.

Thursday, December 16, 2010

கிரெடிட் கார்டு "அபாயங்கள்"


கிரெடிட் கார்டு புதுசா யூஸ் பண்ண ஆரம்பிக்கறவங்க.. கஸ்டமர்கேர்ல வேலை செய்றவங்களால.. சந்திக்கற பிரச்சினைகளைப் பற்றி கிரெடிட் கார்டும்.. கஸ்டமர்கேரும்.. அப்படிங்கற பதிவுல சொல்லியிருந்தேன்..

என்னுடைய அந்தப் பதிவை தினமலரும்.. "தெரிஞ்சுக்கோ"ன்னு ஒரு திருட்டுப் பதிவரும் சுட்டிருந்தாங்க.. அந்த விசயத்தை எனக்குத் தெரியப்படுத்திய நண்பர்கள் ராஜா மற்றும் நா. மணிவண்ணன் இருவருக்கும் எனது நன்றிங்கள்..

திருட்டுப் பதிவரின் வலைத்தளத்திற்குப் போய் அனைவரும் திட்ட.. அந்தத் திருட்டுப் பதிவர் (எத்தனை முறைத் திருட்டுப் பதிவர்.. திருட்டுப் பதிவர்ன்னு சொல்றாம் பாருன்னு பார்க்கறீங்களா.. அப்படி சொல்லியாவது மனதை ஆற்றிக்க வேண்டியதுதான்.. :-) ).. என்னுடைய பதிவை அவருடையத் தளத்தில் இருந்து அடுத்த நாள் அழித்து விட்டார்.. தினமலருக்கு நான் இதுவரை மூன்று முறை மெயில் பண்ணிட்டேன்.. அவங்களுக்கு இது யூசுவலான விசயம் போல.. எந்த ரிப்ளையுமே கொடுக்கல.. நிறைய நண்பர்கள் பின்னூட்டத்தில் அவர்களை சட்டப்படி அணுகும்படிக் கூறியிருந்தார்கள்.. என்னுடைய வேலைகளுக்கு மத்தியில் அவர்களை சட்ட ரீதியாக அணுகுவதெல்லாம் முடியாத காரியம்.. ஆனால் எனக்கு ஆறுதலாகவும்.. ஆதரவளித்தும் பேசிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..

இப்பதிவில் கிரெடிட் கார்டை ரொம்ப காலமாக யூஸ் பண்றவங்க.. சந்திக்கற மோசடிகளைப் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்கிறேங்க..

கிரெடிட் கார்டில் பல வகைகள் உண்டுன்னு எல்லாருக்கும் தெரியும்.. அதுல பிளாட்டினம் கார்டு வகையில் அதிகமான கிரெடிட் லிமிட் கிடைக்கும்.. நம்முடைய சாலரி மாதம் 50000 ரூபாயைத் தாண்டினால் தொடக்கத்திலேயே பிளாட்டினம் கார்டு தந்திடுவாங்க.. நிறையப் பேருக்கு அவங்களோட கோல்டு மற்றும் டைட்டானியம் கார்டுல இருந்து அப்கிரேட் பண்ணிக்கூட பிளாட்டினம் கார்டு தருவாங்க.. அவங்க எல்லாம் பெர்பெக்டா தங்களோட பில்லைக் கட்டியிருப்பாங்க.. அதான் பிளாட்டினம் கார்டு கொடுத்திட்டாங்கன்னு நீங்க நினைத்தால் அதான் தப்பு..

அந்த கஸ்டமர்ஸ் ஒவ்வொரு மாதமும் அதிகமாக டிரான்சக்சன்ஸ் காமிச்சு.. அடிக்கடி சரியான தேதியில பில் கட்டாம விட்டு.. அப்புறம் வட்டியோட கட்டற ஆளுங்களாக இருப்பாங்க.. சோ.. இன்னும் கிரெடிட் லிமிட்டை அதிகம் பண்ணிக் கொடுத்தால்.. அதையும் செலவு பண்ணிட்டு.. இன்னும் அதிகமாக தண்டம் கட்டுவாங்கள்ல.. அந்த பிளான்தான் பேங்க்காரங்களுக்கு..

இந்த ஆண்டு முடிந்தால்.. நான் என்னுடைய கோல்டு கார்டை வாங்கி மூன்று ஆண்டுகளாகிறது.. எந்த அப்கிரேடும் இதுவரை இல்ல.. அதே கிரெடிட் லிமிட்தான்.. ஏன்னா இந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறைகூட பில்டேட் தவறினதே இல்ல (அடுத்த மாத பில்லை நினைத்தால்தான் பக்குன்னு இருக்கு.. :-( ).. சோ என்னால எந்த யூஸும் இல்ல அவங்களுக்கு அதான்..

கிரெடிட் கார்டு மூலமாக லோன்கூட அப்ளை பண்ணிக்க முடியும்.. என்னுடைய கிரெடிட் லிமிட்ல இருந்து 75% சதவீதத்தை லோனாக வாங்கிக் கட்டமுடியும்.. வட்டி தீட்டிடுவாங்க..
என்னுடயை நண்பர் ஒருவர்.. தன்னுடைய கிரெடிட் கார்டில் இருந்து 30000 ரூபாய் லோன் வாங்கி ரெண்டு மாதத் தவணையைக் கரெக்டாகக் கட்டியிருந்தார்.. அவருக்கு கஸ்டமர்கேர்ல இருந்து போன்.. சார் உங்க டிரான்ஸக்சன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.. அதனால உங்களுக்கு பிளாட்டினம் கார்டு இஷ்யூ பண்றோம் சார்.. கங்கிராட்ஸ்னு சொல்ல.. நண்பருக்கு பயங்கரமான சந்தோசம்.. ஆஹா!! கிரெடிட் லிமிட் நிறைய வருமே.. சூப்பர்னு நினைச்சுட்டு ஓகே சொல்லிட்டார்.. ஒரு வாரத்துல பிளாட்டினம் கார்டும் வந்திடுச்சு.. தொடர்ந்து அடுத்த மாத பில்லில் வந்தது அவருக்கு ஆப்பு..

அவருடைய லோன் அமெளண்ட் 30000 ரூபாயில் இருந்து 78000 ரூபாய் என்று ஆகியிருந்திருக்கு.. அந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்க முடியும்.. ஆடிப்போயிட்டார்.. கஸ்டமர்கேருக்கு போன் பண்ணி விசயம் கேக்க.. சார் கன்சர்ன் டிபார்மெண்டுக்கு டிரான்ஸ்பர் பண்றோம் பண்றோம்னு காலை மாத்திவிட்டுட்டே இருந்தாங்க.. அப்படியே லைன் கட்டாயிடும்.. கஸ்டமர்கேருக்கு ஃபோன் பண்றது எல்லாம் டோல்பிரியும் கிடையாது.. மனிதர் ரொம்ப நொந்து போயிட்டார்.. ஒருமாதம் பக்கம் இப்படியே மல்லுக்கட்டிட்டு இருந்தார்.. ஒரேஒரு முறை விசயத்துக்கு இப்படி ரிப்ளை வந்திருக்கு..
"சார் உங்க கார்டை அப்கிரேட் பண்றப்போ ஏதாவது பிரிவியஸ் பேலன்ஸ் பெண்டிங் இருந்தால்.. வட்டியோட இன்கிரீஸ் பண்ணிடுவோம் சார்.. உங்களுக்கு கார்டு இஷ்யூ பண்றப்பவே அக்சப்டன்ஸ் கேட்டுத்தான் பண்ணியிருப்பாங்க" அப்படின்னு ரிப்ளை..

நண்பருக்கு பிரசர் பயங்கரமாக ஏறிடுச்சு.. இனி இவனுங்க வேலைக்கு ஆகமாட்டாங்கன்னுட்டு.. அவர் கஸ்டமர்கேருக்கு போன் பண்ணிய கால் ஹிஸ்டரி, தன்னுடைய லோன் டீட்டெய்ல்ஸ் எல்லாத்தையும் ரிசர்வ் பேங்க்கிற்கு தெளிவாக எழுதியும்.. டாக்குமெண்ட்சை அட்டாச் பண்ணியும் அனுப்பிட்டார்..

ரிசர்வ் பேங்க்கிற்கு அனுப்பிய ரெண்டாவது நாள்.. அந்த பேங்க்கோட மேனேஜர் போன் பண்றார்.. சார் ரிசர்வ் பேங்குல எதுக்கு கம்ப்ளைண்ட் பண்ணீங்க.. உங்களோட பிரச்சனையை உடனே சால்வ் பண்றோம்.. நீங்க எப்பவும் கட்டவேண்டிய அமெளண்டை இப்போ இருந்து கட்டுங்கன்னு சொல்லியிருக்கார்.. என் நண்பர் இந்த ஏய்க்கற வேலையெல்லாம் வேண்டாம்.. என்னுடைய அகெளண்ட்ல சரியான கணக்கு வரும்வரை பணம் கட்ட மாட்டேன்னுட்டு சொல்லிட்டார்.. அதுக்குப்பறம்.. 78000 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக குறைந்து வந்திருக்கு.. அதுக்கு மேல கணக்கை சரிசெய்ய முடியலையாம்.. நீங்க உங்க அமெளண்டை மட்டும் கட்டுங்க சார்.. பின்னாடி உங்க கணக்கை சரிசெய்திடறோம்.. அப்படின்னு சொல்ல.. நீங்க சரிசெய்ற வரைக்கும் லோன் அமெளண்டைக் கட்ட முடியாதுன்னு கறாராக சொல்லிட்டார் நண்பர்.. இப்போ ஒரு ஆண்டுக்கு மேலயே ஆயிடுச்சு.. அவங்க அவரோட கணக்கை சரிசெய்யவும் இல்ல.. இவர் லோன் அமெளண்டைக் கட்டவும் இல்ல.. கிரெடிட் கார்டு யூஸ் பண்றதையே நண்பர் விட்டுட்டார்..

நம்ம நண்பர் நல்ல விவரமான ஆளாக இருந்ததால இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிச்சிட்டார்.. இதுவே விவரம் தெரியாத ஆளாக இருந்திருந்தால் முதுகுல டின் கட்டியிருப்பானுங்க அந்த பேங்க்காரனுங்க..

ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்திருக்கற நண்பர்களுக்கு.. உங்க கார்டை அப்கிரேட் பண்றேன்னு கஸ்டமர்கேர்ல இருந்து கேட்டால்.. ஏதாவது பிரிவியஸ் பேலன்ஸ் பெண்டிங் இருக்கான்னு பார்த்துக்கங்க.. அப்புறம் புதுக்கார்டைப் பற்றி அனைத்து சந்தேகங்களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க..

முழிச்சுக்கங்க.. பிழைச்சுக்கங்க..

டிஸ்கி 1: கிரெடிட் கார்டை வைச்சு நடத்தப்படற மற்றொரு மோசடியைப் பற்றியும்.. இந்தப் பதிவிலே எழுதலாம்னு இருக்கேன்.. இதுவே ரொம்ப லென்தியாக ஆயிட்டதால மற்றொரு முறை எழுதறேன்..

டிஸ்கி 2: காஸ்ட்லி மொபைல்ஸ் வாங்கற என்னமா உங்களுக்கு?.. அதில் நடக்கும் ஒரு மோசடி பற்றி அடுத்த பதிவில் எழுதறேன்.. போயிட்டு வர்றேன்.. :-)

படங்கள்: நன்றி கூகுள்


61 comments:

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4

    ReplyDelete
  2. நல்ல விசயங்களை அறிந்தேன் மிக்க நன்றி....

    ReplyDelete
  3. உபயோகமான தகவல்கள் நன்றி பாபு

    ReplyDelete
  4. ம.தி.சுதா said...

    எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.////

    உங்களுக்குத்தான் நண்பரே.. எடுத்துக்கங்க.. :-)

    ReplyDelete
  5. நிறைய எடுத்துக்கிட்டேன் போய் வரட்டுமா...

    ReplyDelete
  6. ம.தி.சுதா said...

    நல்ல விசயங்களை அறிந்தேன் மிக்க நன்றி.... ///

    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  7. LK said...

    உபயோகமான தகவல்கள் நன்றி பாபு ////

    பாராட்டுக்கு நன்றிங்க எல்.கே..

    ReplyDelete
  8. ஒவ்வொரு டாபிக்லேயும் கலக்குறீங்க..... அந்த படங்களும் பொருத்தமோ பொருத்தம்!!!
    இந்த பதிவு, இன்னும் எந்த எந்த முன்னணி பத்திரிகைகளில் சுட போறாங்களோ? அவ்வ்வ்.....

    ReplyDelete
  9. அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு

    ReplyDelete
  10. Chitra said...

    ஒவ்வொரு டாபிக்லேயும் கலக்குறீங்க..... அந்த படங்களும் பொருத்தமோ பொருத்தம்!!! ////

    நன்றிங்க சித்ரா.. உண்மையிலேயே இந்தப் பாராட்டு எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்குங்க.. நன்றி..

    ////இந்த பதிவு, இன்னும் எந்த எந்த முன்னணி பத்திரிகைகளில் சுட போறாங்களோ? அவ்வ்வ்..... ////

    ஹா ஹா ஹா..

    ReplyDelete
  11. nis said...

    அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு ////

    பாராட்டுக்கு நன்றிங்க nis..

    ReplyDelete
  12. இணைப்பு தரலைன்னாலும் அது உங்களுடைய பதிவிற்கு ஒரு அங்கீகாரம் தான்... பீ ஹேப்பி...

    ReplyDelete
  13. பலரை இந்த கட்டுரை ஈர்த்து இருப்பதை உணர முடிகிறது

    ReplyDelete
  14. நல்ல பதிவு நண்பரே.. அனைவருக்கும் பயன்படக்கூடிய பதிவு..

    ReplyDelete
  15. நல்ல பதிவு! உபயோகமான தகவல்கள் நன்றி !

    ReplyDelete
  16. எல்லாமே எல்லாரும் அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்!!!!!!!!

    வாழ்த்துக்கள் தம்பி பாபு!

    ReplyDelete
  17. அன்பின் பாபு,

    உங்கள் நண்பர் கிட்ட சொல்லி மீண்டும் அந்த வங்கியிடம் பேச சொல்லுங்கள்.எனென்றால். அந்த வங்கி CIBIL-இடம் உங்கள் நண்பர் பணம் கட்ட வில்லையென்று சொல்லிவிடுவார்கள்.ஆகவே அவர் பணம் கட்ட தவறியவர் என்றே CIBIL அறிக்கையில் இருக்கும். வருங்காலத்தில் அவர் மற்ற வங்கிகளில் கடன் வாங்க நினைத்தால் இது பெரும் தடையாக இருக்கும்

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    ReplyDelete
  18. நல்ல பயனுள்ள பதிவு. பார்த்து கொள்ளுங்கள்...இதையும் எந்த நாதாரியாவது திருடிவிட போகிறது. தமிழ்மணத்தில் வாக்களித்து விட்டேன்

    ReplyDelete
  19. நண்பா..

    நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான்,,, உங்க முந்தின பதிவில் சொன்னா மாதிரி, எனக்கு போன் பண்ணி நீங்க மெடிக்கல் இன்சூரன்ஸ் activate ஆயிருக்குன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க .. நான் எந்த இன்சுரன்கிம் வேணாம் நு சொல்லி பார்த்தேன்.. உங்க அக்கௌன்ட் ல ஏற்கனவே பணம் எடுத்தாச்சு.. இப்ப கான்செல் பண்ணினாலும் அந்த பணம் ரிட்டர்ன் பண்ண மாட்டோம் நு சொல்லிடாங்க.. நானும் இன்னமும் கட்டிட்டு இருக்கேன் (இன்னும் 2 மாசம் கட்டனும் ).. இதெல்லாம் அந்த executives பண்ற வேலை .. உங்கள் பதிவு என்னை போன்ற பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும்... நன்றி..

    ReplyDelete
  20. நான் platinum கார்டு தான் வச்சு இருக்கேன்.. எப்பவும் due date ல கரெக்ட் ah கட்டிடுவேன்.. கிரெடிட் கார்டு நாம உபயோகிக்றத பொறுத்து தான் அது நமக்கு எதிரியா இல்ல நண்பனா என்பது..

    ReplyDelete
  21. philosophy prabhakaran said...

    இணைப்பு தரலைன்னாலும் அது உங்களுடைய பதிவிற்கு ஒரு அங்கீகாரம் தான்... பீ ஹேப்பி... ////

    ரைட்டுங்க பிரபாகரன்.. வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  22. பார்வையாளன் said...

    பலரை இந்த கட்டுரை ஈர்த்து இருப்பதை உணர முடிகிறது ////

    ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நண்பரே நீங்க பாராட்டியிருப்பது.. நன்றிங்க..

    ReplyDelete
  23. மிகவும் பயனுள்ள பதிவு!
    கிரெடிட் கார்டினால் பாதிப்பை நாங்களும் அனுபவித்துள்ளோம்!

    ReplyDelete
  24. வெறும்பய said...

    நல்ல பதிவு நண்பரே.. அனைவருக்கும் பயன்படக்கூடிய பதிவு.. /////

    நன்றிங்க ஜெய்ந்த்..

    ReplyDelete
  25. வைகை said...

    நல்ல பதிவு! உபயோகமான தகவல்கள் நன்றி ! ////

    வாங்க வைகை..

    ReplyDelete
  26. ஆமினா said...

    எல்லாமே எல்லாரும் அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்!!!!!!!!

    வாழ்த்துக்கள் தம்பி பாபு! ////

    ஒருவர் ஏமாற்றப்படும்போது அவரோட மனசு எவ்வளவு கஷ்டப்படும் இல்லங்களா.. அதான் நமக்குத் தெரிந்த இந்த விசயத்தைப் பகிர்ந்துக்கிட்டேங்க.. நீங்கள் மிகவும் ரசித்துப் படித்துப் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சிங்க.. ரொம்ப நன்றி..

    ReplyDelete
  27. அரவிந்தன் said...

    அன்பின் பாபு,

    உங்கள் நண்பர் கிட்ட சொல்லி மீண்டும் அந்த வங்கியிடம் பேச சொல்லுங்கள்.எனென்றால். அந்த வங்கி CIBIL-இடம் உங்கள் நண்பர் பணம் கட்ட வில்லையென்று சொல்லிவிடுவார்கள்.ஆகவே அவர் பணம் கட்ட தவறியவர் என்றே CIBIL அறிக்கையில் இருக்கும். வருங்காலத்தில் அவர் மற்ற வங்கிகளில் கடன் வாங்க நினைத்தால் இது பெரும் தடையாக இருக்கும்

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர் /////

    இந்த இன்ஃபர்மேசனை சொன்னதுக்கு நன்றிங்க அரவிந்தன்.. எனக்கும் இதுபற்றித் தெரிந்திருந்தது.. என் நண்பனிடம் இது பற்றி அறிவுறுத்தினேன்.. ரிசர்வ் பேங்க்கில் இருந்து அவருக்கு வந்த மெயிலில் உங்களுடைய கணக்கு சரிசெய்யப்படும் வரை.. உங்க தவணைத் தொகையைக் கட்டத் தேவையில்லைன்னு ரிப்ளை பண்ணியிருந்திருக்காங்க.. அதான் நண்பர் ரொம்ப தைரியமாயிட்டார்.. உங்களுடைய அக்கறையான பின்னூட்டத்திற்கு நன்றிங்க அரவிந்தன்..

    ReplyDelete
  28. ரஹீம் கஸாலி said...

    நல்ல பயனுள்ள பதிவு. பார்த்து கொள்ளுங்கள்...இதையும் எந்த நாதாரியாவது திருடிவிட போகிறது. தமிழ்மணத்தில் வாக்களித்து விட்டேன் ////

    திரும்பவும் முதல்ல இருந்தா!! எனக்கும் அந்தப் பயம்தான்.. பாராட்டுக்கு நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  29. மதுரை பாண்டி said...

    நண்பா..

    நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான்,,, உங்க முந்தின பதிவில் சொன்னா மாதிரி, எனக்கு போன் பண்ணி நீங்க மெடிக்கல் இன்சூரன்ஸ் activate ஆயிருக்குன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க .. நான் எந்த இன்சுரன்கிம் வேணாம் நு சொல்லி பார்த்தேன்.. உங்க அக்கௌன்ட் ல ஏற்கனவே பணம் எடுத்தாச்சு.. இப்ப கான்செல் பண்ணினாலும் அந்த பணம் ரிட்டர்ன் பண்ண மாட்டோம் நு சொல்லிடாங்க.. நானும் இன்னமும் கட்டிட்டு இருக்கேன் (இன்னும் 2 மாசம் கட்டனும் ).. இதெல்லாம் அந்த executives பண்ற வேலை .. உங்கள் பதிவு என்னை போன்ற பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும்... நன்றி.. /////

    அடடா.. நண்பா நீங்கள் அந்த போன் காலைத் துண்டித்துவிட்டு.. மறுபடியும் கஸ்டமர்கேருக்கு போன் பண்ணி விவரம் கேட்டு இருந்திருக்கலாம்... ஏமாற்றப்பட்ட போது உங்க மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்.. எப்படியெல்லாம் கஸ்டமர்ஸை ஏமாத்தறாங்க.. உங்களுடைய பாராட்டுக்கு நன்றிங்க மதுரை பாண்டி..

    ReplyDelete
  30. மதுரை பாண்டி said...

    நான் platinum கார்டு தான் வச்சு இருக்கேன்.. எப்பவும் due date ல கரெக்ட் ah கட்டிடுவேன்.. கிரெடிட் கார்டு நாம உபயோகிக்றத பொறுத்து தான் அது நமக்கு எதிரியா இல்ல நண்பனா என்பது.. ////

    சரியான வார்த்தைங்க.. எங்கே போகனும்னாலும் நம்மிடம் பணமே இல்லைனாலும் கார்டு இருக்கேன்னு தைரியமாக இருக்கலாம்.. ஆனால் அதை உபயோகப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது மேட்டர்..

    ReplyDelete
  31. எஸ்.கே said...

    மிகவும் பயனுள்ள பதிவு!
    கிரெடிட் கார்டினால் பாதிப்பை நாங்களும் அனுபவித்துள்ளோம்! ////


    பாராட்டுக்கு நன்றிங்க எஸ்.கே..

    ReplyDelete
  32. பதிவு நன்று மக்கா

    ReplyDelete
  33. karthikkumar said...

    பதிவு நன்று மக்கா///

    நன்றிங்க கார்த்திக்..

    ReplyDelete
  34. VELU.G said...

    நல்ல பதிவு ////

    நன்றிங்க வேலு..

    ReplyDelete
  35. ரெம்ப உபயோகமான தகவல் நண்பா .நா கிரெடிட் யூஸ் பண்றதில்லை .என் நண்பர்கள் நிறையபேர்கள் யூஸ் பண்ணுகிறார்கள் அவர்களை அலெர்ட் செய்கிறேன் . நன்றி

    ReplyDelete
  36. நா.மணிவண்ணன் said...

    ரெம்ப உபயோகமான தகவல் நண்பா .நா கிரெடிட் யூஸ் பண்றதில்லை .என் நண்பர்கள் நிறையபேர்கள் யூஸ் பண்ணுகிறார்கள் அவர்களை அலெர்ட் செய்கிறேன் . நன்றி ////

    கண்டிப்பாக சொல்லுங்க நண்பா.. பாராட்டுக்கு நன்றிங்க மணிவண்ணன்..

    ReplyDelete
  37. நண்பர் அரவிந்தன் சொல்வது சரி,எதற்கும் ஒருமுறை சிபில் ரிப்போர்ட்டை வாங்கி சரி பார்த்து விடுவது நல்லது, அதனை எப்படி வாங்குவது என்பதை பற்றி என்னுடைய ஒரு பதிவு
    http://iravuvaanam.blogspot.com/2010/10/blog-post_13.html
    ஒரு வெளம்பரந்தான், ஹி ஹி

    ReplyDelete
  38. இரவு வானம் said...

    நண்பர் அரவிந்தன் சொல்வது சரி,எதற்கும் ஒருமுறை சிபில் ரிப்போர்ட்டை வாங்கி சரி பார்த்து விடுவது நல்லது, அதனை எப்படி வாங்குவது என்பதை பற்றி என்னுடைய ஒரு பதிவு
    http://iravuvaanam.blogspot.com/2010/10/blog-post_13.html
    ஒரு வெளம்பரந்தான், ஹி ஹி ////

    ரொம்ப சவுகர்யமாகப் போச்சுங்க.. கண்டிப்பாக உங்க பதிவைப் படிச்சு நண்பருக்கு சொல்றேன்.. வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  39. //. என்னுடைய பதிவை அவருடையத் தளத்தில் இருந்து அடுத்த நாள் அழித்து விட்டார்.. தினமலருக்கு நான் இதுவரை மூன்று முறை மெயில் பண்ணிட்டேன்.. அவங்களுக்கு இது யூசுவலான விசயம் போல.. //

    இதெல்லாம் சப்ப மேட்டரா இருக்குமோ ..?

    ReplyDelete
  40. கோமாளி செல்வா said...

    //. என்னுடைய பதிவை அவருடையத் தளத்தில் இருந்து அடுத்த நாள் அழித்து விட்டார்.. தினமலருக்கு நான் இதுவரை மூன்று முறை மெயில் பண்ணிட்டேன்.. அவங்களுக்கு இது யூசுவலான விசயம் போல.. //

    இதெல்லாம் சப்ப மேட்டரா இருக்குமோ ..? ////

    அப்படித்தான் போல செல்வா.. திருட்டுப் பசங்க..

    ReplyDelete
  41. //சோ.. இன்னும் கிரெடிட் லிமிட்டை அதிகம் பண்ணிக் கொடுத்தால்.. அதையும் செலவு பண்ணிட்டு.. இன்னும் அதிகமாக தண்டம் கட்டுவாங்கள்ல.. அந்த பிளான்தான் பேங்க்காரங்களுக்கு.//

    அதான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிசிருக்கான்கல்ல அதனால தான் நல்லா பிளான் போடுவாங்க போல ..!! அதே மாதிரி 30000 ல இருந்து 78000 வந்தது எப்பா பயங்கரமா இருக்குங்க .. உண்மைலேயே இந்தப் பதிவும் ரொம்ப அருமையா இருக்கு .. எதுக்கும் பதிவுலகில் பாபுவில் திருடியது அப்படின்னு இடைல போட்டிருங்க ..! யாரவது திருடினாலும் திருடிருவாங்க .. ஹி ஹி ஹி ..

    ReplyDelete
  42. கோமாளி செல்வா said...

    ///எதுக்கும் பதிவுலகில் பாபுவில் திருடியது அப்படின்னு இடைல போட்டிருங்க ..! யாரவது திருடினாலும் திருடிருவாங்க .. ஹி ஹி ஹி .. ////

    ஹா ஹா ஹா.. சூப்பர் செல்வா.. சரியான யோசனை.. இதைப் படிச்சுட்டு ஆபிஸ்லயே சிரிச்சுட்டேன்..

    பாராட்டுக்கு நன்றிங்க செல்வா..

    ReplyDelete
  43. ///எதுக்கும் பதிவுலகில் பாபுவில் திருடியது அப்படின்னு இடைல போட்டிருங்க ..! யாரவது திருடினாலும் திருடிருவாங்க .. ஹி ஹி ஹி .. ////

    ஆமா பாத்திரங்கலிலெல்லாம் பெயர் அடித்து வைப்பது போல!! இதுவும் ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே பாஸ்!!

    ReplyDelete
  44. கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...

    http://www.makkal-sattam.org/2007/10/blog-post_08.html

    ReplyDelete
  45. எம் அப்துல் காதர் said...

    ///எதுக்கும் பதிவுலகில் பாபுவில் திருடியது அப்படின்னு இடைல போட்டிருங்க ..! யாரவது திருடினாலும் திருடிருவாங்க .. ஹி ஹி ஹி .. ////

    ஆமா பாத்திரங்கலிலெல்லாம் பெயர் அடித்து வைப்பது போல!! இதுவும் ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே பாஸ்!! ////


    ஹா ஹா ஹா...

    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  46. உபயோகமான தகவல்

    நன்றி

    ReplyDelete
  47. THOPPITHOPPI said...

    உபயோகமான தகவல்

    நன்றி ////

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  48. கிரெடிட் கார்டு என்பது இருபுறமும் கூர்மை கொண்ட கத்தி அதை சரியானபடி நாம் தான் உபயோகிக்க கத்துகிடனும்
    நல்ல இன்னும் நிறைய எழுதுங்க

    ReplyDelete
  49. மிக அருமையான பதிவு.
    பயனுள்ள பதிவு

    ReplyDelete
  50. சிட்டி பாபு said...

    கிரெடிட் கார்டு என்பது இருபுறமும் கூர்மை கொண்ட கத்தி அதை சரியானபடி நாம் தான் உபயோகிக்க கத்துகிடனும்
    நல்ல இன்னும் நிறைய எழுதுங்க ////

    உண்மைதாங்க.. கிரெடிட் கார்டு ஒரு கத்திமாதிரிதான்.. கரெக்டா யூஸ் பண்ணத் தெரியலனா.. ஆளையே போட்டுடும்..

    பாராட்டுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  51. Jaleela Kamal said...

    மிக அருமையான பதிவு.
    பயனுள்ள பதிவு ////

    பாராட்டுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  52. 100% Real Money Making System

    Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com/

    ReplyDelete
  53. பாபு, தாங்கள் சிரமம் எடுத்து எழுதும் பதிவுகளின் இறுதியில் © The content is copyrighted to nanbendaa.blogspot.com and may not be reproduced on other websites. என்று போட்டுக்கொள்ளுங்கள். இதன் மூலம் திருட்டை தவிர்க்க முடியாவிடினும், சற்றேனும் மானம் உள்ளவர்கள் இதை பார்த்துவிட்டு அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு மேல் அவர்கள் இப்படி செய்தாலும், இறைவனிடமிருந்து என்றும் தப்ப முடியாது!! வாழ்த்துகள்!

    ReplyDelete
  54. @சிவகுமார்..

    நல்ல யோசனையாகத்தான் இருக்குங்க சிவகுமார்.. செயல்படுத்துவதற்கு முனைகிறேன்.. திருடுபவர்களுக்கு அதுவே தொழிலாக இருக்கும்போது.. மானம் ரோசம் எல்லாத்தையும் விட்டுட்டுதானே வர்றாங்க.. இதெல்லாம் உறைக்காதுங்க நண்பா.. இருந்தாலும் இது நல்ல யோசனையே.. நன்றிங்க..

    ReplyDelete
  55. sorry babu, correction ...... © The content is copyrighted to abdulkadher.blogspot.com and may not be reproduced on other websites என்று போட்டுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  56. //மானம் ரோசம் எல்லாத்தையும் விட்டுட்டுதானே வர்றாங்க.. இதெல்லாம் உறைக்காதுங்க நண்பா.// but.......இறைவனிடமிருந்து என்றும் தப்ப முடியாது பாபு!!

    ReplyDelete
  57. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    good infor. thanks baabu. this is the first time visit. ill follow it. ////

    உங்கள் வருகை.. எனக்கு ரொம்ப சந்தோசங்க ரமேஷ்.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  58. கண்ணை திறந்திட்டீங்க அண்ணாச்சி

    ReplyDelete
  59. nellai அண்ணாச்சி said...

    கண்ணை திறந்திட்டீங்க அண்ணாச்சி ////

    வாங்க.. வருகைக்கு நன்றி..

    ReplyDelete