.

Saturday, August 14, 2010

பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்"


பெங்களூர்ல ஒரு ஆறு மாசத்துக்கு முன்பு ஒரு மேம்பாலம் திறந்தாங்க.. அந்த மேம்பாலத்தோட நீளம் கரெக்டா 11 கிலோமீட்டர் வருதுங்க.. Pay & Use டைப்தான்.. பைக்குக்கு 10 ரூபாய் வாங்கறாங்க.. ஆக்சுவலா அந்த மேம்பாலம் கட்டியிருக்கற ஒசூர் ரோடு எப்பவுமே ரொம்ப ட்ராஃபிக் இருந்துட்டே இருக்கற ஏரியா.. ஏன்னா அந்த ரோட்ல இருக்கற எலக்ட்ரானிக் சிட்டிங்கற ஸ்டாப்பிங்ல நிறைய சாஃப்ட்வேர் கம்பெனிகள் இருக்கு.. பீக் அவர்ஸ்ல ஆபிஸ் போற எல்லோருமே அந்த ரோட்ல ட்ராவல் பண்ணினோம்னா வெறுத்தே போயிடுவோம்.. இந்த மேம்பாலம் கட்டினதுக்கு அப்புறம் நேரத்த ரொம்ப மிச்சம் பண்ண முடியுது.. ட்ராஃபிக்குக்கு பயந்துட்டே பணம் போனாலும் பரவாயில்லைன்னு அந்த மேம்பாலத்தை நிறைய பேர் யூஸ் பண்றாங்க..

பாலமெல்லாம் ரொம்ப பெர்ஃபெக்டாதான் போட்ருக்காங்க.. அதுமேல வண்டியோட்டும்போது குறைஞ்சது 80 கிலோமீட்டர் வேகத்துல போகனும்.. ஆக்சுவலா பாலத்து மேல ஏறினவுடனே நாமலே ஸ்பீட் எடுக்க ஆரம்பிச்சிடுவோம்.. ஒரே நேரத்துல அந்த பாலத்துல ரெண்டு கார் போகலாம்.. அவ்வளவு குறுகலான இடைவெளிதான் இருக்கு.. அதுக்கப்பறம் நீங்க பாலத்துல ஏறிட்டீங்கன்னா அடுத்த எண்டுல போய்தான் இறங்கமுடியும்.. வேறவழின்னா கீழேதான் குதிக்கனும்.. தரைக்கும் பாலத்துக்கும் சுமார் 30 அடி இருக்கலாம்னு நினைக்கிறேன்..

எதிர்பாராதவிதமா வண்டியில பெட்ரோல் தீர்ந்தாலோ அல்லது வேற ஏதாவது கோளாறுன்னால நின்னுட்டாலோ 11 கிலோமீட்டர் தள்ளிட்டே போக வேண்டியதுதான்.. இல்லைனா யாராவது நம்ம நண்பர்கள் உதவிய நாடலாம்.. வண்டி நின்னுட்டா அதே இடத்துல அப்படியே விட்டுட்டும் போகமுடியாது.. ஏன்னா அவ்வளவு பெரிய பாலத்துல விட்டுட்டு வந்தோம்னா சேஃப்டி இருக்காது இல்லையா.. 


இன்னொரு விசயம் என்னன்னா அந்த பாலத்தோட பக்க சுவர்கள் நம்ம இடுப்பு உயரத்துக்குத்தான் வருது.. அவ்வளவு கம்மியான இடைவெளியில ரொம்ப ஸ்பீடா போறப்போ சிறுதவறு நடந்துட்டாலும்.. பாலத்துல இருந்து அப்படியே பறக்க வேண்டியது தான்..

நானும் அந்தப் பாலத்த அடிக்கடி யூஸ் பண்றவன்தான்.. அப்படி ட்ராவல் பண்றப்போ குறைஞ்சது 5 பேராவது வண்டியத் தள்ளிட்டுப் போயிட்டு இருப்பாங்க.. ரெண்டுல இருந்து மூன்று கார்கள் வரைக்கும் நின்னு போயிருக்கும்.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. அந்த பாலம் போற ரோட்ல மொத்தம் ஆறு ஸ்டாப்பிங் இருக்கு.. அந்த ஸ்டாப்பிங் வர்ற இடங்கள்ல ஒருநபர் இறங்கற மாதிரி எமர்ஜென்ஸி ஸ்டெப்ஸாவது வைச்சிருக்கலாம்.. ஒருவேளை வண்டி இடையில நின்னு போயிட்டா உடனே நாம அந்த ஸ்டெப்ஸ யூஸ் பண்ணி கீழே போய் சரிபண்ண யாரையாவது கூட்டி வரலாம் பாருங்க..

ரெண்டாவது அவ்ளோ கம்மியான உயரத்துல சுவர்கள் கட்டியிருந்தாலும்.. அட்லீஸ்ட் ஆள் உயர கம்பி வேலி அமைச்சிருக்கலாம் பாலம் முழுக்க.. ஏதாவது தவறுகள் நடந்தாலும் பெரிசா பாதிப்பு வராமையாவது இருக்கும் இல்லையா..

இவ்வளவு வேக்கானம் பேசற நீ.. பாலத்த யூஸ் பண்றதுக்கு முன்னயே வண்டியில பெட்ரோல் இருக்கா.. வண்டி கண்டிசனா இருக்கான்னு செக் பண்ணனும்.. வண்டிய நீதான் பார்த்து ஓட்டனும் அப்படின்னு நீங்க கேக்கலாம்.. ஆனா இந்தமாதிரி நமக்கே தெரியாம நடக்கறதுதான.. நாமளும் பாலத்துல காசு குடுத்துதான ட்ராவல் பண்றோம் இல்லையா..

இந்த பிராஜெக்ட நான் குறை சொல்ல வரல.. ஆனால் இது முழுக்க முழுக்க மக்களுக்கு பாதுகாப்பானதா இல்ல.. ஒவ்வொரு முறையும் நான் அந்த பாலத்த யூஸ் பண்றப்பவும் இது எனக்கு தோணிட்டே இருக்கும்.. அத உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கனும்னு தோணுச்சு.. அவ்லோதான்..

18 comments:

  1. சலாம் பாய்.பாலம் வருவதற்கு முன்பு சேலம் அல்லது சென்னை செல்பவர்களுக்கு ஓசூர் தாண்டுவதற்குள் பிராணன் போய்விடும்,இப்போது எவ்வளவோ பரவாஇல்லை.படச்சவனுக்கு நன்றி சொல்வோம்.

    ReplyDelete
  2. Very Good... Nice to share.. ask them to see,,,, how foreign roads given provision for drivers.....

    ReplyDelete
  3. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... அடிக்கடி எழுதுங்கள்..

    ReplyDelete
  4. எந்த‌ அமைச்ச‌ரோட‌ காராவ‌து ப‌ஞ்ச‌ராக‌ட்டும்..அப்போ தெரியும்

    ReplyDelete
  5. @கே.ஆர்.பி.செந்தில்..
    நன்றிங்க.. கண்டிப்பாக எழுதுகிறேன்..

    @ரகு..
    கரெக்டான பாயிண்ட் சொன்னீங்க ரகு.. வருகைக்கு நன்றி..

    @மணி..
    வருகைக்கு நன்றிங்க மணி..

    @விஜயன்..
    உண்மைதாங்க விஜயன்.. ஒசூர் ரோட்ல ட்ராவல் பண்றவங்க.. அந்த ரோட்ட கிராஸ் பண்ற நேரத்துக்கு ஊருக்கே போயிடறாங்க..

    ReplyDelete
  6. அன்புள்ள அப்துல் காதருக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    (MAIL பார்க்கவும் )

    ReplyDelete
  7. @எம் அப்துல்காதர்..

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எம் அப்துல் காதர்..

    கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்..

    ReplyDelete
  8. பாபு,
    வந்த வேகத்துலேயே டாப் கியார்ல கலக்க ஆரம்பிச்சுட்டீங்க. இந்தப் பதிவு ஒரு நல்ல எப்.ஐ.ஆர்.

    ரகு சொன்ன மாதிரி ஏதாவது நடந்தா தெரியும்.

    ReplyDelete
  9. நன்றிங்க கிரி.. உங்கள் வருகை எனக்கு சந்தோசமா இருக்கு..

    உண்மைதான் இல்லைங்களா.. ஏதாவது தவறுகள் நடந்தா.. கண்டிப்பா பெரிய விளைவுகள ஏற்படுத்தலாம்..

    உங்களது கருத்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  10. இன்னொரு விசயம் என்னன்னா அந்த பாலத்தோட பக்க சுவர்கள் நம்ம இடுப்பு உயரத்துக்குத்தான் வருது.. அவ்வளவு கம்மியான இடைவெளியில ரொம்ப ஸ்பீடா போறப்போ சிறுதவறு நடந்துட்டாலும்.. பாலத்துல இருந்து ..

    படிக்கவே உதறுது.. இப்பவே சரி செய்ய அரசுக்கு மனம் வந்தா சரி.

    ReplyDelete
  11. நல்ல பதிவு...உங்களுக்கு தோணினத சொல்லியிருக்கீங்க...இதிலென்ன தப்பு ???
    நான் திருப்பூர்ல இருக்கேன்...இங்கே ஒரே ஒரு மேம்பாலம் தான்..
    (அதுவே அஞ்சு வருஷம் கட்டினாங்க)
    ஜெயாம்மா ஆட்சில...ஏழு பாலம் ப்ராஜக்ட் போட்டாங்க...
    நேத்து, கலைஞர் 121 பாலம் கட்ட சொல்லி ஆணை (குதிரை இல்லை) இட்டு இருக்கிறார் அதில் திருப்பூர் பக்கம் ஒன்னும் இல்லை...இதையும் கொஞ்சம் எழுதுங்க...
    (இதஎதுக்கு உங்களுக்கு சொல்றேன்னா ? நான் 10 வருசத்துக்கு முன்னாடி பெங்களூர் விட்டு வந்துட்டேன் இந்த ட்ராபிக் காரணமா தான்...)

    ReplyDelete
  12. த பிராஜெக்ட நான் குறை சொல்ல வரல
    தாராளமாக சொல்லலாம்.நாமெல்லாம் இப்போது தானே இந்த மாதிரி பாலம் கட்ட ஆரம்பித்திருக்கோம்!!சரியான திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு இல்லாத ஒரு பணி, என்னத்த சொல்ல??

    ReplyDelete
  13. @ரிஷபன்..

    //படிக்கவே உதறுது.. இப்பவே சரி செய்ய அரசுக்கு மனம் வந்தா சரி.//

    அது ரொம்ப சந்தேகந்தாங்க.. உங்களது கருத்துக்கு நன்றி..


    @ஆண்டவன் கட்டளை..
    //(இதஎதுக்கு உங்களுக்கு சொல்றேன்னா? நான் 10 வருசத்துக்கு முன்னாடி பெங்களூர் விட்டு வந்துட்டேன் இந்த ட்ராபிக் காரணமா தான்...)//

    இங்க சாலைல பயணம் செய்ற எல்லாருக்குமே இந்த எண்ணம் தாங்க ஏற்படுது.. நிறைய இடங்கள்ல ஒரு ஸ்டாப்பிங்க கடந்து போறதுக்கே 45 நிமிசத்துல இருந்து 1 மணிநேரம் ஆயிடும்..

    //கலைஞர் 121 பாலம் கட்ட சொல்லி ஆணை (குதிரை இல்லை) இட்டு இருக்கிறார் அதில் திருப்பூர் பக்கம் ஒன்னும் இல்லை...இதையும் கொஞ்சம் எழுதுங்க...//

    ஆண்டவன் கட்டளைய மீறமுடியுமா கண்டிப்பா எழதறேங்க..


    @வடூவூர் குமார்..
    நீங்க சொல்றதும் கரெக்டுதாங்க.. இங்க இப்போதான் இந்தமாதிரி வேலையெல்லாம் ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க..

    இந்த பாலத்தக் கட்டி முடிக்க 776 கோடி செலவாச்சாம்.. அதனால இன்னும் சிறப்பாவே கட்டியிருக்கலாம்..

    ReplyDelete
  14. அங்கங்க படிக்கட்டு வச்சா சும்மா இருக்கிற பயலுக எல்லாம் பாலத்து மேல ஏறிகிட்டு உலாத்த ஆரபிச்சுடுவானுகன்னு அந்த மாதிரி வசதி செய்யாம இருப்பாங்க போல. [ராத்திரி சமயத்துல, இன்னும் மோசமாயிடும், போக்கு வரத்து கம்மி யாரும் பயன்படுத்தாத பாலத்துல சனம் அது பாட்டுக்கு கூட்டம் கூட்டமா வாக்கிங் போக ஆரம்பிச்சா என்ன ஆவுறது?] இன்னொன்னு பாலம் மட்டும் தான் குத்தகைக்கு எடுத்திருக்கலாம், அங்க இருந்து கீழே இறங்கும் இடத்த வேறேதாவது அரசுத் துறைக்கு சேர்ந்ததா இருக்கும், அவங்க விடமாட்டேன்னு அடம் பிடிக்கலாம். இங்க KR புரத்துக்கிட்ட பெரிய தொங்கு பாலம், ஆறு வழிச்சாலை மாதிரி, அத்தோட இன்னொரு பாலமும், ஒரு ரோடும் சேருது. இவ்வளவு பெரிய ரோடுகள் சேரும் இடத்துக்கு ஒரு வண்டி மட்டும் போற மாதிரி பெநிகினஹள்ளி கிட்ட குறுகலான ரயில்வே அண்டர் பாஸ், இந்தப்பக்கமும் அந்த பக்கமும் நூத்துக்கணக்குல வண்டிங்க தினமும் நின்னு சாகுது, அவ்வளவு பெரிய பாலத்தை திட்டம் போட்டு நாலு வருஷமா கட்டுனவனுங்க இதுக்கு வழியே பண்ணுல. பாலம் திறந்த பின்னும்அப்படியே இன்னும் ஆறு வருஷம் கிடந்து இப்பத்தான் டூ வீலர் போற மாதிரி சந்து ரெண்டு செயுரானுங்க. காரணம் அது அதிய அரசுக்கு சொந்தமானதாம், அட அப்படியே ஆனாலும் பத்து வருஷமா ஆவுறது?

    ReplyDelete
  15. @ஜெயதேவா..
    //அங்கங்க படிக்கட்டு வச்சா சும்மா இருக்கிற பயலுக எல்லாம் பாலத்து மேல ஏறிகிட்டு உலாத்த ஆரபிச்சுடுவானுகன்னு அந்த மாதிரி வசதி செய்யாம இருப்பாங்க போல.//

    நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டிய விசயந்தாங்க.. கண்டிப்பா செய்வாங்க பசங்க..

    //இவ்வளவு பெரிய ரோடுகள் சேரும் இடத்துக்கு ஒரு வண்டி மட்டும் போற மாதிரி பெநிகினஹள்ளி கிட்ட குறுகலான ரயில்வே அண்டர் பாஸ், இந்தப்பக்கமும் அந்த பக்கமும் நூத்துக்கணக்குல வண்டிங்க தினமும் நின்னு சாகுது//

    ஆமாங்க.. டின்பேக்டரிகிட்ட இந்த பிரச்சனை இருக்கறதை நானும் கவனிச்சிருக்கேன்.. ஒசூர் ரோடு மாதிரி அதுவும் ரொம்ப டிராபிக் ஏற்படற ஏரியாதான்..

    //பாலம் திறந்த பின்னும்அப்படியே இன்னும் ஆறு வருஷம் கிடந்து இப்பத்தான் டூ வீலர் போற மாதிரி சந்து ரெண்டு செயுரானுங்க.//

    அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாம் லேட்டாதான் ஆகுங்கறது எழுதப்படாத உண்மையா இருக்கு.. என்னங்க செய்றது..

    உங்களது கருத்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  16. //பாலமெல்லாம் ரொம்ப பெர்ஃபெக்டாதான் போட்ருக்காங்க.. அதுமேல வண்டியோட்டும்போது குறைஞ்சது 80 கிலோமீட்டர் வேகத்துல போகனும்.. //

    Activa - 60KMPH - 9 minutes to reach silk board.

    ReplyDelete
  17. //ஒரே நேரத்துல அந்த பாலத்துல ரெண்டு கார் போகலாம்.. அவ்வளவு குறுகலான இடைவெளிதான் இருக்கு.. அதுக்கப்பறம் நீங்க பாலத்துல ஏறிட்டீங்கன்னா அடுத்த எண்டுல போய்தான் இறங்கமுடியும்..//


    Protocol/gentlemen-agreement should be right lane should be used only for overtaking.

    I have seen sparse traffic only. So, after overtaking a vehicle, staying at same speed in left is always possible.

    Slow vehicles should always stay in the left lane. Speeding vehicles should use the right lane.

    ReplyDelete
  18. Was working in Electronic City between Feb'06 and Sep-06. The traffic and the pollution., it was a nightmare. This bridge was under construction that time. Good to note that it takes only about 10 minutes to travel the distance which was taking between 30 - 60 minutes.

    The problem with our roads is that there is no long term plan, unlike overseas where it takes a long time to debate/participate and plan. It is mostly knee-jerk reaction and by the time the project is executed, you have another problem to solve..

    ReplyDelete