலைன்னா எவ்வளவு துடிச்சுப் போவான்னு தன்னோட அருமையான நடிப்புல காட்டியிருக்கார் ஹீரோ..

படத்துல நிறைய விசயங்கள் பிடிச்சிருந்தது.. அதுல ஒரு சீன்..
ஜானும் அவரோட துறைத்தலைவரும் பேசிட்டு இருப்பாங்க.. அங்கே ஒரு புரொபசர் ரிடையர்டாகி போறப்போ அவருக்கு எல்லாரும் தங்களோட பேனாவைக் குடுத்து மரியாதை செலுத்துவாங்க.. அந்த நிகழ்வைக் காமிச்சு ஜான்கிட்ட இதைப் பத்தி நீ என்ன நினைக்கறேன்னு கேப்பார் துறைத்தலைவர்..

 ஜான் அவரை உத்துப் பார்த்துட்டு அவருக்கு இப்போதான் அங்கீகாரம் கிடைச்சிருக்குன்னு சொல்வார்.. அது அங்கீகாரம் இல்ல.. அவரோட உழைப்புக்கு கிடைக்கற வெகுமதி இது.. வாழ்க்கையை அப்படிப் பார்த்துப் பழகுன்னு சொல்வார் துறைத்தலைவர்.. ரொம்ப நல்ல சீன்..

காலேஜ்ல பசங்க வாலிபால் விளையாடிட்டு இருப்பாங்க.. பசங்க விளையாடறப்போ அவங்களோட மூவ்மென்ட்ஸ்ல கூட கணக்கு இருக்கு.. அப்படின்னு அதுக்கு ஒரு கணக்கு போடுவார்.. ஒருத்தர் கழுத்துல கட்டியிருந்த டை டிசைனைப் பார்த்து இப்படித் திங்க் பண்ணி டிசைன் பண்ணினதுக்கும் ஒரு கணக்கு இருக்குன்னு சொல்வார்.. உண்மையிலயே அப்படியெல்லாம் இருக்கும் போல!!..

ஜானைப் பற்றின உண்மைகள் அவரோட மனைவிக்குத் தெரியவரும் போதும்.. நைட்ல ஜானோட சந்தோசமா இருக்க முடியாத போதும்.. மனைவியா நடிச்சிருக்கற ஜெனிஃபர் கானலி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பாங்க..

கடைசிக் காட்சியில ஜான் நோபல் பரிசு வாங்கும்போது அவருக்கு பெருமையா இருக்குதோ என்னவோ.. நமக்கு ரொம்ப பெருமையாவும்.. திருப்தியாகவும் இருக்கும்.. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்..

Thursday, November 11, 2010

THE BUTTERFLY EFFECT - திரை விமர்சனம்

The Butterfly Effect (2004)

ஈவன் கதையோட ஹீரோ.. சின்ன வயசில இருந்தே ஒரு நோயால அவதிப்பட்டுட்டு இருக்கார்.. என்ன பிரச்சினைன்னா திடீர்னு அவருக்கு எல்லாமே பிளான்காயிடும்.. என்ன நடந்ததுன்னே தெரியாது.. அவர் நிக்கற இடத்துக்கு எப்படி வந்தார்னே தெரியாது.. ஆனால் அங்கே ஏதாவது செய்திருப்பார்.. எல்லாரும் அவரைப் பார்த்து திட்டிட்டு இருப்பாங்க..

ஈவனோட ஸ்கூல் டீச்சர் அவரோட அம்மாகிட்ட கொஞ்சம் பேசனும் கூப்பிட்டு.. ஈவன் வரைஞ்ச ஒரு படத்தைக் காமிப்பாங்க.. பெரியவனானவுடனே நீங்க என்னவாக ஆசைப்படறீங்கன்னு கேட்டு எல்லார்கிட்டயும் படம் வரைய சொல்லியிருந்தேன்.. உங்க மகன் வரைஞ்ச படத்தைப் பாருங்கன்னு குடுப்பாங்க.. அதுல ரெண்டு மூனு பேரை ஒருத்தன் குத்திட்டு கத்தியில இரத்தம் ஒழுக நிக்கறமாதிரி இருக்கும் அந்தப்படம்.. அந்தப்படத்தை வரைஞ்சது ஈவனுக்கே தெரியலைன்னு அவரோட ஸ்கூல் டீச்சர் சொல்லுவாங்க.. அப்போதான் அவருக்கு அந்தப் பிரச்சினை இருக்கறதே அவங்கமாவுக்குத் தெரிய வரும்..

ஈவனோட அம்மா வெளியே எங்கேயோ போறதுக்காக.. அவரோட பிரண்ட் வீட்ல ஈவனை விட்டுட்டுப் போறாங்க.. அந்த ஆள் சின்னப் பையனா இருக்கற ஈவனையும்.. அவரோட சின்னப் பொண்ணையும் வைச்சி போர்ன் மூவி எடுக்க முயற்சி பண்ணுவார்.. ரெண்டும் சின்ன பசங்களா இருக்கறதால திருதிருன்னு முழிக்குங்க.. திடீர்னு ஈவனுக்கு நினைவு வர்றப்போ அந்த சின்னப் பொண்ணு ஈவனை சினேகமா பார்த்துட்டு இருக்கும்.. அந்தாள் ரொம்ப டென்சனா ஈவனைப் பார்த்து முறைச்சிட்டு இருப்பான்.. என்ன நடந்ததுன்னு தெரியாது..

ஈவனைக் கூட்டிட்டு டாக்டர்கிட்ட போறாங்க அவங்கம்மா.. டாக்டருக்கு ஒன்னுமே புரியல.. எல்லாம் நார்மலாத்தான் இருக்கு.. ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலைன்னு சொல்றார்.. ஆனால் இப்போ இருந்து ஈவனை ஒவ்வொரு செகண்டும் டைரி எழுதச் சொல்றார்.. அப்போ இருந்து ஈவன் டைரி எழுதத் தொடங்கறார்..

ஈவனோட அப்பா ஜெயில்ல இருப்பார்.. அவரைப் பார்க்கனும்னு அவங்கம்மாகிட்ட அடம்பிடிச்சு அங்கே போவார் ஈவன்.. அப்பாவும் மகனும் பேசிட்டு இருக்கப்போ திடீர்னு ஈவனைக் கொல்லப் பார்ப்பார் அவர் அப்பா.. அங்கே என்ன நடந்தது? எதுக்கு அப்பா தன்னை கொல்ல முயற்சிக்கறார்னு ஈவனுக்கு சுத்தமா தெரியாது.. அவரைக் காப்பாத்தற முயற்சியில போலீஸ் ஈவனோட அப்பாவைக் கொன்னுடுவாங்க..

ஈவன் இப்போ கொஞ்சம் வளர்ந்திடறார்.. அவரோட கேர்ல் பிரண்டும்.. அந்தப் பொண்ணோட அண்ணனும் படம் பார்க்கப் போயிருப்பாங்க.. அப்போ படம் பிடிக்காம அண்ணனை விட்டுட்டு இவங்க ரெண்டு பேர் மட்டும் வெளியே வந்து ரொமாண்ஸ் பண்ணிட்டு இருக்குங்க.. அதை பார்த்த அந்தப் பொண்ணோட அண்ணனுக்கு ஈவனைப் பிடிக்காமப் போயிடுது.. அந்தப் பையன் ஒரு ரெளடி மாதிரி நடந்துக்கறான்..

மேல சொன்ன மூனு பேரும்.. இன்னொரு குண்டுப் பையனும் சேர்ந்து.. ஒரு வீட்ல இருக்கற தபால்பெட்டியில பட்டாசு கொளுத்திப் போடறதுக்கு போறாங்க.. திடீர்னு ஈவனுக்கு நினைவு திரும்பறப்போ எல்லாரும் ஓடிட்டு இருக்காங்க.. அந்தக் குண்டுப் பையன் நடுங்கிப் போயிருக்கான்.. என்ன நடந்ததுன்னு தெரியாது..

என்ன நடந்ததுன்னே தெரியாம பிரச்சினைகள் ஏற்பட்டுட்டே இருக்கறதால.. ஈவனோட அம்மா அவங்க வீட்டைக் காலி பண்ணீட்டு போயிடறாங்க.. ஈவனும்.. அவனோட கேர்ல் பிரண்டும் பிரிஞ்சிடறாங்க.. அப்போ ஈவன் உனக்காகத் திரும்பி வருவேன்னு ஒரு நோட்டுல எழுதி அந்தப் பொண்ணுகிட்ட காமிக்கறார்..

ஈவன் இப்போ காலேஜ்ல படிக்கறார்.. இப்போ அந்தமாதிரி ஏதும் பிளான்க் ஆகறதில்லை.. ஒருநாள் அவர் சின்ன வயசுல எழுதின டைரியைப் படிக்கறப்போ.. சின்ன வயசுல.. அவருக்கு நினைவு மறக்கறப்போ என்ன நடந்ததுன்னு உணர முடியுது..
ஈவனுக்கு இப்போ தன்னோட பழைய கேர்ல் பிரண்ட் ஞாபகம் வந்து.. அவளைப் பார்க்கப் போறார்.. அந்தப் பொண்ணு ஒரு ஹோட்டல்ல சர்வரா வேலைப் பார்த்துட்டு இருக்கு.. அந்தப் பொண்ணுட்டு பேசறப்போ நீ என்னை இந்த நரகத்துல தவிக்க விட்டுட்டு நீ பாட்டுக்குப் போயிட்ட.. இப்போ எதுக்கு என்னத் தேடி வந்தன்னு அழுதுட்டே ஓடிடுது.. அடுத்த நாள் அந்தப் பொண்ணு சூசைட் பண்ணிக்கிட்டதா தகவல் வருது.. அந்தப் பொண்ணோட இறுதி சடங்குல போய் அவர் சின்ன வயசுல எழுதிக் காமிச்சாரே "உனக்காகத் திரும்பி வருவேன்னு" அந்தப் பேப்பரை குழிக்குள்ள போட்டுட்டு.. உன்னை சாக விடமாட்டேன்னு சொல்றார்..

அவர் சொன்னமாதிரியே அவரோட கேர்ல் பிரண்ட் தற்கொலைப் பண்ணிக்காமக் காப்பாத்துவார் ஈவன்.. ஏற்கனவே இறந்து போனவளை எப்படிக் காப்பாத்தினான்னு சொன்னா அடுத்த பாதிப்படத்தைப் பார்க்கற ஆர்வம் போயிடும்.. அதனால நீங்க பார்த்து தெரிஞ்சுக்கங்க..

படம் ஆரம்பிக்கறதே ரொம்ப விறுவிறுப்பா இருக்கும்..

ஹீரோவோட நிலைக்கு காரணம் என்னங்கறது ஒரு திருப்புமுனைனா.. படத்துல அதை விட ஏகப்பட்ட டிவிஸ்டுகள் இருக்கு.. எல்லா டிவிஸ்டுகளையும் படம் பார்க்கறப்போ நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா நல்ல சுவாரஸ்யமா இருக்கும்..

ஈவனுக்கு தன்னை மறந்து நினைவு வர்றப்போ.. ஈவனை விட நமக்குத்தான் பெரிய குழப்பா இருக்கும்.. என்னடா நடந்திருக்கும்னு ரொம்ப ஆர்வம் அதிகரிச்சிட்டே போகும்..

ஈவனோட நிலைக்கு என்ன காரணம்னு தெரியறப்போ சான்சே இல்ல.. செம திரில்லிங்.. அதுக்கப்புறம் வர்ற ஒவ்வொரு காட்சிகளும் அடுத்து என்ன நடக்குமோன்னுதான் நகரும்..

கொஞ்சம் கான்சன்ட்ரேசன் மிஸ் பண்ணிப் பார்த்தாலும் படம் புரியாது.. செமயான திரில்லர் மூவி..

இந்தப் படத்துக்கு தொடர்ச்சியா வெளியான இரண்டு படங்ககளோட கதைக் களங்கள் வேற வேறயா இருந்தாலும்.. படத்தோட மெயின் தீம் நமக்குத் தெரியும்ங்கறதால இந்தப் படத்துல உணர்ந்த திரில்லிங்கை ஃபீல் பண்ண முடியாது..


Wednesday, November 10, 2010

அரசு வேலை வேண்டுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) படிப்பு வாரியாக குரூப்புகளைப் பிரிச்சு தேர்வுகளை நடத்தி அரசாங்கப் பணிகளுக்கு ஆட்களை எடுத்துட்டு வர்றாங்க.. இந்தத் தேர்வுகள்ல தேர்ச்சி பெற்றதுக்காக 500, 1000ன்னு செலவு பண்ணி புத்தகங்களை வாங்கிப் படிக்கறோம்.. இல்லைனா ஏதாவது கோச்சிங் சென்டர்ல சேர்ந்து நிறைய செலவு பண்றோம்..

எங்க ஊர் பழனியில இருந்து ஐந்து கிலோமிட்டர் தூரத்துல இருக்கற ஆயக்குடின்னு ஒரு கிராமத்துல மக்கள் மன்றம் அப்படின்னு ஒரு கோச்சிங் சென்டரை நடத்திட்டு வர்றாங்க.. அங்கே வி.ஏ.ஓ, போலீஸ், குரூப் 1, குரூப் 2 இப்படி பல அரசுப் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தறாங்க.. போன வருசம் மட்டும் இங்கே படிச்சவங்கள்ல இருந்து 782 பேர் அரசுப் பணிகளுக்கு செலக்ட் ஆயிருக்காங்க.. இந்தப் பயிற்சி வகுப்புகளுக்காக அவங்க எந்த கட்டணத்தையும் வசூலிக்கறதில்லை..

ஆரம்பத்துல ஆயக்குடியில இருக்கற ஒரு ஸ்கூல்ல அந்தக் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் அப்படிங்கறவர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இலவசமா பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சார்.. அப்புறம் அங்க கோச்சிங் நல்லாயிருக்கறதா மாணவர்கள் சொல்றதைக் கேட்டு.. அவரோட நண்பர்களும் தங்களோட சுய ஆர்வத்துல அங்க வர்றவங்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சாங்க..

ஒருசமயத்துல போலீஸ் வேலைக்காக அங்கே பயிற்சி வகுப்புக்கு வந்த ஆயக்குடியை சேர்ந்த 24 பேர் ஒன்னா செலக்ட்டாகி ரெக்கார்டு பண்ணினாங்க.. அப்போ இருந்து மக்கள் மன்றம் பாப்புலராக ஆரம்பிச்சிடுச்சு.. இப்போ மக்கள் மன்றத்தை ஏழு நிர்வாகிகள் கொண்ட ஒரு குழு நடத்திட்டு இருக்கு.. இன்னொரு ஏழு வாத்தியார்களும் வந்து கிளாஸ் எடுத்துட்டு இருக்காங்க.. பழனியை சுத்தியிருக்கற ஊர்கள்ல இருந்தும்.. தேனி, கம்பம் ஏரியால இருந்தும் நிறையப் பேர் வந்து படிக்கறாங்க.. எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர்.. இந்தப் பயிற்சி வகுப்பை அட்டென் பண்றதுக்காக ஆயக்குடியில இருந்து 7 மணி நேர தூரத்துல இருக்கற கிரிஷ்ணகிரிங்கற ஊர்ல இருந்து வாராவாரம் வந்து படிக்கறார்..

இவ்வளவு பாப்புலர் ஆயிட்ட பிறகும் இன்னும் மக்கள் மன்றத்தை சேர்ந்தவங்க அங்க படிக்க வர்றவங்ககிட்ட ஒரு ரூபாய்கூட எதுக்கும் வாங்கறதில்ல.. முதல்ல அங்கே இருந்த ஒரு அரசாங்கப் பள்ளியில கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க.. இப்போ நிறையப்பேர் படிக்க வர்றதால நாலு பயிற்சி வகுப்புகளை கிட்டக்கிட்ட இருக்கற கிராமங்கள்லயும் அவங்க நடத்தறாங்க..

இந்தப் பயிற்சிகளை எப்போ ஆரம்பிக்கறாங்கன்னா.. ஒவ்வொரு முறையும் அரசாங்கம் தேர்வுகளைப் பற்றி அறிக்கையை வெளியிட்டவுடனே இவங்களும் நாளிதழ்கள்ல பயிற்சி வகுப்புகளைப் பத்தின விளம்பரங்களைக் கொடுத்திடறாங்க..

என்னோட சகோதரியும் இந்தப் பயிற்சி வகுப்புகளை தொடந்து அட்டென் பண்ணிட்டு வர்றாங்க.. போனமுறை ஊருக்குப் போயிருந்தப்போ அவங்ககிட்ட அப்படி என்ன ஸ்பெசல் அந்த மக்கள் மன்றத்துல.. காசும் வாங்கறதில்ல.. எப்படி ஆர்வமா சொல்லித்தர்றாங்கன்னு கேட்டேன்.. அதுக்குத்தான் நான் மேல சொன்னக் கதைகளை எல்லாம் என் சகோதரி சொன்னார்.. அவங்க வகுப்புகளை எடுக்கற ஸ்டைலைப் பத்தி சில எடுத்துக்காட்டுகளை சொன்னார்.. இனி அந்தக் கேள்விகளை யார் கேட்டாலும் எப்ப வேணும்னாலும் நான் சொல்வேன்.. அப்படியே மனசுல பதிஞ்சுட்டது..

அவர் சொன்ன சில எடுத்துக்காட்டுகள்ல ஒன்னை இங்க சொல்றேன்:

1. முதல் உலக சமயமாநாட்டில் கலந்து கொண்ட இந்தியர் யார்? அப்படிங்கறது கேள்வி..

பதில்: விவேகானந்தர்.

இப்படி ஒத்தை வரியில சொன்னா கண்டிப்பா யாரா இருந்தாலும் கொஞ்ச காலத்துல மறந்துடுவாங்க.. இந்தக் கேள்விக்கு மக்கள் மன்றத்துல எப்படி பதில் சொல்றாங்கன்னா..

1893 ஆம் ஆண்டு நடந்த முதல் உலக சமய மாநாட்டுல விவேகானந்தர் கலந்துக்கிட்டாராம்.. அப்போ இருந்து இப்போ வரைக்கும் நடந்த மாநாடுகள்ல கலந்துக்கிட்ட ஒரே இந்தியரும் அவர்தானாம்.. அவருக்கப்புறம் வேற யாருமே கலந்துக்கிட்டதில்லையாம்.. அப்படிக் கலந்துக்கிட்டப்போ நம்ம இந்தியாவோட பாரம்பரியத்தை விளக்கற மாதிரி ஒரு புத்தகத்தை எடுத்துட்டுப் போயி அங்கே இருக்கற மேஜையில வைச்சிருக்கார்.. அவரையும் இந்தியாவையும் அவமானப்படுத்தறதுக்காக அங்கே வந்திருந்த மத்த நாட்டுக்காரங்க தங்களோட புத்தகங்களை அந்தப் புத்தகத்துக்கு மேல மேல அடுக்கி விவேகானந்தரோட புத்தகத்தை கடைசியில தள்ளிட்டாங்களாம்..

அப்போ நடந்த சொற்பொழிவுல பேசின ஒருத்தர் விவேகானந்தர் பக்கம் திரும்பி.. இந்தியா எப்பவுமே நீங்க கொண்டு வந்த உங்க புத்தகம் மாதிரிதான்.. எப்பவுமே எங்களுக்கு கீழேதான் அப்படின்னாராம்.. அதுக்கு விவேகானந்தர்.. அது அப்படியில்லங்க.. உலக பாரம்பரியம் அனைத்தையும் தாங்கி நிக்கறது எங்க இந்தியாதான்.. உங்களை எல்லாம் நாங்கதான் தாங்கிப்பிடிச்சிட்டு இருக்கோம்னாராம்.. அவர் பேசின இந்த சொற்பொழிவு மிகவும் பிரசித்தி பெற்றதாம்..

இப்படி அந்த ஒரு ஒன்வேர்ட் கேள்விக்கு இவ்வளவு பெரிய பதில் சொல்வாங்களாம்.. அவங்க சொல்ற இந்த மாதிரி பதில்களாலேயே இனி அந்தக் கேள்விகளை படிக்கவேண்டிய அவசியமே இல்லாமப் போயிடுதாம்..

அங்கே போய் சேர்றவங்களுக்கு எல்லாருக்கும் அவங்க கொடுக்கற முதல் ஆலோசனை என்னன்னா.. 500, 1000னு காசைப் போட்டு புத்தகங்களை வாங்காதீங்க.. 6 ஆம் வகுப்புல இருந்து 12 ஆம் வகுப்பு புத்தகங்கள்ல இருக்கற முக்கியமான விசயங்களைப் படிச்சாலே போதும்ங்கறாங்களாம்..

தேர்வுக்காக தமிழ், கணிதம், வரலாறு, பொது அறிவுன்னு அனைத்து பாடங்களையும் சூப்பரா எடுக்கறாங்களாம்.. எந்தப் பிரதிபலனையுமே எதிர்பார்க்காம மக்கள் மன்றத்தை நடத்திட்டு வர்ற அவங்க உண்மையிலயே கிரேட்தான்..


Monday, November 8, 2010

PAN'S LABYRINTH - திரை விமர்சனம்

Pan's Labyrinth - 2006 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் மொழித் திரைப்படம்..

ரொம்ப காலத்துக்கு முன்பு பாதாள உலகத்தோட இளவரசி மொனானா.. பாதாள உலகத்துக்கு மேல இருக்கற பூமியில என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு அங்க இருந்து எஸ்கேப்பாயி பூமிக்கு வர்றாங்க.. அப்போ சூரியனைப் பார்த்து அவங்க கண்ணு குருடாயிடுது.. அப்படியே அவங்களோட நினைவுகள் எல்லாம் அழிஞ்சு போயி இறந்து போயிடறாங்க..

1944 ஆம் ஆண்டு ஸ்பெயின் உள்நாட்டுப் போர் முடிஞ்ச சமயத்துல இருந்து படத்தை ஆரம்பிக்கறாங்க.. ஒஃபிலியான்னு ஒரு சின்னப்பொண்ணும், அவரோட கர்பிணி அம்மாவும்.. அவங்க அம்மாவோட புது வீட்டுக்காரர் கேப்டன் விடல்கூட சேர்ந்து இருக்கறதுக்காக போயிட்டிருக்காங்க..

கேப்டன் விடல் ஒரு மலைப்பிரதேசத்துல தங்கி.. அவங்க ஆட்சிக்கெதிரா போராடிட்டு இருக்கற கொரில்லா படைகளைக் கண்டுபிடிச்சு கொன்னுட்டிருக்கார்.. ஒருமுறை ஒரு விவசாயியும், அவரோட மகனையும் சந்தேகப்பட்டு கொலை பண்றதுல இருந்து அவர் ரொம்பக் கொடுமைக்காரர்னு தெரிஞ்சிடுது..

ஒஃபிலியாவும் அவரோட அம்மாவும் அந்த மலைப்பிரதேசத்திற்கு வர்றாங்க.. அங்கே ஒரு லேபிரின்த்(ரவுண்டு ரவுண்டா ஒரு பாதையில உள்ள போய் வெளிய வர்ற மாதிரி ஒரு அமைப்பு) இருக்கறதைப் பார்க்கறாங்க ஒஃபிலியா.. அன்னைக்கு நைட் அந்த லேபிரின்த்துக்கு உள்ள இருக்கற ஒரு கிணத்துக்குள்ள வித்தியாசமான உருவமைப்பு உள்ள ஒருத்தரை சந்திக்கறார்.. அவர் என்னை எல்லாரும் "ஃபான்"னு சொல்லிக்குவாங்கன்னு ஒஃபிலியாகிட்ட அறிமுகமாகிக்கறார்..

இளவரசி மொனானாதான் இப்போ ஒஃபிலியாவா பிறந்திருக்கார்ங்கற உண்மையை ஃபான் தெரியப்படுத்தறார்.. பாதாள உலகத்திற்கு திரும்பனும்னா மூன்று கஷ்டமான வேலைகளை ஒஃபிலியா முடிக்கனும்னு சொல்றார் அவர்..

முதல் வேலை என்னன்னா.. அங்கே இருக்கற காட்டுக்குள்ள ஒரு பெரிய மரம் இருக்கு.. அதோட வேர்கள்ல இருக்கற பூச்சிகளைத் தின்னு ஒரு பெரிய தவளை வாழ்ந்திட்டிருக்கு.. அதோட வயித்துக்குள்ள இருக்கற ஒரு சாவியைக் எடுத்து வரனும்.. இதான் வேலை.. ஒஃபிலியா அந்த வேலையை திறமையா முடிச்சிடறாங்க..

ஒஃபிலியாவோட கர்பிணி அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாமப் போயிடுது.. அம்மா, குழந்தை ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரைத்தான் காப்பாத்த முடியும்னு டாக்டர் சொல்லிடறார்.. அவர் குணமாகறதுக்கு ஃபான் உதவி செய்யுது..

கேப்டன் விடல்கிட்ட வேலைப் பார்த்திட்டிருக்க மெர்சிடஸ்ங்கற ஒரு பொண்ணு.. அங்கே இருக்கற கொரில்லா படைக்கு மறைமுகமா உதவி செய்திட்டிருக்காங்க.. கொரில்லா படைகூட நடக்கற ஒரு சண்டையில ஒருத்தர் மட்டும் மாட்டிக்கறார்.. விடல் பண்ற கொடுமைல இருந்து மாட்டிக்கிட்டவரைத் தப்பிக்க வைக்க அவரைக் கொல்றார் அங்கே இருக்கற டாக்டர்.. டாக்டரை சந்தேகப்பட்டு விடல் போட்டுத் தள்ளிடறார்..

ஒஃபிலியா செய்ய வேண்டிய இரண்டாவது வேலையைப் பத்தி ஃபான் சொல்லுது.. ஒரு இடத்துக்குப் போயி.. தவளை வயித்துல இருந்து எடுத்த சாவியை வைச்சி அங்கே இருக்கற ஒரு கத்தியை எடுத்துட்டு வரணும்.. அதான் வேலை.. ஆனா அந்த வேலையை செய்றப்போ அங்கே இருக்கற எதையும் சாப்பிடறக்கூடாதுன்னு ஃபான் எச்சரிக்கை செய்யுது.. ஒஃபிலியா அங்கே வேலையை சரியா முடிச்சிட்டாலும்.. ஆசையில அங்கே இருக்கற ஒரு பழத்தை சாப்பிடறாங்க.. அதனால பெரிய ஆபத்துல மாட்டிக்கறாங்க..

மெர்சிடஸ்தான் கொரில்லா படைக்கு மறைமுகமா உதவறாங்கன்னு கேப்டன் விடல் கண்டுபிடிச்சிடறார்..

அதுக்கப்புறம் ஃபானோட எச்சரிக்கையை கேக்காத ஒஃபிலியாவோட நிலைமை என்ன?.. அவங்க ஃபான் சொன்ன மூன்று வேலைகளையும் செய்து பாதாள உலகத்துக்கு திரும்பினாங்களா?..

ஒஃபிலியாவோட கர்பிணி அம்மாவோட நிலை என்ன?.. மெர்சிடஸ் எப்படித் தப்பிக்கறார்?.. கொரில்லா படைகள் என்ன பண்ணினாங்க?.. கொடுமைக்கார கேப்டன் விடல் என்ன ஆனார்?.. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலை சுவாரசியாமான திரைக்கதை மூலமா சொல்லியிருக்காங்க..

படத்தோட பெஸ்ட் பார்ட் எடிட்டிங்தான்.. ரொம்ப அருமையா பண்ணியிருக்காங்க.. கற்பனைக் கதைகள் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது.. ஆனால் ரொம்ப திரில்லிங்கா எல்லாரும் பார்க்கும்படி திரைக்கதையை அமைச்சிருக்காங்க.. திரைக்கதைக்கு ஏத்தமாதிரி பின்னணி இசையும் நல்லாயிருந்தது..

ஹீரோயினா வர்ற சின்னப்பொண்ணு ஒஃபிலியா அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்காங்க.. நல்ல விறுவிறுப்பான திரைப்படம்..


Sunday, November 7, 2010

கலக்கல் தீபாவளி!!

எப்படி இருக்கீங்க நண்பர்களே.. ஒருவழியா தீபாவளி லீவு முடிஞ்சது.. ஐந்து, ஆறு வருசத்துக்கு அப்புறம் இப்போதான் தீபாவளிக்கு வீட்டுக்குப் போனேன்.. ரமலானும், தீபாவளியும் இத்தனை வருசமா ரொம்ப கிட்டக்கிட்ட வந்துக்கிட்டே இருந்ததால.. நோன்புக்குப் போயிட்டு திரும்பவும் தீபாவளிக்குப் போகமுடியாம இருந்தது.. ஆனா இந்த வருசம் வாய்ப்புக் கிடைச்சது.. ஓடிப்போயிட்டு வந்துட்டேன் இப்போ..

ம்ஹும்.. இன்னைக்கும் ஊர்ல இருந்திருக்க வேண்டியது.. தீபாவளிக்கு 10 நாளைக்கு முன்னயே எங்க ஊர்ல இருந்தும் பக்கத்து ஊர்கள்ல இருந்தும் ஒரு பெங்களூர் பஸ்ல கூட டிக்கெட் இல்ல.. பரவாயில்லைன்னு இன்னைக்கு நைட் கிளம்பினா மக்கள் ஜூஸ் பிழிஞ்சிடுவாங்க ஊர் வந்து சேர்றதுக்குள்ள.. அதான் நேத்து நைட்டே கிளம்பி (சனிக்கிழமை) வந்துட்டேன்.. :-((

எங்க வீட்டுக் குட்டீஸ்களோட சேர்ந்துக்கிட்டு நிறைய வெடி வெடிச்சேன்.. தெருவுல நடந்துபோற வயசானவங்ககிட்ட எல்லாரும் திட்டு வாங்கினோம்.. சாம்பிள் ("கொள்ளைல்ல போயிருவானுக.. காலுக்கிட்டயே வெடிக்குதுக..) :-)))..

பசங்க வெடிக்கறதை கன்ட்ரோல் பண்ணச்சொல்லி தெருவுல நடந்து போயிட்டு இருந்தவங்க எங்கிட்ட வந்து கம்ப்ளைண் பண்ணிட்டு இருந்தாங்க.. அவங்க முன்னாடி பசங்களை அதட்டிட்டு அப்புறம் திரும்பவும் ஸ்டார்ட் பண்ணினோம்.. எப்பவும் போல இந்தமுறையும் கரண்ட் கம்பி மேல ஒரு ராக்கெட் போய் செருகிடுச்சு.. அதுக்கும் பெரியவங்ககிட்ட திட்டு வாங்கினோம்..

தீபாவளி அன்னைக்கு முந்தின நைட்.. வெடி வெடிக்கப்போற குஷியில செருப்புக்கூட போடாம களத்துல இறங்கினேன்.. 300 வாலா ஒன்னு வைச்சிட்டு அப்படியே பின்னாடி நகர்ந்தேன்.. எங்க வீட்டுக் குட்டீஸு ஒன்னு கொளுத்திப் போட்டிருந்த கம்பி மத்தாப்பு மேல காலை வச்சி செம சூடு.. எல்லாரும் ரொம்ப சந்தோசமா வெடிச்சிட்டு இருந்ததால சைலண்டா வீட்டுக்குள்ள போயி பர்னால் ஆயில்மெண்ட்டை எடுத்து வைச்சிக்கிட்டு டீவியைப் பார்க்கறேன்.. தீபாவளிக்கு வெடி வெடிக்கறதைப் பத்தி எச்சரிக்கை விளம்பரம் ஓடிட்டு இருந்தது.. ஒருத்தர் கால்ல செருப்பு போடாம புஸ்வானம் வைக்கப்போறார்.. அவர்கிட்ட திரிஷா வந்து நில்லுங்க கால்ல செருப்பு போட்டுட்டு வெடிங்க அப்படின்னு ஐடியா குடுத்துட்டுப் போறார்.. ம்ஹும்.. எனக்கும் வந்து சொல்லியிருந்துருக்கலாம்..

தெருவுல ஒரு சின்னப்பொண்ணோட புது டிரஸ்ல ஒரு தீப்பொறி பட்டு ஓட்டை ஆயிடுச்சு.. அந்தப் பொண்ணுக்கு எதுவும் இல்லை.. டிரஸ் வேஸ்ட்டாயிடுச்சு.. பாவம் அழுதுட்டே இருந்தது.. மத்தபடி இந்த வருச தீபாவளி சூப்பர்..

ஊருக்குப் போற அவசரத்துல உங்களுக்கெல்லாம் சொல்ல முடியாததால.. கொஞ்சம் லேட்டா சொல்றேன்.. நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. :-))))