.

Saturday, December 18, 2010

பெண்ணுக்குள் இருக்கும் கடவுள்

பெண்கள் மனசுல என்ன இருக்கு?.. அவங்க என்ன விரும்பறாங்க.. இதெல்லாம் என்ன பி.எச்டி படிச்சுட்டு வந்தாலும் தெரிஞ்சுக்க முடியாது.. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மனசுல ஆயிரம் இரகசியங்களையும் விருப்பங்களையும் குறைகளையும் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.. மிகவும் சந்தோசமாக இருக்கறதால நினைச்சுட்டு இருக்கற பெண்ணுக்குக்கூட அவங்க ஆழ்மனசுல நிறைய விருப்பங்களும்.. தன்னுடைய இணையின் மீது குறைகளும் இருக்கத்தான் செய்கிறது..

ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்.. இங்க நான் சொல்றது அவங்களுக்கு நகை, புடவை வாங்கிக் கொடுப்பதைப் பற்றில்ல..

ஒரு ஆண்.. பெண்ணை விட உடல் அளவில் பலம் கொண்டவனாக இருந்தாலும்.. மனதளவில் பெண்களே மிகவும் பலம் கொண்டவங்களாக இருக்காங்க.. சிறுவயதில் இருந்தே.. உடலளவில் மிகுதியான வலிகளை அனுபவிச்சுட்டு இருக்கறதால்கூட மனதளவில் மிகுந்த தைரியத்தைக் கொண்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்..

உலகத்துல ஆண்களே.. பெண்களை ஆள்கிறவர்களாக நமக்குள்ள இல்லூசன் இருக்கு.. ஆனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆயிட்டாலோ.. இல்ல காதலிக்க ஆரம்பிச்சிட்டாலோ.. முதல்ல பெண்தான் இதுக்குண்டான காரியங்கள்ல இறங்கறாங்க.. ஆணைத் தன் வசப்படுத்தி ஆளனும்ங்கறதுக்கு முதல் ஸ்டெப் என்னன்னா.. "ஏங்க நீங்க கரெக்டாக 9 மணிக்கு சாப்பிட்டுடுங்க, உங்க போன் காலை 6 மணிக்கு எதிர் பார்த்துட்டு இருப்பேங்க, 8 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுங்க" அப்படின்னு அன்பாகக் கட்டளையிடுவாங்க.. பெரும்பாலான ஆண்களுக்கு அந்த வார்த்தைகள் ஆரம்பத்துல அப்படியே உருகிப்போய்.. சொல்றதை அப்படியே செய்வாங்க.. உண்மையைச் சொல்லப்போனால்.. அந்தப் பெண் குறிப்பிட்ட நேரம் எப்போ வரும்னு.. 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே..

தினமும் சொல்ற நேரத்தைக் கடைபிடிப்பது என்பது முடியாத காரியமாயிடுது.. ஒரு மாதமோ அல்லது அவர்களுக்கு முடியற வரைக்குமோ கேட்பாங்க.. அப்புறம்தான் இந்தப்பெண் தன்னை டாமினேட் பண்றாளோன்னு எண்ணம் வரத்தொடங்கியவுடன் முரண்டு பண்ண ஆரம்பிப்பாங்க.. உடனே பொண்ணுக்கு பொசசிவ்நெஸ் வந்திடும்.. நான் சொன்னதை முன்ன எல்லாம் கேட்டுட்டு இருந்தீங்க.. இப்ப என்ன வந்ததுன்னு சண்டை ஆரம்பிக்கும்..

இந்த அன்புக் கட்டளைகளை பெண்கள் இடும்போதே.. இல்ல அந்த நேரங்கள்ல எனக்கு வேற வேலை இருக்குன்னு ஆண் சொல்லும் போது.. பெண்ணோட முதல் முயற்சி தோல்வியடையுது.. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதற்குண்டான முயற்சி செய்துட்டேதான் இருப்பாங்க.. அவங்களோட எண்ணம் வெற்றியடையும் வரையோ.. அந்த ஆணிடம் இருந்து அடக்குமுறைகள் கையாளப்படும் வரையோ அந்த முயற்சி தொடர்ந்துட்டேதான் இருக்கும்.. பலர் தனது அன்பைக் கொண்டு இந்த முயற்சியில் ஜெயிச்சிடறாங்க.. சிலர் தோல்வியடையறாங்க..

ஆண் ஆரம்பித்துல இருந்தே தன்னுடைய ரியாலிட்டியை மீறி செயல்படாம இருந்தால்.. எந்த சண்டையும் வராதுன்னுதான் நினைக்கிறேன்.. இதுதான் நான்.. இப்படி நான் இருப்பேன்.. இப்படி உன்னிடம் எதிர்பார்க்கறேன்னு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கிட்டாங்கன்னா ஒரு புரிதல் வந்திடும்..

காதல் பண்றவங்ககிட்டயும்.. புதியதாக கல்யாணம் நிச்சயம் ஆனவங்ககிட்டயும்தான் இந்த ரியாலிட்டி பிரச்சினை அதிகமாக இருக்கு..

அவர்கள் காதல் மயக்கத்துல ஒருவருக்கொருவர்.. அப்படி இப்படின்னு பீலா விட்டுக்கறதும்.. நைட் முழுக்க தூங்காம பேசிக்கிட்டே இருக்கறதையும் பல இடங்கள்ல பார்க்க முடியுது.. ஆனால் இதே நிலைதான் எப்பவும் தொடருமா?.. கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நிலைமை மாறுது.. வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டு காதல் பண்ணிட்டு இருந்தவங்க.. இப்போ பக்கம் பக்கம் ஒரே அறையில்.. கொஞ்ச நாட்கள்ல அவங்க முன்பு செய்துட்டு இருந்த விசயங்கள் போலியாகத் தோன்ற ஆரம்பிக்குது.. அதை ஆண் வெளிப்படையாகக் காட்டறான்.. பெண் அப்படிக்காட்டறது இல்ல.. அதனால் நீங்க முன்ன மாதிரி இல்ல.. அப்போ மட்டும் என்னை அப்படி..இப்படின்னு கொஞ்சத் தெரிஞ்சதான்னு சண்டை ஆரம்பிக்குது.. அதனால் காதல் பண்றவங்களும் சரி.. புதியதாக நிச்சயம் ஆனவங்களும் சரி ரியாலிட்டியை மனசுல வைச்சுக்கிட்டு பழகினாங்கன்னா இந்தப் பிரச்சினை கண்டிப்பாக ஏற்படாது.. மிகைப்படுத்தி நடந்து கொண்ட பிறகு.. உண்மையான நடவடிக்கையைக் காமிச்சாதான் ஒத்துவராது..


நான் தொடக்கத்தில் சொல்லியிருந்தது போல ஒரு பெண்.. ஆணை ஆளமுடியாம தோல்வியடைந்தால்.. அவர்களோட முயற்சி எப்பவும் நின்று போயிடறதில்ல.. அடுத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்கிட்ட அந்த எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பிக்கறாங்க.. அப்படின்னா.. கொடுமைப்படுத்த ஆரம்பிக்கறாங்கன்னு சொல்ல வரல.. அன்பால் கட்டளையிட ஆரம்பிக்கறாங்க.. உதாரணத்துக்கு.. பார் உன் தகப்பன்தான் நான் சொல்றது எதையுமே கேக்கல.. நீயாவது கேள்டா அப்படின்னு சொல்ல ஆரம்பிப்பாங்க.. பிள்ளைக்கு அப்போது என்ன தோனும்.. தனது அப்பா மேல் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தாலும்.. அம்மா சொல்றதைத்தான் முதல்ல கேக்கனும்னு ஒரு விதை விழுந்திடும்..

பெண்ணின் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்கறவரை அந்தப் பெண்ணுக்கும் சரி.. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்.. பெண்ணின் எண்ணங்கள் தவறாக இருக்கும்போது.. இந்த முயற்சி வெற்றி அடைந்தாலும்.. தோல்வி அடைந்தாலும் கஷ்டம்தான்..

நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது..

கடவுள் 
உலகைப் படைத்தார்
பெண்
உயிர் கொடுத்தாள்
அம்மா
இவர்தான் என் கடவுள்!

டிஸ்கி: இது ரொம்ப சென்சிட்டிவான மேட்டர்.. இதுல நான் ஆணைதான் அல்லது பெண்தான் உயர்ந்தவங்கன்னு சொல்ல வரல.. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட முதல் காரணம் என்னவாக இருக்கும்னு யோசிக்கும்போது இப்படியெல்லாம் தோனுச்சு.. சோ இதெல்லாம் கரெக்டாக இருந்தால்.. தப்பிச்சேன்.. தப்பாக இருந்தால் ரொம்பவும் திட்டீடாதீங்க.. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.. :-)


படம்: நன்றி கூகுள்

74 comments:

  1. ////ஆண் ஆரம்பித்துல இருந்தே தன்னுடைய ரியாலிட்டியை மீறி செயல்படாம இருந்தால்.. எந்த சண்டையும் வராதுன்னுதான் நினைக்கிறேன்.. இதுதான் நான்.. இப்படி நான் இருப்பேன்.. இப்படி உன்னிடம் எதிர்பார்க்கறேன்னு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கிட்டாங்கன்னா ஒரு புரிதல் வந்திடும்..////

    இப்படில்லாம் கட் அன்ட் ரைட்டா கல்யாணம் ஆனா புதுசுல இருக்க முடியாதுங்க . அப்படி இப்படி தான் இருக்கும். அட்ஜசுட் பண்றது தான் வாழ்க்கை

    ReplyDelete
  2. @சிவகுமாரன்..

    அதைத்தான் நானும் மென்சன் பண்றேன்ங்க நண்பா.. கல்யாணம் ஆன புதிதில் ஒருமாதிரி.. அப்புறம் ஒருமாதிரி நடந்துக்கறதாலதான்.. இந்தமாதிரி பிரச்சினைகள் வருதுன்னு நினைக்கிறேன்..

    தங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.. வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  3. ஆழமான, அருமையான, யதார்த்தமான சிந்தனைகள் பாபு. இந்த வயதிற்குள் உங்கள் சிந்தனையின் தூரம் இவ்வளவு தூரம் செல்வது வியப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஆழமான, அருமையான, யதார்த்தமான சிந்தனைகள் பாபு. இந்த வயதிற்குள் உங்கள் சிந்தனையின் தூரம் இவ்வளவு தூரம் செல்வது வியப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்! ////

    சமுதாயத்தில் நாம் பார்க்கும் விசயங்களை வைத்துத்தான் எழுதுனேங்க.. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த விசயம்..

    உங்களுடைய பாராட்டு எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோசமாக இருக்குங்க.. நன்றிங்க..

    ReplyDelete
  5. மனைவியைப் பத்தின அலசலும் அசத்தலா இருக்குடா... அம்மாவைப் பத்தின கவிதையும்... சான்சே இல்ல.. இந்த வருசத்தோட உன்னோட பெஸ்ட் பதிவுல ஒன்னுடா இது... வாழ்த்துக்கள்...

    கடவுள்
    உலகைப் படைத்தார்
    பெண்
    உயிர் கொடுத்தாள்
    அம்மா
    இவர்தான் என் கடவுள்!

    ReplyDelete
  6. சபாஷ்!!! நல்லா சிந்திக்கிறிங்க பாபு... அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. பொண்ணுங்களும் அண்ணா பல்கலைக்கழக கேள்வித்தாலும் ஒன்று... இரண்டையும் புரிந்துக்கொள்ளவே முடியாது...

    ReplyDelete
  8. அதுசரி... உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா...

    ReplyDelete
  9. யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை,

    //கடவுள்
    உலகைப் படைத்தார்
    பெண்
    உயிர் கொடுத்தாள்
    அம்மா
    இவர்தான் என் கடவுள்! //

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
    நன்றி

    ReplyDelete
  10. பாபு,நீங்க சைக்காலஜி படிச்சவரா?செமயா இருக்கு

    ReplyDelete
  11. ....>>ஆனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆயிட்டாலோ.. இல்ல காதலிக்க ஆரம்பிச்சிட்டாலோ.. முதல்ல பெண்தான் இதுக்குண்டான காரியங்கள்ல இறங்கறாங்க..>>


    ரொம்ப கரெக்ட் 100% உண்மை

    ReplyDelete
  12. இந்த பதிவுக்கு டைட்டில் ஆணை அடக்க நினைக்கும் பெண்ணும்,பெண்ணை மடக்க நினைக்கும் ஆணும் அப்ப்டின்னு டைட்டில் குடுத்திருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும். ( வோட்டு போட்டமா? கமெண்ட் போட்டமான்னு இல்லாம எதுக்கு உனக்கு இந்த ஆலோசனை சொல்ற வேலை?னு நினைக்கறீங்களா?)

    ReplyDelete
  13. ஏங்க இப்படி???

    இருந்தாலும் நல்லா யோசிச்சிருக்கீங்க.
    நல்ல சிந்தனை.

    ReplyDelete
  14. நல்லா சொல்லியிருக்கீங்க நண்பரே.. நல்ல புரிதலில் தான் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்..

    ReplyDelete
  15. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.. :-)


    .....ஓகே..... அதனாலே எஸ்கேப் ஆகிட்டீங்க.... :-)

    ReplyDelete
  16. ஊடுதல் காமத்திற்கு இன்பம் ....

    ReplyDelete
  17. கடவுள்
    உலகைப் படைத்தார்
    பெண்
    உயிர் கொடுத்தாள்
    அம்மா
    இவர்தான் என் கடவுள்!

    இப்பிடியும் யோசிபீன்களா ....
    சூப்பர் பதிவு நண்பா முக்கியமா இந்த கவிதை சூப்பர்

    ReplyDelete
  18. @பிரியமுடன் ரமேஷ்..

    சந்தோசங்க ரமேஷ்.. :-)

    ReplyDelete
  19. ஜெயசீலன் said...

    சபாஷ்!!! நல்லா சிந்திக்கிறிங்க பாபு... அருமையான பதிவு... வாழ்த்துக்கள்... ////

    நன்றிங்க..

    ReplyDelete
  20. philosophy prabhakaran said...

    பொண்ணுங்களும் அண்ணா பல்கலைக்கழக கேள்வித்தாலும் ஒன்று... இரண்டையும் புரிந்துக்கொள்ளவே முடியாது... ////

    ஹா ஹா ஹா..

    ///அதுசரி... உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா...////

    ஆ! நான் சின்னப்பையன்ங்க.. எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல.. :-)

    ReplyDelete
  21. மாணவன் said...

    யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை,///

    நன்றிங்க மாணவன்..

    ReplyDelete
  22. சி.பி.செந்தில்குமார் said...

    பாபு,நீங்க சைக்காலஜி படிச்சவரா?செமயா இருக்கு ////

    இல்லங்க.. கம்ப்யூட்டருக்குப் படிச்சிருக்கேன்.. :-)

    ////இந்த பதிவுக்கு டைட்டில் ஆணை அடக்க நினைக்கும் பெண்ணும்,பெண்ணை மடக்க நினைக்கும் ஆணும் அப்ப்டின்னு டைட்டில் குடுத்திருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும். ( வோட்டு போட்டமா? கமெண்ட் போட்டமான்னு இல்லாம எதுக்கு உனக்கு இந்த ஆலோசனை சொல்ற வேலை?னு நினைக்கறீங்களா?) ////

    ஆஹா! வேண்டாங்க.. அப்புறம் யாராவது தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அடிக்க வந்திடுவாங்க.. உங்களுடைய சஜசனுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  23. அன்பரசன் said...

    ஏங்க இப்படி???

    இருந்தாலும் நல்லா யோசிச்சிருக்கீங்க.
    நல்ல சிந்தனை. ////

    நன்றிங்க..

    ReplyDelete
  24. வெறும்பய said...

    நல்லா சொல்லியிருக்கீங்க நண்பரே.. நல்ல புரிதலில் தான் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.. ////

    உண்மை...

    பாராட்டுக்கு நன்றிங்க ஜெய்ந்த்..

    ReplyDelete
  25. தேவன் மாயம் said...

    நல்ல அலசல்! ////

    நன்றிங்க..

    ReplyDelete
  26. nis said...

    super பாபு ///

    நன்றிங்க nis..

    ReplyDelete
  27. Chitra said...

    நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.. :-)


    .....ஓகே..... அதனாலே எஸ்கேப் ஆகிட்டீங்க.... :-) ///

    நல்லவேளை தப்பிச்சேன்.. :-)

    ReplyDelete
  28. கே.ஆர்.பி.செந்தில் said...

    ஊடுதல் காமத்திற்கு இன்பம் .... ////

    :-).. வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  29. FARHAN said...

    இப்பிடியும் யோசிபீன்களா ....
    சூப்பர் பதிவு நண்பா முக்கியமா இந்த கவிதை சூப்பர் ///

    என்னமோ தெரியலைங்க.. நேற்று திடீர்னு கருத்துக்களாக வருது மனசுல..
    நீங்க என்னுடைய கடைசி வரிகளை கவிதைன்னு சொன்னது ரொம்ப சந்தோசமாக இருக்குங்க.. அய்!! நானும் கவிதை எழுதுவேன் (சந்தோசத்துல குதிக்கறேன்)..

    நன்றிங்க நண்பா..

    ReplyDelete
  30. டிஸ்கி: இது ரொம்ப சென்சிட்டிவான மேட்டர்.. இதுல நான் ஆணைதான் அல்லது பெண்தான் உயர்ந்தவங்கன்னு சொல்ல வரல.. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட முதல் காரணம் என்னவாக இருக்கும்னு யோசிக்கும்போது இப்படியெல்லாம் தோனுச்சு..///
    டிஸ்கி தேவையே இல்ல. நல்லாத்தானே சொல்லிருக்கீங்க.

    ReplyDelete
  31. karthikkumar said...

    டிஸ்கி: இது ரொம்ப சென்சிட்டிவான மேட்டர்.. இதுல நான் ஆணைதான் அல்லது பெண்தான் உயர்ந்தவங்கன்னு சொல்ல வரல.. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட முதல் காரணம் என்னவாக இருக்கும்னு யோசிக்கும்போது இப்படியெல்லாம் தோனுச்சு..///
    டிஸ்கி தேவையே இல்ல. நல்லாத்தானே சொல்லிருக்கீங்க. ////

    தேவையில்ல தாங்க.. சரி அனுபவங்கள் ஏதும் இல்லாம.. பார்க்கற விசயங்களை மனதிற்கொண்டு எழுதினேன்.. அதான் ஒரு சேஃப்டிக்கு போட்டு வைச்சேன்..

    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  32. எனக்கு இந்த அளவுக்கு சிந்திக்கிற மாதிரியான மூளை கிடையாது நண்பா அப்பறம் எனக்கு வேற கல்யாணம் ஆகலையா நா வேற ரெம்ப சின்ன பயனா அதுனாலா ஜஸ்ட் ஓட்டு போட்டுட்டு அப்பீட்டு ஆகிடுறேன்

    " பெண்கள் இந்நாட்டின் கண்கள் "

    ReplyDelete
  33. நா.மணிவண்ணன் said...
    எனக்கு இந்த அளவுக்கு சிந்திக்கிற மாதிரியான மூளை கிடையாது நண்பா அப்பறம் எனக்கு வேற கல்யாணம் ஆகலையா நா வேற ரெம்ப சின்ன பயனா அதுனாலா ஜஸ்ட் ஓட்டு போட்டுட்டு அப்பீட்டு ஆகிடுறேன்////

    ஹா ஹா ஹா..


    " பெண்கள் இந்நாட்டின் கண்கள் " ///

    வழிமொழிகிறேன்.. :-)

    ReplyDelete
  34. நல்ல பதிவு,தெளிவான சிந்தனை,உங்கள்
    டிஸ்கவரி ஓடம் இன்னும் செல்லட்டும்.
    பெண் எனும் பிரபஞ்சத்திற்குள் :‍-)

    ReplyDelete
  35. அரபுத்தமிழன் said...

    நல்ல பதிவு,தெளிவான சிந்தனை,உங்கள்
    டிஸ்கவரி ஓடம் இன்னும் செல்லட்டும்.
    பெண் எனும் பிரபஞ்சத்திற்குள் :‍-) ////

    நன்றிங்க அரபுத்தமிழன்.. :-)

    ReplyDelete
  36. //இதெல்லாம் கரெக்டாக இருந்தால்.. தப்பிச்சேன்.. தப்பாக இருந்தால் ரொம்பவும் திட்டீடாதீங்க.//

    >>> கரெக்டுதான் அதில் என்ன சந்தேகம், பாபு!

    ReplyDelete
  37. சிவகுமார் said...

    //இதெல்லாம் கரெக்டாக இருந்தால்.. தப்பிச்சேன்.. தப்பாக இருந்தால் ரொம்பவும் திட்டீடாதீங்க.//

    >>> கரெக்டுதான் அதில் என்ன சந்தேகம், பாபு! ///

    வாங்க சிவகுமார்.. நன்றிங்க..

    ReplyDelete
  38. தோராயமான கணிப்பு இல்லை. இது துல்லியமான கணிப்பு.. மிகச்சரியே எல்லாம்.. பெண்ணின் மனதைப் பற்றி.. அராய்ந்த உங்களுக்குக் கண்டிப்பா பிஎச். டி பட்டம் கொடுக்கலாம்.. அருமையான பதிவு நண்பரே..

    ReplyDelete
  39. ஆதிரா said...

    தோராயமான கணிப்பு இல்லை. இது துல்லியமான கணிப்பு.. மிகச்சரியே எல்லாம்.. பெண்ணின் மனதைப் பற்றி.. அராய்ந்த உங்களுக்குக் கண்டிப்பா பிஎச். டி பட்டம் கொடுக்கலாம்.. அருமையான பதிவு நண்பரே.. ////

    பாராட்டுக்கு மிகவும் நன்றிங்க ஆதிரா..

    ReplyDelete
  40. //பெண்கள் மனசுல என்ன இருக்கு?.. அவங்க என்ன விரும்பறாங்க.. இதெல்லாம் என்ன பி.எச்டி படிச்சுட்டு வந்தாலும் தெரிஞ்சுக்க முடியாது.. //
    //பொண்ணுங்களும் அண்ணா பல்கலைக்கழக கேள்வித்தாலும் ஒன்று... இரண்டையும் புரிந்துக்கொள்ளவே முடியாது... //
    கொஞ்ச நாளைக்கு முன்னாடி கல்யாண மன்னன் முஹம்மது அலின்னு ஒருத்தன் 32 பெண்களை கல்யாணம் பண்ணி அனுபவிச்சிட்டு, அவங்ககிட்ட இருந்த நகை, பணம் பொருட்களையும் எடுத்துக்கிட்டு, அவங்க கூட சந்தோஷமா இருந்ததை விடியோ எடுத்தும் வித்துட்டான். இது நடந்தது சில வருடங்களிலேயே. மாட்டியவர்கள் எல்லோரும் மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பாதிப்பவர்கள் அல்லது பணக்காரப் பெண்கள். இவன் போலீசில் மாட்டியிருக்காவிட்டால் இன்னும் முப்பது பேத்தையாவது காலி செய்திருப்பான். நகை புடைவைக் கடைகளில் மணிக்கணக்கில் உட்கார்ந்து செலக்ஷன் செய்யும் இவர்கள் புருஷனை எந்த அவசர கதியில் தேர்ந்தெடுத்திருகிறார்கள்? அட அவன் பக்கம் இருந்து ஒரு நூறு பேத்தை அழைத்து வா என்று சொல்லத் தெரியாதா? நீ வேலை செய்யும் நிறுவனத்தின் மின்னஞ்சல், போன் நம்பரை கொடு என்று வாங்கி அவனைப் பற்றி விசாரிக்கத் தெரியாதா? அட அவ்வளவு ஏன் அவன் மூஞ்சியைப் பார்த்தாலாவது கண்டு பிடிக்கத் தெரியாதா? படித்தவனுக்குண்டான அறிகுறி அவன் முகத்தில் கொஞ்சம் கூட இல்லையே? கோழித் திருடன் மாதிரி அல்லவா இருந்தான்? இத்தோடு இல்லாமல் அவன் எப்படியிருந்தாலும் சரி அவனோடு வாழத் தயார் என்று இன்னும் சிலர் இருக்கிறார்களாம். அட தேவுடா! ஆசை வார்த்தை கூறி அனுபவித்து விட்டு அம்போவென விட்டு விட்டுப் போகும் ஆடவரிடத்தில் பெண்டிர் தினமும் ஏமாந்த வண்ணமே உள்ளனர். நமக்கு கஷ்டமாக தெரியும் வினாத்தாள் அந்த மாதிரி ஆட்களுக்கு மட்டும் லீக் ஆன கொஸ்டீன் பேப்பர் மாதிரி அத்தனைக்கும் விடை தெரியுதே எப்பூடி?.......

    ReplyDelete
  41. பெண்களுக்கு இயற்கையிலேயே புத்தி கம்மி. சக்கரத்திலிருந்து கம்பியூட்டர் வரை எத்தனை கண்டுபிடுப்புகள் பெண்களால் கண்டுபிடிக்கப் பட்டன? எத்தனை கணித, இயற்பியல் சூத்திரங்களை பெண்கள் கண்டுபிடித்தனர்? [ஒன்னு கூட கிடயாது]. ஆணும் பெண்ணும் சமம்னா, சரி சமமா கண்டுபிடிசிருக்கணும். பெண்களுக்கு மன பலம் இல்லை. புத்தியும் கம்மி. பெண்கள் பிள்ளைகளுக்கு நல்ல தாய், ஆனால் புருஷனுக்கு.....???????? கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும் கொடுமைக்காரி, கூடவே இருந்து குழி பறிக்கும் சகுனி. இவங்க கொடுமை தாங்க முடியாமத்தான் சிலர் அலுவலகத்திலேயே இரவு பத்து மணி வரைக்கும் வேலை பார்க்கிறார்கள், விடுமுறை நாட்களிலும் அலுவலகம் செல்கிறார்கள். எல்லோரும் இப்படி இல்லை என்றாலும் 99.99% இப்படித்தான். [கல்யாணத்தப் பண்ணுங்க புரிஞ்சுக்குவீங்க].

    ReplyDelete
  42. அழகாக சொல்லி இருக்கிறிங்க...

    ReplyDelete
  43. பகிர்வுக்கு நன்றி

    இது ஆரம்பம் மட்டுமே...........

    ReplyDelete
  44. @ஜெயதேவ் தாஸ்..

    பெண்கள் எதையுமே கண்டுபிடிக்கல.. அவங்க ஆணுக்கு சரிசமம் இல்லன்னு நீங்க சொல்றதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

    எவ்வளவோ வெற்றிகளுக்குப் பின்னால் பெண்கள் இருந்திருக்காங்க.. பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை ஆண்டுவந்த மஹாராஜாக்களின் பின்னால் பெண்களே இருந்திருக்கிறார்கள்.. அதற்கு நிறைய வரலாற்று சான்றிதழ்கள் இருக்கு..

    மேலும் சொன்னப்போனா.. மேரி கியூரி ஒரு பொண்ணுதான்.. நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள் அவரிடம் இருந்து வந்திருக்கு.. மேலும் சொன்னப்போனால்.. எவ்வளவோ பெண்களின் கண்டுபிடிப்புகள் மறைக்கப்பட்டிருக்கலாம்..

    கருத்துக்களுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  45. சந்ரு said...

    அழகாக சொல்லி இருக்கிறிங்க... ///

    நன்றிங்க..

    ReplyDelete
  46. விக்கி உலகம் said...

    பகிர்வுக்கு நன்றி

    இது ஆரம்பம் மட்டுமே........... ///

    நன்றிங்க..

    ReplyDelete
  47. என் அனுபவங்களை உங்கள் எழுத்தின் மூலமாக மீண்டும் பார்பதாக தோன்றுகிறது... இதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான்... ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டபடிய என் மண வாழ்கை சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது...

    ReplyDelete
  48. இவ்ளோ பிரச்சனை இருக்கா?

    ReplyDelete
  49. @Arun Prasath
    //ஐ வடை //
    அமாம் நீங்க எதைச் சொல்றீங்கன்னு புரியலையே?

    @ பதிவுலகில் பாபு

    //எவ்வளவோ வெற்றிகளுக்குப் பின்னால் பெண்கள் இருந்திருக்காங்க.. பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை ஆண்டுவந்த மஹாராஜாக்களின் பின்னால் பெண்களே இருந்திருக்கிறார்கள்..//இருந்திருப்பாங்க, எப்படின்னா அவங்களை தொந்தரவு பண்ணி கொடுமைப் படுத்தாம இருந்திருப்பாங்க, இல்லைன்னா வேலா வேலைக்கு ருசியா சமைச்சு போட்டிருப்பாங்க. இதை விட்டு அவங்களால வேற எதையும் உருப்படியா செய்திருக்க முடியாது. சக்கரம் கண்டுபுடிச்ச காலத்திலிருந்து செல் போன் காலம் வரை வெறும் ஆம்பிளைக்குப் பின்னாடி இருக்கிரதீதான் இவங்க வேலையா? ஏன் ஆண்களை இவங்க பின்னாடி நிக்க வச்சிட்டு இவங்களும் எதையாவது கண்டுபிடிச்சிருக்கலாமே? ஐன்ஸ்டீன் பற்றி கூட இந்த மாதிரி கட்டு கதைகளை கூறுபவர்களும் உண்டு. அதாவது அவரது சார்பியல் கொள்கைகள் [Theory of Relativity] போன்ற தியரிகள் எல்லாம் அவருடைய ஓடிப் போன பெண்டாட்டி சொல்லிக் கொடுத்ததுதான், அவருடையது அல்ல என்று. இது விட பிக்காலித் தனம் வேறென்ன இருக்க முடியும்? ஓடிப் போனவளே இன்னும் நாலு தியரியை வெளியிட்டு பெயர் புகழ் சம்பாதித்திருக்கலாமே?

    ReplyDelete
  50. மேரி கியூரி செய்தது செயல் முறை அறிவியல். அவங்க காலத்துல எப்படின்னா எதையோ செய்திகிட்டு இருக்கும் போது வேறு எதுவோ வந்து மாட்டும், அவங்களுக்கு நோபல் பரிசும் கிடைச்சிடும். நான் சொல்ல வருவது, கொள்கை முறை [Theoretical] அறிவியல் மற்றும் கணிதம். இதுக்குத்தான் மூளை வேண்டும். அது பெண்களுக்கு போதிய அளவு கிடையாது. நீங்க என்ன படிச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாது, இருந்தாலும் உங்களுக்குத் தெரிஞ்சு ஒரு பெண் கண்டுபிடித்த இயற்பியல் விதி படிச்சிருக்கீங்களா? ஒரு கணித சூத்திரம் அல்லது முறை பெண் கண்டு பிடித்தது இருக்கிறதா? ஒரு பெண் கண்டு பிடிச்ச இயந்திரம்/கருவி ஏதாவது இருக்கா?பழசை விட்டுத் தள்ளுங்கள் பாபு, இன்றைக்கு உங்க கண்ணு முன்னால நடக்கிறத பாருங்க. கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், சி.வி.ராமன், ஸ்டீபன் ஹாகின்ஸ் இவங்கள மாதிரி ஒரு இயற்பியலாளர்கள் என்றைக்குமே ஒரு பெண் ஆக முடியாது. அதே மாதிரி பைதாகிரஸ் [செங்கோன முக்கோணம் புகழ்], , ராமானுஜம், Lebanitz மாதிரி ஒரு கணித மேதை பெண்களில் இருந்து வர முடியாது. பீதோவன், Mozart, இளையராஜா, AR ரஹ்மான் மாதிரி ஒரு இசை மேதை பெண்களில் இருந்து வர முடியாது. இவங்க எல்லோருக்கும் அவங்க மனைவி சொன்னதை வெளியில போயி சொல்லி பேரு வாங்கிட்டாங்கன்னு சொன்னீங்கன்ன அதை நான் நம்பத் தயாரில்லை. [நான் எழுதியது யோசிச்சுப் பாருங்க, எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் எழுதும் ஸ்டைலே இப்படித்தான்!]

    ReplyDelete
  51. மதுரை பாண்டி said...

    என் அனுபவங்களை உங்கள் எழுத்தின் மூலமாக மீண்டும் பார்பதாக தோன்றுகிறது... இதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான்... ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டபடிய என் மண வாழ்கை சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது... ////

    வாருங்க மதுரை பாண்டி.. உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருப்பது குறித்து மகிழ்ச்சிங்க..

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  52. Arun Prasath said...

    இவ்ளோ பிரச்சனை இருக்கா? ////

    வாங்க அருண்..

    ReplyDelete
  53. ரொம்ப ஆழ்ந்து யோசிச்சி நல்லா எழுதி இருக்கீங்க, ஒன்னா அனுபவசாலியா இருக்கனும், இல்லைன்னா லவ்வாவது பன்ணிட்டு இருக்கனும், இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க, ஏன்னா சேம் பீலிங் :-)

    ReplyDelete
  54. இரவு வானம் said...

    ரொம்ப ஆழ்ந்து யோசிச்சி நல்லா எழுதி இருக்கீங்க, ஒன்னா அனுபவசாலியா இருக்கனும், இல்லைன்னா லவ்வாவது பன்ணிட்டு இருக்கனும், இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க, ஏன்னா சேம் பீலிங் :-) ////

    நிஜமாகவே எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் இல்லங்க.. எல்லாம் நம்மை சுத்தி நடக்கற விசயங்களை வைச்சுத்தாங்க எழுதினேன்.. நிஜமா.. :-)

    ReplyDelete
  55. //2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே//

    அட கொடுமையே ..? இப்படிஎல்லாமா நடக்குது ..?!

    ReplyDelete
  56. //நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது.//

    உண்மைதாங்க .. அப்புறம் அந்த பின்குறிப்பு நல்லா இருக்கு .. திட்டுனா அழுவீங்களா ..? ஹி ஹி ஹி

    ReplyDelete
  57. கோமாளி செல்வா said...

    //2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே//

    அட கொடுமையே ..? இப்படிஎல்லாமா நடக்குது ..?! ////

    ஆமாம் செல்வா.. இதுக்கும் மேலயும்கூட வெயிட் பண்ணுவாங்க..

    ReplyDelete
  58. அட இங்க பின்னூட்டத்துல இன்னொரு பதிவு போயிட்டு இருக்கு ..
    நான் ஜெயதேவ அண்ணன் சொன்னதுல கொஞ்சம் மாறுபடுறேன் ..
    பொண்ணுங்க அதிகமா கண்டு பிடிக்கல . ஏன்ன நாம தான் அவுங்கள கண்டுபிடிக்கரக்கு விடலையே ..?! அதாவது அவுங்கள அடக்கி வச்சிருக்கமோ அபடின்கிற மாதிரி சொல்லுறேன் .. ஹி ஹி ஹி .. சரி அது பத்தி இங்க கூட கொஞ்சம் எழுதிருக்கேன் , நேரம் இருந்தா பாருங்க .!
    http://koomaali.blogspot.com/2010/11/blog-post_09.html

    ReplyDelete
  59. கோமாளி செல்வா said...

    //நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது.//

    உண்மைதாங்க .. அப்புறம் அந்த பின்குறிப்பு நல்லா இருக்கு .. திட்டுனா அழுவீங்களா ..? ஹி ஹி ஹி ////

    ஹா ஹா ஹா.. அது ச்சும்மா... :-)

    ReplyDelete
  60. கோமாளி செல்வா said...

    அட இங்க பின்னூட்டத்துல இன்னொரு பதிவு போயிட்டு இருக்கு ..
    நான் ஜெயதேவ அண்ணன் சொன்னதுல கொஞ்சம் மாறுபடுறேன் ..
    பொண்ணுங்க அதிகமா கண்டு பிடிக்கல . ஏன்ன நாம தான் அவுங்கள கண்டுபிடிக்கரக்கு விடலையே ..?! அதாவது அவுங்கள அடக்கி வச்சிருக்கமோ அபடின்கிற மாதிரி சொல்லுறேன் .. ஹி ஹி ஹி .. சரி அது பத்தி இங்க கூட கொஞ்சம் எழுதிருக்கேன் , நேரம் இருந்தா பாருங்க .!
    http://koomaali.blogspot.com/2010/11/blog-post_09.html ////

    சூப்பர் செல்வா.. கண்டிப்பாக வந்து படிக்கிறேன்..

    ReplyDelete
  61. @Jayadev Das..

    பாஸ்.. நீங்க வெளியிட்டிருந்த கமெண்ட்டுல மரியாதை இல்லாத வார்த்தைகள் இருந்தது.. அதை என்னால் வெளியிட முடியாது.. உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னு தோனினா.. நீங்க உங்கள் பதிவில் போட்டுக்கங்க.. உங்களுடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  62. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  63. Pathivulagil Babu Sir, Epdi irukinga?
    Konjam than gap viten...ipo oru vithai valantha sediya nikitu..
    Allamaramaga vaalthukal...

    ReplyDelete
  64. ramkumar said...

    Pathivulagil Babu Sir, Epdi irukinga?
    Konjam than gap viten...ipo oru vithai valantha sediya nikitu..
    Allamaramaga vaalthukal... /////

    ஹா ஹா ஹா.. நன்றிங்க சார்..

    ReplyDelete
  65. //பெண்ணின் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்கறவரை அந்தப் பெண்ணுக்கும் சரி.. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்//
    பிறந்த குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்...அன்பினால் ஆளலாம் .. வறட்டு எதிர்பார்ப்புகளைக் கொண்டு டிமாண்ட் செய்வது சரி வராது . திருமணமான புதிதில்
    மயக்கத்தில் ரியாலிட்டி இலிருந்து வேருபடறது அனைவருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன் .

    கட்டுரை மிக நன்றாக உள்ளது

    ReplyDelete
  66. அருமையான பதிவு

    ReplyDelete
  67. தமிழ்தோட்டம் said...

    அருமையான பதிவு ////

    நன்றிங்க..

    ReplyDelete
  68. //ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்..///

    இந்த வரியில் மொத்த பதிவும் அடங்கி விட்டது.... :-)))
    நல்ல எழுதி இருக்கீங்க..

    ReplyDelete
  69. Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

    //ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்..///

    இந்த வரியில் மொத்த பதிவும் அடங்கி விட்டது.... :-)))
    நல்ல எழுதி இருக்கீங்க.. ////

    நன்றிங்க ஆனந்தி..

    ReplyDelete
  70. what ever you told in this article is 100% correct... keep it up...

    ReplyDelete
  71. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete