.

Tuesday, December 7, 2010

வங்கியில் ஒரு நாள்


என்னுடைய ஊர் பழனி.. ஊர்ல எனக்கு ஒரு பேங்க் அக்கெளண்ட் கிரியேட் பண்ணிக்கிட்டா கொஞ்சம் வசதியா இருக்குமேன்னு.. போன மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அக்கெளண்ட் கிரியேட் பண்ணப் போயிருந்தேன்.. எங்க ஊரைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கறதால.. அந்த கிராமங்களைச் சுற்றியிருக்கற நிறைய விவசாயிகள்தான் பேங்குல அக்கெளண்ட் வச்சிருக்காங்க..

அன்னைக்கு என்னோட வேலை எனக்கு ஒரு அகெளண்ட் கிரியேட் பண்ணனும்.. கிரியேட் பண்ணினதுக்கு அப்புறம் கொஞ்சம் பணத்தை என்னோட அக்கெளண்டுல போடனும்.. என் அப்பாவோட பாஸ்புக்கிற்கு என்ட்ரி போடனும்.. சாதாரணமா ஏதாவது ஒரு வேலையை செய்யனும்னாலே அரசாங்க வங்கிகள்ல பாதி நாள் போயிடும்.. எனக்கு மூன்று வேலை இருந்தது.. சரி இன்னைக்கு முழுக்க அங்கேதான் அப்படின்னு நினைச்சிட்டு.. தயாராகத்தான் போனேன்..

முதல்ல அகெளண்ட் கிரியேட் பண்ண ஃபாம் வாங்கிட்டு அதை ஃபில் பண்ணினேன்.. அப்போ சிலர் அந்த ஃபாமை ஃபில் பண்ணத் தெரியாம திணறிட்டு இருந்தாங்க.. அதுல ரெண்டு பேருக்கு.. ஃபில் பண்ணிக் கொடுத்தேன்.. ஃபாமை சப்மிட் பண்ணியாச்சு.. ஃபாமை வாங்கறவங்களுக்கு எதிர்த்தாப்புல ஒரு சின்ன பொண்ணு உட்கார்ந்திருந்தது.. ஸ்டேட் பாங்க் இப்பொதான் எங்க ஊர்ல கம்ப்யூட்டரைஸ்டு பண்ணியிருக்காங்க.. அதனால நாங்க கொடுக்கற ஃபாம்களை வாங்கி வைக்கறதுதான் அங்கே உட்கார்ந்து இருந்தவங்களோட வேலையா இருந்தது.. அக்கெளண்ட் கிரியேட் பண்ற வேலைகளை எல்லாம் அந்தப் பொண்ணே பார்த்துக்கிட்டது.. அங்கே ஃபாம் கொடுக்கறதுக்கே 2 மணிநேரம் காக்க வேண்டியிருந்தது.. மதியம் வாங்க கிரியேட் ஆயிருக்கும்னு சொன்னாங்க..

அடுத்த வேலை.. அப்பாவின் பாஸ்புக்கிற்கு எண்ட்ரி போடனும்.. கம்ப்யூட்டரைஸ்டு ஆக்கிட்டாலும்.. இன்னும் பாஸ்புக் குடுத்து நம்ம டிரான்சக்ஸன்களை எண்ட்ரி போடற சிஸ்டம்தான் ஃபாலோ பண்றாங்க.. அங்கே வரிசையில நிக்க ஆரம்பிச்சேன்.. அங்கே எண்ட்ரி பண்ணிட்டு இருந்தவர் பக்கத்துல ஒருத்தர் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தார்.. அவர் கையில ஒரு 5,6 பாஸ்புக்குகளை எண்ட்ரி போட்டுக் குடுத்துட்டே இருந்தார் அங்கே வேலை செய்றவர்.. ஒருவழியாக அந்தாள் நகர.. எனக்கு முன்பிருந்த பையன் பாஸ்புக்கை உள்ளே நீட்டினான்.. கடந்த மூன்று மாசமாக எண்ட்ரி போடலயாம்.. நிறைய டிரான்சக்சன் ஆயிருக்கு.. அடிக்கடி வந்து எண்ட்ரி போடறதில்லையா அப்படின்னு கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சார் உள்ளே இருந்தவர்.. கூட்ட சமயமாக இருந்ததால.. அங்கே எல்லாரும் வேடிக்கை பார்க்க அந்தப் பையனுக்கு ரொம்ப அவமானமாக ஆயிடுச்சு.. கெளண்டர்ல இருந்தவர் தொடர்ந்து திட்டிக்கிட்டே இருக்க.. நான் ஏங்க இதுக்கு முன்ன நின்னு உங்ககிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தவருக்கு ஒரு வருசத்துக்கு எண்ட்ரி போட்டமாதிரி இருந்தது.. இப்போ மட்டும் என்ன இந்தப் பையனை இவ்வளவு திட்டறீங்க.. உங்க வேலையை செய்ங்கன்னு சொன்னேன்.. உடனே அந்தாளுக்கு கோவம் வந்துடுச்சு.. உன் வேலையைப் பாருன்னு சொல்ல.. க்யூல நின்ன எல்லாரும் எனக்கு சப்போர்ட்டுக்கு வந்துட்டாங்க.. அதனால வேறவழியில்லாம பேசாம வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டார் அவர்..

ஒரு மணிநேரத்துல அந்த வேலையும் முடிஞ்சது.. 12 மணி ஆயிருந்தது.. அகெளண்ட் கிரியேட் ஆயிடுச்சான்னு.. அந்த உதவியாளர் பொண்ணுகிட்ட கேட்டேன்.. கிரியேட் பண்ணியாச்சுங்க.. மேடம் அங்கே பேசிக்கிட்டு இருக்காங்க.. வந்தவுடனே வாங்கிக்கிங்கன்னு சொல்லுச்சு பொண்ணு.. ஒன்னும் அஃபிசியலாக எல்லாம் பேசல.. அங்கே இன்னொரு கெளண்டர்ல போய் வெட்டி அரட்டை.. வரவே இல்லை.. அப்படியே சாப்பிட போயிட்டாங்க.. இனி 2 மணிக்குத்தான் வருவாங்கன்னு தெரியுமே.. நானும் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வந்து ஒருவழியா பாஸ்புக்கையும் கையில வாங்கிட்டேன்..

இப்போ பணம் கட்டனும்.. டோக்கன் எடுத்துட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. அங்கே ஒரு பெரியவரை கேசியர் பயங்கரமாகத் திட்டிக்கிட்டு இருந்தாங்க.. கெளண்டருக்குப் பக்கத்துலதான் உட்காந்திருந்தால என்ன விசயம்னு புரிஞ்சது.. பெரியவர் 10, 20 ரூபாய் நோட்டுகளாக கொண்டு வந்திருக்காராம்.. அதை நான் எப்படி எண்ணுவது.. போய் மாத்திக் கொண்டு வாங்கன்னும்.. நீங்க ஸ்லிப் தப்பா ஃபில் பண்ணியிருக்கீங்கன்னும் திட்டிட்டு இருந்தாங்க.. நான் போய் ஏங்க இப்படி பெரியவரைத் திட்டறீங்க.. உங்க வேலையே அதுதானன்னு கேட்டால்.. இந்தக் கெளண்டரிலும் உங்க வேலையைப் பாருங்கன்னு பதில்.. அந்தப் பெரியவரிடம் சரிவாங்க நாம மேனேஜர் ரூம்ல போய்.. 10,20 ரூபாய் நோட்டெல்லாம் கேசியர் வாங்க மாட்டாங்களாம்.. அதனால் நீங்க வாங்கிக்கங்கன்னு சொல்லிக் கட்டிட்டு வரலாம்னு சொல்ல.. உடனே அந்தப் பெரியவரிடம் நோட்டுகளை வாங்கி வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாங்க.. என்னோட 3வது வேலையும் முடிஞ்சது..

கிராமப்புற மக்கள் அதிகமாக வர்ற பேங்க்காக இருக்கறதால.. ஜனங்களுக்கு அந்த ஸ்லிப்பை எல்லாம் ஃபில் பண்ணத் தெரியல.. என்னை மாதிரி வர்றவங்ககிட்ட தம்பி இதை ஃபில் பண்ணிக் கொடுப்பான்னு கெஞ்சிக் கேக்கறாங்க.. சிலர் தப்பா ஃபில் பண்ணிக் கொடுத்திட்டாலும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிப் போகலாம் வேலை செய்றவங்க.. அங்கே வேலை செய்றவங்களுக்குத்தான் இருக்கற தலைவலி புரியும்னு நீங்க நினைக்கலாம்.. அப்படி ஒன்னும் விழுந்தடிச்சுக்கிட்டு வேலை செய்யலையே.. அவங்க பாட்டுக்கு ஹாயா.. வேலை செய்றாங்கதான்.. அதனால இந்தமாதிரி படிக்காதவங்ககிட்ட கடிஞ்சுக்கிறதைக் குறைச்சிக்கலாம்..

அங்கே ஒவ்வொரு கெளண்டர்ல இருக்கறவங்களுக்கும் என்னா கிராக்கி.. ஒரு பேப்பரை அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கம் எடுத்துக் கொடுக்கனும்னா.. ஒரு மணிநேரமாவது வெயிட் பண்ண வைக்கறாங்க.. பிரைவேட் பேங்குல இந்தத் தொல்லைகள் இருக்காது.. ஆனால் டெப்பாஸிட் பணம்னு சொல்லி அவங்க ஆளையே காலி பண்ணிடுவாங்க.. இங்கே அகெளண்ட் கிரியேட் பண்ண 500 ரூபாய் இருந்தால் போதுமானது.. செக்புக்கோட வேணும்னா 1000 கட்டனும்.. நமக்கு பிற்காலத்துல ஏதாவது லோன் வாங்கனும்னா.. செக்புக் இருந்தால்தான் ஆகும்.. அதனால அதையும் சேர்த்து வாங்கிக்கறதுதான் சரி..

இப்போ மேட்டர் என்னன்னா.. எனக்கு ஒரு வாரத்துல வீட்டுக்கு அனுப்பறதாக சொல்லியிருந்த செக்புக்கை ஒரு மாசம் ஆனதுக்கு அப்புறமும் அனுப்பல.. கேட்டால் நீங்க செக்புக்குக்கு இனி தனியா எழுதிக் கொடுக்கனும்னு சொன்னாங்க.. அடுத்த முறை போனா.. நீங்க எழுதிக் கொடுத்த ஃபாமே இல்ல.. திரும்பவும் எழுதிக் கொடுங்கன்னு சொன்னாங்க.. இன்னும் செக்புக் வந்து சேரல.. இதெல்லாம் எனக்குத் தேவையா.. போனோமா.. வேலையை முடிச்சிட்டு வந்தோமான்னு இல்லாம நியாயம் கேட்டதுக்கு இப்படி ஒரு தண்டனை.. இனி எத்தனை முறை அலைய விடுவாங்களோ தெரியல..

71 comments:

  1. இது வழக்கமா எல்லா அரசு வங்கிகளிலும் நடப்பதுதான் நண்பரே. கொஞ்சம் நாள் பொறுங்கள் இதற்க்கு ஒரு முடிவு கட்டதான் எனது வலைத்தளத்தில் ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளேன் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்

    ReplyDelete
  2. THOPPITHOPPI said...

    இது வழக்கமா எல்லா அரசு வங்கிகளிலும் நடப்பதுதான் நண்பரே. கொஞ்சம் நாள் பொறுங்கள் இதற்க்கு ஒரு முடிவு கட்டதான் எனது வலைத்தளத்தில் ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளேன் விரைவில் எதிர்ப்பார்க்கலாம் ////

    உண்மைதாங்க.. அனைத்து அரசு வங்கிகளிலும் தினமும் நடக்கும் விசயம்தாங்க இது.. குறிப்பாக படிக்காத மக்களை ரொம்பவும்தான் விரட்டறாங்க.. பார்க்கவே பாவமா இருந்தது.. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்ங்க..

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  3. இந்த மாதிரி சாதாரண வேலைகளுக்கு இவ்வளவு நேரமான்னு நொந்து போனேன் போன முறை ஊருக்கு போனபோது. எல்லாம் கொஞ்ச நாள் தான். கவலையே படாதீங்க. எல்லா nationalized வங்கிகளையும் இணைக்கும் யோசனை ஒன்று சத்தமில்லாமல் செயலாகிக்கொண்டிருக்கிறது. அது வந்தால் இந்த ஊழியர்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும். தனக்கென்று வந்தால் தான் எல்லோருக்கும் தெரியும் தலைவலியும் திருகு வலியும்! என்ன கொடுமைன்ன சில நல்ல ஊழியர்களும் இதனால் பாதிக்க படுவார்கள்.

    ReplyDelete
  4. bandhu said...

    இந்த மாதிரி சாதாரண வேலைகளுக்கு இவ்வளவு நேரமான்னு நொந்து போனேன் போன முறை ஊருக்கு போனபோது. எல்லாம் கொஞ்ச நாள் தான். கவலையே படாதீங்க. எல்லா nationalized வங்கிகளையும் இணைக்கும் யோசனை ஒன்று சத்தமில்லாமல் செயலாகிக்கொண்டிருக்கிறது. அது வந்தால் இந்த ஊழியர்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும். தனக்கென்று வந்தால் தான் எல்லோருக்கும் தெரியும் தலைவலியும் திருகு வலியும்! என்ன கொடுமைன்ன சில நல்ல ஊழியர்களும் இதனால் பாதிக்க படுவார்கள். ////

    நீங்கள் சொல்லும் விசயம் புதியதாக இருக்குங்க நண்பரே.. ஏதாவது விடிவுகாலம் பிறந்தால் நல்லதுதான்..

    ReplyDelete
  5. /////இந்தமாதிரி படிக்காதவங்ககிட்ட கடிஞ்சுக்கிறதைக் குறைச்சிக்கலாம்.. ////

    பணத்தையும் பதவியையும் மதிக்க தெரிந்த அளவுக்கு மனிதர்களை மதிக்க தெரியலியே..... :-(

    ReplyDelete
  6. இதற்கென்று உள்ள அதிகாரியிடம் பலமாக புகார் செய்யுங்கள். ஆதாரங்களை கொடுங்கள். வேண்டுமென்றே தாமதமாக்கும் செயலை வெளியிடுங்கள். நீங்கள் ஒரு பொறுப்புள்ள, மனிதாபிமானமுள்ள நபராகவே செயல்பட்டுள்ளீர்கள்.
    எதற்கு அஞ்சவேண்டும்? இதுபோன்ற நிகழ்வுகளை தக்க விபரங்களுடன் இனி அணைவரும் வலையில் எழுதியே தீர வேண்டும்.

    ReplyDelete
  7. Chitra said...

    /////இந்தமாதிரி படிக்காதவங்ககிட்ட கடிஞ்சுக்கிறதைக் குறைச்சிக்கலாம்.. ////

    பணத்தையும் பதவியையும் மதிக்க தெரிந்த அளவுக்கு மனிதர்களை மதிக்க தெரியலியே..... :-( ////

    ஆமாங்க சித்ரா. எப்படி மனது வந்து பெரியவர்களையும்.. அறியாத மக்களையும் திட்டறாங்கன்னு தெரியல.. இந்த நிலையை அவங்க கொஞ்சம் மாற்றிக்கலாம்..

    ReplyDelete
  8. கக்கு - மாணிக்கம் said...

    இதற்கென்று உள்ள அதிகாரியிடம் பலமாக புகார் செய்யுங்கள். ஆதாரங்களை கொடுங்கள். வேண்டுமென்றே தாமதமாக்கும் செயலை வெளியிடுங்கள். நீங்கள் ஒரு பொறுப்புள்ள, மனிதாபிமானமுள்ள நபராகவே செயல்பட்டுள்ளீர்கள்.////

    புகார் சொல்லியாச்சுங்க.. உங்களுடைய விசயத்தை உடனே பிராசஸ் பண்ணச் சொல்றேன்னு சொல்றாங்க.. இனி ஃபாம் கொடுக்கும் போது அதை ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு கொடுக்கனும்னு நினைக்கறேன்..

    //// எதற்கு அஞ்சவேண்டும்? இதுபோன்ற நிகழ்வுகளை தக்க விபரங்களுடன் இனி அணைவரும் வலையில் எழுதியே தீர வேண்டும். ////

    கண்டிப்பாக எழுதனுங்க.. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  9. //அங்கே ஒவ்வொரு கெளண்டர்ல இருக்கறவங்களுக்கும் என்னா கிராக்கி..//

    அவங்க கிராக்கியினால் இதுபோல் நாங்களும் கஷ்டப்பட்டிருக்கிறோம். ஒருமுறை அவங்களிடம் சொல்லிக்கொண்டு நிற்காமல், நேரே மேனேஜர் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு. கவர்மெண்ட் டியூட்டின்னா என்னா கொம்பா முளைச்சிடும்? நம் பக்கம் எல்லாம் சரியா இருந்தா ஏன் பயப்படணும்? ஆனா சிலர் இதில் விதி விலக்காவும் இருக்காங்க.

    ReplyDelete
  10. அஸ்மா said...

    //அங்கே ஒவ்வொரு கெளண்டர்ல இருக்கறவங்களுக்கும் என்னா கிராக்கி..//

    அவங்க கிராக்கியினால் இதுபோல் நாங்களும் கஷ்டப்பட்டிருக்கிறோம். ஒருமுறை அவங்களிடம் சொல்லிக்கொண்டு நிற்காமல், நேரே மேனேஜர் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு. கவர்மெண்ட் டியூட்டின்னா என்னா கொம்பா முளைச்சிடும்? நம் பக்கம் எல்லாம் சரியா இருந்தா ஏன் பயப்படணும்? ஆனா சிலர் இதில் விதி விலக்காவும் இருக்காங்க. /////

    நானும் அப்படித்தாங்க.. பெரும்பாலும் பேங்கிற்குப் போனால் சண்டைதான் வருது.. ஏதாவது வம்பு பண்ணாம இருக்க மாட்டேங்கறாங்க..

    நீங்கள் சொல்வது போல் சிலர் விதிவிலக்காகவும் இருக்கத்தான் செய்றாங்க..

    தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  11. சில வங்கி அதிகாரிகள் இப்படித்தான். நீங்கள் உயர் அதிகாரியிடம் முறை இடுங்கள்

    ReplyDelete
  12. nis said...

    சில வங்கி அதிகாரிகள் இப்படித்தான். நீங்கள் உயர் அதிகாரியிடம் முறை இடுங்கள் ////

    அப்படித்தாங்க செய்யனும்.. :-(

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  13. பாபு, கணினி மாயம் ஆக்க்ப்பட்டபோளுது அதை எதிர்த்தவர்கள் இந்த அரசு வங்கி ஊழியர்கள். இங்கு சென்னையில் எல்லாம் கணினி மயம். எனக்கு வங்கிக்கு அடிக்கடிபோகும் வேலை இல்லை. என்னவே நான்கு மாதத்திற்கு ஒரு முராவ் பாஸ்புக் அப்டேட் செய்யப் போனால் அதை பிரிண்டரில் வைத்து பிரிண்ட் எடுத்து குடுக்க அவர் பண்ற அலும்பல் இருக்கே

    ReplyDelete
  14. @தொப்பிதொப்பி
    என்ன பண்ண போறீங்க நண்பரே ? அரசு ஊழியர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. காரணம் ஓட்டு

    ReplyDelete
  15. இதெல்லாம் என்னங்க?
    நான் புதுக்கணக்கு துவங்க போயிருந்தப்ப ஒரு மேடம் இருந்தாங்க. அப்போ நான் மேஜராயிருந்தும், என்கிட்ட எல்லா ப்ரூஃப் இருந்தும், எங்க அப்பாவோட ஐடி ப்ரூஃப் கேட்டு அக்கவுண்ட் தொடங்க மறுத்துட்டாங்க. பின்பு நான் அதர்க்காக ஊருக்கு போயி எடுத்துட்டு திரும்ப வந்து பண்ணினதுல அன்னிக்கு முழுசும் அங்கயே இருக்கவேண்டியதா போயிடுச்சு.
    அங்க இருக்கவுங்க யாருக்குமே கனிவா பேச வரவே வராது.
    ரொம்ப மோசங்க பழநி பிரான்ச் எஸ்பிஐ.

    ReplyDelete
  16. நீங்கள் பட்டதெல்லாம் மிகவும் குறைவு நண்பரே.. பல இடங்களில் இதை விட கேவலமாக நடத்துவார்கள்...

    ReplyDelete
  17. எனக்குத்தெரிஞ்சு ஸ்டேட் பாங்க் ரொம்ப ரொம்ப மோசம். அதற்கு அடுத்ததாக இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்.

    இதுபோல சிறுசிறு பிரச்சனைகளுக்கு அலைஞ்சு அவனுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 1800 ரூபாயோட அந்த ஸ்டேட் பாங்க் அக்கவுண்டை சாகடிச்சுட்டேன்.

    பலமுறை சண்டைபோட்டும் ஒரு மயிரும் நடக்கலை. :-(

    ReplyDelete
  18. Indian bank service munnala ethu ellam romba satharanam...indian bank branchulla, neenga sb a/c panam edukka vendum endraal, oru 2 mani neram minimum aagum...panam edukkam slip vanga oru q..submit panna oru q..check panna oru q..

    ReplyDelete
  19. எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது! வாடிக்கையாளர் உபசரிப்பு என்பதே நம்நாட்டில் எதிர்பார்க்ககூடாத ஒன்று!

    ReplyDelete
  20. //வைகை said...
    எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது! வாடிக்கையாளர் உபசரிப்பு என்பதே நம்நாட்டில் எதிர்பார்க்ககூடாத ஒன்று //

    மிகச் சரி. நானும் ரிப்பீட்டிக்கிறேன்

    ReplyDelete
  21. Hahhaa.. Same blood :)
    My story is here : http://ippadikkuelango.blogspot.com/2010/03/blog-post_25.html

    ReplyDelete
  22. சின்ன வயசுல போட்ட பணத்த வாங்க போனா ஏகப்பட்ட கிராக்கி. அந்த போட்டோவுக்கும் இந்தபோட்டோக்கும் சம்மந்தமே இல்ல, கையெழுத்து கொஞ்சம் மாற்றமா இருக்குன்னு சொல்லி பயங்கரமா அலகழிச்சாங்க. நானும் 1 மாசம் வரை பொருத்து பார்த்துட்டு என் பிரண்ட் தாத்தா (அரசியல்வாதி)கிட்ட சொல்லி அவர் போன் தான் பண்ணார். உடனே குடுத்துட்டாங்க. இவங்களுக்குல்லாம் வேலையே அது தான். ஆனா எதிர்த்துகேள்விக்கேக்க மாட்டாங்கண்ணு சோம்பெறியாகிடுறாங்க...

    ReplyDelete
  23. இவனுங்களை எல்லாம் தனியார் மயமாக்கி பிழியனும்...

    ReplyDelete
  24. நான் கூட இப்போ எல்லாம் கொஞ்சம் பரவல்லனு நெனச்சேன்.. அப்டியே தான் இருக்கும் போல

    ReplyDelete
  25. இதைவிட நிறைய அனுபவங்களை நான் வங்கியில் பார்த்திருக்கிறேன் ஏனென்றால் நான் வங்கிக்கிக்கு தேவையான counting machine சேல்ஸ் மற்றும் சர்வீஸ் செய்வதற்கும் செல்பவன் , இவர்கள் படிக்காத பாமரர்களை நடத்தும் விதமிருக்கே அப்பப்பா என்னமோ இவர்கள் தான் இந்திய பொருளாதாரத்தையே சீர்படுத்துவது போல் சீன் போடுவார்கள் .எல்லாம் நேர கொடுமையடா என்று வந்துவிடுவேன் .வேறு என்ன செய்ய முடியும்

    ReplyDelete
  26. பகிர்வு அருமை,இந்த காலத்தில் நம்ம வேலையை பார்ப்பதே பெரிய பொழைப்பு தான்,யாருக்காவது வக்காலத்து வாங்கினால் நமக்கு தான் ஆப்பு தம்பி.

    ReplyDelete
  27. இது மாதிரி ரெண்டு வருசமா A T M கார்டுக்கு நான் அலைந்து கொண்டு இருக்கிறேன். என் அனுபவத்தை இங்கு பாருங்க !

    http://udtgeeth.blogspot.com/2010/11/blog-post_24.html

    ReplyDelete
  28. /////இந்தமாதிரி படிக்காதவங்ககிட்ட கடிஞ்சுக்கிறதைக் குறைச்சிக்கலாம்.. ////

    rompa sari.......

    ReplyDelete
  29. //சாதாரணமா ஏதாவது ஒரு வேலையை செய்யனும்னாலே அரசாங்க வங்கிகள்ல பாதி நாள் போயிடும்.. எனக்கு மூன்று வேலை இருந்தது.. சரி இன்னைக்கு முழுக்க அங்கேதான் அப்படின்னு நினைச்சிட்டு.. தயாராகத்தான் போனேன்..///

    ஹி ஹி ஹி., அரசு வங்கிகளில் நேரம் அதிகம் ஆகுறதுக்கு காரணம் அங்க அதிக அளவிலான கூட்டம் இருக்கறதுதான் ..!!

    ReplyDelete
  30. //ஒன்னும் அஃபிசியலாக எல்லாம் பேசல.. அங்கே இன்னொரு கெளண்டர்ல போய் வெட்டி அரட்டை.. வரவே இல்லை.. அப்படியே சாப்பிட போயிட்டாங்க.. இனி 2 மணிக்குத்தான் வருவாங்கன்னு தெரியுமே.///

    அது எல்லா அரசாங்க அலுவலகதிளையும் நடக்குறதுதானே ..!!

    ReplyDelete
  31. எங்க ஊர்ல இருக்குற வங்கில இவ்ளோ பிரச்சினை இல்லைங்க .,
    ஆனா அந்த திட்டுறது எல்லா இடங்களிலுமே இருக்கும் போல ..!!

    ReplyDelete
  32. அங்க வேலை செய்கிறவர்களுக்கு கலெக்டர் வேலையில் இருப்பதாய் நினைப்பு. இங்கும் அப்படி தான். அம்மாவின் பென்ஷன் எடுக்க போகும் போது மாதம் ஒரு முறை அங்கு வேலை பார்ப்பவர் யாரிடமாவது எனக்கு பிரச்ச்னை வரும்.

    ReplyDelete
  33. நல்ல பதிவுங்க, இப்படி பண்ணுரவங்களை எல்லாம் என்ன பண்ரதுங்க, வீடியோ எதாவது எடுத்து கம்ப்ளைண்ட் பண்ண முடியுமா?

    ReplyDelete
  34. பாபு..உங்களுக்கு இன்னும் உங்க வேலை நடக்கலங்கிறது ஒரு வருத்தமான விஷயம் என்றாலும்..நீங்க உதவின செயல் ரொம்ப சந்தோஷமா இருக்கு...வாழ்த்துக்கள்...கட்டாயம் சீக்கிரம் உங்க வேலை முடிஞ்சுரும்...

    ReplyDelete
  35. LK said...

    பாபு, கணினி மாயம் ஆக்கப்பட்டபோளுது அதை எதிர்த்தவர்கள் இந்த அரசு வங்கி ஊழியர்கள். இங்கு சென்னையில் எல்லாம் கணினி மயம். எனக்கு வங்கிக்கு அடிக்கடிபோகும் வேலை இல்லை. என்னவே நான்கு மாதத்திற்கு ஒரு முராவ் பாஸ்புக் அப்டேட் செய்யப் போனால் அதை பிரிண்டரில் வைத்து பிரிண்ட் எடுத்து குடுக்க அவர் பண்ற அலும்பல் இருக்கே ////

    அரசு வங்கி ஊழியர்களுக்கு ஹாயா உட்கார்ந்துட்டு பெஞ்சு தேச்சுக்கிட்டே இருந்தாலே.. நல்லாயிருக்கும் போலருக்கு.. அதான் கொஞ்சம் மூளைக்கு வேலை தர்றமாதிரி கம்ப்யூட்டர்களைக் கொண்டு வந்ததுக்கு எதிரித்திருக்காங்க..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க எல்.கே..

    ReplyDelete
  36. அன்பரசன் said...

    இதெல்லாம் என்னங்க?
    நான் புதுக்கணக்கு துவங்க போயிருந்தப்ப ஒரு மேடம் இருந்தாங்க. அப்போ நான் மேஜராயிருந்தும், என்கிட்ட எல்லா ப்ரூஃப் இருந்தும், எங்க அப்பாவோட ஐடி ப்ரூஃப் கேட்டு அக்கவுண்ட் தொடங்க மறுத்துட்டாங்க. பின்பு நான் அதர்க்காக ஊருக்கு போயி எடுத்துட்டு திரும்ப வந்து பண்ணினதுல அன்னிக்கு முழுசும் அங்கயே இருக்கவேண்டியதா போயிடுச்சு.
    அங்க இருக்கவுங்க யாருக்குமே கனிவா பேச வரவே வராது.
    ரொம்ப மோசங்க பழநி பிரான்ச் எஸ்பிஐ. ////

    கரெக்டுதாங்க.. உங்கள் நிலையும் என்னைப் போலதான் ஆயிருக்கு..

    ReplyDelete
  37. வெறும்பய said...

    நீங்கள் பட்டதெல்லாம் மிகவும் குறைவு நண்பரே.. பல இடங்களில் இதை விட கேவலமாக நடத்துவார்கள்... ////

    உண்மைதாங்க.. கண்கூடாகவே பார்த்தேங்க நண்பரே.. படிக்காத மக்களை எப்படியெல்லாம் அரட்டறாங்க.. ரொம்பக் கஷ்டம்..

    ReplyDelete
  38. ரோஸ்விக் said...

    எனக்குத்தெரிஞ்சு ஸ்டேட் பாங்க் ரொம்ப ரொம்ப மோசம். அதற்கு அடுத்ததாக இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்.

    இதுபோல சிறுசிறு பிரச்சனைகளுக்கு அலைஞ்சு அவனுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 1800 ரூபாயோட அந்த ஸ்டேட் பாங்க் அக்கவுண்டை சாகடிச்சுட்டேன்.

    பலமுறை சண்டைபோட்டும் ஒரு மயிரும் நடக்கலை. :-( ////

    உள்ளே எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் கூட்டாக இருக்காங்க.. மேல புகார் குடுத்தாலும் எடுபடறதில்லைங்க.. உங்கள் நிலையும் வருத்தத்திற்குரியதுங்க..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ரோஸ்விக்..

    ReplyDelete
  39. PVS said...

    Indian bank service munnala ethu ellam romba satharanam...indian bank branchulla, neenga sb a/c panam edukka vendum endraal, oru 2 mani neram minimum aagum...panam edukkam slip vanga oru q..submit panna oru q..check panna oru q.. ////

    கஷ்டம்தாங்க.. ஆனால் பணம் போடறதுக்குனா பரவாயில்ல.. எடுக்கனும்னா இப்போ ஏ.டி.எம் பயன்படுத்தலாமே..

    ReplyDelete
  40. வைகை said...

    எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது! வாடிக்கையாளர் உபசரிப்பு என்பதே நம்நாட்டில் எதிர்பார்க்ககூடாத ஒன்று! ////

    மிகச்சரியான வார்த்தைங்க..

    ReplyDelete
  41. Balaji saravana said...

    //வைகை said...
    எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது! வாடிக்கையாளர் உபசரிப்பு என்பதே நம்நாட்டில் எதிர்பார்க்ககூடாத ஒன்று //

    மிகச் சரி. நானும் ரிப்பீட்டிக்கிறேன் ////

    :-).. வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  42. இளங்கோ said...

    Hahhaa.. Same blood :)
    My story is here : http://ippadikkuelango.blogspot.com/2010/03/blog-post_25.html ////

    உங்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்குங்களா.. வந்து படிக்கறேங்க.. உங்கள் அனுபத்தைப் பற்றிய லிங்க் கொடுத்ததற்கும் வருகைக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  43. ஆமினா said...

    சின்ன வயசுல போட்ட பணத்த வாங்க போனா ஏகப்பட்ட கிராக்கி. அந்த போட்டோவுக்கும் இந்தபோட்டோக்கும் சம்மந்தமே இல்ல, கையெழுத்து கொஞ்சம் மாற்றமா இருக்குன்னு சொல்லி பயங்கரமா அலகழிச்சாங்க. நானும் 1 மாசம் வரை பொருத்து பார்த்துட்டு என் பிரண்ட் தாத்தா (அரசியல்வாதி)கிட்ட சொல்லி அவர் போன் தான் பண்ணார். உடனே குடுத்துட்டாங்க. இவங்களுக்குல்லாம் வேலையே அது தான். ஆனா எதிர்த்துகேள்விக்கேக்க மாட்டாங்கண்ணு சோம்பெறியாகிடுறாங்க... ////

    பெரும்பாலான மக்கள் நமக்கு எதுக்கு வம்புன்னு கேள்விகள் கேக்காம இருக்கறதுதான் இவங்களுக்கெல்லாம் ரொம்ப வசதியாகப் போச்சு.. எந்த வேலையாகனும்னாலும் யாராவது சிபாரிசு செய்தாத்தான் ஆச்சுன்னு ஆயிடுச்சு நிலைமை..

    ReplyDelete
  44. அருண் பிரசாத் said...

    இவனுங்களை எல்லாம் தனியார் மயமாக்கி பிழியனும்... ////

    சரியாக சொன்னீங்க.. :-)

    ReplyDelete
  45. Arun Prasath said...

    நான் கூட இப்போ எல்லாம் கொஞ்சம் பரவல்லனு நெனச்சேன்.. அப்டியே தான் இருக்கும் போல ////

    இன்னும் அப்படியே தாங்க இருக்கு.. :-(

    ReplyDelete
  46. நா.மணிவண்ணன் said...

    இதைவிட நிறைய அனுபவங்களை நான் வங்கியில் பார்த்திருக்கிறேன் ஏனென்றால் நான் வங்கிக்கிக்கு தேவையான counting machine சேல்ஸ் மற்றும் சர்வீஸ் செய்வதற்கும் செல்பவன் , இவர்கள் படிக்காத பாமரர்களை நடத்தும் விதமிருக்கே அப்பப்பா என்னமோ இவர்கள் தான் இந்திய பொருளாதாரத்தையே சீர்படுத்துவது போல் சீன் போடுவார்கள் .எல்லாம் நேர கொடுமையடா என்று வந்துவிடுவேன் .வேறு என்ன செய்ய முடியும் ////

    படிக்காதவங்களை இவர்கள் திட்டுவதுதான் ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. அவங்களுக்கு ஒன்னும் புரியாம பேந்தப் பேந்த முழிச்சு நிக்கறதைப் பார்த்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு...

    ReplyDelete
  47. asiya omar said...

    பகிர்வு அருமை,இந்த காலத்தில் நம்ம வேலையை பார்ப்பதே பெரிய பொழைப்பு தான்,யாருக்காவது வக்காலத்து வாங்கினால் நமக்கு தான் ஆப்பு தம்பி. ////

    சரியாக சொன்னீங்க.. அப்பு விழுந்துட்டு இருக்கு இப்போ.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  48. Geetha6 said...

    இது மாதிரி ரெண்டு வருசமா A T M கார்டுக்கு நான் அலைந்து கொண்டு இருக்கிறேன். என் அனுபவத்தை இங்கு பாருங்க !
    http://udtgeeth.blogspot.com/2010/11/blog-post_24.html ////

    அரசாங்க வங்கியில் எல்லா வேலைகளும் ஒழுங்காக நடப்பதற்கு கொடுப்பினை வேனும் போல இருக்கு.. உங்க அனுபவத்தையும் கண்டிப்பாக வந்து படிக்கறேங்க..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  49. வழிப்போக்கன் - யோகேஷ் said...

    /////இந்தமாதிரி படிக்காதவங்ககிட்ட கடிஞ்சுக்கிறதைக் குறைச்சிக்கலாம்.. ////

    rompa sari....... ////

    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  50. ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

    எங்க ஊர்ல இருக்குற வங்கில இவ்ளோ பிரச்சினை இல்லைங்க .,
    ஆனா அந்த திட்டுறது எல்லா இடங்களிலுமே இருக்கும் போல ..!! ////

    பரவாயில்லயே.. அப்போ உங்க ஊர் ஜனங்க கொடுத்து வைச்சிருக்கீங்க..

    ReplyDelete
  51. அமுதா கிருஷ்ணா said...

    அங்க வேலை செய்கிறவர்களுக்கு கலெக்டர் வேலையில் இருப்பதாய் நினைப்பு. இங்கும் அப்படி தான். அம்மாவின் பென்ஷன் எடுக்க போகும் போது மாதம் ஒரு முறை அங்கு வேலை பார்ப்பவர் யாரிடமாவது எனக்கு பிரச்ச்னை வரும். ////

    யார்கிட்டவும் கரெக்டாகவே நடந்திக்க மாட்டாங்க போலருக்குங்க..

    ReplyDelete
  52. இரவு வானம் said...

    நல்ல பதிவுங்க, இப்படி பண்ணுரவங்களை எல்லாம் என்ன பண்ரதுங்க, வீடியோ எதாவது எடுத்து கம்ப்ளைண்ட் பண்ண முடியுமா? ///

    அதெல்லாம் வேலைக்கு ஆகாதுங்க.. அங்கேயே நிறைய கேமரா வைச்சிதான இருக்காங்க..

    ReplyDelete
  53. ஆனந்தி.. said...

    பாபு..உங்களுக்கு இன்னும் உங்க வேலை நடக்கலங்கிறது ஒரு வருத்தமான விஷயம் என்றாலும்..நீங்க உதவின செயல் ரொம்ப சந்தோஷமா இருக்கு...வாழ்த்துக்கள்...கட்டாயம் சீக்கிரம் உங்க வேலை முடிஞ்சுரும்... ////

    ரொம்ப நன்றிங்க.. நானும் அந்தத் திருப்தியில தாங்க இருக்கேன்..

    ReplyDelete
  54. //எனக்கு ஒரு வாரத்துல வீட்டுக்கு அனுப்பறதாக சொல்லியிருந்த செக்புக்கை ஒரு மாசம் ஆனதுக்கு அப்புறமும் அனுப்பல.. கேட்டால் நீங்க செக்புக்குக்கு இனி தனியா எழுதிக் கொடுக்கனும்னு சொன்னாங்க.. அடுத்த முறை போனா.. நீங்க எழுதிக் கொடுத்த ஃபாமே இல்ல.. திரும்பவும் எழுதிக் கொடுங்கன்னு சொன்னாங்க.. இன்னும் செக்புக் வந்து சேரல.. இதெல்லாம் எனக்குத் தேவையா.. போனோமா.. வேலையை முடிச்சிட்டு வந்தோமான்னு இல்லாம நியாயம் கேட்டதுக்கு இப்படி ஒரு தண்டனை.. இனி எத்தனை முறை அலைய விடுவாங்களோ தெரியல..//

    இந்த அலைச்சலை நானும் அனுபவத்திருக்கிறேன் நண்பரே
    இதற்கு எப்பதான் விடிவு காலம் என்று தெரியவில்லை...

    சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை,

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  55. நண்பரே, அரசாங்க வங்கி மட்டும் இல்ல,பிரைவேட் வங்கியும் இப்படி தான்... ஒரு ப்ரிச்சன்னை வந்தால் தான் தெரியும் பிரைவேட் பேங்க்கோட முகம்...

    ReplyDelete
  56. உங்களோட பொறுப்பான செயல் மிகந்த பாராட்டற்குரியது.. எத்தனை பேர் இந்த மாத்ரி நிகழ்களுக்கு குரல் கொடுப்பார்கள்..

    ReplyDelete
  57. @மாணவன்..

    ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  58. பாலகுமார் said...

    நண்பரே, அரசாங்க வங்கி மட்டும் இல்ல,பிரைவேட் வங்கியும் இப்படி தான்... ஒரு ப்ரிச்சன்னை வந்தால் தான் தெரியும் பிரைவேட் பேங்க்கோட முகம்... /////

    தனியார் வங்கிகள்.. இந்த மாதிரி வேலைகளில் எல்லாம் சிறப்பாகவே செயல்படறாங்க.. ஆனால் அகெளண்ட் ஹோல்டருக்குத் தெரியாம ஏதாவது காரனம் காட்டி அப்பப்போ பணத்தை உருவிடறாங்க..

    ReplyDelete
  59. பாலகுமார் said...

    உங்களோட பொறுப்பான செயல் மிகந்த பாராட்டற்குரியது.. எத்தனை பேர் இந்த மாத்ரி நிகழ்களுக்கு குரல் கொடுப்பார்கள்.. ////

    உங்களுடைய பாராட்டுக்கு நன்றிங்க பாலகுமார்..

    ReplyDelete
  60. நீங்க சொல்ல வந்த விஷயம் நல்லா இருக்கு. இந்தியாவில் மட்டுமல்ல, இங்கும் (சவுதியிலும்) அதே கதை தான். இவர்கள் (இந்த மண்ணின் மைந்தர்கள்) ஒரு நாளைக்கு பத்து கஸ்டமர்களை அட்டென்ட் செய்வதே பெரிய விஷயம். இதற்கிடையே டோக்கன் கவுண்டர் வேற.

    நீங்கள் சொல்வது போல எழுதத் தெரியாதவர்களுக்கென்று தனியாக ஒரு ஆள் வைத்து எழுத விளக்கம் சொல்ல (கவுண்டர்) வைக்கணும். ஏனோ
    வைப்பதில்லை. அதிலும் ஒரு பிரச்சினை இருக்கு. என்னவென்றால், கஸ்டமர் சொல்வதை எழுதிக் கொடுத்து, கவுண்டர் ஃஸ்டாப் தப்பா அடித்து விட்டால் முழு பழியும் எழுதிக் கொடுத்தவர் மேல் தான் வரும். கஸ்டமர்கள் அவர்மேல் தான் பாய்வார்கள். இங்கே நான் பேங்கில் இருப்பதால் டெய்லி இப்படி பல கூத்துகளை பார்க்கிறேன்.

    ReplyDelete
  61. நானும் இந்த மாதிரி நிகழ்வுகள் பார்திருக்கேன்..

    நீங்க சொல்றது, ரொம்ப சரி தான்.. என்னவோ தன் தலை மேல தான் பேங்க்கே நடக்கற மாதிரி அலட்டிகிறாங்க... கொஞ்சம் வயசானவங்க... பார்ம் எல்லாம் பில் அப் பண்ணத் தெரியாதவங்களுக்கு ஒன்னு ஹெல்ப் பண்ணனும், இல்ல திட்டாமலாவது இருக்கணும்.....

    இதெல்லாம் பார்த்தாலே பாவமாத் தான் இருக்குங்க... ஆனா, ஞாயம் பேசினா.. ஆப்பு நமக்கு தான் வைப்பாங்க...

    இவங்க எல்லாம் பொது சேவை கூட பண்ண வேணாம்,... வாங்குற சம்பளத்துக்கு அவங்க வேலையை ஒழுங்கா பாத்தாலே போதும்...

    (ஆஹா... ரெம்ப உணர்ச்சி வசப்பட்டு பெரிய கமெண்ட் ஆயிருச்சு....)

    நல்ல அனுபவப் பகிர்வு.. :-)))

    ReplyDelete
  62. எம் அப்துல் காதர் said...

    நீங்க சொல்ல வந்த விஷயம் நல்லா இருக்கு. இந்தியாவில் மட்டுமல்ல, இங்கும் (சவுதியிலும்) அதே கதை தான். இவர்கள் (இந்த மண்ணின் மைந்தர்கள்) ஒரு நாளைக்கு பத்து கஸ்டமர்களை அட்டென்ட் செய்வதே பெரிய விஷயம். இதற்கிடையே டோக்கன் கவுண்டர் வேற.

    நீங்கள் சொல்வது போல எழுதத் தெரியாதவர்களுக்கென்று தனியாக ஒரு ஆள் வைத்து எழுத விளக்கம் சொல்ல (கவுண்டர்) வைக்கணும். ஏனோ
    வைப்பதில்லை. அதிலும் ஒரு பிரச்சினை இருக்கு. என்னவென்றால், கஸ்டமர் சொல்வதை எழுதிக் கொடுத்து, கவுண்டர் ஃஸ்டாப் தப்பா அடித்து விட்டால் முழு பழியும் எழுதிக் கொடுத்தவர் மேல் தான் வரும். கஸ்டமர்கள் அவர்மேல் தான் பாய்வார்கள். இங்கே நான் பேங்கில் இருப்பதால் டெய்லி இப்படி பல கூத்துகளை பார்க்கிறேன். ////

    அங்கேயும் இப்படித்தானா.. ரொம்பக் கஷ்டம்தாங்க..

    ReplyDelete
  63. @அப்பாவி தங்கமணி..

    வாங்க.. :-)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  64. Ananthi said...

    நானும் இந்த மாதிரி நிகழ்வுகள் பார்திருக்கேன்..

    நீங்க சொல்றது, ரொம்ப சரி தான்.. என்னவோ தன் தலை மேல தான் பேங்க்கே நடக்கற மாதிரி அலட்டிகிறாங்க... கொஞ்சம் வயசானவங்க... பார்ம் எல்லாம் பில் அப் பண்ணத் தெரியாதவங்களுக்கு ஒன்னு ஹெல்ப் பண்ணனும், இல்ல திட்டாமலாவது இருக்கணும்.....

    இதெல்லாம் பார்த்தாலே பாவமாத் தான் இருக்குங்க... ஆனா, ஞாயம் பேசினா.. ஆப்பு நமக்கு தான் வைப்பாங்க...

    இவங்க எல்லாம் பொது சேவை கூட பண்ண வேணாம்,... வாங்குற சம்பளத்துக்கு அவங்க வேலையை ஒழுங்கா பாத்தாலே போதும்...

    (ஆஹா... ரெம்ப உணர்ச்சி வசப்பட்டு பெரிய கமெண்ட் ஆயிருச்சு....)

    நல்ல அனுபவப் பகிர்வு.. :-))) ////

    நியாயமான கோபம்தாங்க ஆனந்தி..

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  65. நல்ல விடயம் நண்பா..

    நானும் ஒருமுறை இதுமாதிரி சிக்கிய அனுபவம் உண்டு..

    என்ன பண்றது வாங்குற சம்பளத்துக்கு அவங்க வேல பார்த்தாலே போதும்..

    அதுவே அவனுங்க பண்ணமாட்டேன் னு தெனாவட்டா அலையிருனாங்க..

    ReplyDelete
  66. //நியாயம் கேட்டதுக்கு இப்படி ஒரு தண்டனை.. இனி எத்தனை முறை அலைய விடுவாங்களோ தெரியல..//



    19/19 இனி அந்த பக்கம் போக மாட்டீங்கதானே....:]]





    //

    ReplyDelete
  67. அரசன் said...

    நல்ல விடயம் நண்பா..

    நானும் ஒருமுறை இதுமாதிரி சிக்கிய அனுபவம் உண்டு..

    என்ன பண்றது வாங்குற சம்பளத்துக்கு அவங்க வேல பார்த்தாலே போதும்..

    அதுவே அவனுங்க பண்ணமாட்டேன் னு தெனாவட்டா அலையிருனாங்க.. ////

    சரியாக சொன்னீங்க.. கொடுக்கற சம்பளத்துக்கு பாதி வேலைகூட செய்றதில்லை.. அரசாங்க வேலைன்னாலே ஒரு மிதப்புதான்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  68. @நாஞ்சில் மனோ..
    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  69. உங்களின் வங்கி அனுபவத்தினை சுவை பட விவரித்து படிப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  70. ஸாதிகா said...

    உங்களின் வங்கி அனுபவத்தினை சுவை பட விவரித்து படிப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தி விட்டீர்கள். /////

    நன்றிங்க ஸாதிகா..

    ReplyDelete