.

Sunday, June 5, 2011

பிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..

நண்பர்களுக்கு வணக்கம்..

பிளாக் பெர்ரி போன்களுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கும் என்ன வித்தியாசம்னும் நன்மை தீமைகள் என்னன்னு எனக்குத் தெரிஞ்ச விசயங்களை இங்கே சொல்லலாம்னு நினைக்கிறேன்..

இந்த ரெண்டு வகையான மொபைல்களுக்கும் வித்தியாசம் என்னன்னா.. பிளாக் பெர்ரி போன்கள் யூ.கேயில் இருந்து ஒரு கம்பெனி மூலமாகத் தயாரிக்கப்பட்டு விக்கப்படுது.. ஸ்மார்ட் போன்கள் ஏதாவது ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்யுது.. அந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை யூஸ் பண்ணி பல நிறுவனங்கள் அவங்கவங்க டிசைன்ல மொபைல்களை வெளியிடறாங்க..

பிளாக் பெர்ரி போன்கள் பிசினெஸ் பீப்பிள்ஸுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கு.. காரணம் இந்த வகையான போன்கள்ல நாம வேலை பாக்கற கம்பெனி மெயில்களை பார்க்க ஏதுவாக கான்பிகரேசன்ஸ் பண்ணிக்க முடியும்.. ரொம்ப சுலபமாக ஈமெயில் பரிமாற்றங்களை செய்துக்க முடியும்.. ஆனால் மெயில்களை ஒரு லிமிட் வரைதான் ஸ்டோர் பண்ண முடியுது.. நம்முடைய தரவுகள் அனைத்தும் யூ.கேல இருக்கற சர்வர்லதான் ஸ்டோர் ஆகறது காரணமாக இருக்கலாம்.. சோ அங்கே சர்வர்ல ஏதாவது பிராபளம்னா.. இந்த காஸ்ட்லியான மொபைல்களை சும்மாதான் வைச்சிருக்க வேண்டியிருக்கும்..

பிளாக் பெர்ரி போன்கள் 30,000ரூபாய், 40,000ரூபாய்ன்னு விலை கொடுத்து வாங்க இது ஒன்னுதான் காரணாமான்னு நாம யோசிக்கறோம் இல்லையா.. இந்த போன்களுக்கு இன்னொரு சூப்பர் ஸ்பெசாலிட்டி இருக்கு.. அது என்னன்னா.. நார்மலாக தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு ஒருத்தரையொருத்தர் தொடர்பு கொள்ளும்போது.. அதை தொழிற்நுட்ப வசதிகளை வைச்சு.. இடைமறிச்சு அவங்க செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.. ஆனால் பிளாக் பெர்ரியில் இருந்து அனுப்பப்படும் தரவுகளையோ பேச்சுகளையோ.. எந்த வகையான தொழிற்நுட்பத்தைக் கொண்டும் இடைமறிச்சு கண்காணிக்க முடியாது.. இது பிசினஸ் பீப்பிள்ஸுக்கு ரொம்ப வசதியாக இருக்கு..

இப்படி ஒரு வசதி இருக்கும் போது.. அதை நல்லதுக்கு பயன்படுத்த முடியும், கெட்டதுக்கும் பயன்படுத்த முடியும் இல்லையா.. அதனால.. தீவிரவாதிகளும் கண்டிப்பாகப் பயன்படுத்த வாய்பிருக்கறதால ஆரேபிய நாடுகள் உட்பட பல நாடுகள் பிளாக் பெர்ரியைத் தடை செய்திருக்காங்க.. அப்போ ஏன் இந்தியாவுல மட்டும் தடை செய்யலைன்னு நமக்கு கேள்வி வரும்.. இந்தியா அரசாங்கமும் பிளாக் பெர்ரி நிறுவனத்துக்கு ஒரு கோரிக்கையை வைச்சிருக்கு.. தேவைப்படும் போது பிளாக் பெர்ரி சர்வரை ட்ராக் பண்ற வசதிதான் அது.. ஆனால் அந்த நிறுவனத்துக்காரங்க ஒரு லிமிட் வரைக்கும்தான் தகவல் பரிமாற்றங்களைத் தரமுடியும்னும்.. அவங்க சர்வரை யார் ட்ராக் பண்ணவும் அனுமதிக்க முடியாதுன்னும் சொல்லிட்டாங்க.. அதனால இந்தியா அவங்களுக்கு அதிர்ச்சி தர்ற வகையாக ஒரு காலக்கெடுவை விதிச்சிருக்காங்க.. அதுப்படி இந்திய அரசாங்கத்தோட வேண்டுகோளுக்கு அடிபணியாத பட்சத்தில்.. இங்கேயும் பிளாக் பெர்ரியோட விற்பனைகள் நிறுத்தப்படலாம்..

உலக சந்தையில் இந்தியாவில்தான் பெரும்பாலான போன்கள் விற்கப்படறதால.. இந்த போன்கள் நிறுத்தப்பட்டா.. கண்டிப்பா அந்த நிறுவனத்துக்கு பெரிய லாஸ்தான்.. சோ என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.. :-)

ஸ்மார்ட் போன்கள் முன்பு சொன்னது போல "ஆண்ட்ராய்டு", "சிம்பியன்", "விண்டோஸ்" மாதிரியான ஆபரேட்டிங் சிஸ்டங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குது.. மொபைல் நிறுவனங்கள் இந்த OSகளை அவங்க தயாரிக்கற மொபைல்கள்ல நிறுவி வெளியிடறாங்க.. இந்த மொபைல்கள்ல எல்லாத்துலயுமே டச் ஸ்கிரின் ஸ்பெசாலிட்டி இருக்கும்..

இது என்ன பெரிய அதிசியம்.. போன வருசம் வரைக்கும் பாப்புலராக இருந்த சீனா மொபைல்கள்ல கூடத்தான் இந்த வசதி இருந்ததுன்னு நீங்க நினைக்கலாம்.. இந்த வகையான போன்கள் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு வசதிகள் கிடைக்கவே தயாரிக்கப்பட்டிருக்கு..

உதாரணத்துக்கு எந்த நேரமும் ட்விட்டர், பேஸ்புக், ஜீசாட் மாதிரி எல்லா பொழுதுபோக்கு சேவைத் தளங்கள்லயும் ஆன்லைன்லயே இருக்க முடியுது.. இந்த மொபைல்கள்ல எல்லாத்திலும் பெரிய திரை இருக்கறதால வீடியோ, போட்டோஸ் எல்லாம் பார்க்க அருமையாக இருக்குது.. மற்றபடி 3G, வைஃபைன்னு இப்போ இருக்கற எல்லா புது டெக்னாலஜிகளுமே இந்த மொபைல்களுக்குள்ள அடங்கிடும்..

ஸ்மார்ட் போன்களைப் பொருத்த வரைக்கும் மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்கள்ல இயங்கற மொபைல்களை விடவும்.. "ஆண்ட்ராய்ட்" மொபைல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு.. காரணம் ஆண்ட்ராய்ட் OS.. லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துல இருந்து டெவலப் பண்ணப்பட்டிருக்கு.. அதனால இந்த மொபைல்களுக்குத் தேவையான அப்ளிகேசன்ஸ் எல்லாமும் இலவசமாகவே கிடைக்குது.. அதனால் இப்போ இந்த வகை மொபைல்கள் ஆப்பிலோட ஐஃபோனோடவே போட்டி போட்டுட்டு இருக்கு..

ஸ்மார்ட் போன்லயும் என்னோட ஆபிஸ் மெயில் ஐட்டங்களை என்னால காண்பிகர் பண்ணிக்க முடியுது.. இந்த வகையான மொபைல்களை சாம்சங், எல்.ஜி, டெல் மாதிரியான பெரிய நிறுவனங்கள் தயாரிச்சு வெளியிடறாங்க.. விலையும் ஓகேயாத்தான் இருக்கு..

இதுல எந்த எந்த மொபைல்கள் நல்லா இருக்குன்னு இன்னொரு சந்தர்ப்பத்தில சொல்றேன்.. :-)

Monday, April 18, 2011

பெர்முடா முக்கோணம் - "மர்மங்கள்"


அழகன்..
எங்க பிரண்ட்ஸ் குரூப்புல எல்லாரும் இவன அப்படித்தான் செல்லமாக் கூப்பிடுவோம்.. ரொம்ப நல்லவன்.. பிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் சரிசமமா Care எடுத்துக்கணும்னு நினைக்கிறவன்.. எங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல ரொம்ப சண்டை வரும்.. கைகலப்பு எல்லாம் ஆயிருக்கு.. ஆனா ரெண்டு பேரும் ரொம்ப குளோஸா இருப்போம்.. கோழி கிறுக்கன மாதிரியே இருக்குன்னு சொல்லுவாங்க இல்லையா!! அது இவனோட ஹேண்ட் ரைட்டிங்கப் பார்த்தா தெரிஞ்சுக்கலாம்.. ஸ்கூல்ல இதுக்காகவே ரொம்ப அடி வாங்குவான்.. மக்குப் பய!!!

விளையாட்டுல ரொம்ப ஸ்ப்ரிட்டா இருப்பான்.. அதுவும் கிரிக்கெட் ரொம்ப நல்லா விளையாடுவான்.. இவன் தான் எங்க டீம் கேப்டன்.. கிரவுண்டுல ரொம்பவும் நல்லாத்தான் பிளான் பண்ணுவான்.. ஆனா நாங்க யாருமே சரியா விளையாட மாட்டோம்.. மேக்ஸிமம் இவன் மட்டும் தான் ரன் அடிப்பான்.. வேற.. எங்க பிரண்ட்ஸ் குரூப்புக்கு ரொம்ப பொழுதுபோக்கா இருப்பான்.. எல்லாரும் இவன ஓட்டுவோம், ஆனாலும் சளைக்காம எல்லாத்தையும் சமாளிப்பான்..
இவனோட வாழ்க்கை இலட்சியமாவே ஒரு விசயம் இருந்தது.. அது என்னன்னு எங்க ஊருக்கே தெரிஞ்ச ரகசியம்.. ஆனால் இங்கே சொன்னா.. பெங்களூர் வந்து உதைப்பான்..

இப்போ மேட்டருக்கு வர்றேன்.. பெர்முடா முக்கோணம் பத்தி எழுதச் சொல்லி நேற்று மெயில் பண்ணியிருந்தான்.. சோ நண்பனுக்காக இந்தப் பதிவை டெடிக்கேட் பண்றேன்.. :-)


நிலவுல போய் பிளாட் வாங்கறேன்னு கிளம்பற அளவுக்கு இப்போ டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும்..சில விசயங்கள் இன்னும் புரியாத புதிராகவே இருக்கு.. அதுல பெர்முடா முக்கோணமும் ஒன்னு..

வட அட்லாண்டிக் கடலோட மேற்குப் பகுதியில் இருக்கற ஒரு குறிப்பிட்ட பரப்பை பெர்முடா முக்கோணம்னு சொல்றாங்க.. பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு மற்றும் கரீபியன் தீவுகள் முழுவதுமே இந்தப் பரப்புக்குள்ள அடங்குது.. அப்புறம் இன்னும் சில பகுதிகளும் இந்தப் முக்கோணத்துக்குள்ள வரும்னு சொல்றாங்க..

இந்தப் பகுதியில நிறைய கப்பல்களும் விமானங்களும் காணமப் போயிட்டதாக சொல்லப்படுது.. இந்த மர்மத்தை பற்றி முதன்முதலாக 1950 ஆண்டு ஒரு ஆர்டிகல் வெளியாகியிருக்கு.. அப்புறம் இரண்டு வருசம் கழிச்சு இந்த விசயம் பற்றி இரண்டாவது ஆர்டிகல் வெளியாச்சு.. பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்து.. அந்தப் பகுதியில பயிற்சி எடுத்துட்டு இருந்தப்போ காணாமப் போயிட்டதாகவும்.. அந்த விமானங்கள்ல இருந்த ஒரு கேப்டன்.. "நாங்க இப்போ வெள்ளைக் கலர்ல இருக்கற தண்ணிக்குள்ள போயிட்டிருக்கோம்.. இல்ல... இல்ல.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு.. அப்படின்னு சொன்னதா ரெக்கார்ட் ஆயிருக்குன்னு சொல்றாங்க.. அந்த விமானங்களோட திசைகாட்டியும் தாறுமாறா அப்போ வேலை செய்திருக்கு.. அவங்களைத் தேடிக்கிட்டு ஒரு குரூப் இன்னோரு விமானத்துல போக அந்த விமானத்தையும் காணோம்.. இந்த விசயத்தை விசாரணை பண்ணின அதிகாரிகள்.. விமானங்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு பறந்து போயிடுச்சு சொன்னதாகவும் கூறப்பட்டிருக்கு..

அப்புறமென்ன.. இந்த இடத்தைப் பற்றி ஆவி, புதம், பேய், ஏலியன்ஸ்ன்னு நிறையக் கட்டுக்கதைகள்.. (எனக்கே டைப் பண்ணப் பண்ண.. இன்னும் நாலு பிட்டு எக்ஸ்ட்ரா போடலாம்னுதான் இருக்கு.. :-).. )

உண்மையில.. கடல் பகுதியில ஏற்பட்ட பல விபத்துகள்.. பெர்முடா பகுதியில நடந்ததாக திரிச்சு சொல்லியிருக்காங்கன்னும் அதுக்கான நிறைய விளக்கங்களையும் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.. பல விசயங்கள் நடக்காமயே நடந்ததாகவும் கதை கட்டியிருக்காங்க.. உதாரணத்துக்கு.. 1937 ஆம் ஆண்டு புளோரிடா கடற்கரைப் பகுதியில் ஒரு பிளைட் விபத்துக்குள்ளானதை நிறையப் பேரு பார்த்ததாக சொல்லப்படுது.. ஆனால் லோக்கல் நியூஸ் பேப்பர்ல அந்த விபத்து பற்றின எந்த நியூஸுமே வெளியாகல..

இந்தப் பகுதிக்குள்ள நுழையற எந்த பொருளுமே காணமப்போகல.. அங்கேயே வேற வடிவத்துல இருக்குன்னும்.. எல்லாப் பொருட்களுமே ஒரு அணுவாக மாறி காற்றோட கலந்துடுதுன்னும் ஏகப்பட்ட கெஸ்ஸிங்..

விஞ்ஞான ரீதியாகவும் இந்த விசயத்துக்கு பல விளக்கங்களைக் கொடுத்திருக்காங்க..

மீத்தேன் ஹைட்ராய்டு அப்படிங்கற ஒரு இயற்கை எரிவாயு.. நீரோட அடர்த்தியைக் கம்மி பண்ணி.. கப்பல் தண்ணியில மிதக்க முடியாம மூழ்கடிக்கும்னு ஆஸ்திரேலியாவுல நடத்தப்பட்ட சோதனைகள்ல சொல்லியிருக்காங்க.. ஆனால் பெர்முடா பகுதியில மீத்தேன் ஹைட்ராய்டோட எந்த தாக்கமும் எப்போதும் இருந்திருக்கல..

கடல்ல உண்டாகற பயங்கர சூறாவளிகள் காரணமாக இருந்திருக்காலாம்னு சொல்லப்படுது..

சுனாமி அலைகள் மாதிரி இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடிச்சிருக்கலாம்னும் சொல்றாங்க..

பெர்முடாப் பகுதியோட ஏதாவது மையப்பகுதியில.. ஈர்ப்புவிசை ரொம்ப அதிகமாக இருந்து.. எல்லாப் பொருட்களையும் உள்ளே ஈர்த்துக்குன்னும் ஒரு கெஸ்ஸிங்..

கடற்கொள்ளையர்கள் மேலயும் டவுட்டு இருந்திருக்கு.. ஆனால் அவங்க எப்படி விமானத்தைக் கொள்ளையடிப்பாங்க.. (என்னோட டவுட்டு இது.. :-).. )

பெர்முடா முக்கோணத்தின் குறிப்பிடத்தக்க சம்பவங்கள்னு சொல்லனும்னா..

1. பிளைட் 19 காணாமப்போனதும்.. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் போன 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.. இந்த விசயத்துக்காக கொடுக்கப்பட்ட விளக்கங்கள் துல்லியமான உண்மைகளாகத் தெரியல..

2. மேரி செலஸ்டின்னு ஒரு கப்பல் 1872 ஆம் ஆண்டு மர்மமான முறையில் துலைஞ்சு போயிருக்கு.. பெர்முடா முக்கோணம்தான் இதுக்கு காரணம்னு சொல்லப்பட்டிருக்கு.. இதே பேர்ல இருந்த ஒரு கப்பல் 1860கள்ல மூழ்கிப் போனதை இந்தக் கப்பலோட இணைச்சு குழம்பியிருக்கலாம்னும் சொல்றாங்க..

3. 1881 ஆம் ஆண்டு எலன் ஆஸ்டின்னு ஒருத்தர்.. ஒரு கப்பல் கடல்ல அநாதையாக வர்றதைப் பார்த்திருக்கார்.. மீட்புப் பணியாட்களை அனுப்பி.. அந்தக் கப்பலையும் சேர்த்து நியூயார்க் ஓட்டிட்டு வந்துடலாம்னு அவர் எண்ணம்.. ஆனால்.. அந்தக் கப்பல் மீண்டும் பணியாட்களோட காணாமப் போனதாக சொல்லப்படுது..

இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.. இது போதும்.. :-)..

பெர்முடா முக்கோணம் பற்றின தேடுதல்ல.. இன்னொரு விசயமும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. ஜப்பான் பக்கத்துல ட்ராகன் ட்ரையாங்கில்னு இன்னொரு இடமும்.. சேம் பீஸ்தானாம்.. அந்தப் பகுதிகுள்ள நுழையற எந்த ஆப்ஜெக்டும் திரும்பறதில்லையாம்..

டிஸ்கி: பெர்முடா முக்கோணத்துல இப்போ எந்த விபத்துகளும் நடக்கறதில்லையாம்.. உண்மையில ஏதாவது நடந்துச்சா.. நடக்கலையா.. அடப் போங்கப்பா..

Wednesday, March 23, 2011

தனிமைச் சிறகுகள் - BPO அனுபவங்கள்

நண்பர்களுக்கு வணக்கம்..

தனிமைச் சிறகுகள் அப்படிங்கற தலைப்புல.. சென்னை மற்றும் பெங்களூர்ல புதுசா வேலை தேடி வந்தப்போ எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதியிருந்தேன்.. அந்தப் பதிவுகளைப் படிக்கனும்னா.. கீழே இருக்கற லிங்கை கிளிக் பண்ணிப் பாருங்க..

தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்

Friday, March 18, 2011

ஃபிளைட் பிளான் - திரை விமர்சனம்

எனக்குப் மிகவும் பிடிச்ச ஆங்கிலத் திரைப்படங்கள்ல வகைகள்ல.. விமானத்துல நடக்கற மாதிரியான திரைக்கதையுள்ள படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன்.. விமானத்துல நடக்கற கதைனாலே.. விமானத்தை ஹைஜாக் பண்றதும்.. அங்கே பேசஜ்சராக இருக்கற ஹீரோ எப்படி அந்த திட்டத்தை முறியடிக்கிறார் அப்படிங்கற மாதிரி திரில்லிங்கா கதை நகரும்..

இந்தப் பதிவுல நான் சொல்லப்போற படம் முழுவதும் விமானத்திலதான்.. ஆனால் ஹைஜாக் மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசம்..

ஃபிளைட் பிளான் - 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்..

கைல் பிராட் தன்னோட கணவரை இழந்த துக்கத்தில இரயில்வே ஸ்டேசன்ல உட்கார்ந்திருக்கார்.. கைல் தன்னோட கணவர் சடலத்தை ரிசீவ் பண்றதை.. ஸ்டேசன்ல உட்கார்ந்து நினைச்சுப் பார்த்துட்டு இருக்கும் போது.. திடீர்னு அவரோட இறந்த கணவர்,, அங்கே வந்து..வா வீட்டுக்குப் போலாம்னு அழைச்சிட்டுப் போறார்.. (ம்ம்.. ரைட்டு..)

சும்மா.. தன்னோட கணவர் வந்தமாதிரி நினைச்சுப் பார்த்திருக்கார் கைல்.. :-)..

கைல் பிராட்டுக்கு ஆறு வயசுல ஒரு மகள்..

இறந்த கணவரோட சடலத்தை தன்னோட ஊர்ல கொண்டு போய் அடக்கம் பண்ணலாம்னு.. தன்னோட மகளோட விமானத்துல கிளம்பறார் கைல்.. அந்த விமானத்தை வடிவமைச்ச இஞ்சினியர் கைல்தாங்கறது எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேசன்..

விமானம் கிளம்பினதும் அசந்து தூங்கிடறவர்.. கண் விழிக்கும் போது அவரோட மகளைக் காணோம்னு தேட ஆரம்பிக்கிறார்.. விமானத்துல இருக்கற யாருமே அவரோட மகளைப் பார்க்கலைன்னு சொல்றாங்க.. கைல் மகளைக் காணோம்னு விமானத்துக்குள்ள அனெளன்ஸ் பண்றாங்க.. அப்புறம் அவரோட தொல்லை பொறுக்காம.. கேப்டனோட பர்மிஷனோட.. ஃபிளைட் ஸ்டாஃப்ஸ் எல்லாருமே சேர்ந்து சின்னப் பொண்ணைத் தேட ஆரம்பிக்கிறாங்க.. ம்ஹும் எங்கேயும் கிடைக்கல..

கேப்டனுக்கு ஒரு நியூஸ் கிடைக்குது.. கைல் விமானத்துக்குள்ள ஏறும்போது அவர்கூட எந்த சின்னப் பொண்ணும் இல்லைங்கறதுதான் தகவல்.. அப்புறம் அதோட தொடர்ச்சியா இன்னொரு நியூஸ்.. கைலோட கணவர் இறக்கும்போதே.. அவரோட மகளும் இறந்திட்டார்ங்கறதுதான் அந்த நியூஸ்.. ரைட்டு அப்போ முதல் காட்சி மாதிரி கற்பனையாக நினைச்சுப் பார்த்திட்டு வந்திருக்கார்னு முடிவுக்கு வரமுடியுது நம்மால.. ஆனால் கைல்.. மகளோடதான் விமானத்துக்குள்ள வந்தேன்னு அடம் பிடிக்க.. கேப்டனுக்கு கோவம் வந்து அவரைக் கண்காணிக்கிற பொறுப்பை.. அந்த விமானத்துல இருக்கற கார்சன் அப்படிங்கற அதிகாரிகிட்ட ஒப்படைக்கிறார்.. கைல்லோட கணவர் இறந்ததால அவருக்கு மூளை பிசகிறுச்சுன்னு எல்லாரும் நினைக்க ஆரம்பிக்கிறாங்க..

விமானத்துல இருக்கற ஒரு டாக்டர்.. கைல்கிட்ட வந்து பேசறார்.. டாக்டர் பேசப்பேச.. தன்னோட மகள் செத்துதான் போச்சுன்னு கைல்லும் நம்ப ஆரம்பிக்கிறார்.. ஆனால் அந்த யோசனையை உடனே மாத்திக்கிற மாதிரி ஒரு காட்சி வருது..

கண்காணிப்புல இருக்கற கைல்.. அதிகாரி கார்சனை ஏமாற்றிட்டு.. பயணிகள் எல்லாரும் பயப்படற மாதிரி சில வேலைகள் செய்திட்டு.. அவரோட கணவரோட சவப்பெட்டி இருக்கற இடத்துக்குப் போய்.. பொண்ணைக் காணோம்னு அவரைப் பார்த்து அழுதுக்கிட்டிருக்கார்.. அவரை கைவிலங்கு போட்டு திரும்பவும் அவரோட சீட்ல கொண்டு போய் உட்கார வைச்சிடறாங்க..

கைலை இன்னொரு பணிப்பெண்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு அதிகாரி கார்சன்.. கைல்லோட கணவர் சவப்பெட்டி இருக்கற இடத்துக்குப் போய்.. சவப்பெட்டியை உடைச்சு.. அதுக்குள்ள இருந்து.. வெடிகுண்டுகளை வெளியே எடுக்கிறார்.. அந்த வெடிகுண்டுகளை ஒரு இடத்துல போய் பிக்ஸ் பண்றார்.. அங்கேதான்.. கைலோட பொண்ணும் மயக்கமாகிக் கிடக்கு.. இப்போ பொண்ணு காணாமப்போனது உண்மைதான்னு நமக்குத் தெரியவருது..

கார்சன் நேரா கேப்டன்கிட்ட போய்.. கைல் விமானத்தை ஹைஜாக் பண்ணிட்டதாகவும்.. குழந்தை காணாமப் போனதாக நாடகமாடி.. விமானத்துக்குள்ள வெடிகுண்டை செட் பண்ணிட்டான்னும்.. அவள் கேக்கற தொகையை அவ அக்கெளண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணீட்டா எல்லாரையும் விட்டிறதாக சொல்றான்னு சொல்ல.. கேப்டனும் அதை நம்பிடறார்..

பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணப்படுது.. விமானத்தை உண்மையாகக் கடத்தினது யாரு?.. கைல் தன்னோட மகளை எப்படி மீட்கிறார்னு மீதித் திரைக்கதையில ரொம்ப விறுவிறுப்பாக சொல்லியிருப்பாங்க..

உண்மையிலயே கைல்லோட மகள் தொலைஞ்சுதான் போச்சா.. இல்லையான்னு.. பாதிப்படம் நகர்ற வரைக்குமே நம்மால டிசைட் பண்ண முடியாது.. ஆனால் படம் தொடக்கத்துல இருந்து.. மகளைத் தேடறேன்னு அவர் செய்ற வேலைகள் எல்லாமே ரொம்ப பரபரப்பாக இருக்கும்..

கைலோட மகளைக் கடத்தி.. விமானத்தை கார்சன்தான் ஹைஜாக் பண்ணினார்னு நமக்குத் தெரிய வந்தாலும்.. கடைசி வரைக்குமே விறுவிறுப்பு குறையாம நகருது திரைக்கதை..

கைல்தான் விமானத்தைக் கடத்திட்டார்னு வெளியே எல்லாரும் நம்பிக்கிட்டிருக்க.. கார்சன்தான் கடத்தினதுன்னு கைல்லுக்கு மட்டுமே தெரிய.. தன் மகளையும் காப்பாற்றி.. தன்னை லூசுன்னு நினைச்சுட்டு இருக்கற மத்தவங்கிட்டயும்.. உண்மையைக் கடைசியில் விளங்க வைக்கிறார்..

தன் மகளைக் காப்பாற்றி.. விமானத்துக்கு வெளியே அவர் நடந்துவரும் போது.. எல்லாரும் கைல்லை ஆச்சரியமாகவும்.. ஒருவிதமான குற்ற உணர்ச்சியோடவும் பார்க்கற சீன் அற்புதம்..

ஒருத்தருமே தன்னை நம்பலைன்னாலும்.. இருக்கற குழந்தையை செத்ததாக சொல்லி.. அவரை நம்ப வைச்சதுக்கப்புறமும்.. விடாமப் போறாடி குழந்தையை மீட்கிறார் கைல்.. அற்புதம்.. அருமையான திரில்லர் மூவி..

Monday, March 14, 2011

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்

"தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்" அப்படிங்கற தலைப்பில.. என்னுடைய சென்னை அனுபவங்களைப் பற்றி சுருக்கமாக எழுதியிருந்தேன்..

என்னுடைய அண்ணனுக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சதால.. நானும் அவர்கூடவே வந்துட்டேன்.. அப்படிங்கறதோட அந்தப் பதிவை முடிச்சிருந்தேன்.. முதல் பாகத்தைப் படிக்காதவங்களும் இந்தப் பதிவைத் தொடரலாம்.. உங்களுக்கு புரிதல் சிரமமாக இருக்காதுன்னு நினைக்கிறேன்..

பெங்களூர் வரும்போது மனசு முழுக்க ஏதோ எதிர்பார்ப்பு.. டூர் போறமாதிரி ஞாபகத்துலயே வந்துட்டேன்..

அண்ணன்.. இங்கே எலக்ட்ரானிக் சிட்டிங்கற ஏரியால தங்கியிருந்தார்.. வந்து ஒரு 2 நாள்.. என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல.. சும்மா வீட்ல உட்கார்ந்து இருக்கறதுக்கு.. ஏதாவது பஸ்ல ஏறி.. எங்கேயாவது போயி சுத்திட்டு வாப்பான்னு சொன்னார் அண்ணன்.. இங்கே ஆட்டோ டிரைவர்ல இருந்து எல்லாரும் இங்கிலீஷ்தான் பேசுவாங்க.. அதனால யார்கிட்ட என்ன விசாரிச்சாலும் இங்கிலீஷ்லயே பேசு அப்படின்னார்.. பேசலாம்.. ஆனா எனக்கு இங்கிலீஷ் தெரியாதே.. :-)

"இந்த இடத்துக்கு எப்படிப் போறதுன்னு" இங்கிலீஷ்ல எப்படிக் கேக்கறதுன்னு மனப்பாடம் பண்ணிக்கிட்டேன்.. அன்னைக்கு முழுவதும் ஒரே ("இந்த இடத்துக்கு எப்படிப் போறது") இங்கிலீஷ்தான்.. :-)

நெக்ஸ்ட்.. வேலை தேடனும்ல.. சென்னையில் BPOல வேலை பார்த்ததால.. அதுல தேடலாம்னு முடிவு..

இங்கே இருக்கற கம்பெனிகளோட வெளித்தோற்றமே என்னை மிரட்டுச்சு.. உள்ளே இருக்கறவங்க கடிச்சு தின்னுடுவாங்களோன்னு பயம்.. எனக்குத் தெரிஞ்சு புதுசா வேலை தேடற பலருக்கு இந்த பயம் இருக்குன்னு நினைக்கிறேன்.. அதனால நியூஸ் பேப்பர்ல வர்ற பெரிய பெட்டி விளம்பரங்களை எல்லாம் பார்க்கவே மாட்டேன்.. சின்ன சின்னப் பெட்டிகள் எங்கேயிருக்குன்னு பார்த்து அங்கே போய் இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டே இருந்தேன்.. எங்கே போனாலும் சரி.. அண்ணன் சொல்லிக்கொடுத்து மக்கப் பண்ணின.. செல்ஃப் இன்ட்ரோடக்சன் மறந்து போய்.. பாதில பே பேன்னு பார்ப்பேன்..

பெங்களூர்ல எனக்குக் கிடைச்ச முதல் வேலைப் பற்றிக் கண்டிப்பா சொல்லியாகனும்.. :-)

ஒரு நாள் எப்பவும் போல ஒரு கம்பெனிக்கு இன்ட்டர்வியூ போனா.. நான் சென்னையில் பார்த்திட்டு இருந்த அதே வேலையைத்தான் டெஸ்டா வைச்சாங்க.. புதுக் கம்பெனி.. அப்போதான் ஆள் எடுத்துட்டு இருந்தாங்க..

ஒரு 2 கேள்வி குடுத்து 30 நிமிசம் டைம் கொடுத்தாங்க.. அந்த ரெண்டையும் செய்ய மொத்தமே 5 நிமிசம்தான் ஆகும்.. செய்து முடிச்சுட்டு காமிச்சா.. என்னை நம்பாம திரும்பவும் செய்துகாட்டுன்னு சொல்ல.. நானும் இன்னும் வேகவேகமா செய்து காட்டிட்டேன்.. அப்புறம் ஒரு நாலு பேர் ஒன்னாக்கூடி நின்னு பேசிட்டு.. என்னை ஒரு ரூமுக்கு அழைச்சிட்டுப் போயிட்டு.. எதுவுமே என்னைப் பற்றிக்கேக்காம.. நாங்க உன்னை செலக்ட் பண்ணிட்டோம்.. உனக்கு டீம்லீட் பொசிசன் தர்றோம்.. அப்படின்னுட்டாங்க.. எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு..

ரியலி.. நோ.. ஹவ்.. அப்படின்னேன்.. அதாவது.. எனக்கு இங்கிலீஷ் சரியா பேசவராதே.. நான் எப்படி டீமை மெயின்டெயின் பண்றதுன்னு கேக்க வந்தேன்.. :-).. அவங்களும்.. நான் என்ன கேக்க வந்தேன்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டாங்க.. அப்போ நான் கரெக்டாதான் பேசியிருக்கேன்.. :-).. கவலைப்படாதே.. உனக்கு நாங்க அசைன் பண்ற 8 பொண்ணுங்களுக்கும் தமிழ் தெரியும்.. நீ இப்போவே ஜாயின் பண்ணீடுன்னு சொல்லிட்டாங்க.. ரைட்டு.. அப்படியே.. ஒரு டீம் லீடரா புளோருக்குள்ள வந்தேன்.. :-)

எனக்கு தெரிஞ்ச விசயங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்து.. அந்தப் பொண்ணுங்க எல்லாம் நல்லாவே ஒர்க் பண்ணினாங்க.. ஆனால் அந்தக் கம்பெனியோட பியூச்சர் பத்தி எனக்கு கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுடுச்சு.. இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லனும்.. நான் சென்னையில் குவாலிட்டி கண்ட்ரோலராக ஒர்க் பண்ணிட்டிருந்த கம்பெனியில் என்னுடைய முக்கிய வேலை என்னன்னா.. எங்ககிட்ட இருந்து வேலை வாங்கிப் பண்ற கம்பெனிகள்.. அனுப்புற எல்லா பைல்லையும் 6 தப்பு கண்டுபிடிக்கனும்.. அப்படி கண்டுபிடிக்கற பைல்ஸ் எல்லாம் ரிஜெக்ட் ஆகி.. அந்தக் கம்பெனிகளுக்கு பணம் கிடைக்காது..

இங்கே பெங்களூர் கம்பெனியும் அங்கேதான் இந்த வேலையை வாங்கியிருக்கறது தெரிஞ்சதுமே.. அவங்ககிட்ட போய் எச்சரிச்சேன்.. என்னை அவங்க நம்பல.. ரைட்.. நான் சொன்ன மாதிரியே நடந்துச்சு.. என்னுடைய டீம் பொண்ணுங்க எல்லாம் ஒரு இடத்துல வேலை வாங்கிட்டோம் சார்.. நீங்களும் வந்து அட்டெண்ட் பண்ணுங்கன்னு போன் பண்ணுச்சுங்க.. என்னக் கொடுமை சார் இது.. அங்கே என்னை செலக்ட் பண்ணல.. :-)..

நெக்ஸ்ட் சில கம்பெனிகள்ல வேலை செய்ததுக்கு அப்புறம்.. "Indicomm Global Services" அப்படிங்கற கம்பெனியில் வேலை கிடைச்சது.. இந்தக் கம்பெனியோட பெருமை என்னன்னா.. தமிழ்நாட்டுல இருந்து புதுசா வர்றவங்க எல்லாரும் வேலை கொடுத்து.. வேலை பெண்டை நிமித்திடுவாங்க.. ஆனால் புதுசா வர்றவங்க.. தாராளமா இங்கே வரலாம்.. கண்டிப்பா வேலை உண்டு..

மீதிக்கதையை அடுத்த பாகத்தோட முடிச்சுக்கறேங்க.. வர்றேன்.. :-)

Friday, March 11, 2011

EXAM - திரில்லர் (உங்களுக்கு ஒரு சவால்)


பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்..

பதிவு எழுதி கிட்டத்தட்ட 2 மாசம் ஆகப்போகுதுன்னு நினைக்கறேன்.. சரி அப்போப்போ ஒரு அட்டென்னெஸாவது போட்டுடலாம்னுதான் நினைச்சேன்.. ஆனால் ஒர்க் லோட் ரொம்ப அதிகமாக இருந்ததாலவும்.. ஆபிஸ்ல பிளாக்கர் சைட்ஸை பிளாக் பண்ணிட்டதாலவும் எழுதவே முடியல.. :-)

சரி ரொம்ப நாள் கழிச்சு.. இப்போ ஏதாவது எழுதலாம்னு யோசிச்சா.. என்ன எழுதறதுன்னே புரியமாட்டேங்குது.. சரி முன்போலவே ஒரு ஆங்கிலப் பட விமர்சனம் எழுதிடலாம்னு நினைக்கிறேன்..

இந்தப் பதிவுல நான் எழுதப் போற படத்துக்குப் பேரு எக்ஸாம் (EXAM - 2005)..

உலகத்துல அதிகமான பேரும் புகழோடவும்.. ரொம்ப மதிப்போடவும் இருக்கற கம்பெனியில ஒரு பெரிய பதவிக்கு.. 8 பேர் பைனல் ரெளண்டுக்கு செலக்ட் ஆகி.. பைனல் ரெளண்ட் நடக்கற ஒரு ரூமுக்குள்ள வர்றாங்க.. அந்த ரூமுக்குள்ள அவங்களை கண்காணிக்கறதுக்கு கைத்துப்பாக்கியோட ஒரு செக்யூரிட்டி வேற..

80 நிமிஷம் நடக்கப்போற டெஸ்ட் இது.. இந்த டெஸ்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி.. அதோட 3 ரூல்ஸை சொல்ல ஆரம்பிக்கிறார்.. அந்த டெஸ்டை வைக்கிறவர்..

1. எக்ஸாம் ஆரம்பிச்ச பிறகு என்னையோ, செக்யூரிட்டியையோ கம்யூனிகேட் பண்ண ட்ரை பண்ணினாலோ
2. உங்க டெஸ்ட் பேப்பரை தவறுதலாகவோ, வேணும்னோ ஸ்பாயில் பண்ணினாலோ
3. ஏதாவது காரணங்களுக்காக இந்த ரூமை விட்டு வெளியே போக நினைச்சாலோ

நீங்க இந்த எக்ஸாம்ல தோல்வியடைஞ்சதாக அர்த்தம்.. அப்புறம் உங்களுக்கு முன்னே ஒரே ஒரு கேள்வி இருக்கும்.. அந்த கேள்விக்கு யார் கரெக்டா பதில் சொல்றாங்களோ அவங்களுக்கு வேலைன்னு சொல்லிட்டு.. ஏதாவது டவுட் இருக்கான்னு கேக்கறார்.. எல்லாரும் டெஸ்ட் எழுதத் தயாராகறாங்க.. டெஸ்ட் ஆரம்பிக்குது..

டெஸ்ட் பேப்பரை பார்க்கற எல்லாரும் பெரிய அதிர்ச்சி.. அது ஒரு பிளான்க் ஷீட்.. எதுவுமே அதுல எழுதப்படல.. என்னடா இதுன்னு எல்லாரும் மண்டையைப் பிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க.. ஒரு பொண்ணு மட்டும் எழுத ஆரம்பிக்குது.. அந்தப் பொண்ணு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்றார் செக்யூரிட்டி... சோ தவறான விடை எழுதினாலும் வெளியே தள்ளப்படறாங்க..

மீதம் இப்போ 7 பேர்.. யாரும் பேசக்கூடாதுன்னு ரூல்ஸ் இல்லையே.. அதனால 7 பேரும் பேசிக்க ஆரம்பிக்கறாங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிக்கிட்டு கொஸ்டின் என்னன்னு கண்டுபிடிக்கலாம்னு முடிவு எடுக்கப்படுது..

பேப்பர்ல கண்ணுக்குத் தெரியாத இங்க் யூஸ் பண்ணி ஏதாவது எழுதப்பட்டிருக்கலாம்னு.. கூர்ந்து பார்க்கறாங்க.. தண்ணீர் ஊத்திப் பார்க்கறாங்க.. ரூம்ல இருக்கற லைட்டை எல்லாம் உடைச்சிட்டு.. இருட்டுல ஏதாவது தெரியுதான்னு பார்க்கறாங்க.. எதுவும் வேலைக்கு ஆகல.. கொஸ்டின் என்னன்னு கண்டுபிடிக்க முடியல.. 80 நிமிசத்துல 30 நிமிசம் முடிஞ்சுடுது..

7 பேர்ல ஒருத்தன் ரொம்ப டாமினேட்டிங்கா எல்லாத்துக்கிட்டயும் நடந்துக்கிறான்.. சில சூழ்ச்சிகள் பண்ணி ரூம்ல.. அவங்களோட இருந்த 2 பேரை வெளியே போக வைச்சிடறான்.. மீதம் 5 பேர்.. இந்த நடவடிக்கையால கைகலப்பு ஏற்படுது.. இன்னொருத்தன் அங்கே இருக்கற ஒரு பொண்ணுக்கு கொஸ்டின் தெரிஞ்சிருக்கனும்னு நினைச்சு.. டார்ச்சர் பண்ண ஆரம்பிக்கிறான்.. எல்லாமே பெய்லியர்.. ஒரு மணி நேரம் முடிஞ்சுடுது.. மீதம் 20 நிமிசம்தான்..

அங்கே இருக்கற ஒவ்வொருத்தரையா வெளியே அனுப்பிட்டா.. கடைசியா இருக்கறவங்கதான் ஜெயிப்பாங்கன்னு நினைச்சுட்டு.. ஒருத்தன் செக்யூரிட்டியோட துப்பாக்கியைப் பிடுங்கி எல்லாரையும் வெளியே போக சொல்றான்.. இந்த கலேபரத்துல ஒருத்தனுக்கு குண்டடிபட்டு மயக்கமாகிடறான்.. இந்த எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சு.. அங்கே அவங்களுக்கு கேட்கப்பட்ட கொஸ்டின் என்னன்னு.. ஒரு பொண்ணு கண்டுபிடிக்குது.. ஸ்ஸ்ஸ்.. ப்ப்பாபான்னு ஆயிடுச்சு..

படம் ஓடின ஒன்னரை மணிநேரமும் ஒரே ரூமுக்குள்ள நடக்குது.. செக்யூரிட்டி, டெஸ்ட் நடத்தறவரை சேர்த்து பத்தே கேரக்டர்.. படம் தீயா ஓடுது.. படம் ஆரம்பிச்ச 10வது நிமிசத்துல இருந்து.. அங்கே 9வது ஆளா நாமலும் உட்கார்ந்துட்டு கொஸ்டின் யோசிச்சுட்டு இருக்கறமாதிரி ஃபீலிங்..

கேள்வியைக் கண்டுபிடிக்க அவங்க நடத்தற ஒவ்வொரு முயற்சிகளும் அற்புதமாக இருக்கும்.. அங்கே இருக்கற லைட்ஸை ஒடைச்சா.. அதுக்குள்ள இன்னொரு லைட் இருக்கு.. அதையும் உடைச்சிட்டா.. மறைச்சி வைக்கப்பட்டிருக்கற இன்னொரு லைட்ஸ் எரியும்.. இந்தமாதிரி அந்த ஒரு ரூமுக்குள்ள நிறைய விசயங்கள் மறைச்சி வைக்கப்பட்டிருக்கும்..

செக்யூரிட்டி வைச்சிருக்கற துப்பாக்கியை.. ஒரு கேரக்டர் எடுக்கற சீன் செம.. ஒவ்வொரு சீனும்.. நம்முடைய எதிர்பார்ப்பையும்.. பிரஷரையும் அதிகரிக்குது..

அப்பாடா.. ஒரு வழியா என்ன கொஸ்டின் கேட்டானுங்கன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு..

நீங்களும் கெஸ் பண்ணுங்களேன்.. அவங்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன? பின்னூட்டத்துல சொல்லுங்க.. :-)

டிஸ்கி: ஏற்கனவே படத்தைப் பார்த்தவங்க.. கொஸ்டினை லீக் பண்ணீடாதீங்க.. :-)

க்ளூ: கேள்வி இந்தப் பதிவிலேயே இருக்கு.. :-)

Sunday, January 16, 2011

தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்

இன்றைய உலகில் இளைஞர்களின் வாழ்க்கை என்பது நாடோடி பொழைப்பாதான் ஆயிடுச்சு.. தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டுட்டே இருக்கோம்.. :-(.. அப்படி வெளியிடங்கள்ல இருக்கற நமக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.. அந்த அனுபவங்கள் நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் இருக்கும்.. எனக்கும் அந்தமாதிரி அனுபவங்கள் இருக்குங்கறதால எனக்கு தெரிஞ்ச விசயங்களை உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன்..

காலேஜ் முடிக்கற வரைக்கும்.. வெளியூர் ட்ரிப் போன நாட்களைத் தவிர.. வீட்டை விட்டு பிரிஞ்சதே இல்லை.. காலேஜ் முடிக்கற வரைக்கும் ஒரே ஜாலிதான்.. எங்க பேமிலில மெம்பர்ஸ் ஜாஸ்திங்கறதால.. வீட்ல இருந்தால் போர் அடிக்கும்ங்கற நேரங்கள் எல்லாம் ரொம்பக் கம்மி.. ஏதாவது டைம் பாஸ் ஆயிட்டே இருக்கும்.. படிக்கற விசயங்களுக்குக்கூட வீட்ல என்னை எதுவும் கேக்க மாட்டாங்க.. "மகனே!! நாங்கள்லாம் படிக்கல.. உனக்கு எங்களை மாதிரி கஷ்ட ஜீவனம் கூடாது.. படிக்க வைக்கிறோம்.. அதுல இருக்கற கஷ்டங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியாது.. எப்படி முடியுதோ அப்படி செய்யின்னு சொல்லிடுவாங்க..".. படிச்சு முடிச்சுட்டு ஊர் சுத்திட்டு இருந்தேன்.. எங்கே வேலைக்குப் போறது.. என்ன பண்றதுன்னே தெரியல..

சென்னையின் என் அண்ணன் ஒருவர் வேலை பார்த்துட்டு இருந்ததால.. அங்கே என்னை அனுப்பி வைச்சாங்க.. நானும் வேலைக்குப் போறேன்.. நானும் வேலைக்குப் போறேன்னு ஊர் முழுக்க சொல்லிட்டு கிளம்பியாச்சு.. ஊர்ல இருந்து திண்டுக்கல்ல இரயில் ஏர்ற வரைக்கும் பசங்க வந்தானுங்க.. இரயில் கிளம்பி 5வது நிமிசத்தில் எனக்கு கிடைத்த முதல் அனுபவம் "தனிமை".. ம்ம்ம்ம்.. தனியாகக் காட்ல விடறதுன்னு சொலவடம் சொல்வாங்க இல்லையா.. அந்த ஃபீலிங் எப்படி இருக்கும்னு உணர்ந்தேன்.. பெற்றவர்களைத் தேடித் திருதிருன்னு ரோட்ல நின்னுட்டு இருக்கற குழந்தையின் உணர்ச்சி என்னவாக இருக்கும்னு புரிஞ்சது அப்போ.. ம்ம்ம்.. வீட்டுக்குப் போறேன்னு அழுகாத குறைதான்னு வைங்களேன்.. ஆனால் இனி திரும்பிப் போக முடியாது..

படத்துல வர்றமாதிரி சென்னையில இறங்கியவுடன் என் அண்ணா நின்னுட்டு இருப்பார்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனால் அவரைக் காணோம்.. :-(.. வீட்ல வேற நிறைய சூதானம் சொல்லி அனுப்பி விட்டாங்களா.. கொஞ்சம் (நிறைய..:-)..) பயமாக இருந்தது.. வேலை காரணமாக அவரால் என்னை ரிசீவ் பண்ண வரமுடியல.. அங்கேயிருந்து எப்படி அம்பத்தூர் போறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.. சென்னையில் கண்டக்டர் எந்திரிச்சு வராம டிக்கெட் குடுக்கறது புதுசா இருந்தது.. பயணிகள் டிக்கெட் காசைக் கொடுத்து ஒருதருக்கு ஒருத்தர் பாஸ் பண்ணி வாங்கிக்கறாங்க.. ஆஹா!! நம்ம ஊர்ல கிட்ட வந்து கேட்டாலே.. மூடு இருந்தாத்தான் டிக்கெட் எடுப்போம்.. இங்கே எதுக்கு வம்புன்னு நானும் அப்படியே வாங்கினேன்.. இடையில் யாராவது காசை அப்படியே எடுத்துட்டு ஓடிட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு கவலையாக இருந்தது.. :-)

அம்பத்தூர் வீட்ல என் அண்ணனை மீட் பண்ணிட்டேன்.. அவரோட மொபைலை என் கையில் கொடுத்து.. நான் நேற்றே வளசரவாக்கத்துக்கு மாறிட்டேன்.. எனக்கு இப்போ வேலை இருக்கு.. இந்த மொபைல்ல பாரு.. ஏரியா நேம் டிஸ்பிளே ஆகுது இல்லையா.. நான் சொல்ற பஸ் நம்பர்ல ஏறி.. மொபைலைப் பார்த்துட்டே இரு.. வளசரவாக்கம்னு வந்தவுடன் இறங்கிடுன்னு சொல்லி அனுப்பிட்டார்.. மொபைல்ல அதேமாதிரியே டிஸ்பிளே வந்தது.. கூட்டத்துல இறங்கறதுக்குள்ள அடுத்த ஸ்டாப்பே வந்துட்டுச்சு.. சோ.. சென்னையில் தள்ளுங்கன்னு சொல்லிட்டு இறங்கறது வேலைக்கு ஆகாது.. தள்ளிட்டு இறங்கறதுதான் ஆகும்னு புரிஞ்சது..

என்னுடைய முதல் இண்ட்ர்வியூ.. லிட்டில் மவுண்டன்னு (சின்ன மலை) ஒரு ஏரியால.. அங்கே போறதுக்கு பேப்பர்ல ஒரு பெரிய மேப்பே வரைஞ்சு கொடுத்தார்.. ஐந்து, ஆறு பஸ் மாறிப் போகனும்னு பஸ் நம்பர் எல்லாம் சொல்லிட்டார்.. மேலும் டவுட் இருந்தா.. போற இடங்கள்ல தைரியமாக விசாரின்னு சொல்லி அனுப்பினார்.. பஸ் ஸ்டாப்புல நல்ல கூட்டம்.. அங்கே ஒரு பொண்ணுகிட்ட போய் லிட்டில் மெளண்டன் எப்படிப் போகனும்னு கேட்டா.. என் மேப்ல இருந்த வழிக்கு அப்படியே ஆப்போசிட்ல வழி சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. என்னடா இது!! இந்த வழி ரொம்ப ஈசியாக இருக்கேன்னு அந்தப் பொண்ணு சொன்ன வழியிலயே போனேன்.. அந்த இடம் ஒரு 15 நிமிசத்துலயே வந்துடுச்சு.. எல்லாருக்கும் போல முதல் இண்டர்வியூ.. அந்த பில்டிங்குள்ள போகவே கால் கூசிச்சு.. மனசெல்லாம் படபடப்பு.. ரொம்ப தயக்கமாக இருந்தது.. செக்யூரிட்டிகிட்ட என் பேரை ஃபீட் பண்றவரைக்குமே.. எந்த நேரமும் திரும்பிடற மூடுலயே இருந்தேன்..

திரும்பி வந்து நடந்ததை எல்லாம் அண்ணன்கிட்ட சொன்னா.. அடப்பாவி!! உன்னை சுத்தவிட்டு.. ஊரைச்சுத்திக் காட்டிடலாம்னு நினைச்சா இப்படி எஸ்கேப் ஆயிட்டயேன்னு ஓட்டிட்டு இருந்தாங்க..

ஒருமாதத்தில.. தாஜ்கோரமண்டலுக்கு ஆப்போசிட்ல இருக்கற ஒரு BPO கம்பெனியில் வேலை வாங்கினேன்.. வேலை ரொம்ப ஈசியாக இருந்தது.. ஆனால் ரொட்டேசனல் ஷிஃப்ட்ல போட்டுக் கொன்னு எடுத்தாங்க.. நேர நேரத்துக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கிட்டு.. வீட்டுக்கு வாரத்துக்கு ரெண்டுமுறை மட்டும் போன் பேசிக்கிட்டு.. ரோபோ மாதிரி.. வேலை பார்க்கறது.. ரூமுக்கு வந்து தூங்கறதுன்னு இந்த லைஃப் ஸ்டைல் பிடிக்கவே இல்ல.. அப்புறம் ரெண்டு மூனு கம்பெனிகள் மாறினேன்.. நண்பர்கள் கிடைச்சாங்க.. வெளியே அவங்களோட சுத்த ஆரம்பிச்சேன்..

சென்னையில் 8 மாதங்கள் மட்டுமே இருந்ததால அனுபவங்கள் ரொம்பக் கம்மிதான்.. ஆக்சுவலா BPOவில் சேர்றவங்களுக்கு எல்லாம்.. வாழ்க்கையே தூங்கறதும் வேலை பார்க்கறதுமாகத்தான் இருக்கும்..

சென்னையில் பஸ்ல பிக்பாக்கெட் அடிக்கறதைப் பார்த்திருக்கேன்.. நான் பார்க்கறதையும் பார்த்துட்டேதான் அடிச்சானுங்க.. கொஞ்சம்கூட தயங்கல..

நிறைய ஆந்திரா ஸ்டைல் ஹோட்டல்ஸ் இருக்கு சென்னையில.. வாரவாரம் அங்கேதான் அன்லிமிட்டடு மீல்ஸ் கட்டுவோம்..

பஸ்ல ஒருமுறை தொங்கிட்டுப் போயிட்டு இருந்தப்போ.. சடன் பிரேக் போட்டதில என் கை ஸ்லிப்பாயிடுச்சு.. கடைசி சீட்ல உட்கார்ந்திருந்த ஒருவர்.. கப்புன்னு கரெக்டா என் கையைப் பிடிச்சிட்டார்.. ரொம்ப நேரம் உடம்பு நடுங்கிக்கிட்டே இருந்தது.. அதுல இருந்து.. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் உள்ளே போக முடிந்தால் மட்டுமே பஸ்ல ஏர்றது.. :-)

என்கூட வேலைப் பார்த்த ஒரு பையனும், பொண்ணும்.. ஒரே அபார்ட்மெண்டாம்.. லவ் பண்ணிட்டு இருந்ததுங்க.. அவங்க லவ் சக்சஸ் ஆகறதுக்கு நிறைய சிக்கல் இருந்தது.. இப்போ என்ன ஆனாங்கன்னு தெரியல.. :-)

ம்ம்ம்.. போதும் இனி உங்களுக்குப் போர் அடிக்கும்..

என் அண்ணனுக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சது.. எங்க வீட்ல என்னையும் அண்ணனோடவே போயிடுப்பான்னு சொன்னாங்க.. காலேஜ்ல ரெண்டு நாள் டூர் போயிட்டு வந்த இடத்துக்கு போய் இருக்கப் போறமேன்னு ரொம்ப எக்ஸைட்டிங்கா இருந்தது.. அடுத்து வரும் நாட்களைப் பற்றித் தெரியாததால பெங்களூர் பஸ்ல ஏறிட்டேன்..

(பயணம் தொடரும்)

பயணத்தின் தொடர்ச்சி:

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்

Tuesday, January 11, 2011

குழந்தைகள் ராஜ்ஜியம்

சின்ன வயசுல குழந்தைகள் வளர்க்கப்படற விதமே அவங்களோட கேரக்டரை டிசைட் பண்ணுது..

குழந்தைகளுக்கு பெரும்பாலும் இரண்டு விதமான அனுபவங்கள் கிடைக்குது.. ஒன்னு.. அதிகப்படியான கண்டிப்பு.. ரெண்டாவது அதிகப்படியான செல்லம்..

அதிகப்படியான கண்டிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள் வீட்ல ஒருமாதிரியும்.. வெளியில் ஒருமாதிரியும் நடந்துக்கிறாங்க.. அவர்கள் மேல் விதிக்கப்படும் அதிகப்படியான கண்டிப்பு.. வெளியில் அவர்களை தப்பு செய்யத் தூண்டுது.. வேனும்னே பெத்தவங்க சொல்றதுக்கு ஆப்போசிட்டாக வெளியில் நடக்க ஆரம்பிச்சடறாங்க.. அதுமட்டுமில்லாம.. பெத்தவங்க மேலயும் ஒருமாதிரியான வெறுப்பை வளர்த்துக்கறாங்க..

பெத்தவங்க தங்கள் வாழ்க்கையில் இருக்கற ஏதோ ஒரு வெறுப்பையோ.. அல்லது ஏதோ ஒரு அனுபவத்தையோ பிள்ளைகள் மேல் செயல்படுத்தறதுதான் இந்த அதிகப்படியான கண்டிப்புக்கு காரணமாக இருக்குதுன்னு நினைக்கிறேன்..

நான் சிறுவனாக இருந்தப்போ.. என் வயது ஒத்த நண்பன்.. அவன் வீட்ல எப்போ பார்த்தாலும் அடிவாங்கிட்டேதான் இருப்பான்.. எதுக்கு அடி வாங்கினேன்னு கேட்டால்.. அவனுக்கே ஒன்னும் புரியாது.. சும்மா சிறுவர்கள் சாதாரணமாக செய்யும் சேட்டைகளுக்கே அந்த மாதிரி பலியாக அடி வாங்கிட்டு வருவான்.. சில்லு மூக்கு உடையறது எல்லாம்.. அவனைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அப்பப்போ அவனுக்கு இரத்தம் வரும் மூக்குல.. இதனால சின்ன வயசுலயே.. அவங்க வீட்டு ஆளுங்க மேல பெரிய கோவமே இருந்தது அவன் மனசுல.. ரொம்ப நேரம் எங்க வீட்லயேதான் இருப்பான்.. ரஸ்னா வாங்கிட்டு வந்து எங்க வீட்ல மறைஞ்சு நின்னு வேகவேகமாக சாப்பிட்டு.. ஓடுவான்.. அப்ப எனக்கு ஒன்னுமே புரியலைன்னாலும் அவனைப் பார்த்தால் பாவமாக இருக்கும்..

கொஞ்சம் வளர்ந்தபிறகு வாங்கின அடியெல்லாம் மரத்துப் போக ஆரம்பிச்சிடுச்சு அவனுக்கு.. ஒழுங்காப் படிக்கல.. ஆரம்பத்துல பெத்தவங்களுக்குத் தெரியாம அவங்களைத் திட்டிட்டு இருந்தவன்.. அப்புறம் நேருக்கு நேராகவே திட்ட ஆரம்பிச்சான்.. நண்பர்கள்கிட்டயும் மூர்க்கமாக நடந்துக்க ஆரம்பிச்சான்.. அப்புறம் என்கூட எல்லாம் சேரல.. 8 ஆம் வகுப்போடவோ, 10 ஆம் வகுப்போடவோ ஸ்கூலுக்குப் போறதை நிப்பாட்டிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டான்.. இப்போ எங்க ஏரியாவுல அவனும் ஒரு ரெளடியாம்.. எப்பவாவது நான் எதிர்த்து வந்துட்டாக்கூட.. முகத்தைக்கூட பார்க்க மாட்டான்.. இப்படி அவன் மாற சிறுவயதில் வாங்கிய தேவையில்லாத அடியும்.. பாசமின்மையும்தானே காரணம்..

இந்த வகையில் வருகிற இன்னொரு கிளை வகைன்னு சொல்லலாம்.. என்னன்னா.. கூடபிறந்தவர்களை ஒப்பிட்டோ.. பக்கத்து வீட்டுப் பிள்ளைகளை ஒப்பிட்டோ திட்டறது.. பார் அவன் எவ்வளவு நல்லா படிக்கறான்.. எவ்வளவு ஆக்டிவா இருக்கான்.. அப்படி இப்படின்னு கம்பேர் பண்ணித் திட்டறது.. காம்பேரிசன்ல வர்ற தன்னோட சகோதரனோ அல்லது பக்கத்து வீட்டுப் பையனோ.. திட்டுவாங்கற பையனோட வெறுப்புக்கு ஆளாகறாங்க.. அவனுக்கு என்ன திறமை இருக்குன்னு பார்த்து அதை செய்ய மறுக்கறாங்க நிறையப் பேர்.. அவனுக்கு புரிஞ்சுக்கறதுல கஷ்டம் இருக்கலாம்.. வேற ஏதாவது மனசுல குறை இருக்கலாம்.. அதையெல்லாம் ஆராயறதில்ல.. அடிக்கறது.. சூடு வைக்கறதுன்னு பண்றதால அந்தக் குழந்தைகள்.. மேலும் மந்தமாகிடறாங்க..

நெக்ஸ்ட்.. அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள்..

ஒரே பிள்ளை.. ரொம்ப நாள் கழிச்சுப் பிறந்த குழந்தை.. அப்படி இப்படின்னு பல ரீசன்ஸ்னால குழந்தைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கப்படறாங்க.. செல்லம் குடுக்கறதுனா என்ன?.. குழந்தைகள் பண்ற தப்புகளை அந்த நேரங்கள்ல கண்டுக்காம விட்டுடறது.. தேவையில்லாத பொருட்களைக் கேக்கும்போதும் வாங்கி வாங்கிக் கொடுத்தடறது.. இந்த மாதிரி பல விசயங்கள் இருக்கு..

இப்போ இருக்கற குழந்தைகள் பெரும்பாலும் பெத்தவங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடறதைப் பார்க்க முடியுது (இதான் பேர்சொல்லும் பிள்ளையோ.. :-)).. பாசத்துல சும்மா விளையாட்டுக்கு கூப்பிடறது வேற.. ஆனால் பழக்கமாகவே இருக்கு.. மற்றவர்களை பட்டப்பெயர் சூட்டிக் கூப்பிட சொல்லிப் பெற்றவர்களே சொல்லிக் கொடுக்கறதையும் பார்க்க முடியுது.. விளையாட்டுக்கு செய்ற இந்தப் பழக்கம் எல்லாம் இடத்துலயும் தொடரும்னு மறந்துடறாங்க இவங்க..

என் சொந்தக்காரப் பையன் ஒருவன்.. பயங்கர செல்லம்.. கேட்டது உடனே வந்தே தீரனும்.. அம்மாவை பேர் சொல்லித்தான் கூப்பிடறான்.. சட் சட்டுன்னு அடிச்சிடறான்.. இதைவிட வெளியிடங்கள்ல அவன் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துட்டால்.. அவன் வைச்சிருக்கற பொருளைவிட பெட்டரா அது இருந்துட்டா நைசா உடைச்சிட்டு வந்திடறான்.. அவன் வந்தாலே எல்லாம் வீட்ல அலர்ட் ஆயிடுவோம்.. முதல்ல அவங்க வீட்ல சொல்லிப் பார்த்தோம்.. செல்லமாம்.. கண்டுக்கவே மாட்டேங்கறாங்க.. இதெல்லாம் சின்னத் தப்புகளாக இருந்தாலும்.. குழந்தையிலேயே கவனிக்கனும் இல்லையா..

நாம் குழந்தைகள் மேல அக்கறையையும்.. கண்டிப்பையும் சம அளவுல காமிச்சா நல்லதுன்னு நினைக்கிறேன்.. ஆனால் அடிச்சு வளர்க்கறது எப்பவுமே சரியில்ல.. பாசமா சொல்றதைத்தான் எல்லாக் குழந்தைகளும் உடனே கேக்கும்.. குழந்தைகளுக்கு பெத்தவங்களின் கஷ்டங்களையும் சிறிதளவு தெரிய வைக்கனும்..

எங்க வீடு சொல்லப்போனா.. ஒருமாதிரி கூட்டுக்குடும்பம் ஸ்டைல்தான்.. 3 மாமா, 2 சித்தி அப்படின்னு எல்லாருடைய குடும்பங்களும் ஒன்னாவே இருக்கோம்.. மேனேஜ்மெண்ட் மட்டும் தனித்தனி.. வீட்ல ஏஜ் வாரியாக நிறையக் குட்டீஸ்கள் இருக்குதுங்க.. எப்பவும் கயமுய.. கயமுயன்னு ஒரே அலப்பறையாகத்தான் இருக்கும்.. வீட்டுக்குப் போனா.. நேரம் போறதே தெரியாது.. :-)

ஒருமுறை என்னுடைய மாமாவோட மகனும்.. சித்தியோட மகனும் பேசிட்டு இருந்தானுங்க.. ரெண்டு பயலுகளும் 2வது படிக்கறானுங்க.. ஒருத்தன் டேய்.. இப்போ நாம படிக்கற ஸ்கூல் எனக்குப் பிடிக்கலைடா.. நாம பேசாம அக்ஷயா ஸ்கூல்ல சேர்ந்துக்கலாம் என்ன சொல்றன்னு கேக்கறான்.. இன்னொருத்தன்.. நானும் அதைத்தாண்டா யோசிச்சுட்டு இருக்கேன் அப்படின்னு டாக் போயிட்டு இருந்தது..

நான் இடையில போய் ஏங்கடா.. அந்த ஸ்கூல்ல படிக்க வைக்க காசு நிறைய வேனுமேடா.. உங்கப்பா எப்படிடா கட்டுவார்னு கேட்டா.. இல்லண்ணா.. அப்பா என்னை ரொம்பக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கறதாகச் சொன்னார்.. அதனால இந்த ஸ்கூலுக்கும் கஷ்டப்பட்டு பணம் கட்டி படிக்க வைச்சிடுவார் அப்படிங்கறான்.. எப்படிப் பாருங்க.. :-).. சரிதாண்டான்னு சிரிச்சுட்டே அவனுங்க பேச்சுகளை கவனிச்சுட்டு இருந்தேன்..

என்னோட ரெண்டாவது மாமாவுக்கு இரண்டு பசங்க.. ஒருத்தன் இப்போ 1வது படிக்கறான்.. இன்னொருத்தன் இப்போதான் எல்.கே.ஜி. படிக்கறான்.. சின்னவனுக்கு எப்பவும் எதுவுமே அவன் அண்ணனுக்கு கிடைக்கறதுக்கு முன்னாடியே கிடைக்கனும்.. ஒருமுறை பெரியவன்.. ஏம்மா எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னு கேக்கறான்.. ஏண்டா மகனே!! உடனே பண்ணிடலாம்ண்டான்னு சிரிச்சுட்டே சொன்னா.. உடனே எனக்குத்தான் முதல்ல கல்யாணம் பண்ணனும்னு சின்னவன் அழுக ஆரம்பிச்சிட்டான்.. அவனை அடக்கவே முடியல.. ஒரே சிரிப்பு..

இந்தமாதிரி பலவிசயங்கள்.. :-).. சொல்லிட்டே போகலாம்..


இந்த மாதிரி நிறைய அறிவாளித்தனமான பேச்சுகள் இப்பவே குழந்தைகள்கிட்ட.. டிவி சேனல்களைப் பார்த்து நிறைய தெரிஞ்சுக்கறாங்க.. இந்தமாதிரி எல்லாக் குட்டீஸ்களும் பண்ற சேட்டைகளைப் பார்த்துட்டே இருக்கலாம்..

குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-)

Thursday, January 6, 2011

பெண்ணுக்கு என்ன வேண்டும்?

பசங்க எல்லாம் ஏதாவது பொருள் வாங்கப் போறோம்னா.. ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டோம்.. ஆனால் பொண்ணுங்க அப்படிக் கிடையாது.. புடவைக் கடை, நகைக்கடையில் இருந்து சின்ன க்ளிப் வாங்கறதாக இருந்தால்கூட.. ரொம்ப நேரம் தேடிட்டே இருந்தால்தான் அவங்க மனசுக்குத் திருப்தியாக இருக்கும்.. வாங்க வேண்டிய பொருள் எடுத்தவுடனே சிறப்பாக அமைந்தாலும்.. கொஞ்ச நேரமாவுது வேற ஏதையாவது தேடிட்டு வாங்கினாத்தான் அவங்களுக்கு மனசு ஆறும்.. பெஸ்டாக இருக்கறதை விட்டுடக் கூடாதேங்கற மனநிலையும்.. திருப்தியின்மையும்தான் காரணம்..

பொண்ணுங்க மனசுல என்ன ஓடிட்டு இருக்கு.. அவங்க எதை விரும்பறாங்க அப்படிங்கறதை தெரிஞ்சிக்கிட்டால் எல்லாமே சுலபமாயிடும்.. கண்டிப்பாக பொண்ணுங்களுக்கு பொண்ணுங்க.. என்ன நினைக்கறாங்கன்னு சொல்ல மாட்டாங்க.. அப்படியிருக்க ஒரு ஆணால் அவங்க மனசைப் படிக்க முடிந்தால்.. பொண்ணுங்க மனசுக்குள்ள திங்க் பண்ற எல்லா விசயங்களையும் கேட்க முடிந்தால்.. எல்லா பிரச்சினைகளும் சால்வ்டு இல்லையா..

அப்படி ஒருத்தர்தான் நம்ம ஹீரோ.. சரி அவரைப் பற்றி ஒரு இன்ட்ரோடக்சன்..

நிக் மார்சல் (மெல் ஜிப்சன்).. ஒரு விளம்பரக் கம்பெனியில வேலை பார்க்கறவர்.. அவருக்கு கல்யாணமாகி டைவர்சும் ஆயிடுச்சு.. ரெண்டு பேருக்கும் 15 வயசுல ஒரு பொண்ணும் இருக்கு..

பொண்ணுங்களைக் கவுக்கறதுலயும்..  கம்பெனியில் ஆண்களுக்கான விளம்பரங்களை உருவாக்குவதிலும் வல்லவராக இருக்கார் நம்ம ஹீரோ.. நிறையப் பொண்ணுங்களுக்கு அவரைப் பிடிச்சிருந்தாலும்.. மனசுக்குள்ள நிறையப் பேர் அவரைத் திட்டிக்கிட்டும் இருக்காங்க..

கம்பெனிக்கு அடுத்த மேனேஜராகப் போறோம்னு நிக் மார்சல் நினைச்சுட்டு இருக்கப்போ.. அவரோட பாஸ்.. ஒரு பொண்ணை அவரோட டிவிசனுக்கு மேனேஜாராக நியமிக்கறார்.. அவங்க கம்பெனி அடுத்து தயாரிக்கப்போற அடுத்த பிராடெக்ட் பொண்ணுங்களுக்கானது.. அப்புறம் புதுசா வந்திருக்கற பொண்ணு ரொம்ப திறமைசாலி.. அதனாலதான் உனக்கு அவரை மேனேஜராக்கினேன்னு சொல்றார் அவரோட பாஸ்..

இந்த சமயத்துல ஹீரோவோட எக்ஸ்-ஒய்ஃப்க்கு மேரேஜாகுது.. அவங்க ஹனிமூன் போகனுங்கறதால.. நிக் மார்சல் அவரோட பொண்ணை கொஞ்ச நாள் பார்த்துக்க வேண்டியிருக்கு.. அந்தப் பொண்ணுக்கு அவரைக் கண்டாலே பிடிக்கல.. சின்ன வயசுலயே ஒரு பாய் பிரண்ட் வைச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கு.. அட்வைஸ் பண்ணப் போற நிக் மார்சலையும் நீ யார் என்னக் கேக்கறதுன்னு திட்டிடுடுது..

தனக்குப் பதிலாக ஒரு பொண்ணை மேனேஜராக நியமிச்சிட்டதாலவும்.. தன் பொண்ணு இன்சல்ட் பண்றதாலவும் கடுப்பா உட்காந்திருக்கார் நிக் மார்சல்.. அன்னைக்கு நைட் ஆக்சிடெண்டா எலக்ட்ரிக் ஷாக் அடிச்சி மயக்கமாகிடறார்..

அடுத்த நாள் ஆபிஸ் போறவருக்கு பெரிய அதிர்ச்சி.. அவரை சுற்றி இருக்கற பொண்ணுங்க எல்லாம் மனசுல என்ன நினைக்கறாங்கன்னு தெளிவாக அவருக்கு கேக்குது.. முதல்ல இந்த மாதிரி கேக்கறது அவருக்கு பெரிய தலைவலியாக இருந்தாலும்.. தனக்கு சாதகமாக இந்த பிரச்சினையைப் பயன்படுத்திக்கனும்னு முடிவெடுக்கறார்..

அப்ப இருந்து.. அவர் மேனேஜரோட தாட்ஸை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு.. அவரோட ஐடியாக்களைத் திருடி.. கம்பெனியில் நல்ல பெயர் வாங்கறார்.. கூட வேலை பார்க்கற பொண்ணுங்களோட எண்ணங்களைப் புரிஞ்சுக்கிட்டு எல்லாருக்கும் நல்ல பிள்ளையாயிடறார்.. தன்னோட பொண்ணுகூட ராசியாகிறார்.. மேனேஜராக வந்திருக்கற பொண்ணும் அவர் மேல இம்ப்ரஸ் ஆகி லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.. அவரோட முழு ஐடியாக்களையும் திருடி.. பொண்ணுங்களுக்கான ஒரு விளம்பரப் படத்தை சக்சஸ்புல்லாக எடுத்து.. அவரோட பாஸ்கிட்ட நல்ல பெயர் வாங்கறார் ஹீரோ..

தன்னோட மேனேஜரோட ஐடியாக்களைத் திருடினாலும்.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கறதால.. நிக் மார்சலோட கேரக்டரும் கொஞ்சம் கொஞ்சம் சேஞ்ச் ஆகி ரொம்ப நல்லவராயிடறார்.. முதல்ல இருந்தே.. இவர் செய்த தில்லு முல்லுகளால அந்த மேனேஜர் பொண்ணுக்கு வேலை போக.. அந்தப் பிரச்சினையையும்.. அவரைச் சுற்றியிருந்த வேறு சில பிரச்சினைகளையும் எப்படி சால்வ் பண்றார்னு ரொம்ப காமெடியாக சொல்லியிருப்பாங்க படத்துல..

முழுக்க முழுக்க காமெடியான படம்..

பிரேவ் ஹார்ட், தி பேசன் ஆஃப் தி கிரிஸ்ட், அபோகாலிப்டோ போன்ற செம ஹிட்டான சீரியசான படங்களை இயக்கியவர் மெல் ஜிப்சன்.. இந்தப் படத்துல காமெடியிலும் படம் முழுக்க கலக்கியிருக்கார்..

விவேக்கூட இந்தப் படத்தை வைச்சித்தான் ஒரு படத்துல காமெடி டிராக் அமைச்சிருந்தார்..

"எந்தக் காரணமும் இல்லைனாலும் பொண்ணுங்க எப்பவுமே கவலைப்பட்டுட்டே இருக்கீங்க" அப்படின்னு சொல்வார் ஹீரோ..

அவருடைய பொண்ணு.. மனசுல நினைக்கிற விசயங்களை கேக்க நேர்றப்போ அவரோட அவஸ்தை நமக்கு ரொம்பக் காமெடியாக இருக்கும்..

மேனேஜராக வர்ற பொண்ணு.. மெல் ஜிப்சன் மேல இம்ப்ரஸ் ஆகற சீனைப் பற்றியெல்லாம் நான் சொன்னா நல்லா இருக்காது.. பாருங்க.. ரொம்ப ரசித்துப் பார்க்க முடிந்தது..

இன்னும் நிறையக் காட்சிகளை சொல்ல முடியும்.. ஆனால் எல்லாம் அடல்ஸ் ஒன்லி ஜோக்ஸா (ஒன்லி ஜோக்ஸ் மட்டும்தான் :-)) இருக்கறதால நீங்களே பார்த்து எஞ்ஜாய் பண்ணுங்க..

Wednesday, January 5, 2011

பழனிக்கு வாங்க - நம்ம ஏரியா!

முன் குறிப்பு: தமிழ் மணம் விருதுகள் மூன்றாம் சுற்றுக்கு என்னுடைய Shutter Island - திரைவிமர்சனம் பதிவு தேர்வாயிருக்கு.. இந்தப் பதிவுக்கு வாக்களித்து என்னை மூன்றாவது சுற்றுக்கு நகர்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.....
பழனி ஒரு கோயில் நகரம்னு பலருக்கு முன்பே தெரிஞ்சிருக்கும்.. முருகன்.. சிவபெருமான்கிட்ட கோவிச்சுட்டு நம்ம ஊருக்கு வந்துதான் செட்டில் ஆயிட்டார்.. தென் இந்தியாவில் திருப்பதிக்கு அப்புறம்.. அதிகமான வசூலைப் பெருவதும் நம்ம பழனி மலை முருகன்தான்..

பழனி மலைக்கு வர்ற பக்தர்கள் பெரும்பாலானவங்க கேரள மக்கள்தான்.. அவங்களுக்கு என்னமோ முருகன் மேல அவ்வளவு கிரேஸ்.. என்னுடைய மலையாளி நண்பன் ஒருவன்கிட்ட இதைப்பற்றிக் கேட்டதுக்கு.. பழனி முருகரோட பார்வை கேரளாவைப் பார்த்த மாதிரி இருக்காம். அதனாலதான்.. கேரளா நல்லா செழிப்பாக இருக்குதாம்.. அதனாலதான் எங்க மக்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்னு பதில் சொன்னான்.. இதுதான் சரியான காரணமான்னு தெரியலை எனக்கு..

நான் படிச்ச காலேஜை பழனி மலை தேவஸ்தானம்தான் நடத்திட்டு வருது.. அதனால படிக்கறப்போ எங்களுடைய ஐ.டி. கார்டு முருகனைப் பார்க்கறதுக்கு ஒரு பாஸ் மாதிரி.. அதைக் காமிச்சுட்டு ஸ்பெசல் தரிசனம் வழியில நாங்க போக முடியும்.. (:-))..

சரி இப்ப முருகனை தரிசிக்கலாம் வாங்க..

பஸ் ஸ்டாண்டை விட்டு இறங்கினவுடனே.. மலைக்கு எந்த வழியில் போகணும்னு யாரையும் கேக்கவே தேவையில்லை.. மலை தெரியற பக்கம் இரண்டு பாதைகள் போகும்.. எந்த பாதையில போனீங்கன்னாலும் மலைக்குப் போயிடலாம்.. மலைக்குப் பக்கத்தில் சன்னிதி ரோட்டைப் பிடிக்கறப்போ.. அங்கே திருஆவினன்குடியில குழந்தை முருகனை ஒரு விசிட் அடிக்க வேண்டியிருக்கும் நீங்க.. கோயிலுக்கு வர்றவங்க எல்லாரும் இங்கே குழந்தை முருகனை கும்பிட்டுட்டுதான் மேல போறாங்க..

இந்தக் கோயில்ல தினமும் நைட் 8 மணிக்கு டான்னு பெல்லு அடிச்சவுடனே பொங்கல் தருவாங்க பாருங்க.. சான்ஸே இல்ல.. நெய்யொழுக அருமையான டேஸ்டுல இருக்கும்.. காலேஜ் படிக்கறப்போ.. நண்பர்கள் எல்லாரும் கோயிலுக்கு சாமி கும்பிடப் போறேன்னுட்டு போய் பொங்கல் வாங்கித் திம்போம்..

இந்தக் கோயில் மாடத்துல புலிபடம் வரைஞ்சிருப்பாங்க.. எந்த டைரக்சன்ல நின்னு மேல பார்த்தாலும் நம்மலைப் பார்க்கற மாதிரியே இருக்கும் ஓவியம்.. கலக்கியிருக்காங்க வரைஞ்சவங்க.. உள்ளே முருகனை சுற்றி நிறைய சாமி சிலைகள் இருக்கும்..

அப்புறம் முருகனோட திருவிளையாடல்களை ஓவியங்களாக வரைஞ்சி மேல மாட்டியிருப்பாங்க.. குழந்தை முருகனை வேண்டிக்கிட்டு வெளியே வந்தா சன்னதி ரோடு..

இப்போ மலைக்கு கீழே இருக்கற பாதவிநாயகருக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு மேலே ஏற ஆரம்பிச்சா.. நீங்க இரண்டு விதமான பாதைகளைப் பார்க்கலாம்.. வயசானவங்களும்.. குழந்தைகளுக்கும் வசதியாக மலை மேல போறதுக்கு வின்ச், ரோப் கார்லாம் கூட இருக்கு..

முருகனைப் பார்க்கறதுக்கு இங்க.. பொது தரிசனம்.. 10ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய்னு வழிகள் அமைச்சிருக்காங்க.. காசுக்கு தகுந்த மாதிரி.. நாம முருகனை மீட் பண்ண சுத்தற பாதைகள் கம்மியாகும்..
இங்கே இருக்கற முருகனோட சிலையை போகர்னு ஒரு சித்தர் நிறைய மூலிகைகளைக் கொண்டு செய்திருக்கிறாரு.. முருகனை வேண்டிக்கிட்டு தீர்த்தத்தைக் குடிக்கிற மக்களோட நோய்கள் எல்லாம் குணமாயிடறதால.. நிறைய மக்கள் வர ஆரம்பிக்க.. அந்தக் காலத்தில பழனி ஏரியால அரசாட்சி பண்ணிட்டு இருந்த சேரமான் அப்படிங்கற மன்னர் இந்தக் கோயிலை எடுத்துக் கட்டியிருக்கிறார்.. அப்புறம் நிறைய மன்னர்கள் கைக்குப் போய் நிறைய ஆல்ட்ரேசன் பண்ணி.. இப்போ நாம பாக்கற கோயில் வரைக்கும் நிறையா மாறுதல்கள் பண்ணியிருக்காங்க..

முருகனுக்கு ராஜ அலங்காரம், ஆண்டி அலங்காரம்னு நிறைய அலங்காரங்கள் இருக்கு.. மாற்றி மாற்றி பண்ணிட்டு இருப்பாங்க.. என்ன பேசிஸ்லன்னு எனக்குத் தெரியாது.. :-)

அப்புறம் பழனிக்கு வர்ற பக்தர்கள்கிட்ட நம்ம ஆளுங்க.. ஏமாற்றி மொட்டை அடிச்சு விட்டுடறாங்க அப்படிங்கறது பரவலாக இருக்கற ஒரு குற்றச்சாட்டு.. ஆனால் எல்லா சுற்றுலாத் தளங்கள்லயுமே நடக்கற விசயம்தானே இது.. அதனால நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்..

முருகனைப் பார்க்கற ஆவல்ல பழனியில எந்த மூலையில் வந்து இறங்கினாலும்.. மலையோட தோற்றத்தைப் பார்த்து பக்தர்கள் பிரமிச்சு நின்னுடறாங்க.. அவங்க ஆ!!ன்னு பார்த்துட்டு நிக்கறதைப் பார்த்துட்டு அவங்களை ஏமாற்றறதுக்கு நிறையப் பேரு பஸ் ஸ்டாண்டுலயே வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. எந்த பஸ் வந்து நின்னாலும் சரி.. மலைக்குப் போறவங்க எல்லாம் இந்தப் பக்கம் போங்கன்னு சொல்லிட்டு நாலுபேர் வந்து நின்னுடுவாங்க.. அவங்களைக் கண்டுக்காம போறவங்க தப்பிச்சாங்க.. அடடா! எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க.. இப்படி பஸ்ல இருந்து இறங்கினவுடனே.. வழி கேக்காமலே நமக்கு வழி சொல்றாங்களேன்னு நினைச்சுட்டு அவங்க பக்கம் ஒரு லுக் விட்டாலே போதும்.. ஊர் திரும்பறப்போ.. அவங்க மொட்டையே அடிக்கலைன்னாலும்.. அடிச்சு குளுகுளுன்னு சந்தனம் பூசி தாட்டி விட்டுடுவாங்க..

அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு.. மலையை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.. நிறைய பஞ்சாமிர்தக் கடைகளும்.. பூஜை சாமான்கள் விக்கற கடைகளும் வரும்.. வேடிக்கை பார்த்துட்டே போயிட்டு இருக்கற பகதர்கள்கிட்ட.. சன்னதி ரோட்லயே செருப்பு போட்டுட்டு நடக்கக்கூடாது.. இங்கேயே கழட்டிவிட்டுட்டு பூஜை சாமான்களை வாங்கிட்டு போங்கன்னு கையைப் பிடிச்சு இழுத்தே சொல்லுவாங்க.. இதை நம்பி நிறையப் பேர் அங்கேயே செருப்பை கழட்டி விட்டுட்டுப் போறதையும் பார்த்துருக்கேன்..

மலை மேல ஏற ஆரம்பிச்சவுடனே.. எவன் மூஞ்சியைப் பார்த்தா ரொம்ப ஏமாளியாத் தெரியுதுன்னு பார்த்து.. திடீர்னு வந்து.. உங்க நெத்தியில திருநீரைப் பூசிவிட்டு.. கையிலயும் சின்ன ஒரு வேலைக் கொடுத்துட்டு.. முருகனுக்கு நீங்க காணிக்கைப் போட்டாத்தான் இப்போ நகர முடியும்னு நின்னுக்குவாங்க.. இதெல்லாம் 5 செகண்டுக்குள்ள நடந்திடும்.. என்னடா நடந்ததுன்னே தெரியாம அவங்ககிட்ட 10,20ரூபாய் கொடுத்துட்டு மேல ஏறவேண்டியிருக்கும்.. சின்னப் பையனாக இருந்தப்போ எனக்கும் இப்படி நடந்திருக்கு.. அப்புறம் இதே ஊர்னு சொன்ன உடனே ரிலீஸ் பண்ணிட்டாங்க.. என்ன ஒரு தொழில் தர்மம் பாருங்க. கோவிலுக்கே போனாலும் நாமதான பாதுகாப்பா இருந்து ஏமாறாம தரிசனம் பண்ணிட்டு வரனும்.. அப்பதான் அதோட பலன் கிடைக்கும் இல்லீங்களா..

சரி இப்பவே பதிவு பெருசாயிட்டதால இத்தோட முடிச்சிக்கறேன்.. இனி நம்ம ஊரைப் பத்தியும் அடிக்கடி எழுதறேன்..

Tuesday, December 28, 2010

தமிழ்மணம் விருதுகள் - இரண்டாம் சுற்றில் நான்!

தமிழ்மண விருதுகளின் முதல் சுற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு என்னுடைய பதிவுகளும் முன்னேறி இருக்குங்க.. காலையில இருந்து ரொம்ப சந்தோசமாக இருக்கேன்.. உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க..

அடுத்த சுற்றிற்கு முன்னேறி இருக்கற என்னுடையப் பதிவுகள் மற்றும் அதன் பிரிவுகளைக் கீழே கொடுத்திருக்கேங்க..

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
திகில் திருமணப் பயணம் (http://abdulkadher.blogspot.com/2010/08/blog-post_26.html)


பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்" (http://abdulkadher.blogspot.com/2010/08/blog-post_14.html)



பிரிவு: உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்

Shutter Island - திரைவிமர்சனம் (http://abdulkadher.blogspot.com/2010/10/shutter-island.html)


இரண்டாவது சுற்றுக்கு வாக்களிப்பதற்கான இணைப்பை கீழே இணைத்திருக்கிறேன்.

http://www.tamilmanam.net/login/tmawards_2010_vote.php

முதல் சுற்றில் முன்னேறி இருப்பதே.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க..

என்னோட நன்றியை மீண்டும் உங்க எல்லாருக்கும் தெரிவிச்சுக்கிறேன்..



Monday, December 27, 2010

அலுவலக அரசியல்கள்

ஒரு அலுவலகத்தில் சாதாரண ஒரு பணியாளராக வேலைக்கு சேர்கிறோம்.. அங்கே மேலும் மேலும் நாம உயரனும்னா.. நிறைய விசயங்கள் செய்ய வேண்டியிருக்கு.. எனக்கு தெரிந்த சில விசயங்களைப் பற்றி இங்கே எழுதறேன்..

புதியதாக ஒரு அலுவலகத்தில் சேர்ந்தவுடன்.. கொடுக்கற வேலையை செய்தோமா.. போனோமான்னு இருந்தால்.. அது பத்துடன் பதினொன்று என்றாகிடும்.. அதனால நம்முடைய திறமையை அங்கே நிரூபிக்கனும்.. எப்படி நிரூபிக்கறது.. ஒரு 10 பேர் மட்டும் வேலை பார்க்கும் ஆபிஸ்ல நம்மை முன்னிலைப் படுத்தனும்னு நினைத்தால் ரொம்ப ஈசிங்க.. கொஞ்சம் ஹார்டு ஒர்க் பண்ணிக் காமித்து.. மற்றவர்களை விட அவுட்புட் அதிகமாகக் காமித்தாலே போதுமானது.. நிர்வாகத்தின் கவனத்திற்குப் போயிடுவோம்.. அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது நம்ம கையில்தான் இருக்கு..

நாம் வேலையில் சேர்ந்திருப்பது ஒரு பெரிய நிறுவனம்.. நம்முடைய பிராஜக்ட்லயே குறைந்தது.. 100 பேரூக்கு மேல் வேலை செய்யும் இடம்.. இங்கே எல்லாரையும் விட அதிக நேரம் வேலை பார்க்கிறேன்.. ஹார்டு ஒர்க்கை நிரூபிக்கிறேன்னு திட்டம் போட்டால் அது முடியாது.. எதை நிரூபிக்கறதாக இருந்தாலும்.. நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆபீஸ் நேரத்துலதான் செய்யனும்.. ஏன்னா.. பெரிய நிறுவனங்கள் எல்லாம் 24 மணிநேரமும் ஷிஃப்ட் பேசிஸ்ல இயங்கக் கூடியவை.. நம்முடைய வேலை நேரம் முடியறதுக்கு 5 நிமிடம் முன்னதாகவே சிஸ்டம் வேனும்னு அடுத்த ஷிஃப்டுக்கு லாகின் பண்றவங்க வந்து நின்னுடுவாங்க.. அதனால் இம்மாதிரியான நிறுவனங்களில் தனித்திறமைகளை முன்னிறுத்துவதன் மூலமாகவே பெயர் வாங்க முடியும்..

தனித்திறமைன்னா என்ன?.. அவங்க வேலை கொடுக்கறாங்க நாம செய்றோம்.. இதுல என்ன தனித்திறமையை வெளிக்காட்டறதுன்னு கேக்கறீங்க இல்லையா.. முதல் ஸ்டெப் நிறையப் பேசனும்.. மனசுல தோன்றதைப் பயப்படாமக் கேக்கனும்.. ஒரு ட்ரைனிங் வைக்கறாங்க அப்படின்னா.. அங்கே நமக்கு பல சந்தேகங்கள் உண்டாகலாம்.. சரி பக்கத்துல இருக்கறவன் புரிஞ்சுட்டிருப்பான்.. வெளியே போய் கேட்டுப்போன்னு திங்க் பண்ணாம.. உடனே நம்முடைய சந்தேகங்களைக் கேக்க ஆரம்பிக்கனும்.. கேள்வி கேக்க தயங்கறோம்னா.. ஒன்னு லேசினெஸ் காரணமாக இருக்கனும்.. அல்லது ஆங்கிலம் பிரச்சினையாக இருக்கலாம்.. இங்கே முதல் வகையை விட்டுடலாம்.. ரெண்டாவது கேட்டகரியை எடுத்துக்குவோம்..

தமிழ்நாட்டுல இருந்து வர்றவங்க.. பெரும்பாலும் தமிழ் மீடியம் படிச்சுட்டு வர்றதால நிறைய மதர்டங் இன்ஃபுலுயன்ஸோட வர்றோம்.. முதல்ல நிறையப் பேருக்கு பேச வர்றதே இல்ல.. அதனால் நாம் ஏதாவது கேள்வி கேட்டு.. அது தப்பாப் போயிட்டா எல்லாரும் சிரிப்பாங்க அப்படிங்கற பயத்துலயே அமைதியாய் உட்கார்ந்திருப்போம்.. அந்தப் பயத்தை விட்டுட்டு.. தப்பாகவே பேசுவோமே.. நாம் எதையோ கேக்க நினைக்கிறோம்.. இவனுக்கு ஆர்வம் இருக்குன்னாவது அவங்களுக்குத் தெரிய வரும்.. இந்த ஆர்வம் நம்மகிட்ட வந்துட்டாலே.. நாம என்ன கேக்க நினைச்சோம்னு யார்கிட்டயாவது கேட்டாவது தெரிஞ்சுக்குவோம்.. அடுத்த முறை நம் மனதில் தோன்றும் வேற கேள்வியை எப்படி கேக்கறதுன்னே தெரியலைன்னாலும் கேக்க தைரியம் வந்துடும்.. முதல்முறை சிரிச்சவங்க.. இந்தமுறை இவன் என்ன கேக்க நினைக்கறான்னு கூர்ந்து கவனிப்பாங்க..

நம்முடைய வேலையை நாம்.. ட்ரைய்னிங்லயே சிறப்பாக செய்யத் தவறி இருக்கலாம்.. புதிய வேலை.. ஒரு மாதிரி கண்ணைக் கட்டி விட்டமாதிரி ஃபீல் பண்ணுவோம்.. கவலைப் படாதீங்க.. வேலையிலயே நேரடியாகப் பிரச்சினையைப் ஃபேஸ் பண்ணிக்கலாம்.. ஏன்னா நிறையப் பேருக்கு.. க்ளாஸ் எடுத்தால் பிடிக்காது.. நேரடியாக வேலை செய்றதுதான் பிடிக்கும் (எனக்கு அதுதான் பிடிக்கும் :-) )..

நெக்ஸ்ட் ஏதாவது நம்முடைய டீமுக்காக ஏதாவது செய்யனும்.. ஏதாவதுன்னா?.. நீங்க வேலை செய்துட்டு இருக்கற பிராஜெக்ட் உங்களுக்கு நல்லாப் பழகினவுடன்.. அதுபற்றி ஒரு சப்பையாக அல்லது உண்மையிலயே அறிவாளியாக இருந்தால் அருமையாக ஒரு பிரசெண்டேசனையோ அல்லது ஒரு புதிய ஒர்க் ஸ்ட்ரக்சரையோ கிரியேட் பண்ணி.. உங்க டீம் மெம்பர்ஸுக்கு கொடுக்கக்கூடாது (;-)).. அது சப்பையாகவே இருந்தாலும் உங்க அணித்தலைவருக்குக் காட்டனும்.. சமயம் வரும்போதெல்லாம் நான் இந்த விசயத்தை செய்தேன்னு சொல்லிக் காட்டனும்.. இந்தமாதிரி எக்ஸ்ட்ரா ஆக்டீவிட்டீஸ் செய்யத் தெரியாதவங்க.. இதுக்கு காக்கா பிடிக்கறான்னு பேர் வைப்பாங்க.. உண்மையில் அவங்களுக்கு எல்லாம்.. என்னடா இவன் நம்மகூட சேர்ந்துட்டு ஆக்டிவா இருக்கானே.. நமக்கு ஒன்னும் தெரியலையேன்னு பொறாமையா இருக்கும்.. ஆனால் அதை அவங்க மனசுகூட ஏத்துக்காது..

சும்மா இந்த வேலையை செய்தால் மட்டும் நல்ல பேர் வாங்கிட முடியுமான்னு நீங்க திங்க் பண்ணலாம்.. இதுவே உங்களுக்குத் தொடக்கமாகவும்.. நல்ல திருப்புமுனையாகவும் அமையும்..

சின்னக் கம்பெனியோ.. பெரிய கம்பெனியோ.. நம்முடைய வேலை சிறப்பாக இருந்தும்.. அங்கீகாரம் இல்லைன்னா.. அங்கே இருக்கறது வேஸ்ட்.. சீக்கிரம் வேற பக்கம் ஜம்ப் ஆகறதுதான் நல்லது.. இல்லைன்னா.. சீக்கிரம் மனசுல ஒரு டிப்ரசன் உருவாகி நம்முடைய திறமைகள் பாழாயிடும்..

இவ்வளவு வேலைகளும் எதுக்கு செய்றோம்.. நமக்கு அங்கே வரும் முன்னேற்றதுக்காகத்தான் இல்லையா.. நமக்கும் அந்த முன்னேற்றம் வரும்.. அப்போ.. உங்க கூடவே டீம்ல இருந்த நண்பர்கள்.. இப்போ உங்களுக்கு கீழே வேலை செய்றமாதிரி நிலை வரும்.. இதற்கு முன்பு ஒரே அணியாக நிர்வாகத்தின் நிறை குறைகளை ஒரு பணியாளரின் பார்வையில் பார்த்துட்டு இருந்திருப்போம்.. நம்முடைய அணித்தலைவர்.. நமக்கு கொடுத்திருக்கற டார்கெட்டோட நியாயமின்மை எல்லாம் அப்போ பேசியிருப்போம்.. இப்போவும் அந்த நியாயம் நமக்குத் தெரியும்.. ஆனால் ஒரு அணித்தலைவராக நமக்குக் கொடுக்கப்பட்ட டார்கெட்.. குறிப்பிட்ட டயத்துல இவ்வளவு டார்கெட்டை முடிக்கனும்ங்கறதுதான்.. சோ ஆட்டோமேட்டிக்கா நம்முடைய டீமுக்கு பிரசர் கொடுக்க ஆரம்பிப்போம்..

ஏற்கனவே நம்முடைய பதவி உயர்வின் காரணமாக சிலர் விலகிப் போயிருப்பாங்க.. இப்போ இந்தப் பிரசர் கொடுக்க ஆரம்பித்தவுடன்.. மீதம் இருப்பவர்களும்.. பார் இவன்.. டீம் லீட் ஆனவுடன் தலைகணம் வந்துருச்சு.. அப்படின்னு பேச ஆரம்பிச்சுருப்பாங்க.. உண்மையில் நம்முடைய வேலைப்பளுவும்.. நம்முடைய டார்கெட்டும் அப்படி இருக்கும்.. நிர்வாகத்துக்கும்.. டீம் மெம்பர்ஸுக்கும் நல்லவிதமாக நடந்துக்கனும்னு நினைத்தால் நமக்கு ஆப்பு விழும்..

இங்கே உதாரணத்துக்கு சொல்லனும்னா.. பாதையில் நடக்கும் போது பாதசாரியாகவும்.. டூவிலர் ஓட்டும்போது அந்த மனநிலையிலும்.. ஃபோர் வீலர் ஓட்டும்போது அந்த மனநிலையில்தான் இருக்கனும்..

இந்தமாதிரி எல்லா விதமான அரசியல்களை சமாளிக்கனும்.. எங்கேயாவது சிலிப்பானால்.. பரமபதம் மாதிரிதான் திரும்பவும்.. பழைய இடத்துக்குத்தான் வருவோம்..

அதுபோல நம்முடைய நிறுவனத்தில் நம்முடைய பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.. அதன் காரணமாக நிறுவனத்தில் சில சலுகைகள் நமக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் நாம இல்லைனா.. இவங்க இந்த வேலையை செய்திருக்க முடியாதுன்னு நினைப்பை வளர்த்தால்.. நம் மனதில் அகங்காரம் வந்து சீக்கிரம் அது வெளிப்படும்.. அது வேண்டாம்.. நாராயண மூர்த்தி சொன்னமாதிரி நம்முடைய நிறுவனம் எப்போ நம்மை விரும்பறதை நிறுத்துவாங்கன்னு சொல்லவே முடியாது.. அதனால் நம்ம வேலையை என்றைக்குமே கரெக்டாக செய்வோம்.. :-)

டிஸ்கி 1: நண்பர்கள் இருவர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது.. ரெண்டு பேரும் நண்பர்கள் என கம்பெனிக்குள்ள காட்டிக்காம இருந்தால்.. நம்மைப் பற்றி சக பணியாளர்கள் பேசும் விசயங்களையும்.. நமக்கு மேல இருக்கறவங்க பேசற விசயங்களையும் தெரிஞ்சுக்க முடியும்.. ட்ரை பண்ணிப் பாருங்க.. அனைத்தும் அரசியலே.. :-)

Saturday, December 25, 2010

தமிழ்மிண்ட் அராஜகங்கள்..

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவர் இம்மாதிரி பதிவிட்டிருந்தார்.. தமிழ்மிண்ட்ல ஜாயின் பண்ணுங்க.. உலக நடப்புகள் மற்றும் உங்களுக்கு எந்த விசயங்களில் விருப்பம் இருக்கோ.. அந்த விசயங்களை எல்லாம் உங்க மொபைலுக்கு மெசேஜ் அனுப்பி உடனுக்கு உடனே தெரிவிப்போம்.. உங்களுக்கு எந்த டைம்ல மெசேஜஸ் வரவேண்டாம்னு நினைக்கறீங்களோ.. அந்த டைம் மென்சன் பண்ணிட்டால்.. அந்த சமயங்களில் உங்களுக்கு எந்த மெசேஜும் அனுப்ப மாட்டோம்.. அதுபோல உங்களுக்கு எங்க சேவை பிடிக்கலைனா "NO MINT" அப்படின்னோ என்னவோ டைப் பண்ணி அனுப்பினா.. இந்த சேவையில் இருந்து நீங்க விலகிடலாம்னு இருந்தது..

நான் நண்பர்கள் அனுப்பியிருக்கும் ஃபார்வேர்டு மெசேஜையே படிக்க மாட்டேன்.. ஆனால் அந்த பிளாக்கர் எழுதிய விதமோ என்னவோ.. நான் அதில் இம்ப்ரஸ் ஆகி.. அவர் குடுத்திருந்த லிங்கிற்குப் போய் பார்த்தேன்.. விளையாட்டு, அரசியல், உலக செய்திகள் அப்படி இப்படின்னு.. நூற்றுக்கு மேல வகைகள் அதில் இருந்தது.. சரி இப்போதைக்கு இருக்கட்டுமேன்னு.. உலக செய்திகள் மற்றும் இன்றைய கருத்துக்கள் அப்படிங்கற இரண்டு தலைப்புகளை தேர்வு செய்து சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்..

சப்ரைப் பண்ணின கொஞ்சம் நேரத்தில் ஒரே ஒரு மெசேஜ் வந்தது.. மெசேஜை ஓப்பன்கூட பண்ணாம டெலிட் பண்ணிட்டேன் அப்போ.. அன்னைக்கு நைட் 10 மணிக்கு ஆரம்பித்தது தொல்லை.. தொடர்ந்து 5 செகண்டுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டே இருந்தாங்க.. என்னடா இது வம்பாப் போச்சுன்னு.. சேவையை கேன்சல் பண்ண அவங்க குறிப்பிட்டிருந்த நம்பருக்கு.. மெசேஜ் பண்ண.. எங்களால இப்ப உங்க சேவையை கேன்சல் பண்ண முடியல.. கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணுங்கன்னு மெசேஜ் வந்தது.. சரி காலையில் ட்ரை பண்ணலாம்னு.. மொபைலை சைலண்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன்.. அடுத்த நாள் காலையில் பார்த்தால் 89 மெசேஜ் வந்திருந்தது.. ரொம்பக் கம்மியாதான் அனுப்பியிருக்காங்கன்னு நினைச்சுட்டு.. திரும்பவும் ட்ரை பண்ணேன்.. பண்ணேன்.. பண்ணேன்.. அன்னைக்கு முழுக்க நிறைய முறை ட்ரை பண்ணிட்டேன்.. அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ட்ரை பண்ணிட்டே இருந்தேன்..

அந்த பிளாக்கோட பேர் தெரியாததால அங்கேயும் போய் திட்ட முடியல.. வேற எப்படி ட்ரை பண்றதுன்னு தெரியல.. ரீசண்டா ஒரு பதிவர்.. தமிழ்மிண்ட்ல ஜாயின் பண்ணுங்க.. நான் அனுப்புற மெசேஜ் மட்டும்தான் வரும்.. உங்களுக்கு தொந்திரவு இருக்காதுன்னு எழுதியிருந்ததைப் படிச்சேன்.. ஆபிஸ்ல வேலை அதிகம் இருந்ததால.. அந்த விண்டோவை அப்படியே ஓப்பன் பண்ணி வைச்சுட்டு.. வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.. அப்படியே மறந்து "Shutdown" பண்ணிட்டேன்..

இன்ஸ்ட்ரக்சன்ல குறிப்பிட்டிருந்த முறைப்படி என்னால் அந்த சேவையை நிறுத்த முடியல.. உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்லுங்க..

இதில் நிறைய விளம்பரங்கள் வருது.. அதனால நிறையப்பேர் இதை கூகுள்கிட்ட இருந்து அவுட்சோர்ஸ் எடுத்துப் பண்றாங்களான்னு தெரியல.. இந்த சேவையைக் குறை சொல்லல.. எனக்கு வேண்டாம்னுதான் சொல்றேன்.. :-)..

"9870807070" இந்த நம்பர்ல இருந்துதான்.. தினமும் குறைந்தது 20 மெசேஜாவது வருது.. யாருக்கும் வழி தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்..

டிஸ்கி: இதை ஒரு பதிவாகப் போடனும்ங்கறது என் எண்ணம் இல்ல.. ஆனால் இந்த சேவையைப் பயன்படுத்தச் சொல்லி இரண்டு பதிவுகளை நான் படிச்சிருக்கறதால.. அதை உபயோகப்படுத்திய என்னுடைய நிலையையும் தெரியப்படுத்தவே இந்தப் பதிவு..

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு - திரை விமர்சனம்

கமல்ஹாசன், மாதவன், ரமேஷ் அரவிந்த் கூட்டணினாலே.. ஒரு பெரிய காதல் நகைச்சுவைப் படத்தைக் கொடுக்கப் போறாங்கன்னு நினைச்சுட்டு.. வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே போனேன்.. படம் ஆரம்பிச்சதுல இருந்து.. கடைசி வரைக்குமே.. ஒவ்வொரு டயாலாக்கும் தத்துவமா உதிர்க்கிறாங்க.. இரண்டு வார்த்தைக்கு ஒரு வார்த்தை ஏதாவது நச்சுன்னு கருத்து வந்து விழுது.. படத்தோடவே ஒரு மெலிதான காமெடியை உணர முடியுது.. கடைசி ஒரு 45 மணிநேரம் மட்டும்.. முழு நகைச்சுவை.. உண்மையில் அவ்வளவு நேரம் ஓடிய படத்துக்கும்.. கடைசிக் காட்சிகளுக்கும் ஒத்து வரல.. ஆனால் ரசிக்க முடியாதபடி இல்ல.. நன்றாகவே இருந்தது..

படத்தோட டைட்டிலே ரொம்ப சிம்பிளாகப் போட்டாங்க.. எந்த கிராபிக்ஸும் இல்ல.. சாதாரணமாக எழுத்துப் போடறாங்க.. இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம்.. கமல்ஹாசன்.. ஆனால் கதை ஏற்கனவே இரண்டு உலகப்படங்களில் இருந்து கமல் சுட்டுட்டார்னு படிச்சேன்.. சுட்ட கதையாக இருந்தாலும்.. இந்த வருடத்தில் ஒரு அருமையான படமே..

இப்படத்தில் திரிஷா.. ஒரு நடிகையாகவே வர்றாங்க.. திரிஷாவை மாதவன் காதலிக்கிறார்.. முதல் காட்சியிலயே ஒரு பாடல்காட்சி.. அதில் சூர்யாவுடன்.. திரிஷா சூட்டிங்ல இருக்கறமாதிரி அந்தப் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கு.. சூட்டிங் ஸ்பாட் வர்ற மாதவன்.. திரிஷாவையும் சூர்யாவையும்.. சந்தேகப்பட்டு திரிஷாகூட சண்டைபோடறார்.. ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே மலைப்பாதையில் கார் ஓட்டிட்டு வர்றப்போ.. எதுத்து வர்ற வண்டியைப் பார்க்காமல் ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுது.. எப்படியோ சமாளித்து.. வண்டியை நிப்பாட்டித் திரும்பிப் பார்க்க.. ஆக்சிடெண்ட் ஆன மற்றொரு வண்டியைக் காணோம்.. சரி இடிச்சுட்டு ஓடிட்டாங்க போலன்னு நினைச்சுட்டு.. திரிஷாவும் மாதவனும் சண்டையைத் தொடர்றாங்க.. இதனால மனசு வருத்தப்பட்டு.. மன மாறுதலுக்காக அவருடைய தோழி சங்கீதா இருக்கற ஊருக்குப் போறார் திரிஷா..

இங்கேதான் கமல் அறிமுகமாகிறார்.. இவர் யாருன்னா.. திரிஷாவை ஃபாலோ பண்ணி அவர் வேற யார் கூடயாவது தொடர்பு வைச்சிருக்காரான்னு மாதவன் துப்பறிய அனுப்பி வைத்த ஒரு டிடெக்டிவ்.. சங்கீதாவை அறிமுகப்படுத்தியதில் இருந்து திரிஷாவுக்கு அதிகமான டயலாக்கே இல்லை.. சங்கீதாவே நிறையப் பேசறார்.. அசால்ட்டா நிறைய லந்தடிக்கறார்.. அவருடைய குழந்தைகளாக வரும் கதாப்பாத்திரங்களும் சூப்பர்..

ஒருகட்டத்தில் திரிஷா மற்றும் சங்கீதாவுடன் கமல் நட்பாகிறார்.. அப்போது கமல் கூறும் அவருடைய ஃபிளாஸ்பேக்கில் ஒரு ஆக்சிடெண்ட் வருது.. அந்த ஆக்சிடெண்ட் திரிஷா பண்ணினதுதான்.. அதனால் குற்ற உணர்ச்சியில் திரிஷா தவிக்கிறார்.. கமலும் பணத்தேவைக்காக.. திரிஷா யார்கூடவோ சுத்தறார்ன்னு மாதவன்கிட்ட பொய் ரிப்போர்ட் கொடுத்துட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.. ஒருபட்சத்தில் கமலுக்கு நடந்த ஆக்சிடெண்டுக்கு காரணம் தான்தான்னு திரிஷா சொல்ல.. கமல் அதை ஸ்போட்டிவாக எடுத்துக்கறார்.. ரெண்டு பேருக்குள்ளேயும் இப்போ காதல்..

மாதவன் திடீர்னு கமலையும்.. திரிஷாவின் மோசடியையும் நேர்ல பார்க்கனும்னு வர.. அப்போ இருந்து காமெடி+மொக்கை ஆரம்பம்.. கடைசியில் கமலும் திரிஷாவும் சேர்றாங்க.. சங்கீதாவும், மாதவனும் சேர்றாங்க.. படம் ஓவர்..

படத்தின் முதல் காட்சியில் இருந்து வசனங்கள் எல்லாம் கவிதை மாதிரியே பேசறாங்க.. நிறைய ஆழ்ந்த கருத்துள்ள வசனங்கள்.. மாதவன் அவருடைய பார்ட்டை சிறப்பாகவே செய்திருக்கிறார்.. கமலைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. அருமை..

அடுத்து.. படத்தின் ஹீரோயின் திரிஷாவை விட.. சங்கீதாவே மனசில் நிக்கிறார்.. காமெடிக் காட்சிகளில் அவருடைய நடிப்பு சூப்பர்.. அதுவும்.. கடைசிக் காட்சிகளில்.. மாதவனிடம் மாட்டிக் கொள்ளவிருக்கும் கமலைக் காப்பாற்ற போட்டப் பிளான் சொதப்ப.. கமல் தன்னைத் துப்பறிய வந்த ஒரு டிடெக்டிவ்ன்னு தெரியாத திரிஷா.. அதே இடத்துக்கு வர.. அங்கு நடக்கும் லூட்டியில் தியேட்டர் முழுவதும் ஒரே சிரிப்பு.. அந்தக் காட்சிகள் சிறப்பாக அமைந்ததற்கு சங்கீதாவின் நடிப்பே காரணம்..

ரமேஷ் அரவிந்தை அடையாளமே தெரியல.. ரமேஷ் அரவிந்த் பார் எப்படி ஆயிட்டார்னு.. கூடபடத்துக்கு வந்திருந்த நம்ம பிரியமுடன் ரமேஷ் சொல்லத்தான்.. ஓ அப்படியான்னு பார்த்தேன்..

கமல் ஃபிளாஸ்பேக் சொல்ல ஆரம்பிக்கும் போது.. வரும் பாடல் காட்சி.. ஆக்சிடெண்ட் ஆனதில் இருந்து.. காட்சிகள் பின்னோக்கி நகர்வதுபோல காமிச்சிருப்பாங்க.. பதிவாக்கிய விதம் அருமை.. ஆனால் காட்சிகள் எல்லாம் கமலுடன் சேர்ந்து பின்னோக்கி செல்லும்போது.. கமலின் வாய் அசைவுகள் மட்டும்.. பாடல் வரிகளை கரெக்டா உச்சரிச்சது எப்படின்னு தெரியல.. ரொம்ப நல்லாயிருந்தது..

திடீர்னு ஊறுகாய் மாதிரி.. ஓவியாவும் வர்றார்.. அதைப் படத்துலயே மாதவன் நக்கலாக சொல்லிக் காமிச்சிட்டார்..

இந்தப் படத்தின் பிரச்சினைக்குரிய கவிதை.. இரண்டுமுறை வருது..

கடைசிக் காட்சிகள் காமெடியாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது..

மன்மதன் அம்பு - கடைசி 45 நிமிடக் காட்சிகளைத் தவிர்த்தால் இரண்டு முறை பார்க்கலாம்..

Tuesday, December 21, 2010

மொபைல் மோசடிகள்


புதுசா காஸ்ட்லி மொபைல் வாங்கப்போறீங்களா.. இதைப் படிங்க முதல்ல..

நம்மவர்களுக்கு இப்போ மல்ட்டி மீடியா மொபைல் யூஸ் பண்ற மோகம் முழுவதும் பரவிக்கிடக்கு.. ஒரு லேப்டாப் வாங்கற பணத்துக்கு ஐபோன், ஹெச்.டீ.சி போன்ற மொபைலகள் மார்கெட்ல கிடைக்குது..

இந்த பதிவு எழுதறதுக்காக காஸ்ட்லியஸ்ட் மொபைல் லிஸ்ட் தேடிப்பார்த்தேன்.. ஒரு ஆப்பிள் ஐஃபோன் விலை 100000 ரூபாய், ஒரு ஹெச்.டீ.சி மாடல் 1,20,000ரூபாய் (அப்புறம் வைரத்துல செய்தது, தங்கத்துல செய்ததுன்னு நிறைய மொபைல்ஸ் 25,00,000, 1,00,00,000 அப்படின்னு எல்லாம் இருந்தது).. இவ்வளவு காஸ்ட்லி மொபைல் வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.. ஆனாலும் நம்ம மக்களுக்கு மல்டி மீடியா மொபைல்ஸ் வைச்சிருக்கறது ஒரு கெளரவப் பிரச்சினையாகவே நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஊர்ல நிறையப் பேர் 20000, 25000 ரூபாயிக்கு மொபைல்ஸ் வாங்கி வைச்சிருக்காங்க.. அவங்களுக்கு அதுல கால் பண்றது தவிர வேற எதுவுமே தெரியல.. அடப்பாவிகளான்னு இருக்கும்.. கேட்டால்.. இந்த மாதிரி மொபைல்ஸ் வைச்சிக்கிட்டாத்தான் கெளரவம்னு சொல்றாங்க..

அப்புறம் காலேஜ் போற பசங்க அதிகமாக மல்டி மீடியா மொபைல்ஸ் யூஸ் பண்றாங்க.. இங்கே மேட்டர்.. இவ்வளவு விலையில் மொபைல் எதுக்கு வாங்கறாங்கன்னு இல்ல.. இந்தமாதிரி மொபைல்ஸ் வாங்கினதுக்கு அப்புறம் எப்படிப் பாதுக்காக்கறாங்க அப்படிங்கறதுதான்..

நோக்கியாவுல 1100, 1110 மாதிரி மொபைல்ஸ் எல்லாம் 2000 ஆம் ஆண்டுவாக்குல ரொம்ப பிரபலமாக இருந்தது.. ரஃப் யூஸுக்கு ஏத்த மொபைல்.. தூக்கி எறிந்து விளையாடலாம்.. எல்லாம் அவ்வளவு உறுதியாக இருந்துச்சு.. நான் உபயோகப்படுத்திட்டு இருந்த ஒரு 1100 மொபைல்.. ஒருமுறை கை தவறி ரெண்டாவது மாடியில் இருந்து விழுந்தது.. அப்போ விழுந்திடுச்சேன்னு ஒரு பதட்டமும் இல்ல.. பேட்டரியும் பேனலும் தனித்தனியே கிடந்துச்சு.. எல்லாத்தையும் சேர்த்ததுக்கு அப்புறம் கும்முன்னு ஒர்க் ஆயிடுச்சு.. அவ்ளோதான்..

இப்போ நிறைய மல்டி மீடியா மொபைல்ஸ்.. நமக்கு தகுந்த விலைகள்ல இருந்து.. ரொம்பக் காஸ்ட்லியாகவும் கிடைக்குது.. ஹேண்டி, சிலிக்கி, பெரிய சைஸ்னு எல்லா மாதிரியும் கிடைக்குது.. எல்லா மொபைல்களிலுமே.. பிச்சர் கிளாரிட்டிக்காக எல்.சி.டி. ஸ்கிரீன் போட்டுத்தான் வருது.. ஏதாவது சிறிய பிரசர்.. மொபைல் மேல விழுந்தாலும் ரொம்பக் கேர்புல்லாகப் பார்த்துக்க வேண்டியிருக்கு.. தப்பித்தவறி டிஸ்ப்ளே உடைந்ததுன்னா.. அவ்ளோதான்.. 2000, 3000 ரூபாயிக்கு வேட்டுதான்.. சில மொபைல்களோட ஒரிஜினல் விலையே அவ்ளோதான் இருக்கும்.. அதனால ரொம்பக் கேர்புல்லாகப் பார்த்துக்க வேண்டியிருக்கு..

இந்த மல்டிமீடியா மொபைல்கள்ல வாங்கக்கூடாத ஒரு மாடல் ஃபிளிப் டைப்.. அதாவது ஸ்கீரினை உந்தி பிரஸ் பண்ணினா.. அது மேலே போய்.. மொபைல் கீபோர்டு இருக்கறதைக் காட்டும்.. ஏதாவது கால் வந்தால் அப்படியே அட்டெண் பண்ணலாம்.. அப்படி மாடல்.. இந்த மொபைல்ல ஏதாவது சின்ன ஸ்டார்ட் அப் பிரச்சினை ஏற்பட்டால் கூட.. மொபைலை அப்படியே மறந்திட வேண்டியதுதான்.. ஏன்னா அந்த மாதிரி மாடல்கள்ல சர்வீஸ் பார்க்கறதுக்காக கழட்டும்போது ஸ்க்ரீன் இருக்கற பார்ட்டைக் கலட்டனும்னா.. அப்படியே ஒரு ஸ்க்ரூ டிரைவர் வைச்சி நெம்பிதான் எடுப்பாங்க.. கண்டிப்பாக வளைஞ்சுபோயிடும்.. திரும்பவும் பிக்ஸ் பண்றப்போ பினிஷிங் வராது.. அதனால மொபைலை சர்வீஸ் குடுக்கும் போதே.. சார் ஆபரேசன் சக்ஸஸ் ஆயிடும்.. ஆனால் பேசண்ட் செத்துடுவாங்க.. உங்களுக்கு ஓகேன்னா.. எடுத்துக்கறோம்னு சொல்வாங்க.. அடப்பாவிங்களா!! இந்த விசயங்களை மொபைல் வாங்கறப்போ ஏண்டா சொல்லலைன்னு கேட்டால் பதில் இருக்காது.. அதனால நண்பர்களே!!.. ஃபிளிப் மாடல்ல ஆசை வைச்சிருக்கறவங்க கொஞ்சம் உஷார்..

சரி இப்போ நாம மொபைல் பாதுகாப்பு பிரச்சினைக்கு வருவோம்.. 10000 ரூபாயிக்கு மேல வாங்கற மொபைல்களுக்கு எல்லாம் இப்போ.. இன்ஸூரன்ஸ் கவர் பண்றாங்க.. மொபைல்ல ஏதாவது பிரச்சினைனா.. சரி பண்ணிட்டு இந்த இன்ஸூரன்ஸ் கிளைம் பண்ணிக்க முடியும் (அப்படின்னு சொல்வாங்க..:-) ).. அப்போ கேரண்டி வாரண்டி எல்லாம் தர்றாங்களே.. அதெல்லாம் எதுக்குன்னு இப்போ கேக்காதீங்க.. :-)

என் நண்பன் ஒருவன்.. தனக்கு மொபைல் வாங்கறதுக்கு என்னையும் கூப்பிட்டிருந்தான்.. போய் நிறைய மாடல்ஸ் பார்த்தோம்.. அவனுக்கு ஃபிளிப் டைப்னா ரொம்ம்ம்பப் பிடிக்குமாம் (:-D).. நிறைய ஃபிளிப் டைப் மாடல்ஸ் பார்த்தான்.. அவன் வாங்கியது சோனி எரிக்சன்ல ஒரு ஃபிளிப் மாடல்.. அப்போ அந்த மொபைலின் விலை 14000ரூபாய்.. 10000ரூபாயிக்கு மேலே மொபைல்ஸ் வாங்கினால்.. இன்ஸூரன்ஸ் கவரேஜ் இருக்கு சார்.. அதுக்கு நீங்க எக்ஸ்ட்ரா 1000ரூபாய் பே பண்ணினால் போதும்.. லைஃப் டைம் கவரேஜ் சார்.. அப்படின்னு கடைக்காரன் சொல்ல.. இதுவும் நல்லாயிருக்கேன்னு நண்பனும் போட்டுட்டான்..

இப்போ கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவனுடைய மொபைல் கீழே விழுந்து மொபைல் டிஸ்ப்ளே போயிடுச்சு.. செலவு 3200ரூபாய்.. நான் மேலே சொன்னமாதிரி.. இந்த டைப் மொபைலை ஓப்பன் பண்ணினா.. மொபைல் ஹேங் ஆகற பிரச்சனை வந்தாலும் வரும்.. பினிஷிங் சரியாக வராதுங்க.. ஓகேன்னா பண்ணிடலாம்னு சொன்னாங்க.. வேற வழி.. சரின்னு ஒத்துக்கிட்டாச்சு.. மொபைல் ரெடியாகி வந்தாச்சு.. சரி இப்போ இன்ஸூரன்ஸ் கிளைம் பண்ணிக்கலாம்னு.. அந்த பில்லை அட்டாச் பண்ணி அனுப்பினால்.. மொபைல் டிஸ்ப்ளே இதுல நாங்க கவர் பண்ணலை.. உங்களுக்கு பணம் கிடைக்காதுன்னு சொல்லி.. திரும்ப எல்லா டாக்குமெண்ட்ஸையும் அனுப்பி வைச்சுட்டாங்க.. அப்புறம் என்னத்துக்கு அந்த இன்ஸூரன்ஸ் கவரேஜ்ஜுன்னு தெரியல.. மொபைலும் கடைக்காரன் சொன்னமாதிரி ஹேங் ஆகற பிரச்சினை வர ஆரம்பிச்சுடுச்சு..

காஸ்ட்லி மொபைல்ஸ் வாங்கும்போது.. இன்ஸூரன்ஸ் போடற ஐடியா இருந்தால் கொஞ்சம் யோசிச்சுக்கங்க.. கண்டிப்பாக பணம் வேஸ்டுதான்..

Saturday, December 18, 2010

பெண்ணுக்குள் இருக்கும் கடவுள்

பெண்கள் மனசுல என்ன இருக்கு?.. அவங்க என்ன விரும்பறாங்க.. இதெல்லாம் என்ன பி.எச்டி படிச்சுட்டு வந்தாலும் தெரிஞ்சுக்க முடியாது.. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மனசுல ஆயிரம் இரகசியங்களையும் விருப்பங்களையும் குறைகளையும் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.. மிகவும் சந்தோசமாக இருக்கறதால நினைச்சுட்டு இருக்கற பெண்ணுக்குக்கூட அவங்க ஆழ்மனசுல நிறைய விருப்பங்களும்.. தன்னுடைய இணையின் மீது குறைகளும் இருக்கத்தான் செய்கிறது..

ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்.. இங்க நான் சொல்றது அவங்களுக்கு நகை, புடவை வாங்கிக் கொடுப்பதைப் பற்றில்ல..

ஒரு ஆண்.. பெண்ணை விட உடல் அளவில் பலம் கொண்டவனாக இருந்தாலும்.. மனதளவில் பெண்களே மிகவும் பலம் கொண்டவங்களாக இருக்காங்க.. சிறுவயதில் இருந்தே.. உடலளவில் மிகுதியான வலிகளை அனுபவிச்சுட்டு இருக்கறதால்கூட மனதளவில் மிகுந்த தைரியத்தைக் கொண்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்..

உலகத்துல ஆண்களே.. பெண்களை ஆள்கிறவர்களாக நமக்குள்ள இல்லூசன் இருக்கு.. ஆனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆயிட்டாலோ.. இல்ல காதலிக்க ஆரம்பிச்சிட்டாலோ.. முதல்ல பெண்தான் இதுக்குண்டான காரியங்கள்ல இறங்கறாங்க.. ஆணைத் தன் வசப்படுத்தி ஆளனும்ங்கறதுக்கு முதல் ஸ்டெப் என்னன்னா.. "ஏங்க நீங்க கரெக்டாக 9 மணிக்கு சாப்பிட்டுடுங்க, உங்க போன் காலை 6 மணிக்கு எதிர் பார்த்துட்டு இருப்பேங்க, 8 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுங்க" அப்படின்னு அன்பாகக் கட்டளையிடுவாங்க.. பெரும்பாலான ஆண்களுக்கு அந்த வார்த்தைகள் ஆரம்பத்துல அப்படியே உருகிப்போய்.. சொல்றதை அப்படியே செய்வாங்க.. உண்மையைச் சொல்லப்போனால்.. அந்தப் பெண் குறிப்பிட்ட நேரம் எப்போ வரும்னு.. 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே..

தினமும் சொல்ற நேரத்தைக் கடைபிடிப்பது என்பது முடியாத காரியமாயிடுது.. ஒரு மாதமோ அல்லது அவர்களுக்கு முடியற வரைக்குமோ கேட்பாங்க.. அப்புறம்தான் இந்தப்பெண் தன்னை டாமினேட் பண்றாளோன்னு எண்ணம் வரத்தொடங்கியவுடன் முரண்டு பண்ண ஆரம்பிப்பாங்க.. உடனே பொண்ணுக்கு பொசசிவ்நெஸ் வந்திடும்.. நான் சொன்னதை முன்ன எல்லாம் கேட்டுட்டு இருந்தீங்க.. இப்ப என்ன வந்ததுன்னு சண்டை ஆரம்பிக்கும்..

இந்த அன்புக் கட்டளைகளை பெண்கள் இடும்போதே.. இல்ல அந்த நேரங்கள்ல எனக்கு வேற வேலை இருக்குன்னு ஆண் சொல்லும் போது.. பெண்ணோட முதல் முயற்சி தோல்வியடையுது.. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதற்குண்டான முயற்சி செய்துட்டேதான் இருப்பாங்க.. அவங்களோட எண்ணம் வெற்றியடையும் வரையோ.. அந்த ஆணிடம் இருந்து அடக்குமுறைகள் கையாளப்படும் வரையோ அந்த முயற்சி தொடர்ந்துட்டேதான் இருக்கும்.. பலர் தனது அன்பைக் கொண்டு இந்த முயற்சியில் ஜெயிச்சிடறாங்க.. சிலர் தோல்வியடையறாங்க..

ஆண் ஆரம்பித்துல இருந்தே தன்னுடைய ரியாலிட்டியை மீறி செயல்படாம இருந்தால்.. எந்த சண்டையும் வராதுன்னுதான் நினைக்கிறேன்.. இதுதான் நான்.. இப்படி நான் இருப்பேன்.. இப்படி உன்னிடம் எதிர்பார்க்கறேன்னு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கிட்டாங்கன்னா ஒரு புரிதல் வந்திடும்..

காதல் பண்றவங்ககிட்டயும்.. புதியதாக கல்யாணம் நிச்சயம் ஆனவங்ககிட்டயும்தான் இந்த ரியாலிட்டி பிரச்சினை அதிகமாக இருக்கு..

அவர்கள் காதல் மயக்கத்துல ஒருவருக்கொருவர்.. அப்படி இப்படின்னு பீலா விட்டுக்கறதும்.. நைட் முழுக்க தூங்காம பேசிக்கிட்டே இருக்கறதையும் பல இடங்கள்ல பார்க்க முடியுது.. ஆனால் இதே நிலைதான் எப்பவும் தொடருமா?.. கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நிலைமை மாறுது.. வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டு காதல் பண்ணிட்டு இருந்தவங்க.. இப்போ பக்கம் பக்கம் ஒரே அறையில்.. கொஞ்ச நாட்கள்ல அவங்க முன்பு செய்துட்டு இருந்த விசயங்கள் போலியாகத் தோன்ற ஆரம்பிக்குது.. அதை ஆண் வெளிப்படையாகக் காட்டறான்.. பெண் அப்படிக்காட்டறது இல்ல.. அதனால் நீங்க முன்ன மாதிரி இல்ல.. அப்போ மட்டும் என்னை அப்படி..இப்படின்னு கொஞ்சத் தெரிஞ்சதான்னு சண்டை ஆரம்பிக்குது.. அதனால் காதல் பண்றவங்களும் சரி.. புதியதாக நிச்சயம் ஆனவங்களும் சரி ரியாலிட்டியை மனசுல வைச்சுக்கிட்டு பழகினாங்கன்னா இந்தப் பிரச்சினை கண்டிப்பாக ஏற்படாது.. மிகைப்படுத்தி நடந்து கொண்ட பிறகு.. உண்மையான நடவடிக்கையைக் காமிச்சாதான் ஒத்துவராது..


நான் தொடக்கத்தில் சொல்லியிருந்தது போல ஒரு பெண்.. ஆணை ஆளமுடியாம தோல்வியடைந்தால்.. அவர்களோட முயற்சி எப்பவும் நின்று போயிடறதில்ல.. அடுத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்கிட்ட அந்த எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பிக்கறாங்க.. அப்படின்னா.. கொடுமைப்படுத்த ஆரம்பிக்கறாங்கன்னு சொல்ல வரல.. அன்பால் கட்டளையிட ஆரம்பிக்கறாங்க.. உதாரணத்துக்கு.. பார் உன் தகப்பன்தான் நான் சொல்றது எதையுமே கேக்கல.. நீயாவது கேள்டா அப்படின்னு சொல்ல ஆரம்பிப்பாங்க.. பிள்ளைக்கு அப்போது என்ன தோனும்.. தனது அப்பா மேல் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தாலும்.. அம்மா சொல்றதைத்தான் முதல்ல கேக்கனும்னு ஒரு விதை விழுந்திடும்..

பெண்ணின் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்கறவரை அந்தப் பெண்ணுக்கும் சரி.. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்.. பெண்ணின் எண்ணங்கள் தவறாக இருக்கும்போது.. இந்த முயற்சி வெற்றி அடைந்தாலும்.. தோல்வி அடைந்தாலும் கஷ்டம்தான்..

நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது..

கடவுள் 
உலகைப் படைத்தார்
பெண்
உயிர் கொடுத்தாள்
அம்மா
இவர்தான் என் கடவுள்!

டிஸ்கி: இது ரொம்ப சென்சிட்டிவான மேட்டர்.. இதுல நான் ஆணைதான் அல்லது பெண்தான் உயர்ந்தவங்கன்னு சொல்ல வரல.. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட முதல் காரணம் என்னவாக இருக்கும்னு யோசிக்கும்போது இப்படியெல்லாம் தோனுச்சு.. சோ இதெல்லாம் கரெக்டாக இருந்தால்.. தப்பிச்சேன்.. தப்பாக இருந்தால் ரொம்பவும் திட்டீடாதீங்க.. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.. :-)


படம்: நன்றி கூகுள்

Thursday, December 16, 2010

கிரெடிட் கார்டு "அபாயங்கள்"


கிரெடிட் கார்டு புதுசா யூஸ் பண்ண ஆரம்பிக்கறவங்க.. கஸ்டமர்கேர்ல வேலை செய்றவங்களால.. சந்திக்கற பிரச்சினைகளைப் பற்றி கிரெடிட் கார்டும்.. கஸ்டமர்கேரும்.. அப்படிங்கற பதிவுல சொல்லியிருந்தேன்..

என்னுடைய அந்தப் பதிவை தினமலரும்.. "தெரிஞ்சுக்கோ"ன்னு ஒரு திருட்டுப் பதிவரும் சுட்டிருந்தாங்க.. அந்த விசயத்தை எனக்குத் தெரியப்படுத்திய நண்பர்கள் ராஜா மற்றும் நா. மணிவண்ணன் இருவருக்கும் எனது நன்றிங்கள்..

திருட்டுப் பதிவரின் வலைத்தளத்திற்குப் போய் அனைவரும் திட்ட.. அந்தத் திருட்டுப் பதிவர் (எத்தனை முறைத் திருட்டுப் பதிவர்.. திருட்டுப் பதிவர்ன்னு சொல்றாம் பாருன்னு பார்க்கறீங்களா.. அப்படி சொல்லியாவது மனதை ஆற்றிக்க வேண்டியதுதான்.. :-) ).. என்னுடைய பதிவை அவருடையத் தளத்தில் இருந்து அடுத்த நாள் அழித்து விட்டார்.. தினமலருக்கு நான் இதுவரை மூன்று முறை மெயில் பண்ணிட்டேன்.. அவங்களுக்கு இது யூசுவலான விசயம் போல.. எந்த ரிப்ளையுமே கொடுக்கல.. நிறைய நண்பர்கள் பின்னூட்டத்தில் அவர்களை சட்டப்படி அணுகும்படிக் கூறியிருந்தார்கள்.. என்னுடைய வேலைகளுக்கு மத்தியில் அவர்களை சட்ட ரீதியாக அணுகுவதெல்லாம் முடியாத காரியம்.. ஆனால் எனக்கு ஆறுதலாகவும்.. ஆதரவளித்தும் பேசிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..

இப்பதிவில் கிரெடிட் கார்டை ரொம்ப காலமாக யூஸ் பண்றவங்க.. சந்திக்கற மோசடிகளைப் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்கிறேங்க..

கிரெடிட் கார்டில் பல வகைகள் உண்டுன்னு எல்லாருக்கும் தெரியும்.. அதுல பிளாட்டினம் கார்டு வகையில் அதிகமான கிரெடிட் லிமிட் கிடைக்கும்.. நம்முடைய சாலரி மாதம் 50000 ரூபாயைத் தாண்டினால் தொடக்கத்திலேயே பிளாட்டினம் கார்டு தந்திடுவாங்க.. நிறையப் பேருக்கு அவங்களோட கோல்டு மற்றும் டைட்டானியம் கார்டுல இருந்து அப்கிரேட் பண்ணிக்கூட பிளாட்டினம் கார்டு தருவாங்க.. அவங்க எல்லாம் பெர்பெக்டா தங்களோட பில்லைக் கட்டியிருப்பாங்க.. அதான் பிளாட்டினம் கார்டு கொடுத்திட்டாங்கன்னு நீங்க நினைத்தால் அதான் தப்பு..

அந்த கஸ்டமர்ஸ் ஒவ்வொரு மாதமும் அதிகமாக டிரான்சக்சன்ஸ் காமிச்சு.. அடிக்கடி சரியான தேதியில பில் கட்டாம விட்டு.. அப்புறம் வட்டியோட கட்டற ஆளுங்களாக இருப்பாங்க.. சோ.. இன்னும் கிரெடிட் லிமிட்டை அதிகம் பண்ணிக் கொடுத்தால்.. அதையும் செலவு பண்ணிட்டு.. இன்னும் அதிகமாக தண்டம் கட்டுவாங்கள்ல.. அந்த பிளான்தான் பேங்க்காரங்களுக்கு..

இந்த ஆண்டு முடிந்தால்.. நான் என்னுடைய கோல்டு கார்டை வாங்கி மூன்று ஆண்டுகளாகிறது.. எந்த அப்கிரேடும் இதுவரை இல்ல.. அதே கிரெடிட் லிமிட்தான்.. ஏன்னா இந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறைகூட பில்டேட் தவறினதே இல்ல (அடுத்த மாத பில்லை நினைத்தால்தான் பக்குன்னு இருக்கு.. :-( ).. சோ என்னால எந்த யூஸும் இல்ல அவங்களுக்கு அதான்..

கிரெடிட் கார்டு மூலமாக லோன்கூட அப்ளை பண்ணிக்க முடியும்.. என்னுடைய கிரெடிட் லிமிட்ல இருந்து 75% சதவீதத்தை லோனாக வாங்கிக் கட்டமுடியும்.. வட்டி தீட்டிடுவாங்க..
என்னுடயை நண்பர் ஒருவர்.. தன்னுடைய கிரெடிட் கார்டில் இருந்து 30000 ரூபாய் லோன் வாங்கி ரெண்டு மாதத் தவணையைக் கரெக்டாகக் கட்டியிருந்தார்.. அவருக்கு கஸ்டமர்கேர்ல இருந்து போன்.. சார் உங்க டிரான்ஸக்சன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.. அதனால உங்களுக்கு பிளாட்டினம் கார்டு இஷ்யூ பண்றோம் சார்.. கங்கிராட்ஸ்னு சொல்ல.. நண்பருக்கு பயங்கரமான சந்தோசம்.. ஆஹா!! கிரெடிட் லிமிட் நிறைய வருமே.. சூப்பர்னு நினைச்சுட்டு ஓகே சொல்லிட்டார்.. ஒரு வாரத்துல பிளாட்டினம் கார்டும் வந்திடுச்சு.. தொடர்ந்து அடுத்த மாத பில்லில் வந்தது அவருக்கு ஆப்பு..

அவருடைய லோன் அமெளண்ட் 30000 ரூபாயில் இருந்து 78000 ரூபாய் என்று ஆகியிருந்திருக்கு.. அந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்க முடியும்.. ஆடிப்போயிட்டார்.. கஸ்டமர்கேருக்கு போன் பண்ணி விசயம் கேக்க.. சார் கன்சர்ன் டிபார்மெண்டுக்கு டிரான்ஸ்பர் பண்றோம் பண்றோம்னு காலை மாத்திவிட்டுட்டே இருந்தாங்க.. அப்படியே லைன் கட்டாயிடும்.. கஸ்டமர்கேருக்கு ஃபோன் பண்றது எல்லாம் டோல்பிரியும் கிடையாது.. மனிதர் ரொம்ப நொந்து போயிட்டார்.. ஒருமாதம் பக்கம் இப்படியே மல்லுக்கட்டிட்டு இருந்தார்.. ஒரேஒரு முறை விசயத்துக்கு இப்படி ரிப்ளை வந்திருக்கு..
"சார் உங்க கார்டை அப்கிரேட் பண்றப்போ ஏதாவது பிரிவியஸ் பேலன்ஸ் பெண்டிங் இருந்தால்.. வட்டியோட இன்கிரீஸ் பண்ணிடுவோம் சார்.. உங்களுக்கு கார்டு இஷ்யூ பண்றப்பவே அக்சப்டன்ஸ் கேட்டுத்தான் பண்ணியிருப்பாங்க" அப்படின்னு ரிப்ளை..

நண்பருக்கு பிரசர் பயங்கரமாக ஏறிடுச்சு.. இனி இவனுங்க வேலைக்கு ஆகமாட்டாங்கன்னுட்டு.. அவர் கஸ்டமர்கேருக்கு போன் பண்ணிய கால் ஹிஸ்டரி, தன்னுடைய லோன் டீட்டெய்ல்ஸ் எல்லாத்தையும் ரிசர்வ் பேங்க்கிற்கு தெளிவாக எழுதியும்.. டாக்குமெண்ட்சை அட்டாச் பண்ணியும் அனுப்பிட்டார்..

ரிசர்வ் பேங்க்கிற்கு அனுப்பிய ரெண்டாவது நாள்.. அந்த பேங்க்கோட மேனேஜர் போன் பண்றார்.. சார் ரிசர்வ் பேங்குல எதுக்கு கம்ப்ளைண்ட் பண்ணீங்க.. உங்களோட பிரச்சனையை உடனே சால்வ் பண்றோம்.. நீங்க எப்பவும் கட்டவேண்டிய அமெளண்டை இப்போ இருந்து கட்டுங்கன்னு சொல்லியிருக்கார்.. என் நண்பர் இந்த ஏய்க்கற வேலையெல்லாம் வேண்டாம்.. என்னுடைய அகெளண்ட்ல சரியான கணக்கு வரும்வரை பணம் கட்ட மாட்டேன்னுட்டு சொல்லிட்டார்.. அதுக்குப்பறம்.. 78000 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக குறைந்து வந்திருக்கு.. அதுக்கு மேல கணக்கை சரிசெய்ய முடியலையாம்.. நீங்க உங்க அமெளண்டை மட்டும் கட்டுங்க சார்.. பின்னாடி உங்க கணக்கை சரிசெய்திடறோம்.. அப்படின்னு சொல்ல.. நீங்க சரிசெய்ற வரைக்கும் லோன் அமெளண்டைக் கட்ட முடியாதுன்னு கறாராக சொல்லிட்டார் நண்பர்.. இப்போ ஒரு ஆண்டுக்கு மேலயே ஆயிடுச்சு.. அவங்க அவரோட கணக்கை சரிசெய்யவும் இல்ல.. இவர் லோன் அமெளண்டைக் கட்டவும் இல்ல.. கிரெடிட் கார்டு யூஸ் பண்றதையே நண்பர் விட்டுட்டார்..

நம்ம நண்பர் நல்ல விவரமான ஆளாக இருந்ததால இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிச்சிட்டார்.. இதுவே விவரம் தெரியாத ஆளாக இருந்திருந்தால் முதுகுல டின் கட்டியிருப்பானுங்க அந்த பேங்க்காரனுங்க..

ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்திருக்கற நண்பர்களுக்கு.. உங்க கார்டை அப்கிரேட் பண்றேன்னு கஸ்டமர்கேர்ல இருந்து கேட்டால்.. ஏதாவது பிரிவியஸ் பேலன்ஸ் பெண்டிங் இருக்கான்னு பார்த்துக்கங்க.. அப்புறம் புதுக்கார்டைப் பற்றி அனைத்து சந்தேகங்களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க..

முழிச்சுக்கங்க.. பிழைச்சுக்கங்க..

டிஸ்கி 1: கிரெடிட் கார்டை வைச்சு நடத்தப்படற மற்றொரு மோசடியைப் பற்றியும்.. இந்தப் பதிவிலே எழுதலாம்னு இருக்கேன்.. இதுவே ரொம்ப லென்தியாக ஆயிட்டதால மற்றொரு முறை எழுதறேன்..

டிஸ்கி 2: காஸ்ட்லி மொபைல்ஸ் வாங்கற என்னமா உங்களுக்கு?.. அதில் நடக்கும் ஒரு மோசடி பற்றி அடுத்த பதிவில் எழுதறேன்.. போயிட்டு வர்றேன்.. :-)

படங்கள்: நன்றி கூகுள்


Wednesday, December 15, 2010

உலகைக் காக்கும் முயற்சியில் புரூஸ் வில்ஸ்

12 Monkeys - 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்..

1997 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஒருவிதமான வைரஸ் தாக்கி மனித இனமே அழிஞ்சுடுது..

படம் வருங்காலத்துல ஏதோ ஒரு ஆண்டுல இருந்து தொடங்குது.. வைரஸ் தாக்குதல்ல தப்பிச்சு.. உயிரோட இருக்கற மனிதர்கள்.. பூமிக்கு அடியில தங்களோட இருப்பிடங்களை அமைச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க.. பூமியைத் திரும்பவும் விலங்குகள் ஆட்சி செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. பூமியைத் தாக்கியிருக்கற வைரஸ் என்ன வகையின்னு தெரிஞ்சுக்க முடியாமல்.. அதுக்கு எந்தக் கியூரும் இதுவரைக் கண்டுபிடிக்க முடியல..

பூமிக்கு அடியில வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்கற மனிதர்களோட இருக்கற அறிவியலாளர்கள்.. அந்த வைரஸை அழிக்கறதுக்கான முயற்சியில ஈடுபட்டுட்டு இருக்காங்க.. 1997 ஆம் ஆண்டு இந்த வைரஸைப் பரப்பினது.. 12 மங்கிஸ்னு ஒரு தீவிரவாதக்குழு அப்படிங்கற விசயம் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு..

புரூஸ் வில்ஸை.. டைம் மெசின் மூலமாக 1996 ஆம் ஆண்டோட இறுதிக்கு அனுப்பி.. அந்த 12 மங்கிஸ் குருப்பைப் பற்றியும்.. வைரஸைப் பற்றியும் தகவல் தெரிஞ்சுட்டு வரச்சொல்லி அனுப்பறாங்க.. ஆனால் 1996 ஆம் ஆண்டுக்கு அனுப்பப்படறதுக்கு பதிலாக.. 1990 ஆம் ஆண்டுக்கு அனுப்பப்பட்டுடறார்.. அங்கே போய் அவரும் பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு நான் புயூட்சர்ல இருந்து வந்திருக்கேன்.. நீங்கள் எல்லாரும் செத்துப் போயிட்டீங்க.. நீங்க எல்லாரும் இறந்தகாலத்துல இருக்கீங்க.. அப்படின்னெல்லாம் உளற.. அவரைத் தூக்கி மெண்டல் ஹாஸ்பிட்டல்ல போட்டுடறாங்க..

புரூஸ்வில்ஸுக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு கனவு வந்துட்டே இருக்கு.. கனவு என்னன்னா.. அவரோட எட்டு வயசுல ஒரு ஏர்போட்டுல இருக்கறப்போ.. ஒருத்தரைப் போலீஸ் சுடறாங்க.. சுடப்பட்டவரைப் பார்த்து "நோ"ன்னு கத்திக்கிட்டே ஒரு பொண்ணு ஓடிப்போயி அவரைத்தன் மடியில வைச்சிக்கிட்டு அழுகுது.. தினமும் இந்தக் கனவையே காண்கிறார்..

மெண்டல் ஹாஸ்பிட்டல்ல பிராட் பிட்டை சந்திக்கறார்.. அவருக்கு கொஞ்சம் மூளை கலங்கியிருக்கு.. அவருக்கு ட்ரிட் பண்ண வர்ற லேடி டாக்டரைப் பார்க்கற புரூஸ் வில்ஸ் உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்னு சொல்ல.. எனக்கும் உன் முகம் ரொம்ப பெமிலியராக இருக்குன்னு சொல்றாங்க.. சோ அவங்கதான் கதாநாயகி..

தவறாக 1990 ஆம் ஆண்டுக்குப் போன புரூஸ் வில்ஸை மீண்டும் அழைச்சுக்கறாங்க சயண்டிஸ்ட்ஸ்.. திரும்பவும் கரெக்டான வருசத்துக்கு அனுப்பறோம்.. சரியாக வேலையை முடிச்சுட்டு வான்னு அவரை வார்ன் பண்ணி அனுப்பறாங்க.. ஆனால் இப்போ அவர் போனதோ.. முதல் உலகப்போர் நடந்துட்டு இருக்கற ஒரு வார் ஃபீல்டு.. அங்கே அவருக்கு ஒரு குண்டடி பட்டுடுது.. இந்த தவறை சரிசெய்து.. அவரைக் கரெக்டாக.. 1996 ஆம் ஆண்டு இறுதிக்கு அனுப்பறாங்க சயண்ட்டிஸ்ட்ஸ்..


குண்டடிபட்டு இருக்கற புரூஸ் வில்ஸ்.. 1996 ஆம் ஆண்டுல.. ஒருகாரை வழிமறிச்சு ஏறிக்கறார்.. அந்தக் கார்ல அவருக்கு முன்பு சிகிச்சை அளித்த லேடி டாக்டர்தான் இருக்காங்க.. அவரை மிரட்டி.. தன்னோட குறிப்புகள்ல 12 மங்கிஸ் குரூப் இருந்ததா சொல்லப்படற.. பிலடெல்பியா நகரத்துக்குப் போக சொல்றார் புரூஸ் வில்ஸ்.. அவரும் அழுதுக்கிட்டே கூட்டிட்டுப் போறார்..

12 மங்கிஸ் குரூப்போட தலைவன் யாருன்னா.. முன்பு மெண்டல் ஹாஸ்பிடல்ல புருஸ் வில்ஸ் சந்திச்ச பிராட் பிட்தான்.. பிராட் பிட் இன்னும் மறை கழண்ட மாதிரியேதான் இருக்கார்..


நான் வருங்காலத்துல இருந்து 12 மங்கிஸ் அப்படிங்கற குரூப்பைக் கண்டுபிடிக்க வந்துருக்கேன்னு நீ உளறிட்டு இருந்ததை வைச்சுத்தான் நான் இந்த குரூப்பையே ஃபாம் பண்ணினேன்.. நீ சொன்னமாதிரி மனித இனத்தை அழிப்பேன்.. இந்த ஐடியாவே நீதான் எனக்குக் கொடுத்த.. அப்படின்னு பிராட்பிட்.. புரூஸ் வில்ஸ் மேலயே பழியைத் தூக்கிப் போடறார்.. இப்படி அவர் சொல்ல.. புரூஸ்வில்ஸுக்கு பயங்கரமான அதிர்ச்சி.. ஆனால் பிராட் பிட்டுக்கு வைரஸைப் பற்றியெல்லாம் எந்த நாலேட்ஜும் இல்ல..

சோ.. 12 மங்கிஸ் அப்படிங்கறது ஒரு சப்பையான குரூப்.. சும்மா காலித்தனம் பண்றதுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்குன்னும்.. வேற யாரோதான் வைரஸ் தாக்குதலுக்கு காரணம்னும் புரிஞ்சுக்கறார் புரூஸ் வில்ஸ்..

புரூஸ் வில்ஸ் சொல்லும் விசயங்களோட இப்போ நடக்கற நிகழ்வுகள் எல்லாம் ஒத்துப்போறதால.. அவர் சொல்றது எல்லாம் உண்மைதான்னு நம்ப ஆரம்பிக்கறார் அந்த லேடி டாக்டர்.. நடக்கப்போறதை எப்படியும் தடுக்க முடியாது.. அதனால இருக்கற வரைக்கும் என்ஜாய் பண்ணலாம்னு ரெண்டு பேரும் கிளம்பறாங்க அந்த ஊரை விட்டு..

கிளைமாக்ஸ்.. புரூஸ் வில்ஸும், லேடி டாக்டரும்.. ஏர்போர்ட் போக.. அங்கே இருக்கற ஒரு ஆள்தான் வைரஸைக் கையில வைச்சிருக்கான்னு புரூஸ்வில்ஸுக்கு பியூட்சர்ல இருந்து இன்ஃபர்மேசன் வருது.. அந்த ஆளைக் அவர் கொல்லப்போக.. போலீஸ் புரூஸ் வில்ஸை சுட.. லேடிடாக்டர்.. அவரைத் தன்னோட மடியில கிடத்தி அழறாங்க.. அதை ஒரு சின்னப் பையன் கலக்கமாகப் பார்த்துட்டு இருக்கான்.. அது யாருன்னா... அதுதான் சின்னப் பையனாக இருக்கற புரூஸ் வில்ஸ்..

வைரஸோட அந்த ஆள் எஸ்கேப்.. முடிவை நாமலே கணிச்சுக்க வேண்டியதுதான்..

மிகவும் அருமையான கதைக்களம்.. ஹாலிவுட்காரங்களுக்கு உலகத்தை அழிச்சு அழிச்சு விளையாடறதுதான் ரொம்பப் பிடிச்சுருக்கு போல.. அதுவும் உலகம் அழியெறதெல்லாம் அமெரிக்காவுல இருந்தேதான் ஆரம்பிக்கும்.. அதேபோலதான் இந்தப் படமும்.. 2012 திரைப்படம் மாதிரி பிரமாண்டமாக எடுத்திருக்க வேண்டிய திரைப்படம்.. ஆனால் ரொம்ப லோ பட்ஜெட்ல எடுத்துட்டாங்க போல.. எல்லாமே சீனையுமே சின்ன செட்டைப் போட்டே முடிச்சுட்டாங்க..

பூமியில மனிதர்கள் எல்லாம் அழிஞ்சிடறாங்க.. விலங்குகள் ஆட்சி செய்ற பூமியில போய்.. சில பூச்சிகளோட சேம்பில்ஸை எடுத்துட்டு வரச்சொல்லி புரூஸ் வில்ஸை மேலே அனுப்பறாங்க.. பூமிக்கு மேல அவர் வர்றதை எவ்வளவோ திரில்லாகக் காட்டியிருக்க முடியும்.. ஆனால் பூமியில விலங்குகள் நிறைய நடமாடுதுன்னு காமிக்கறதுக்காக.. ஒரே ஒரு சிங்கத்தையும்.. கரடியையும் மட்டும் அவர் பார்க்கறதாகக் காமிச்சிட்டாங்க..

வைரஸுக்குப் பயந்து அண்டர்கிரெளண்ட்ல மனிதர்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படிங்கறதுதான் கான்செப்ட்.. ஆனால் அந்த விசயத்தைக் காமித்ததும் சரியில்ல... ஏதோ கூண்டு கூண்டாக காமிச்சு முடிச்சுட்டாங்க.. மற்றொரு காமெடி.. சயண்டிஸ்ட்ஸ்.. அவங்களை என்னடான்னா.. மந்திரவாதிகள் மாதிரி காமிச்சு பில்டப் குடுத்துட்டாங்க..

புரூஸ் வில்ஸ் ஒவ்வொரு முறையும் காலம் மாறிப் போயிடறதையும் நல்ல வெயிட்டாகக் காமிச்சிருந்திருக்கலாம்.. முதலாம் உலகப்போர் நடந்திட்டு இருக்குங்கறதைக் காமிக்க.. நாலுபேர் அவரைச் சுத்திக் கத்திக்கிட்டே சுடறமாதிரி ஒரு சீன் அவ்லோதான்..

இப்படி எடுத்திருக்கலாம்.. அப்படி எடுத்திருக்கலாம்னு குறை சொல்லிட்டு இருந்தாலும்.. அடுத்து என்ன நடக்கும்னு விறுவிறுப்பாகவே படத்தைக் கொண்டு போயிருக்காங்க.. சில இடங்கள் மட்டும் எதார்த்தம் இல்லாம..

சோ.. நம்ம ஹீரோ உலகத்தைக் காப்பாற்றாமயே இறந்திடறார்.. நல்ல மூவி..

படங்கள்: நன்றி கூகுள்

Monday, December 13, 2010

தூங்காத இரவுகள்


பெங்களூர்ல இருந்து நம்ம ஊருக்குப் போறதுக்கு கரெக்டா 10 மணி நேரத்துல இருந்து 11 மணி நேரமாயிடுங்க.. பெங்களூர் டூ சேலம்.. அப்புறம் அங்கேயிருந்து பழனிக்கு வண்டிகள் ஒரு மணி நேரத்துக்கு ஒன்னுன்னு இருக்கும்.. நான் எப்பவும் இந்த மாதிரி மாறி மாறி போறதை விரும்பறதில்லை.. ஏன்னா பஸ்ல ஏறி உட்கார்ந்து கண்டக்டர் டிக்கெட் கொடுக்கற வரைக்கும்தான் முழுச்சிருப்பேன்.. அப்புறம் அடுத்து வண்டி எங்கெங்க நிக்குதுதோ அங்கே மட்டும்தான் முழிப்பு வரும்.. அதனால எப்பவும் பிரைவேட் பஸ்களைத்தான் விரும்பறது.. பஸ் ஏறி தூங்கினமா.. ஊர்ல வந்து கண்ணு முழிச்சமா.. இப்படி இருக்கறதுதான் பிடிக்கும்.. நிறையப் பேரைப் பார்த்து இருக்கேன்.. நைட் முழுக்க கொட்டக் கொட்ட கண் முழிச்சிட்டே வருவாங்க... நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராது...

சாதாரண பேருந்துகளை நான் விரும்பாதததுக்கு இன்னொரு காரணம்.. அம்மாதிரியான பேருந்துகள்ல 3 மூன்று பேர் உட்கார்ற மாதிரி ஒரு வரிசையிலயும்.. ரெண்டு பேர் உட்கார்ற மாதிரி ஒரு வரிசையிலும் சீட்கள் அமைச்சிருப்பாங்க.. எந்தப் பக்கம் உட்கார்ந்தாலும் சரி.. கூட உட்கார்றவங்க கொஞ்சம் குண்டா இருந்துட்டாங்கன்னா.. ரொம்ப அசெளரியமாகப் போயிடும்.. காரணம் நம்ம அரசாங்கப் பேருந்துகள்ல சீட் அவ்வளவு அசெளரியமாக இருக்கும்.. இதுல பக்கத்துல உட்கார்ந்து வர்றவங்க தூங்கி நம்ம மேல விழ ஆரம்பிச்சிட்டாங்கன்னா.. அப்புறம் நாம் இறங்கற வரைக்குமோ இல்ல அவங்க இறங்கற வரைக்குமோ அவங்க தலைப் பிடிச்சு தூக்கி விட்டுட்டேதான் இருக்கனும்.. அவங்களோட பாரத்தையும் சுமந்துட்டே.. ஒரே எரிச்சலாய் போயிடும்..

இதுல சிலர் பஸ் ஏர்றதுனாலே தண்ணியடிச்சுட்டுதான் ஏறுவாங்க.. பயங்கரமாக நாறித்தொலைக்கும்.. தலைவலி வந்துடும்.. இதனால ஊருக்குப் போறதுனாலே எப்பவுமே பிளான் பண்ணி.. டிக்கெட் புக் பண்ணிப் போயிடுவேன்.. சில நேரங்கள்ல திடீர்னு ஊருக்கு கிளம்ப வேண்டியிருக்கும்.. இல்லன்னா.. பிரைவேட் பஸ்கள்ல டிக்கெட் கிடைக்காமப் போயிடும்.. அந்த சமயங்கள்ல மேல் சொன்னமாதிரி ஏதாவது பிரச்சினைகளைத் தாங்கிக்கிட்டுத்தான் போக வேண்டியிருக்கும்..

இந்தமாதிரி எதிர்பாராத பயணங்கள்ல பெரும்பாலும் SETC கிடைக்குதான்னு பார்ப்பேன்.. ஏன்னா.. SETC பஸ் புல்லாயிடுச்சுன்னா.. இடையில இருக்கற எந்த ஊர்களுக்குள்ளயும் நுழையாம நேரா பைபாஸ் ரோட்ல போயிட்டே இருப்பாங்க..

ஒருமுறை ஊருக்குப் போறதுக்கு பஸ்ஸுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ.. ஒரு SETC வந்தது.. உள்ளே சீட் எல்லாம் இல்லப்பா.. டிரைவர் சீட் பின்னாடி உட்கார்ந்துகறதுனா ஏறிக்கோ அப்படின்னார் கண்டக்டர்.. சரி.. நார்மல் பஸ்ல போனாலும் ரொம்பக் கஷ்டம்தான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடலாம்னு ஏறிட்டேன்.. ஒசூர் தாண்டி கொஞ்சம் நேரம் இருக்கும்.. எப்பவும் போல தூங்க ஆரம்பிச்சிருந்தேன்.. திடீர்னு எண்ணன்னே தூங்கீட்டிங்க அப்படின்னு ஒரு வாய்ஸ்.. லைட்டா முழிச்சுப் பார்த்தா.. டிரைவர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிக்கிட்டு இருக்கார்.. எப்படி இருந்திருக்கும்.. தூக்கமெல்லாம் காணாமப் போச்சு.. டிரைவருக்கு எப்படியும் 55 வயசுக்கு மேல இருக்கும்.. ரொம்ப டயர்டா இருந்தாராம்.. அதான் கண்ணு சொக்கிடுச்சாம்.. எப்படிப் பாருங்க.. கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்த கண்டக்டரும் தூங்கிட்டார்.. அதுக்கப்புறம் ஊர் வந்து சேர்ற வரைக்கும் நான்தான் அவரோட ஏதாவது பேசிக்கிட்டே வந்துட்டு இருந்தேன்..

டிரைவர் வேலைங்கறது கண்டிப்பாக ரொம்பக் கடுமையான வேலைதான்.. சும்மா எப்பவாவது லாங் டிரைவ் போனாலே நமக்கு வீடு திரும்பறதுக்குள்ள சலிப்பாயிடும்.. பாவம்தான் இவங்க.. ஆனால் இவ்வளவு வயசானவராக இருந்துட்டு 500 கிலோமீட்டருக்கு தொடர்ந்து ஓட்டற மாதிரி லாங் ட்ரிப்பை எல்லாம் எதுக்கு ஏத்துக்கனும்.. கண்டிப்பாக குறைந்த தூரங்கள்ல ஓட்டறதுக்கும் அவங்களால பர்மிசன் வாங்க முடியும்னுதான் நினைக்கிறேன்.. இல்ல அப்படியெல்லாம் இல்லையான்னும் தெரியல..

மற்றொரு முறை.. நானும் ரமேஷும்.. சேலம் பஸ்ல உட்கார்ந்திருந்தோம்.. திடீர்னு ரொம்ப சத்தம் கேட்டு முழிச்சேன்.. ரமேஷ்கிட்ட என்னாச்சுங்க. ஏன் பஸ்ல எல்லாரும் சண்டை போட்டுட்டு இருக்காங்கன்னு கேட்டேன்.. அதுக்கு அவர்.. அது ஒன்னும் இல்லடா.. டிரைவர் தண்ணி போட்டுட்டு தாறுமாறாக ஓட்டிக்கிட்டு இருக்கார்.. கண்டக்டர் சொன்னாலும்.. பயணிகள் சொன்னாலும் கண்ட்ரோல்டாக ஓட்ட மாட்டேங்கறார்.. அதான் சத்தம் அப்படின்னு கூலா சொல்றார்.. நான் அப்போ இருந்து பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு ரோட்டையே பார்த்துட்டு உட்கார்ந்துருந்தேன்.. அவர் கரெக்டாக ஓட்டறாரா இல்லை.. தாறுமாறாக ஓட்டறாரான்னே தெரியல..

எனக்கு முன் சீட்ல உட்கார்ந்திருந்த ஒருத்தர்.. மிலிட்டரி ரிட்டனாம்.. இப்போதான் சர்வீஸ் முடிஞ்சு ஊருக்குப் போறேன்.. என்னைய ஊர் கொண்டு சேத்தமாட்டான் போல இவன்னு சொல்லி... நான் போலீஸுக்கு போன் பண்றேன்னுட்டு அவசர போலீஸுக்கு போன் பண்ணிட்டார்.. அவங்களும் பஸ் எந்த இடத்துல வந்திட்டு இருக்குன்னு கேட்டுக்கிட்டு.. கிருஷ்ணகிரி எண்டர் ஆகிறப்போ பஸ்ஸை மடக்கறோம்னு சொன்னாங்க போல.. பஸ்ஸும் கிரிஷ்ணகிரிகிட்ட வந்துடுச்சு.. திடீர்னு டம்முனு ஒரு சத்தம்.. போச்சுடா இன்னைக்கு காலின்னு நினைச்சு கண்ணை இருக்க மூடினா.. ஒன்னும் ஆகலை.. ஆனால் டிரைவர் ஒரு பைக்காரரை இடிச்சுத் தள்ளிட்டார்.. நல்லவேளை பக்கம் ஒரு வைக்கப்போரு இருந்ததால பைக் அதுமேல போய்தான் சொருகிச்சு.. ஓட்டினவருக்கும் ஒன்னும் இல்ல.. இது ஆகாதுன்னு இறங்கியும் போகமுடியல.. நடுவழியில நிக்கறோம்.. சரின்னுட்டு பயணத்தை தொடர்ந்தோம்.. சொன்னமாதிரி போலீஸ் பஸ்ஸை மடக்கி டிரைவரைத் திட்டினாங்க.. உள்ளே இருக்கற உயிர்கள் எல்லாம் உங்க கையிலதான இருக்கு.. ஏன் தண்ணி போட்டிங்கன்னு கேட்டதுக்கு.. ரொம்ப ஒடம்பு வலிசார் அதான்.. அப்படின்னார் டிரைவர்.. அவருக்கு போலீஸே டீ வாங்கிக் கொடுத்து.. சேலம் போய் சேர்ந்துட்டு போன் பண்ணுங்கன்னு சொல்லி அனுப்பி வைச்சிட்டாங்க.. நாங்க ரெண்டு பேரும்.. பஸ்ல இருந்த நிறையப் பேரும் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டுலயே எஸ்கேப்.. நீ எப்படியோ போய் போன் பண்ணிக்க சாமின்னு திட்டிட்டு இறங்கிட்டோம்..

உடம்பு வலியாக இருந்தால்.. லீவு எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே.. ரொம்ப அசால்டாக உடம்பு வலின்னு சொல்லுது அந்த பக்கி.. இங்கே நமக்குத்தான் பஸ் ஏறி இறங்கறதுக்குள்ள கருக் கருக்குன்னே உட்கார்ந்துக்க வேண்டியிருக்கு..

இந்த இரண்டு இரவுகளுமே.. மறக்க முடியாத பயணங்கள்.. திக் திக்னு தாங்க.. தூங்காமயே போச்சு..


Saturday, December 11, 2010

"தினமலரும் ஒரு பதிவரும்" திருடிய என் பதிவு..!

நேற்று இரவு.. கிரெடிட் கார்டும்.. கஸ்டமர் கேரும்.. என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதி வெளியிட்டிருந்தேன்..

இன்று அப்பதிவுக்கு மறுமொழியிட்டிருந்த "ராஜா" என்ற நண்பர்.. என்னோட பதிவு தினமலர் பத்திரிக்கையில வெளியாகி இருப்பதாக பின்னூட்டம் இட்டிருந்தார்.. அவர் கொடுத்திருந்த லிங்கிற்கு போய் பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சி.. அப்படியே என்னுடைய பதிவு ஒரு வரிகூட மாறாமல்.. நான் வெளியிட்டிருந்த போட்டோஸ் உட்பட அப்படியே பதிவாகியிருந்தது.. என்னுடைய பெயர் அதில் இல்லை..

என்னுடைய பதிவும் பெரும்பாலான மக்கள் படிக்கும் பத்திரிக்கையில் வெளியாகி இருப்பது எனக்கு சந்தோசமாத்தான் இருக்கு.. ஆனால் இதைப் பார்த்து சந்தோசம் மட்டும் பட்டுட்டு விட்டுட்டன்னா.. பிறகு ஒருநாள் என்னுடைய பதிவைப் படிக்கும் யாராவது நான் அந்தப் பத்திரிக்கையில் இருந்து முழு பதிவையும் திருடியதாகத் தானே நினைப்பாங்க.. சமுதாயத்தில் மிகப்பெரிய பெயரில் இருந்து கொண்டு.. இப்படி என்னுடைய அனுமதி இல்லாமல் தினமலர் பத்திரிக்கை என்னுடைய பதிவை எப்படி வெளியிடலாம்..

இன்று மாலை (11 டிசம்பர் 2010) மாலை 4.57க்கு என்னுடைய பதிவை அவர்கள் வெளியிட்டிருக்காங்க..

என்னுடைய பதிவு வெளியான அவர்களது லிங்கையும்.. அவங்களோட வலைப்பக்கத்தை நான் எடுத்த ஸ்க்ரீன் சாட்டையும் கீழே கொடுத்திருக்கேன்.. நீங்களே பாருங்க..

http://www.dinamalar.com/business/



இப்பதிவின் பின்னூட்டத்தில் இன்னொரு பிளாக்லயும் என்னுடைய பதிவை திருடியிருப்பதாக நா.மணிவண்ணன் லிங்க் கொடுத்திருக்கார்.. அங்கே போய் பார்த்தா அதுலயும் அப்படியே ஃபோட்டோ உட்பட காப்பி பண்ணிப் பேஸ்ட் பண்ணியிருக்காங்க.. என்னங்க இது!!..

இதையும் அப்படியே பார்த்திடுங்க.. என்ன கொடுமை இது!!
சொந்தமா எழுதத் தெரியலைன்னா என்னத்துக்கு பதிவு ஆரம்பிச்சு.. காப்பி பேஸ்டுல என்னத்த கண்டுடறாங்கன்னு தெரியல

-------------------------------------------------------------------
குறிப்பு: தினமலருக்கு நான் அனுப்பிய மெயில் இது..
மதிப்புக்குரிய தினமலருக்கு

நான் ஒரு வலைப்பதிவர்.. நேற்று கிரெடிட் கார்டும்... கஸ்டமர் கேரும்... என்ற தலைப்பில் எனது வலைப்பதிவில் ஒரு பதிவிட்டிருந்தேன். இன்று உங்கள் தினமலர் வர்த்தகப் பகுதியைப் பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் நேற்று எழுதிய பதிவு.. அப்படியே வார்த்தை மாறாமல்.. ஏன் நான் வெளியிட்டிருந்த இரண்டு புகைப்படம் கூட மாறாமல்... உங்களது தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது... என்னுடைய பெயரோ எனது வலைத்தள முகவரியோ அதில் இடம்பெறவில்லை... எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு சரியான விளக்கத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்...

எனது பதிவு வெளியான முகவரியை கீழே அளித்துள்ளேன்..


http://abdulkadher.blogspot.com/2010/12/blog-post_10.html


நன்றி

அப்துல்காதர்
(எனது தளம்: பதிவுலகில் பாபு)

----------------------------------------------------------------------------------------